இடுகைகள்

ஆபத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவு, அதன் ஆபத்துகள் என்ன?

படம்
  செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? 1955ஆம் ஆண்டு கணினி வல்லுநரான மார்வின் மின்ஸ்கி என்பவர் முதல்முறையாக கூறினார். அப்போது அதற்கான தீர்க்கமான வரையறை ஏதும் இல்லை. தினசரி பயன்படுத்தும் கால்குலேட்டரை விட சற்று சிக்கலான அமைப்புமுறை என்று புரிந்துகொள்ளலாம். இன்று அப்படி முழுக்க சொல்ல முடியாது. சிக்கலான பிரச்னைகளை தீர்க்க எழுதப்படும் கோடிங் முறை எனலாம். இதை தீர்க்கும் முறை அப்படியே மனிதர்கள் யோசிக்கும் முறையை ஒத்திருக்கும். கணினிகள் தானாகவே யோசிக்காது. ஆனால் தகவல்களைக் கொடுத்து அவற்றை சோதித்து தீர்வுகளை வழங்க செய்யலாம். நிறைய தகவல்களைக் கொடுத்துவிட்டு கேள்விகளைக் கேட்டால் சரியான பதில்களை நாம் பெறலாம். நியூரல் நெட்வொர்க் முறையில் கணினிகளை இன்று உருவாக்கி எந்திர வழி கற்றலை நுட்பமான செயலாக்குகிறார்கள்.  ஏஐ எங்கெல்லாம் பயன்படுகிறது? இன்று போனின் சேவைகளை கட்டண தொலைபேசியில் அழைத்து பெறுகிறீர்களா? அங்கும் ஏஐ பாட்கள் உண்டு அவைதான் உங்களுக்கு வழிகாட்டுகின்றன. இப்போது குரலை அடையாளம் கண்டு பிடித்து பேசவும், உங்களை அழைக்கவும் கூட திறன் பெற்றுள்ளன. நீங்கள் எழுதவேண்டிய மின்னஞ்சலை ஏஐ இலக்கணப் பிழை இல்லாமல் எ

தகவல்களை ஜனநாயகப்படுத்துகிறது ஏஐ - கூகுள் இயக்குநர் சுந்தர் பிச்சை

படம்
               சுந்தர் பிச்சை நேர்காணல் - பகுதி 2   என்விடியா நிறுவனத்தோடு சேர்ந்து ஏஐ சிப்களை தயாரித்து வருகிறீர்கள். இப்படி செய்வது ஒரே நிறுவனத்திற்கு அதிக அதிகாரத்தை தருவது போல இருக்கிறதே? நாங்கள் அந்த நிறுவனத்தோடு பத்தாண்டுகளுக்கு மேலாக தொழில் உறவைக் கொண்டிருக்கிறோம். ஆண்ட்ராய்ட் சார்ந்து ஒன்றாக வேலை செய்து வருகிறோம். ஏஐயைப் பொறுத்தவரை அவர்கள் நிறய கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறார்கள். எங்கள் க்ளவுட் வாடிக்கையாளர்கள் பலரும் என்விடியா வாடிக்கையாளர்கள்தான். செமிகண்டக்டர் துறை கடுமையான போட்டிகளைக் கொண்டது. இத்துறையில் முதலீடும் அதிகம் தேவை. நாங்கள் என்விடியா நிறுவனத்தோடு நல்ல உறவில் இருக்கிறோம். ஏஐ தொடர்பாக முறைப்படுத்தல் சட்டங்கள் வேண்டும் என கூறியிருக்கிறீர்கள். அந்த தொழில்நுட்பத்திற்கு பயன் அளிக்கும்படியான என்ன விஷயங்கள் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்? மருத்துவ காப்பீடை ஒருவர் பரிந்துரைக்கிறார், காபி ஷாப்பிற்கு செல்வதற்கான பரிந்துரை என வரும்போது பாகுபாடு இல்லாமல் ஏஐ இயங்க வேண்டும். சட்டங்கள் உருவாகும்போது ஏஐயின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. அமெரிக்க அரசு இதுதொடர்பாக சட்டங

