இடுகைகள்

பழிக்குப்பழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது குடும்பத்தை அழித்த படைத்தளபதியை பழிவாங்க முயலும் பலவீனமான எல்லைப் பாதுகாப்பு படை வீரனின் போராட்டம்!

படம்
  எவர் நைட் சீன டிராமா முதல் பாகம் அறுபது எபிசோடுகள்  நிங்க் சூ, வெய் சிட்டி ராணுவத்தில் வேலை பார்க்கிறான். அவனை மரம் வெட்டுபவன் என கூறிக்கொள்கிறான். எல்லையில் உள்ள கொள்ளைக்காரர்களை அடித்து உதைத்து கொல்வதுதான் வேலை. அவனுக்கு வீட்டில் வேலை செய்ய சாங்சாங் என்ற சிறுமி இருக்கிறாள். அவளை குழந்தையாக இருக்கும்போதில் இருந்து நிங்க் சூ , தெருவில் இருந்து எடுத்து வளர்க்கிறான். இருவருக்குமான மனப்பொருத்தம் அந்தளவு நேர்த்தியாக உள்ளது. உடல் இரண்டு என்றாலும் மனசு ஒன்று.  இருவரும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். நிங்க் சூ, ராணுவ வீரன். அவனுக்கு வீட்டில் சாப்பாடு தயாரிப்பது, உடைகளை துவைப்பது, வெந்நீர் போடுவது என அனைத்து வேலைகளையும் சாங்சாங் செய்கிறாள். அவளுக்கு நிங்க் சூ சொல்வதுதான் எல்லாம். வேறு எதுவும் முக்கியமல்ல.  தனது பெற்றோரைக்கொன்றவர்களை பழிவாங்க உடல்பலத்தோடு ஆன்மிக ஆற்றலும் தேவை என நிங்க் சூவுக்குத் தெரியும். எனவே, டேங்க் பேரரசின் தலைநகரத்தில் உள்ள டேங்க் அகாடமியில் சேர முயல்கிறான். இத்தனைக்கும் அவனுடைய உடலில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் அனைத்துமே அடைபட்டுவிட்டன. ஆனாலும் தற்காப்புக்கலைகளை தொடர்ந்து

குடும்பத்தை அழித்தவர்களை நிதானமாக துப்பறிந்து கொல்ல முயலும் நாயகன்!

படம்
  Decline c drama  7 episodes சீன தொடர் சர்வ சாதாரணமாக 24, 35 என எபிசோடுகளை இழுத்துவிட்டு பார்வையாளர்களை கஷ்டப்படுத்துவது வழக்கம். ஆனால், இப்போது சில தொடர்கள் அதன் மையப்பொருட்களை பொறுத்து எபிசோடுகளை சுருக்கி வருகிறார்கள். கிடைக்கும் பயனாக, நமக்கு டேட்டா சற்று மிச்சமாகிறது.  கதையை, துண்டு துண்டாக கூறி முக்கியமான முழுக்கதையை ஒருவழியாக இறுதியாக சொல்லி முடிக்கிறார்கள். நாயகன் ஒரு துப்பறிவாளன். நன்றாக வாழ்ந்து அழிந்துபோன குடும்பத்தின் வாரிசு. சீன நகரங்களில் நடக்கும் அமானுஷ்ய கொலைகளை ஆராய்ந்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதே அவனது வேலை. எதற்காக இதை செய்கிறான் என்பது அவனது குடும்பம் படுகொலையான விவகாரம் சம்பந்தப்பட்டது. கதையின் இடையே நாயகன் தனது கடந்தகாலம் பற்றி அவனது தற்காப்புக்கலை தெரிந்த நண்பனிடம் கூறுகிறான். அவன் அந்தளவு நெருக்கமான நண்பனா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்வது கடினம்.  ஒரு நாடக குழு நகரத்திற்கு வருகிறது. அதில் உள்ள பதினொரு பேர்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இரண்டுபேர் மட்டும் காணவில்லை. இதன் பின்னாலுள்ள மர்மத்தை நாயகன் சூ சென்க்ஸி கண்டுபிடிக்கிறான். இதற்கு அவனது தற

தனது குடும்ப சொத்தை மீட்டு சிதறிய குடும்பத்தை ஒருங்கிணைக்கும் நாயகன்!

