இடுகைகள்

போலிச லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக வலைத்தளங்கள் அரசுக்கு பயனர் பற்றிய தகவல்களை அளிக்கின்றனவா?

படம்
  இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 560 மில்லியனாக உள்ளது. இதற்கடுத்த இடத்தில் வாட்ஸ் பயனாளர்கள் எண்ணிக்கை வருகிறது. மேலும் இதில் கண்காணிப்பு வந்தால் என்னாகும்? அனைத்து மக்களுமே அறிந்தோ அறியாமலே இதில் மாட்டிக்கொள்வோம்.  போனில் உள்ள குறுஞ்செய்தி வசதியை இன்று யாருமே பயன்படுத்தவில்லை. எளிமையாக போனின் டேட்டாவை ஆன் செய்துவிட்டு வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு காலை வணக்கம் தொடங்கி டீ குடிக்க ஆபீஸ் வரட்டுமா என்ற அளவில் பேசி வருகிறோம்.  2019ஆம் ஆண்டு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் எடுத்த ஆய்வுப்படி இந்தியாவிலுள்ள 92 பெண் அரசியல்வாதிகளுக்கு, சமூக வலைத்தளங்களில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவதூறு செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதேபோல 2020இல் பெண்கள், குழந்தைகளை கடத்துகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் புழங்கிய வதந்தி ஒன்றை நம்பி மூன்று பேர்களை மக்கள் அடித்துக் கொன்றனர். இந்த  சம்பவம் மகாராஷ்டிராவில் நடைபெற்றது.  அரசு தற்போது 69 ஏ சட்டப்படி, குற்றவழக்கு தொடர்பாக கேட்கும் விவரங்களை சமூக வலைத்தள நிறுவனங்கள் தரவேண்டும். அப்படி தராதபோது அவர்கள் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும். இத