கனவில் வன்முறை செய்யும் மனிதர்கள் - பாராசோம்னியா ஆபத்து

படம்
  பாராசோம்னியா ஆபத்து   இன்சோம்னியா பிரச்னையே பலருக்கும் தீரவில்லை. ஆனால், இப்போது வந்திருப்பது பாராசோம்னியா. இன்சோம்னியா பிரச்னை   என்பது தூக்கமின்மை. தூங்காமல் ஏதோ ஒன்றை இரவிலும் செய்துகொண்டிருப்பார்கள். தூங்கும் நேரம் மிக குறைவாக இருக்கும். பாராசோம்னியாவில் வன்முறையான செயல்பாடுகள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக குற்றவழக்குகளும் பதிவாகி வருகின்றன. குற்றவாளி கொலையை, திருட்டை செய்கிறார் என்றால் அதற்கென ஒரு காரணம் வேண்டும் அல்லவா? தூக்கத்தில் செய்யும் விஷயங்கள் ஒருவருக்கு நினைவிலேயே இல்லாதபோது அவரை நீங்கள் என்ன செய்வீர்கள்? இங்குதான் கிராமர் போர்னிமன் துணைக்கு வருகிறார். இவர், ஸ்லீப் ஃபாரன்சிஸ் அசோசியேட்ஸ் என்ற அமைப்பில் வேலை செய்துவருகிறார். நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து என பறந்து சென்று பாராசோம்னியா பற்றி விளக்கம் கொடுத்து வருகிறார். நீதிபதிகளுக்கு, ஜூரிகளுக்கு தூக்கத்தில் ஒருவர் இன்னொருவரை கொலை செய்ய முடியும் என்பது பற்றிய தெளிவும் அறிவும் கிடையாது. எனவே, கிராமர் அதை அவர்களுக்கு விளக்கி வருகிறார். 2006ஆம் ஆண்டு ஸ்லீப் ஃபாரன்சிஸ் அசோசியேட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. நர

ஆபத்திலுள்ள தனது மகனை/மகளைக் காப்பாற்ற தாயைத் தூண்டுவது எது?

படம்
  தெரியுமா? தெர்மோரெகுலேஷன் (Thermoregulation) நமது உடல் 37 டிகிரி செல்ஸியஸ் என்ற வெப்பநிலையை எப்போதும் சீராகப் பராமரித்து வருகிறது. இந்த வெப்பநிலையில்தான் மனித உடலின் செல்கள், சீராக வேலை செய்யும் பண்பைக் கொண்டுள்ளன. உடலைக் குளிர்விப்பதில் தோல், மூக்கு ஆகியவை முக்கியமானவை. வெளிப்புற வெப்பம் அதிகரிக்கும்போது , மூளையின் சமிக்ஞைப்படி தோல் உடலில் உள்ள நீரை வேர்வைத் துளைகள் வழியாக வியர்வையாக வெளியேற்றுகிறது. இதன் விளைவாக,  உடலின் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது. மூக்கின் வழியாக உள்ளே சென்று, வெளியேறும் சுவாசக் காற்றும் உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க உதவுகிறது.   உணர்ச்சிகர வலிமை (Hysterical Strength) தன் குழந்தைக்கு ஆபத்து நேரும்போது, தாய் இதுவரை தன்னால் நினைத்தே பார்த்திராத செயலை செய்வார். அதாவது, காருக்குள் சிக்கிய குழந்தையை மீட்க காரை தனியாகவே தூக்குவது போல.. இப்படி நடைபெறுவதற்கு அறிவியல் ஆதாரங்கள் கிடையாது. ஆனால், உயிருக்கு ஆபத்து வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. இதன் விளைவாக, குறிப்பிட்ட நேரத்திற்கு தசைகள் இறுக்கமாகி வலிமை அதிகரிக்கிறது. இந்த நிலையில் அதிவேகமாக ஓட, எடையை