படம்
  சர்தா புல்லோடு  வெங்கடேஷ் , நக்மா, சங்கவி  தனது அம்மாவை வேசி என சொல்லி அப்பாவிடம் இருந்து பிரித்து அவரை குடிநோயாளியாக்கி, தங்கையை பணி மனுஷியாக்கும் அத்தையை பழிவாங்கும் நாயகனின் கதை.  மேலே சொன்ன விஷயங்களை சீரியலுக்கு பொருத்தமாக வைக்கலாம். ஆனால் படத்திற்கு கதையாக வைத்து எடுத்தால் எப்படியிருக்கும்? கண்றாவியாகவே இருக்கும். மாற்றமே இல்லை. அதேபோல்தான் இருக்கிறது. கொஞ்சம் ஆசுவாசமாக இருக்க சங்கவி, நக்மாவின் கிளுகிளு நடனம் உதவுகிறது.  தெலுங்குபடங்களில் நாயகியை ஸ்டாக்கிங் செய்து காதலிக்கும் வம்பு பண்ணும் நாயகன் கூடவே அவரது மாமியாரையும் பாலியல் சீண்டல்களை செய்து ஆண்மையை நிரூபிப்பது வழக்கம். இதை நகைச்சுவை என நினைத்து செய்கிறார்கள். ஆனால் சண்டாளமான காட்சியாக வந்துவிடுவது வாடிக்கை. இதிலும் மாமியார் மஞ்சுளாவுக்கு அப்படியான காட்சிகள் ஒன்றல்ல இரண்டை வைத்திருக்கிறார் இயக்குநர். தெலுங்கில் இரு நாயகிகளை இடுப்பில் வைத்து ஆடுவது, அத்தை, அத்தை பெண்கள் இருவர் என த்ரீசம், ஃபோர்சம் செய்வதெல்லாம் உண்டு. கண்களைக் கட்டும் காம வித்தைகள் அவை.  கோட்டா சீனிவாசராவ், சத்ய நாராயணா என இரு நடிகர்கள் நன்றாக நடித்திருக்கிற

ஒரு காபியை ஆர்டர் செய்தால் சட்ட ஆலோசனை கிடைக்கும்! லா கஃபே - கொரிய டிராமா

படம்
  லா கஃபே - கே டிராமா லா கஃபே கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப் பொதுமக்களின் பிரச்னைகளுக்காக போராட நினைக்கும் வழக்குரைஞர் கிம் யூ ரி, அதற்காக காபி விற்கும் கடை ஒன்றைத் திறக்கிறார். உங்களுக்கு சட்ட ஆலோசனை வேண்டுமென்றால், ஒரு காபியை ஆர்டர் செய்து வாங்கினால் போதும். டிவி தொடரில் நாயகனுக்கு இணையான முக்கியமான பாத்திரமே, கிம் யூரிதான். அவள் ஏன் வழக்குரைஞரானாள், அதன் பின்னணி என்ன என்பதை தொடர் பார்க்கும்போது பார்வையாளர்கள் உணர்ந்துகொள்ளலாம். கண்ணீர் விட்டு நெகிழலாம். கிம் யூரி தனது லா கஃபேயை, கிம் ஜியோங் ஜோ என்பவரது கட்டிடத்தில் தொடங்குகிறாள். அவர் வேறுயாருமல்ல. பள்ளி, கல்லூரியில் நெருக்கமான தோழனாக, காதலராக இருந்தவர்தான். அவருக்கோ கிம் யூரியைப் பார்த்தாலே எரிச்சலாகிறது. இவளுக்கு நான் இடத்தை வாடகைக்கு விடமாட்டேன் என அடம்பிடிக்கிறார். உண்மையில் கிம் யூரியை அவர் காதலித்தது, கல்யாணம் செய்து ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்ய நினைத்தது எல்லாம் உண்மைதான். ஆனால் அவர் கிம்யூரியை பிரேக் அப் செய்துவிட்டு, அரசு வழக்குரைஞர் வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு வேலை இல்லாமல் அவ்வப்போ

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தீயசக்தி பேரரசன் பழிவாங்க மீண்டும் உயிர்த்தெழுந்தால்... மேஜிக் எம்பரர்

