அடிமைகளை விட கேவலமானவர்களைக் கொண்ட நாடு!
சீன நாட்டோடு இந்திய மக்கள் தம்மை இணைத்துக்கொள்ள முடியுமா என்றால் முடியாது. ஆனால், சில தற்செயலான தொடர்புகளைப் பற்றி பேசி மகிழ்ந்துகொள்ளலாம். பௌத்த மதம் இந்தியாவில் உருவானது. அதை, இந்து மதத்தில் இருந்து உருவானது என அரசு அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இந்துத்துவ முட்டாள்களும் அப்படியே பிரசாரம் செய்து வருகிறார்கள். கூடவே, அரசில் இணைந்து இன அழிப்பு செய்து பிற சிறுபான்மையினரை அழிக்க முயல்கிறார்கள். சர்க்கரை தயாரிப்பு, பட்டு ஆடைகள் உற்பத்தி, சீன மொழியில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமொழி சொற்கள் ஆகியவை இந்தியாவுடனான தொடர்பை உறுதி செய்கிறது. சீனாவின் யுன்னானிலுள்ள டாய் எனும் சிறுபான்மை மக்கள் ராமாயணத்திற்கான தனித்த வடிவத்தைக் கொண்டிருக்கிறார்கள். 1636-1912 காலகட்டத்தில் பிரிட்டிஷாரால் சீனாவுக்கு ஆபத்து ஏற்பட்டது. அப்போது பிரிட்டிஷ் படையில் பெருமளவில் இருந்தவர்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சீக்கியர்கள். இவர்கள் ஹாங்காங், ஷாங்காய், ஹாங்கூ ஆகிய பகுதிகளில் ஆங்கில அரசுக்கு ஆதரவாக படுகொலைகளை செய்தனர். எனவே, அன்று தொடங்கி சீனாவில், இந்தியா என்றால் அட...