வினோதரச மஞ்சரி - ரேடியோ தகவல்தொடர்பு, கனிமங்களின் வகைகள்

படம்
ரேடியோ தகவல் தொடர்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தகவல்தொடர்பு மெதுவாக நடைபெற்று வந்தது. பிறகுதான் ரேடியோ அலைகள் கண்டறியப்பட்டன. மின்காந்த அலைகளில் ரேடியோ அலையும் ஒன்று.இதன்மூலம் தொலைவிலுள்ள ஒருவருக்கு எளிதாக தகவல் அனுப்பி, பதிலைப் பெறமுடியும். இதற்கு உதவுவதுதான் டிரான்ஸ்சீவர் (Transceiver).இதில் உள்ள ஆன்டெனா மூலம் சிக்னல்களைப் பெற்று பதில் அனுப்ப முடியும். டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரீசிவர் என இரு பணிகளையும் தனது பெயருக்கு ஏற்ப டிரான்ஸ்சீவர் கருவி செய்கிறது.  மலையேறும் வீரர்கள், டிரான்ஸ்சீவரைப் பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் மலையேற்றக் குழுவில் யாராவது விபத்து காரணமாக காணாமல் போனாலும், கருவியில் உள்ள சிக்னல் மூலம் எளிதாக கண்டுபிடிக்க மீட்க முடியும். போக்குவரத்திற்கு பயன்படும் காருக்கான ஸ்மார்ட் கீ, ரேடியோ அலை மூலமே இயங்குகிறது. இதன்மூலம் காரின் கதவுகளை திறப்பது, மூடுவது, காரின் இஞ்சினை ஆன் செய்வது ஆகியவற்றை செய்யலாம்.  2 போர்னைட் (Bornite) இயற்கையில் கிடைக்கும் வண்ணமயமான கனிமங்களில் இதுவும் ஒன்று. போர்னைட், செம்பு மற்றும் இரும்பு கொண்ட சல்பைட் வடிவம். இதற்கு, ஆஸ்திரியாவைச் சேர்ந்த  கனி

காலாவதியான சோலார் செல்களைப் பயன்படுத்தி உருவான கட்டடம்!

படம்
  சோலார் பேனல் கட்டடம்!  சோலார் பேனல்களைப் பயன்படுத்திய பிறகு என்ன செய்வதென பலருக்கும் குழப்பம் ஏற்படலாம். அதற்காகவே பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் செயல்படும் சூழல் தொழில்நுட்ப மையம், தீர்வொன்றை கண்டுபிடித்துள்ளது. அறிவியல் கழகத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் நெலமங்கலா எனும் இடத்தில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அறிவியல் கழகத்தின் சூழல் மையத்தினர், கட்டடத்தைக் கட்ட பயன்பாடற்ற சோலார் பேனல்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.  ”நாங்கள் இக்கட்டடத்தை உருவாக்க 60 சதவீதம் போட்டோவால்டைக் செல்களைப் (PV) பயன்படுத்தியுள்ளோம்” என்றார்  சூழல் மையத்தின் உதவி பேராசிரியரான மான்டோ மணி.  2018ஆம் ஆண்டு, வெப்பம் சார்ந்த சில சோதனைகளைச் செய்ய சூழல் மையக் குழுவினர் விரும்பினர். இதற்கென தனி கட்டடம் தேவைப்பட்டது. ஆனால், அறிவியல் கழகத்திடம் நிதியில்லா சூழல். இந்நிலையில், பயன்பாடற்ற சோலார் பேனல்களையும், சிமெண்டையும்  பயன்படுத்தி கட்டடம் கட்ட திட்டமிட்டார் உதவி பேராசிரியர் மணி. இப்படி கட்டப்படும் கட்டடம் சோலார் பேனல்கள் பற்றிய ஆராய்ச்சிகளையும் செய்ய உதவுகிறது. பயன்பாடற்ற நிலையிலும்  பேனல்கள்  10-20 வாட் வர

விமானங்களின் தொழில்நுட்பத்தை 5 ஜி சேவை பாதிக்குமா?

படம்
  விமான சேவையை பாதிக்கிறதா 5 G? அமெரிக்காவில் 5 ஜி தொலைத்தொடர்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது, விமானங்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுத்தும் என விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் கருதியது. இது பற்றிய அறிவுறுத்தலை, விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு விடுத்தது. இதன் காரணமாக ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.  பயம் ஏன்? அமெரிக்காவில் உள்ள வெரிஸோன், ஏடி அண்ட் டி ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சி பேண்ட் அலைவரிசையிலான 5 ஜி சேவையைத் தொடங்கியுள்ளன.  இதன்விளைவாக விமானங்களில் தரையிறங்க, உயரத்தைக் கணிக்கப் பயன்படுத்தும் ரேடியோ அல்டிமீட்டர், பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என அமெரிக்க அரசின் வான்வழி போக்குவரத்து முகமை (FAA) எச்சரித்தது. எனவே, பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களை நிறுத்தி, பயணத்திட்டத்தை மாற்றின.   பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் போயிங் 777 என்ற விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றன. இதன் சிக்னல்களை 5 ஜி சேவை,  இடைமறித்து பாதிக்கும் என பலரும் அச்சப்பட்டு வருகின்றனர். இதனால் போஸ்டன், சிகாகோ நகரங்களுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. லாஸ் ஏஞ

