இடுகைகள்

ட்ரோன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொல்லியல் ஆய்வுகளுக்கு உதவி செய்யும் ட்ரோன்கள் !

படம்
  தொல்லியல் ஆய்வுகளுக்கு உதவும்  ட்ரோன்! தொன்மையான புதைப்படிமங்களைக் கண்டறிய அகழாய்வாளர்கள், குறிப்பிட்ட இடத்தை ஏரியல் புகைப்படமாக பதிவு செய்வார்கள். இதற்கு பலூன், பட்டம், விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். தற்போது, ட்ரோன்களையே பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த முறையில் புகைப்படம் வேகமாகவும், தரமாகவும் கிடைக்கிறது.  ட்ரோன்களை ரிமோட் மூலம் எளிதாக பறக்கவைப்பதோடு, பறக்கும் பாதையையும் முன்கூட்டியே புரோகிராம் செய்யலாம். ட்ரோன்கள், புகைப்படங்களை குறிப்பிட்ட இடைவெளியில்  திட்டமிட்டு வெவ்வேறு கோணங்களில் எடுக்கிறது. இதனை கணினியில் உள்ள மென்பொருள் மூலம் நில அடுக்குகளைப் பார்க்கும் டோபோகிராபி (Topography) காட்சித் தன்மைக்கு மாற்றலாம். இம்முறைக்கு, போட்டோகிராமெட்டரி (Photogrammetry) என்று பெயர். அகழாய்வு செய்யும் இடங்களில் ட்ரோன் மூலம் எடுக்கும் புகைப்படங்களை கணினி வழியே 3 D படங்களாக மாற்றி பார்க்கலாம். இதன்  மூலம் அகழாய்வு செய்யும் இடங்களில் உள்ள சிறிய பொருட்களைக்கூட துல்லியமாக அறியலாம். இப்படங்களோடு செயற்கைக்கோள் படங்களையும் இணைத்து நிறைய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் பெறமுடியும்.  Digging n

அகழாய்வில் ட்ரோனின் பங்கு என்ன?

படம்
  அகழாய்வுக்கு உதவும் ட்ரோன்! தொன்மையான புதைப்படிமங்களைக் கண்டறிய அகழாய்வாளர்கள், குறிப்பிட்ட இடத்தை ஏரியல் புகைப்படமாக பதிவு செய்வார்கள். இதற்கு பலூன், பட்டம், விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். தற்போது, ட்ரோன்களையே பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த முறையில் புகைப்படம் வேகமாகவும், தரமாகவும் கிடைக்கிறது.  ட்ரோன்களை ரிமோட் மூலம் எளிதாக பறக்கவைப்பதோடு, பறக்கும் பாதையையும் முன்கூட்டியே புரோகிராம் செய்யலாம். ட்ரோன்கள், புகைப்படங்களை குறிப்பிட்ட இடைவெளியில்  திட்டமிட்டு வெவ்வேறு கோணங்களில் எடுக்கிறது. இதனை கணினியில் உள்ள மென்பொருள் மூலம் நில அடுக்குகளைப் பார்க்கும் டோபோகிராபி (Topography) காட்சித் தன்மைக்கு மாற்றலாம். இம்முறைக்கு, போட்டோகிராமெட்டரி (Photogrammetry) என்று பெயர். அகழாய்வு செய்யும் இடங்களில் ட்ரோன் மூலம் எடுக்கும் புகைப்படங்களை கணினி வழியே 3 D படங்களாக மாற்றி பார்க்கலாம். இதன்  மூலம் அகழாய்வு செய்யும் இடங்களில் உள்ள சிறிய பொருட்களைக்கூட துல்லியமாக அறியலாம். இப்படங்களோடு செயற்கைக்கோள் படங்களையும் இணைத்து நிறைய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் பெறமுடியும்.  Digging now starts i