படம்
  மேஜிக் எம்பரர் சீனா மங்கா காமிக்ஸ் 350 அத்தியாயங்கள் தொன்மைக் கால தீயசக்தி பேரரசன், அவனது வளர்ப்பு மகனால் சதி செய்யப்பட்டு வீழ்த்தப்படுகிறான். அவனது இறப்புக்கு காரணம், ஒரு மந்திர நூல். அதையும் தன்னோடு எடுத்துக்கொண்டு உடலை எரித்துக்கொண்டு இறக்கிறான். இதனால் அவனது ஆன்மா, மறுபிறப்பு எடுக்கிறது. ஆன்மா, பொருத்தமான உடலை தேடுகிறது. அப்போதைக்கு காட்டில் குற்றுயிராக கிடக்கும் லுவோ குடும்ப பணியாளன் ஜூவோ ஃபேன் உடலில் நுழைகிறது. அந்த நேரத்தில் லுவோ குடும்பத்தை இன்னொரு பகையாளி குடும்பத்தினர். காட்டில் வைத்து வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர். தீயசக்தி பேரரசன் , தனது சக்தியெல்லாம் இழந்தாலும் மந்திரசக்தி முறைகளை நினைவில் வைத்திருக்கிறான். அதைக் கொண்டு குற்றுயிராக கிடப்பவனைக் கொன்று அவன் ரத்தத்தை தனது உடல் ஆற்றலுக்குப் பயன்படுத்துகிறான். அந்த சக்தியை வைத்து ஆபத்தில் உள்ள லுவோ குடும்பத்தை (மிஸ் லுவோ, மிஸ்டர் லுவோ அக்கா, தம்பி) என இருவரையும் காக்கிறான். அச்சமூகத்தில்,லுவோ குழு, மூன்றாவது தரத்தில் உள்ள குடும்பம். அக்கா, தம்பி, விசுவாச வேலைக்காரன் பாங் ஆகியோர்தான் லுவோ குடும்பம். ஒன்றுமே இல்லாத

சமூகத்தை பழிக்குப்பழி வாங்க துடித்த பாய் - பாய் பாவோஷான்

படம்
  பாய் பாவோஷான் பாய், சீனாவைச் சேர்ந்த தொடர் கொலைகாரர். மொத்தம் பதினைந்து கொலைகளை நம்பிக்கையோடு செய்தவர். 1980ஆம் ஆண்டு முதல் கொலையை செய்தார். பிளானிங் சற்று சொதப்பிவிட்டது. பிடிபட்டவருக்கு கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்து பதிமூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. அப்போதே சமூகத்தை இரண்டில் ஒன்று பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தார். 1996ஆம் ஆண்டு பாயின் பழிக்குப்பழி தொடங்கியது. பெய்ஜிங்கில் காவலர் ஒருவரைத் தாக்கி துப்பாக்கி ஒன்றைத் திருடிக்கொண்டு சென்றார். டெமோ காட்ட, அதை வைத்து ஒருவரைக் கொன்று, ஆறுபேர்களை தாக்கி காயப்படுத்தினார். ஹெபாய் எனும் பகுதிக்கு சென்றபோது சிகரெட் வியாபாரியைக் கொன்று கொள்ளையடித்தார். பிறகும் கூட கொலை வெறி அடங்கவில்லை. மற்றொரு காவல்துறை காவலரைத் தாக்கி ரைபிளை கொள்ளையடித்தார். உரும்கி எனும் நகருக்குச் சென்றவர், பத்து நபர்களைக் கொன்றார். இதில், காவல்துறையினர், பொதுமக்கள் ஆகியோரும் அடக்கம். இதைச் செய்யும்போது அவருக்கு சில கூட்டாளிகள் இருந்தனர். கொலை செய்யும்போது கூட்டாளிகள் தேவைப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்களிடமிருந்து 1,80,000 டாலர்களைக் கொள்ளையடித்தபோது

பழிக்குப்பழி குணம் கொண்ட கான்ஸ்டபிளுக்கு சவால் விடும் தொடர் கொலைகாரர்! கூமன் - மலையாளம்