எஸ்ஓஎஸ் சிக்னல்- ஆபத்தில் உள்ளவர்களை காக்கும் அடையாளம்

படம்
  எஸ்ஓஎஸ் சிக்னல் (SOS Signal) கடலில் அல்லது மலைப்பகுதியில் அவசர நிலையின்போது, ஆபத்தில் உள்ளவர்கள் தீப்பந்தம் ஒன்றை எரிய விடுகிறார்கள். இதனை ஃபிளேர்ஸ் (flares) என்று அழைக்கின்றனர். இதிலுள்ள வேதிப்பொருட்கள் பல்வேறு நிறங்களில் எரியும் என்பதால், தொலைதூரத்தில் உள்ளவர்களும் இதனைப் பார்க்கலாம். ஆபத்து சமிக்ஞையைப் பார்க்கும் விமானப்படையினர், எளிதாக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறார்கள்.  ஃப்ளேர்ஸ், பெரும்பாலும் அடர்த்தியான சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. பகல் மற்றும் இரவிலும் இதனை எளிதாக காணலாம். இதில் சிலவகை ஃபிளேர்ஸ், எரியும்போது புகையை மட்டுமே வெளிவிடும். காடுகளில் இவ்வகையைப் பயன்படுத்துகிறார்கள். வானில் விமானத்திலிருந்து பார்க்கும்போது காடுகளின் பகுதிகளை  துல்லியமாக பார்க்க முடியாது. இச்சமயங்களில், நெருப்பை விட புகையை எளிதாக அடையாளம் காணலாம்.   ஒருவர் கையில் பிடித்து ஃப்ளேர்ஸை எரித்தால் அது 1 நிமிடம் முழுதாக எரியும். அதனை ஐந்து கி.மீ. தூரத்தில் இருப்பவர்கள் பார்க்கலாம்.  ஃப்ளேர்ஸில் உள்ள வேதிப்பொருட்கள் எரியும்போது, ஆக்சிஜனை வெளியேற்றுகிறது. இதன் காரணமாகவே அதில் பற்றிவைக்கப்படும்

ஒரு கப் தேநீரில் என்ன இருக்கிறது என தெரியுமா?

படம்
  உலகம் முழுக்க பல கோடி மக்களால் பருகப்படும் பானம் தேநீர். பிரிட்டிஷார் காலத்தில் அதிகம் பயிரிடப்பட்ட பணப்பயிர், இன்றளவும் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாக உள்ளது. பொதுவாக மக்கள் டஸ்ட் டீயை குடித்து வந்தாலும், இதில் ஆறு வகைகள் உள்ளன. கருப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, ஊலாங், பு RCH  என ஆறு வகைகள் இன்று சந்தையில் உள்ளன. சூப்பர் மார்க்கெட்டுகளில் இவற்றை நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும். இல்லையெனில் அரசு கடைகளான டேட்டீ கிளைகளில் பல்வேறு வகை டீ வகைகள் கிடைக்கின்றன. காபியை விட டீயில் காஃபீன் அளவு அதிகம். ஆனால் தேயிலையை தூளாக மாற்றும் பல்வேறு படிநிலைகளில் காஃபீன் அளவு குறைந்துவிடுகிறது. ஒரு கப் டீயில் 50 மி.கி. காஃபீன் உள்ளது. அதேயளவு காபியில் 175 மி.கி. காஃபீன் உள்ளது. காரணம் தேயிலைக்கும், காபி கொட்டைகளுக்கும் உள்ள வேறுபாடுதான். இதனால்தான் டீயை விட்டுத்தர முடிந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால் காபியை பலரும் விட்டுத்தர முடியாமல் அடிமையாக மாறக் காரணம் அதிலுள்ள காஃபீன்தான். இன்று டீயிலும் கூட பல்வேறு கலப்படங்கள் வந்துவிட்டன. டீ, காபி இயல்பாகவே உடலை ஊக்கமூட்டும் தன்மை கொண்டது.