மேட் இன் இந்தியா ட்ரோன்ஸ்! - தன்மய் பங்கர்

படம்
2019ஆம் ஆண்டு நடைபெற்ற விமானப்படையின் போட்டியில் கூட தோல்விதான். ஆனாலும் ட்ரோன்களை தயாரிப்பதை கைவிடவில்லை. இவரது ஆர்வத்தைப் பார்த்து, ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை 50 லட்ச ரூபாயை ஆராய்ச்சிக்காக வழங்கியுள்ளது. இந்திய அரசு, மேட் இன் இந்தியா பொருட்களை தேவை என்று கூவினாலும் பெரியளவு பொருட்கள் அனைத்து துறைகளிலும் உருவாகவில்லை. அதற்கு தேவையான ஊக்கமும் பணமும் கிடைக்கவில்லை என்பதே காரணம். இதன் காரணமாக டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இந்தியா, அமெரிக்காவிடமிருந்து அதிக செலவில் வாங்கி வந்தது. இதை எப்படி தயாரிக்கிறார்கள் என தன்மய் ஆராய்ந்தார். பொட்டாசியம் நைட்ரேட்டை பயன்படுத்துவது தெரிய வந்தது. இது அதிக செலவு பிடிக்கும் ஏவுகணைத்திட்டம் என்பதை அறிந்து அதனை கைவிட்டார். பிறகுதான் ட்ரோன்களை தயாரிக்கும் திட்டத்தை உருவாக்கினார். பாகிஸ்தான் அண்மையில் ஜம்முவில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது பலருக்கும் நினைவிருக்கலாம். துருக்கியும் கூட இப்போது பெருமளவு தனது ஆயுதங்களை விட ட்ரோன்களை பயன்படுத்தி எதிரிகளை தாக்கத் தொடங்கியுள்ளது. 2014இல் தொடங்கிய ஆராய்ச்சி 2016இல் பாட் டைனமிக்ஸ் என்ற நிறுவன

ட்ரோன்களுக்கு அனுமதி! - மத்திய அரசின் புதிய முடிவு!

படம்
  மத்திய அரசு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான சான்றிதழை எளிமையாக அளிக்கும்படி விதிமுறைகளை மாற்றியுள்ளது. இந்தியா 2030ஆம் ஆண்டு உலகளவிலான ட்ரோன் மையமாக மாறும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில்துறைகளிலும் பொருளாதாரம் வளரும் என நம்புவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. விரைவில் நாம் வானில் பறந்து வரும் ட்ரோன் டாக்சிகளை பார்க்க முடியும் என ஜோதிராவ் சிந்தியா கூறியுள்ளார். இவர்தான் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர்.  500 கி.கி அதிகமுள்ள ட்ரோன்களை பயன்படுத்தலாம் என அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் 300 கி.கி எடையுள்ள ட்ரோன்கள்தான் அனுமதிக்கப்பட்டது.  சரக்குகளை கொண்டு செல்வதற்கு இனி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட  வாய்ப்பு அதிகம்.  இதில் ஏற்படும் தவறுகளுக்கு அபராதம் ஒரு லட்சம் என்று விதிக்கப்பட்டுள்ளது. பிற விதிகள் மீறும்போது அபராதம் கூடுதலாக இருக்கலாம்.  ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான விதிகள் மஞ்சள், பச்சை, சிவப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மஞ்சள் பகுதியில் 12 முதல் 45 கி.மீ வரையில் பயன்படுத்தக்கூடாது என்றும், பச்சை பகுதியில் 8 முதல் 12 கி.மீ தொலைவு வரை பயன்படுத்தக்கூடாத

