கொலைக்குற்றவாளியாக்கப்பட்ட தங்கையின் கணவரைக் காப்பாற்ற நாயகன் செய்யும் அசகாய செயல்கள்!
மாநகரிலோ மாயகாடு சிரஞ்சீவி, விஜயசாந்தி சிரஞ்சீவி ஹைதராபாத்தில் சிறியளவு பிக்பாக்கெட், பணத்தை திருடும் மனிதராக வாழ்கிறார். இவருக்கென தனி திருட்டு நண்பர்கள் குழுவே உள்ளது. அவர்களுக்கு வேலை சொல்லி திருட்டை நடத்துவது சிரஞ்சீவிதான். இப்படியான அவரது வாழ்க்கையில் முக்கியமான நோக்கம், தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதுதான். தங்கை கிராமத்தில் வாழ்கிறாள். இந்த நிலையில் அவளுக்கு திருமணம் நடந்திருப்பதும், மாப்பிள்ளை ஹைதராபாத்திற்கு வந்திருப்பதாகவும் கிராமத்து மனிதர்கள் மூலம் தகவல் கிடைக்கிறது. ஆனால் சிரஞ்சீவி செய்யும் தவறான பொய்சாட்சியால் மாப்பிள்ளை சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை மீட்டு உண்மையை வெளியே கொண்டு வருகிறார். அது என்ன உண்மை என்பதே கதை. படத்தில் நடக்கும் கொலை முயற்சி என்னவென்பதை பார்வையாளர்கள் முன்னமே அறிந்தாலும் அதில் உள்ள பாத்திரங்கள் அறிவதில்லை. போலீஸ் அதிகாரி, பாசத்தால் ஈர்க்கப்பட்டு தனது கடமை, பொறுப்பை துறப்பதுதான் முக்கியமான திருப்புமுனை. ஆனாலும் கூட அவர் தான் பிடித்து வைத்திருப்பவர்களை இம்சிப்பதில்லை. தனது மகளின் வாழ்க்கையைக் காக்க நினைக்கிறார். ஆனால் அது சட்டவிரோத கும்பலுக்கு