ஆபத்து நிறைந்த ஹைட்ரஜன்!

படம்
bevnet மிஸ்டர் ரோனி சோடியம், குளோரின் என்ன வேறுபாடு? சோடியத்தை அரிதாகவே நீங்கள் பார்த்திருப்பீர்கள். வெள்ளை நிறத்தில் எளிதாக கத்தியால் வெட்டமுடியும் தன்மையில் இருக்கும். மென்மையாக இருக்கிறதே என இதை நீரில் போட்டால் உடனே வெடிக்கும். வாயுவாக இருக்கும்போது பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனை அதிகளவில் சுவாசிக்கும்போது ஒருவருக்கு மரணம் ஏற்படும்.இதனை பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்துகிறார்கள். சோடிய உலோகத்திலிருந்து குளோரின் அணுக்களைப் பெற்று சமையல் உப்பு உருவாகிறது. இவற்றை கிரிஸ்டல் வடிவில் அல்லது இதனை தூளாக்கி சாப்பிடும்போது நம் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. ஆபத்தான வேதிப்பொருட்களில் ஹைட்ரஜன் உண்டா? நாம் சுவாசிக்கும் ஐந்தில் ஒரு பங்கு காற்றில் ஹைட்ரஜன் உண்டு. இதில் இயங்கும் வாகனங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. தனியாக உள்ள ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தலாம். ஆனால் கவனமாக பயன்படுத்தாவிட்டால பெரும் விபத்து சம்பவிக்கும். அணுகுண்டுக்கு நிகராக ஹைட்ரஜன் குண்டுகளையும் நாடுகள் இன்று பாதுகாப்புக்குப் பயன்படுத்த தொடங்கியுள்ளதே ஹைட்ரஜனின் ப

ஆன்டிபயாட்டிக் ஆபத்து!

படம்
unsplash ஆபத்தை ஏற்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகள்!  ஆன்டிபயாடிக் மருந்துகளை இந்தியர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. 2050இல் உலகமெங்கும் இப்பாதிப்பிற்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை பத்து லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நைஜீரியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி வாங்கி உண்ணுகிறார்கள். இதன் விளைவாக , அவர்களின் உடலில் நோய்களுக்கு எதிராக ஆன்டிபயாடிக் மருந்துகளின் செயல்பாட்டுத் திறன் குன்றுகிறது. இதுபற்றி பற்றிய தகவல்களைக் கொண்ட மருந்து பாதுகாப்பு பட்டியல் (DRI) தயாரிக்கப்பட்டது. இதனை சிடிடிஇபி, வாஷிங்டன் மற்றும் ரோலின்ஸ் சுகாதாரப் பள்ளி, ஜார்ஜியாவிலுள்ள இமோரி பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர். இதில் தெரிய வந்துள்ள உண்மை, இந்தியா ஆன்டிபயாடிக் மருந்துகளைக்  கையாளுவதில் மிக மோசமான நிலையில் உள்ளது என்பதுதான். இதுபற்றி லான்சட் இதழ் 2017ஆம் ஆண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், 2002 முதல் 2012 வரையில் ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது பற்றி குறிப்பிடப்பட

நஞ்சுக்கொடியை கர்ப்பிணிகள் சாப்பிடலாமா ?

படம்
pixabay மிஸ்டர் ரோனி குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணிகள், தங்கள் நஞ்சுக்கொடியை சாப்பிட விரும்புகிறார்கள் என்று செய்தியில் படித்தேன்.உண்மையா? நஞ்சுக்கொடி குழந்தைக்கு ஊட்டம் தருவதற்காக உருவாகிறது. அப்பணி முடிந்த தும் அது கழிவாக உடலிலிருந்து வெளியேறுகிறது. அதனை சாப்பிடுவது மூலம் கர்ப்பிணிகள் இழந்த ரத்தத்தை, சத்துக்களை பெறுகிறார்கள் என்பது தவறான வதந்தி. எனவே, நஞ்சுக்கொடியை சாப்பிடுவதை விடுத்து சத்தான பழங்கள், தின்பண்டங்களை வாங்கி அல்லது செய்து சாப்பிடுங்கள். நஞ்சுக்கொடியில் ஈகோலி பாக்டீரியா, காட்மியம் எனும் சிக்கல்கள் உள்ளன. எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. நன்றி -பிபிசி 

படுக்கையில் படுத்தும் தூக்கம் வரவில்லையா?

