இடுகைகள்

கேரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலியல் வேட்டையன் - கேரி ரிட்ஜ்வே

படம்
அசுர குலம்  கேரி ரிட்ஜ்வே அமெரிக்காவில் பிறந்த கேரி, இருபது ஆண்டுகளாக சீரியல் கொலைகளை செய்து போலீசாரை பதற வைத்தார். பிறகு இவரை டிஎன்ஏ தகவல்களை வைத்து போலீஸ் பிடித்து சிறையில் அடைத்தது.  1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உடாவில் உள்ள சால்ட் லேக் நகரில் பிறந்தார். மேரி ரீடா ஸ்டெய்ன்மன் - தாமஸ் நியூட்டன் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். தாயால் இளம் வயதிலேயே பாலியல் மீது ஈர்க்கப்பட்டார். பதினொரு வயதில் வாஷிங்டனுக்கு, குடும்பமே இடம்பெயர்ந்தது. கேரிக்கு டிஸ்லெக்சியா பிரச்னையும் இருந்தது. இவரின் ஐக்யூவும் 82தான். அப்புறம் படிப்பைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? பதினாறு வயதிலேயே இவரின் குணம் பற்றி சில செயல்பாடுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. சிறிய வனப்பகுதிக்குள் ஆறு வயது சிறுவனைக் கூட்டிச்சென்று, கத்தியால் குத்தினார். பிறகு அந்த சிறுவன் ஊரைக்கூட்டி உண்மையைச் சொல்லி உயிர் பிழைத்தார். கத்தியால் குத்தியபோது, கேரி சிரித்துக்கொண்டிருந்தார் என்றார். 1969ஆம் ஆண்டு, பள்ளிப்படிப்பை முடித்தார். கேரி அதற்கடுத்த என்ன செய்வது என்று யோசித்தார். காலாகாலத்தில் செய்வது கல்யாணம்தானே? ஆ