இடுகைகள்

டாலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டாலி என்ற செம்மறி ஆட்டிற்கு ஏன் இத்தனை புகழ்?

படம்
  பல ஆண்டுகளாக குளோனிங் செய்வது என்பதை, அனைவரும் திரைப்படங்களில் தான் பார்த்து வந்தார்கள். டாலி என்ற ஆடு இந்த முறையில் உருவாக்கப்படும் வரை. இந்த செம்மறி ஆடுதான் முதன்முதலில் செம்மறி ஆட்டின் ஸ்டெம்மில் இருந்து உருவாக்கப்பட்டது.  இந்த குளோனிங் ஆட்டிற்கு மூன்று அம்மாக்கள் உண்டு. ஒரு ஆட்டில் டிஎன்ஏ, மற்றொன்றில் கருமுட்டை, மூன்றாவது ஆட்டை வாடகைத்தாயாக பயன்படுத்தினார்கள். இப்படித்தான் டாலி என்ற குளோனிங் ஆடு உருவாக்கப்பட்டது.  1996ஆம் ஆண்டு ஜூலை 5 அன்று, டாலி என்ற ஆடு உருவாக்கப்பட்டது. இந்த ஆடு பிறந்து ஆறரை ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தது. பொதுவாக ஒரு செம்மறி ஆட்டின் ஆயுள் காலம் பனிரெண்டு ஆண்டுகள் ஆகும். இந்த ஆடு குறுகிய காலமே வாழ்ந்ததற்கு குளோனிங் செய்தது காரணமாக என்று தெரியவில்லை.  டாலியை உருவாக்கும்போது பெறப்பட்ட ஸ்டெம் செல் கொண்ட ஆட்டிற்கு ஆறுவயதாகியிருந்தது. எனவே பிறக்கும்போது, டாலியின் வயது ஆறு என்று நாம் கொள்ளலாம்.  டாலி ஆடு வெற்றிகரமான ஆறு குட்டிகளை ஈன்றது. இதனை தானாகவே செய்தது. இக்குட்டிகளுக்கு போனி, சாலி, ரோஸி, லூசி, டார்சி, காட்டன் என்று பெயர் வைக்கப்பட்டது. இன்று நடைபெறும் குளோனிங் ஆரா

குளோனிங் முறைக்கு உருவாகும் எதிர்ப்புகள்!

படம்
      காணாமல் போன குளோனிங் முறை ! நம்மைபோல இன்னொருவர் இருந்தால் எப்படியிருக்கும் ? இந்த எண்ணத்தை சாத்தியப்படுத்திய குளோனிங் ஆராய்ச்சிகள் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆகின்றன . ஆனால் இன்றுவரை டிஎன்ஏ விஷயங்களில் நிறைய முன்னேற்றங்களை அடைந்தும் , ஆராய்ச்சியாளர்கள் அதனை பெரியளவில் தொடரவில்லை . இம்முறையில் உள்ள இடர்ப்பாடுகள்தான் இதற்கு காரணம் . 1996 ஆம் ஆண்டு டாலி என்ற செம்மறியாடு குளோனிங்கில் உருவாக்கப்பட்டது . இம்முயற்சி வெற்றியடைய 277 முறை ஆராய்ச்சியாளர்கள் உழைக்கவேண்டியிருந்தது . அதைத் தொடர்ந்து முயல் , எலி , குதிரை , நாய் பல்வேறு விலங்குகளும் உருவாக்கப்பட்டன . குளோனிங் முறையின் மூலம் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்கும் முடியும் என்றுதான் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன . ஆனால் மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட செல்களால் உருவாகும் குளோனிங் நகலின் வாழ்நாள் குறைவாகவே உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது . தானம் பெறப்பட்ட குரோமோசோம்களை கருவில் வைத்தாலும் அதன் தன்மை , மனிதர்களுடையதைப் போல இயல்பாக இல்லை . தானம் பெறப்பட்ட முட்டையிலிருந்து மையக்கருவை எடுப்பதும் கடினமானதாகவே ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்த