படம்
giphy.com டாக்டர். எக்ஸ் படுக்கையில் படுக்கப்போகும்வரை தூக்கம் வருவது போலிருக்கிறது. ஆனால் பெட்டில் படுத்தால் தூக்கம் வருவதில்லை. ஏன்? காரணம் படுக்கையை நீங்கள் தூங்க மட்டும் பயன்படுத்துவதில்லை என்பதுதான். அதில் உட்கார்ந்து போனை நோண்டுவது, நெட்பிளிக்ஸ் தொடர்களை பார்ப்பது எல்லாம் செய்தால் எப்படி? முடிந்தவரை ஆறுமணிக்கு மேல் காஃபீன் பானங்களை குடிக்காதீர்கள். அவை மூளையிலுள்ள ஏராளமான சுரப்பிகளைத் தூண்டிவிட்டு நடுராத்திரியிலும் உங்களை கொக்கரக்கோ கோழியாக்கி விடும். நல்ல கம்பெனி படுக்கையைப் பயன்படுத்துங்கள். இது அடிப்படையானது. அதற்குமேல் ஏதாவது பிரச்னை என்றால் நீங்கள் உறுதியாக உளவியலாளரை அணுகியே ஆகவேண்டும். வயதாகும்போது தூக்கம் குறையும் என்பதால் அதற்கேற்ப உணவுப்பழக்கங்களை குடும்ப மருத்துவரை அணுகிப் பெறுவது நல்லது. கார்ல்மார்க்ஸின் நூலைக் கூட படிக்கலாம்.  த த்துவ நூல்களைப் படிக்கும்போது உங்கள் வாழ்நாளில் நீங்கள் தூங்கியிராதது போல அடித்து போட்டது போல தூங்க முடியும்.  ஆசானின் வெண்முரசு போன்ற நூல்களும் உதவும். நன்றி - மென்டல் ஃபிளாஸ்

புகைத்தால் இறப்பு - சீனா வேபிங் பென்ஸ் காரணமா?

படம்
நிகோடின் கொண்ட இ சிகரெட்டுகள் அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளன. இவை அங்கு 2007 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன. இன்று பல லட்சம் பேர் இதனை அங்கு புகைத்து வருகின்றனர். இ சிகரெட்டுகளில் நிகோடின் திரவ வடிவில் இருக்கும். பேட்டரி மூலம் அந்த திரவம் மெல்ல புகையாகும். அது சிகரெட் புகைப்பது போன்ற உணர்வைத் தரும். தற்போது இ சிகரெட்டுகளைப் பிடிப்பவர்கள் நுரையீரல் பாதிப்புற்று இறந்து வருகின்றனர். விஸ்கான்சின், இலினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் ஐந்துபேர் இ சிகரெட் பிடித்து இறந்துள்ளனர். இதனால் அந்தந்த மாநில நிர்வாகங்கள் சிகரெட் பிடிக்காதீர்கள் என்று கூறியுள்ளது. 33 மாநிலங்களைச் சேர்ந்த 450 பேர் இசிகரெட்டால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இ சிகரெட்டில் நிகோடின், மரிஜூவானா, டிஹெச்சி, பூச்சிக்கொல்லி, நச்சு ஆகியவை காணப்பட்டுள்ளன. அரசு 140க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து சோதித்து வருகிறது. நிகோடினுடன் விட்டமின் இ அசிட்டேட் சேர்ந்துள்ளது ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. புரப்பலைன் கிளைக்கால் மற்றும் கிளிசரால் ஆகியவை விட்டமின் இ அசிட்டேட்டிற்கு அடுத்தபடியாக சந்தே