மக்களைக் கண்காணிக்கும் ட்ரோன்கள்!- நவீனமயமாகும் தமிழக காவல்துறை

படம்
  நவீனமயமாகும் தமிழக காவல்துறை! இனி நகரங்களில் இரவில் ட்ரோன்கள் சுற்றி வந்தால் ஏதோ ப்ரீ வெட்டிங் ஷூட்டிங் தான் நடத்துகிறார்கள் போல என்று நினைத்துவிடாதீர்கள். தமிழக காவல்துறை ட்ரோன்கள் உட்பட 14 நவீன கருவிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். பாரட் அனாப்டி, டிஜேஐ பாண்டம் என்ற ட்ரோன் வகைகளில் பதினான்கு ட்ரோன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன. இதனை முக்கியமான நகரங்களிலுள்ள துணை கமிஷனர்களுக்கு வழங்கி பொது இடங்களில் பறக்கவிட்டு கண்காணிக்க உள்ளனர். பொதுமுடக்க காலத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட வழக்குகள் ட்ரோன்களின் கண்காணிப்பில் பதிவாகியுள்ளன.  ட்ரோன்களில் அதிகாரிகளுக்கு கட்டளைகளை இட ஸ்பீக்கர் பொருத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதுபற்றி ஜிவால், நாங்கள் ஸ்பீக்கரை ட்ரோனில் பொருத்தி உத்தரவுகளை வழங்க நினைத்தோம். ஆனால் அது ட்ரோனில் கூடுதல் எடையாக இருந்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது என்றார்.  பாரட் அனாபி தெர்மல் ட்ரோன் எடை 315 கிராம் 4 கி.மீ. 26  நிமிடங்கள் பறக்கும் 50 மீட்டர் முதல் 4500 மீட்டர் வரையில் பறக்கும் இரவிலும் கண்காணிக்க முடியும் கேமராக்கள் இதில் உள

ட்ரோன்களின் பயன்பாடு!

படம்
            ட்ரோன்களின் பயன்கள் என்னென்ன ? விவசாயிகளுக்கு உதவி அதிக நிலங்களை வைத்திருப்பவர்களுக்கு ட்ரோன் பெருமளவு உதவும் .. நிலங்களை எளிதாக ட்ரோன் மூலம் கண்காணிக்கலாம் . ஆய்வு செய்யலாம் . பயிர்களின் வளர்ச்சியை வெளியே தெரியாத ஒளியைப் பீய்ச்சும் சென்சார்கள் மூலம் அறியலாம் . படம் எடுக்கலாம் . இதனை குறைந்த செலவில் செய்யமுடியும் என்பது முகியமான அம்சம் . தட்பவெப்பநிலை ஆய்வு புயல் , சூறாவளி வரும் சமயங்களில் அதனை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் பணியில் ட்ரோன் உதவுகிறது . இதன்மூலம் நாட்டில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக தடுக்கலாம் . குளோபல் அப்சர்வர் எனும் ட்ரோன் இதற்கு உதவுகிறது . புயல் சூழல்களில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக முன்னமே அடையாளம் கண்டு அது பற்றிய படங்களை எடுத்து அனுப்புகிறது . இந்த ட்ரோன் 55 ஆயிரம் அடி தொலைவில் ஆறு நாட்கள் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டது . 600 மைல் தொலைவுக்கு ஆய்வு செய்கிறது என ஆய்வாளர்கள் சான்றிதழ் கொடுக்கிறார்கள் . ஆபத்திற்கு உதவி சாலை வசதிகள் பாதிக்கப்பட்ட சூழலில் தேவையான ஆபத்துதவி பொருட்களை எப்படி எடுத்துச் செல்வது ? அதற்கு

அமேஸானின் இன்டோர் ட்ரோன் பாதிப்பு ஏற்படுத்துகிறதா?

படம்
        அமேசானின் இன்டோர் ட்ரோன் அமேசான் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இன்டோர் ட்ரோன் , பாதுகாப்பு பிரச்னை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக டெக் வல்லுநர்கள் கூறியுள்ளனர் . தி ரிங் ஆல்வேய்ஸ் ஹோம் கேம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது . ஹேக்கர்கள் , இச்சாதனத்தை எளிதாக பயன்படுத்தி வீட்டில் இருக்கும் பொருட்களை பார்த்து கொள்ளையடிக்க முடியும் . அமேசான் நிறுவனம் இச்சாதனத்தை வீட்டை கண்காணிக்கும் அற்புதமான சாதனம் என்று விளம்பரம் செய்கிறது . ஆனால் காஸ்பர்ஸ்கை நிறுவனம் , இது புதிய சைபர் பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது . ரிங் மட்டுமல்ல இணையத்தோடு இணைந்து செயல்படும் அனைத்து சாதனங்களும் பிறரால் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதே உண்மை . இச்சாதனம் வீட்டுக்குள் பறந்து கண்காணிப்பது என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இனிமேல் பயனர்கள் கூறும் விஷயங்களில்தான் இருக்கிறது .