படம்
  கூமன் மலையாளம் இயக்கம் ஜீத்து ஜோசப் நடிப்பு – ஆசிஃப் அலி, ரமேஷ் திலக் தன்னை அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டரை பழிவாங்க நினைக்கும் கான்ஸ்டபிள் ஒருவரின் கதை. காவல்துறையில் இயங்கும் பலரும் உடலில் ஒரு வித திமிருடன் திரிவார்கள். அனைத்து விவகாரங்களிலும் தங்களின் கருத்து முடிவாக இருக்கும் என நினைப்பவர்கள். இந்த நிலையில் இப்படி இருக்கும் நாயகனை (கிரி சங்கர்) சிலர். தேவையில்லாமல் பகைத்துக்கொண்டு சில வார்த்தைகளை சொல்லிவிடுகிறார்கள். அதனால் அவன் அவர்களை தனது அதிகாரத்தை வைத்துக்கொண்டு பழிவாங்குகிறான். சாதாரண மனிதர்களுக்கு இப்படியென்றால்,  புதிதாக அலுவலகத்திற்கு வரும் இன்ஸ்பெக்டர் ஹரிலால் (பாபுராஜ்) அவனை உதாசீனப்படுத்துகிறார். ஒருமுறை ஊரில் நடக்கும் கபாடி போட்டியில், அரசியல்வாதி ஒருவனை பழைய பகையில் பழிவாங்க நாயகன் நினைத்து அடிக்கிறான்.அ ப்போது இன்ஸ்பெக்டர் அவனைப் பிரித்துவிட நினைத்து தள்ளிவிட சேற்றில் விழுந்துவிடுகிறான் நாயகன். அதை ஊரே பார்த்து சிரிக்கிறது. வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புகிறது. இதனால் இன்ஸ்பெக்டரின் மீது இருக்கும் கோபம், வன்மமாக மாறுகிறது. இன்ஸ்பெக்டரை பழிவாங்குவதற்கு நாயகன்

ஊழல் செய்வர்களை பாம் வைத்து கொல்வான் கோட்ஸே! - கோட்ஸே - சத்யதேவ், ஐஸ்வர்யா லட்சுமி, பிரம்மாஜி

படம்
  கோட்ஸே சத்யதேவ், ஐஸ்வர்யா லட்சுமி, பிரம்மாஜி, பிருதிவிராஜ் director - gopi ganesh pattaphi ஒரு தொழிலதிபரின் வீட்டில் இந்தி பேசும் கொள்ளைக்காரர்கள்   நுழைந்துவிடுகிறார்கள். அவர்களிடமிருந்து கர்ப்பவதியான பெண்ணைக் காக்க வைஷாலி என்ற பெண் அதிகாரி முயல்கிறார். ஆனால் அதற்குள் மேலதிகாரி தலையிட்டு ஒருவனை சுட்டு வீழ்த்த இன்னொருவன் கர்ப்பிணியின் கழுத்தை அறுத்துவிடுகிறான். இந்த சம்பவம் நடந்தபிறகு ஐஸ்வர்யா குற்றவுணர்ச்சி கொண்டு தனது வேலையை ராஜினாமா செய்ய நினைக்கிறார். ஆனால் மேலதிகாரி அதை ஏற்கவில்லை.   பிறகு அவரை   மாநில அரசு உயர் அதிகாரிகள் அவசர வேலைக்காக என்று அழைக்கிறார்கள். அழைத்தால் அங்கு ஒருவர் தான் வைஷாலி   என்ற அதிகாரியிடம் மட்டும்தான் பேசுவேன் என்கிறார். அங்கு பணயக் கைதியாக இருப்பவர், ஐஸ்வர்யாவின் துறை தலைவர்.   தன்னை கோட்ஸே என்று சொல்லிக் கொண்டு முக்கியமான முதல்வருக்கு நெருக்கமான ஆட்களை கடத்தியவர் யார், அவரது உண்மையான அடையாளம் என்ன, ஏன் அப்படி கடத்தி சிலரைக் கொல்கிறார், பிறரை சித்திரவதை செய்கிறார் என்பதே படத்தின் முக்கியமான பகுதி. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் அவர்களது கனவு