காரில் போகும்போது பாடல் கேட்டால் தவறா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி - மிஸ்டர் ரோனி காரில் போகும்போது ரேடியோ கேட்டுக்கொண்டே வண்டி ஓட்டுவது குறைபாடா? எனக்கு அப்படிச் செய்வதுதான் பிடித்திருக்கிறது. பிடித்திருந்தால் அதனைச் செய்யுங்கள். ஆனால் இப்போதுதான் இந்தியாவில் வாகன அபராதங்களை விண்ணளவு ஏற்றியிருக்கிறார்கள் என்பதால் கவனம். காரை விற்று தங்களின் கலாதிருப்திக்கு கப்பம் விற்கும்படி ஆகிவிடும். எனவே, ரேடியோவை சத்தமாக வைத்துக்கேளுங்கள் அதுவே உங்களுக்கும், பர்சிற்கும் நல்லது. போனில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது என்பதில் கூட தவறுகள் நேர அதிக வாய்ப்புகள் உள்ளன. காரை ஓட்டும்போது கவனமாக அதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உண்மையில் பாடல் கேட்பதை மனம் தூண்டினால் நீங்கள் அதைச் செய்யலாம். குரோனிங்கன் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் கடும் போக்குவரத்து நெரிசலில் போரடித்து பாட்டு கேட்பது கூட வண்டி ஓட்டும் கவனத்தைக் குலைக்கும் என்கிறது. தகவல் - பிபிசி

எரிமலை அருகே மக்கள் வாழ்வது ஏன்?

படம்
குவாத்திமாலா, அகுவா எரிமலை ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எரிமலையின் அருகே மக்கள் வாழ்வது எதற்காக? செல்ஃபீ எடுப்பதற்காக அல்ல மக்களே. அங்குதான் விவசாயம், சுற்றுலா என அனைத்து விஷயங்களும் எளிமையாக கிடைக்கிறது. ஜப்பான், இந்தோனேஷியா, ஃபிஜி ஆகிய தீவுகளில் எரிமலையின் பெருமையை நீங்கள் காணலாம். ம எரிமலைக்குழம்பு என்பதை காரம் அதிகமாக வைத்த காரக்குழம்புடன் ஒப்பிட்டு நாம் திகிலாகிறோம். ஆனால் ஐஸ்லாந்து காரர்கள் தங்கள் நாட்டிலுள்ள ஹெக்லா எரிமலையை தங்களது பாரம்பரிய பெருமையாக நினைக்கிறார்கள். இன்றும் உலகில் இயங்கி வரும் எரிமலைகள்    Fuji, Vesuvius, Mt. St. Helens, or even Iceland's infamous Eyjafjallajökull   இவைதான். இவை அனைத்தின் அருகிலும் கணிசமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  எரிமலைகள்தான் உலகின் நிறைய இடங்களில் புது குடியேற்றங்களை உருவாக்கின என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். சாகச வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் இதுபோன்ற வாழ்கையைத் தேர்ந்தெடுக்கலாம்.  நன்றி: க்யூரியாசிட்டி

நிலவில் ராக்கெட்டுகளை தாக்கும் தூசு மண்டலம்!

படம்
நிலவுக்குச் செல்ல அனைவரும் இன்று தயாராக இருக்கின்றனர். மனிதர்களை அனுப்ப இந்தியா தயாராக இருக்கிறது. நிலவுக்கு மனிதரகள் என்ற கனவு இந்தியாவுக்கு 2022 இல் அது பாகுபலி ராக்கெட்டின் மூலம் நிறைவேறலாம். ஆனால் அதைவிட முக்கியமாக நிலவில் சுற்றிவரும் தூசு மண்டலம் ராக்கெட்டுகளில் கடுமையான கீறல்களை ஏற்படுத்தி வருகிறது. நிலவில் பல்வேறு குப்பைகள், தூசுகள் ஒன்று சேர்ந்த தோட்டாக்களின் வேகத்தில் சுற்றி வந்து கொண்டு இருக்கின்றன. இவை மேகம் போல உள்ளன. இதனை எப்படி சமாளிப்பது என்பதை நாம் கண்டுபிடிக்கும் அவசியம் உள்ளது என்கிறார் இயற்பியலாளர் பில் மெட்ஜர். அப்போலோ 11 விண்வெளி வீர ர்கள் நிலவில் இறங்கும்போது சிக்கல்களை சந்திப்பார்களா என்று ஆராய்ச்சியாளர்களுக்கு பயம் உள்ளுக்குள் இருக்கிறது. இதற்கு வேறெந்த வழியும் இல்லை. தூசுகள் குறைந்த இடத்தில் வலிமையான விண்கலங்களை தயாரித்து அனுப்பி இறங்குவதே ஒரே வழி. நன்றி: ஃப்யூச்சரிசம்

