இடுகைகள்

திட்டங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக பொறுப்புணர்வு திட்டத்திற்கான விதிகள் - சிஎஸ்ஆர் 2

படம்
அத்தியாயம் 2 பெரு நிறுவன சமூகப் பொறுப்பு! முக்கியமான விதிகள்! சமூக பொறுப்பு சார்ந்த விழிப்புணர்வை மேற்குலகில் எழுத்தாளர்கள் ஏற்படுத்தினர்.  இதனை ஒழுங்குமுறைப்படுத்த அரசுகளால் சட்டத்திருத்தங்களும் உருவாக்கப்பட்டன. பின்னர்தான், இதனை பெருநிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். இந்தியாவில் சமூகப் பொறுப்புணர்வு என்பது தனிநபர் சார்ந்து இருந்தது. சமூக விஷயங்களுக்காக நன்கொடை தருவது என்பது இயல்பான ஒன்று. காலப்போக்கில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவை செய்யும் பல்வேறு அறச்செயற்பாடுகளுக்கு சட்டம் தேவைப்பட்டது. இதற்கான சட்டப்பூர்வ வரைவுகள்  2009 ஆம் ஆண்டு தொடங்கின.   பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு பற்றி கூறப்பட்டிருந்தது. வணிக நிறுவனங்களின் பொறுப்பு என்ற வகையில் இவை உருவாக்கப்பட்டன. பின்னர், 2011 ஆம் ஆண்டில், தேசிய தன்னார்வ சமூகப்பணிகளுக்கான விதிமுறைகள் (NVG) வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இதில் சமூகம், பொருளாதாரம், சூழல் ஆகிய மூன்று அம்சங்களையும் வணிக நிறுவனங்கள் கவனிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தன. இதில் ஒன்பது விதிகள் உண்டு.  அதி

அபிஜித் பானர்ஜியின் ஆர்சிடி நுட்பம்! - வறுமை ஒழிப்பு ஆயுதம்!

படம்
அபிஜித் பானர்ஜியின் ஆய்வு! வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை ஒழிக்க மாத்திரைகளை அரசு வழங்குகிறது. இலவசமாகத்தான். நிறைய பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் இதனை மறுப்பார்கள். காசு கொடுத்துத்தான் மருந்துகளை வாங்க வேண்டும். அப்போதுதான் அதன் மதிப்பு தெரியும்  என்று பேசுவார்கள். ஆனால் அபிஜித் உள்ளிட்ட மூவரும் அதனை மறுக்கிறார்கள். தொடக்க சுகாதார விஷயங்களை அரசு இலவசமாகவே வழங்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இதனை 1990-2000 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் நடத்திய கள ஆய்வுகளில் உறுதியாக உணர்ந்துள்ளனர். அதனை அறிக்கையாக எழுதி வெளியிட்டுள்ளனர். இதன்விளைவாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா அமைப்பு ஏழை மக்களுக்கான சுகாதாரத்திட்டங்களை சிறப்பாக திட்டமிட முடிந்தது. இவர்கள் கண்டுபிடித்த பொருளாதார நுட்பம் ராண்டமைஸ்டு கன்ட்ரோல் ட்ரையல் என்பது சுருக்கமாக ஆர்சிடி(RCT). வறுமை ஒழிப்பில் உள்ள சமூக பொருளாதார தடைகளை இவர்கள் கண்டுபிடித்தனர். அதனைத் தீர்க்கும் வழிகளையும் கூறியுள்ளனர். 2003 ஆம் ஆண்டு இவர்கள் எம்ஐடியில் அப்துல் லத்தீஃப் ஜமால் போவர்ட்டி ஆக்சன் லேப் (J-Pal) என்பதைத் தொடங்கினர். இதன்மூலம் 80க்கும் மேற்பட