பழங்குடி மக்களைக் காக்க திருடனாக மாறும் இளைஞன் - கொண்டவீட்டி தொங்கா - சிரஞ்சீவி, விஜயசாந்தி, ராதா

படம்
  மாஸ் டயலாக் என நினைத்துக்கொள்ளலாம்.. இதுதான் ராஜாவின் மாஸ்க்.. சுபலேகா பாடல்...  கொண்டவீட்டி தொங்கா இயக்கம் கோதண்டராமி ரெட்டி கதை வசனம் பாருச்சி சகோதரர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், மக்களின் நலனுக்காக நிலக்கிழார்களின் நலனுக்கு எதிராக திருடனாகிறார். திருடி ஏழை மக்களுக்கு உதவுகிறார். இதைக் கண்டுபிடிக்க காவல்துறை முயல்கிறது. கூடவே தாந்திரீக மந்திரவாதியும் முயல்கிறார். அப்போது சிறையில் இருந்து தண்டனை முடிந்து வரும் பழங்குடி பெண் அந்த ஊரில் உள்ள பணக்காரரைக் கொல்ல முயல்கிறார். யார் அவர், எதற்கு அவர் பணக்காரரைக் கொல்ல முயல்கிறார் என்பதே கதையின் முக்கியப் பகுதி.  படத்திற்கு இளையராஜா இசை. அதுதான் படத்தின் முக்கியமான உயிரோட்டம்.    ஆங்கிலத்தில் ஜோரோ என்று படம் வருமே.. படத்தின் அடிப்படை கதை அதேதான்.  ஊழல், கனிமம் எடுக்கும் உள்ளூர் பணக்காரர்களை அடித்து உதைத்து பழங்குடிகளுக்கு உரிய கூலி, குடியிருக்கும் நிலம், வருமானம் ஆகியவற்றை கொண்டவீடி தொங்கா பெற்றுத் தருகிறார். இதை யார் செய்வது என அங்கேயுள்ள இன்ஸ்பெக்டருக்கு கூட தெரியாதாம். பழங்குடி மக்கள் அனைவரும் செய்யும் வேலைக்கு ஏற்ப உடை அணிய

சிரஞ்சீவி பேக் டூ பேக் திரைப்படங்கள் - இந்திரா, சூடாலனி உந்தி, ரிக்‌ஷாவோடு

படம்
            சிரஞ்சீவி படங்கள் பேக் டூ பேக் இந்திரா இயக்கம் பி கோபால் கதை சின்னி கிருஷ்ணா வசனம் பாருச்சி பிரதர்ஸ் பட்ஜெட் - 10 கோடி வசூல் 40 கோடி மூன்று நந்தி விருதுகளைப் பெற்ற படம் 2002ஆம் ஆண்டு காசியில் சங்கர் வாழ்ந்து வருகிறார். டாக்சி ஓட்டுவதுதான் இவருடைய தொழில். இவருக்கென தெலுங்கு பேசும் சில மனிதர்கள் உள்ளனர். டாக்சி ஓட்டுவது, படகு ஒன்றை காசிக்கு வருபவர்களுக்கென இயக்கி வருகிறார். படகை ஓட்ட ஆதரவற்ற ஒருவரை நியமித்திருக்கிறார். டாக்சியை நேர்மையாக ஓட்டி கிடைக்கும் பணத்தில் தான் தனது மாமன் மகள், மருமகன் ஆகியோரை பராமரித்து வருகிறார். மருமகளை கர்நாடக சங்கீதம் கற்பித்து பாடகியாக்கவேண்டுமென்ற கனவு சங்கருக்கு இருக்கிறது. ஆனால் மாமன் மகளுக்கோ பாட்டைக் கேட்டாலே தூங்கும் திறமைதான் இருக்கிறது. சாதாரணமாக பார்த்தாலே தெரியும். பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் போல இருக்கும் சங்கர், வாரணாசியில் என்ன செய்கிறார் என சந்தேகம் தோன்றும் சந்தேகம் சரிதான். சங்கர் தன் மாமன் மகள் பாடும் போட்டியில் அவர் தடுமாற இவர் மேடையேறி பாடுகிறார். அப்போது அவரைப் பார்த்து காதல் கொள்கிறார் பல்லவி என்ற பெண். இவர் உ.பி ஆ