5ஜி அலைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி 5 ஜி அலைவரிசை ரேடியோ அலைகள் பாதுகாப்பானதா? ஐந்தாம் தலைமுறை ரேடியோ அலைகள், அதிக வலிமையான அலைகளைப் பயன்படுத்துவதால் பிற உயிரினங்களை பாதிக்கும் என்று பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இன்னும் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி லைசென்ஸ் கிடைக்கவில்லை. அதற்குள் 5 ஜி வந்துவிட்டது. முந்தைய 4ஜியை விட 5ஜி 20 மடங்கு அதிகவேகமாக தகவல்களை கடத்தும் திறன் கொண்டது. வேகம் என்றால் இன்னொன்றையும் மறக்காதீர்கள். அந்த வேகத்தில் பாதியளவு காசையும் கொட்டிக் கொடுக்கத்தான் வேண்டும். இதில் சீன நிறுவனங்கள் உள்ளே நுழைந்தால் காசு குறைய வாய்ப்புள்ளது. ரேடியோ அலைகள், மின்காந்த அலைகளின் ஒரு வகை. இதன் கூடவே புற ஊதாக்கதிர்கள், எக்ஸ்ரே, காமாக் கதிர்கள் என பல்வேறு கதிர்கள் நம் உடல்நலனை பாதிக்கக் கூடியவை. ரேடியோ அலைகளுக்கு பொதுவாக உடலை பாதிக்கும் ஆற்றல் குறைவு. 5 ஜி அலைகள் 80 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் செயல்படவிருக்கின்றன. பிபிசி

பார்சலுக்கு அலுமினிய பாயில் ஆபத்தானது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி வேலைக்கு செல்லும் அவசரம். சாண்ட்விச்சை ரெடி செய்து எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். எதில் கட்டி எடுத்துக்கொண்டு செல்வீர்கள். நிச்சயமாக பிளாஸ்டிக்கை கூறமாட்டேன். காரணம், அதனை மறுசுழற்சி செய்வது மிக கஷ்டம். எனவே காகிதம் சார்ந்த பொருட்களை இதற்கு பயன்படுத்தலாம். இப்போது நான் டிபன் வாங்கி வந்த செல்வியக்கா கடையில், பார்சலுக்கு அலுமினிய பாயில் கவரைப் பயன்படுத்துகிறார்கள். இது தண்ணீர் மாசுபாடு, மறுசுழற்சி செய்வதற்கு கடினமானது. இதனை மீண்டும் ஆறு முறை பயன்படுத்தினால்தான் இதன் தயாரிப்புக்கு நியாயம் சேர்க்க முடியும். எனவே மெழுகு தடவிய காகிதங்களை நீங்கள் பயன்படுத்தலாம். நன்றி: பிபிசி

குடிமகனே... இந்தியாவின் குடிமகனே!

படம்
ஆல்கஹால் குடிகாரர்கள் உலகமெங்கும் ஆல்கஹால் பருகும் அளவு அதிகரித்து வருகிறது. இதிலும் சீனர்கள் இந்தியர்களை மிஞ்சி விட்டார்கள். அண்மையில் இதுகுறித்து லான்செட் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தொண்ணூறுகளை விட 2017 ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் வயது வந்தோர் பருகும் ஆல்கஹாலின் அளவு பத்து சதவீதம் கூடியுள்ளது.  மால்டோவா அனைத்து நாடுகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதற்கடுத்து ரஷ்யா, பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வருகின்றன. மால்டோவா நாடு தனிநபராக குடிக்கும் ஆல்கஹால் அளவு பதினைந்து லிட்டர்.  தொண்ணூறுகளில் உலகில் குடிக்கும் மதுபானங்களின் சராசரி அளவு 5.9 லிட்டராக இருந்தது. தற்போது இந்த அளவு 6.5 லிட்டராக மாறியுள்ளது. இந்தியாவில் 40 சதவீத ஆண்களும் 22 சதவீத பெண்களும் மது அருந்துகின்றனர். இது தொண்ணூறுகளைவிட இருமடங்கு அதிகம். இந்த எண்ணிக்கை இப்படியே வளர்ந்தால் உலகமெங்கும் 2030 ஆம் ஆண்டு அரைவாசி வயது வந்தோர் மதுவருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பார்கள். உலக சுகாதார நிறுவனம் இது குறித்து பிரசாரத்தை செய்து வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் 10 சதவீத மக்களை இப்பழக்க