எதிர்காலத்தில் போர்க்களத்தில் அதிகம் பயன்படும் டிரோன் விமானங்கள்!

படம்
      இன்று மனிதர்கள் செல்லமுடியாத இடங்களுக்கு டிரோன்கள் செல்கின்றன. பணிகளை முடிக்கின்றன. தீவிரவாதிகளை கண்டறிந்து களையெடுப்பது, முக்கியமான இடங்களை கண்டறிவது, பாதுகாப்பு பணிகளை செய்வது, இயற்கை பேரிடர் ஏற்பட்ட இடங்களை பார்வையிடுவது ஆகியவற்றுக்கும் டிரோன்களை பயன்படுத்தி வருகிறார்கள். உளவாளி இங்கிலாந்தில் தரானிஸ் என்ற பெயரில் டிரோன் ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள். இதன் வேகம் 1,127 கி.மீ. இதனை ரேடார் மூலம் கூட பார்க்க முடியாது. விரைவில் போர்க்களத்தில் டிரோன்கள் நிறைய பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகள் 2015ஆம் ஆண்டு தொடங்கிவிட்டன. க்வாட்காப்டர் எனும் ஆயுதம் தாங்கிய டிரோன்கள் மூலம் குறிப்பிட்ட ஆட்களை கூட திட்டமிட்டு கண்காணித்து கொலை செய்யமுடியும். இதுபற்றி எலன் மஸ்க், ஸ்டீவ் வோஸ்னியாக்கி ஆகியோர் இப்போதே எச்சரித்து விட்டார்கள். அமெரிக்கா இத்தகைய தாக்குதல்களை தீவிரவாதிகளிடம் சோதித்து பார்க்க தொடங்கிவிட்டார்கள். டிரோனை ஒருவர் அமெரிக்காவில் இருந்தே இயக்கினால் போதும். சேதம் குறைவு பாருங்கள். உடைந்தாலும் டிரோன் மட்டும்தான் போகும். இலக்கை சரியானபடி தாக்குவதும் எளிது.. விண்வெளி ஆய்வு நாசா ப

டாஸ்க்கை முடிக்க ரோபோக்களுடன் ராணுவ வீரர்கள் உரையாடலாம்! - செயற்கை நுண்ணறிவில் இது புதுசு!

படம்
      cc       ராணுவ கூட்டாளியாகும் செயற்கை நுண்ணறிவு !   அமெரிக்க ராணுவ அமைச்சகம் , ராணுவ வீரர்களுடன் பேசும் தன்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு சாதனத்தை உருவாக்கியுளளனர் . அமெரிக்காவின் ராணுவப்பிரிவும் , சதர்ன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகமும் சேர்ந்து செய்த ஆராய்ச்சியின் விளைவாக புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது . இந்த ஏ . ஐ . அமைப்பு மூலம் வீரர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது . இதன்மூலம் ராணுவத்திற்கு செலவுகள் குறைய வாய்ப்பிருக்கிறது . அடுத்து , இந்த ஏ . ஐ . மூலம் வீரர்கள் உரையாடியபடி பயிற்சி செய்வதனால் , செயற்கை நுண்ணறிவை எளிதாக புரிந்துகொண்டு பணியாற்ற முடியும் . எதிர்காலத்தில் ஏ . ஐ . பெருமளவு ராணுவத்தில் செயல்பாட்டிற்கு வரப்போகிறது . அதனைப் புரிந்துகொணடு அதற்கேற்ப எளிதாக செயல்படலாம் . தற்போது உள்ள செயற்கை நுண்ணறிவு சாதனங்களை விட அடுத்த தலைமுறைக்கான ஏ . ஐ . சாதனங்கள் தானியங்கி முறையில் செயல்படக்கூடியவை . அதனை வீரர்கள் எளிதாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே கடினமான ராணுவப்பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும் . '' கடல் , நில

துப்பாக்கி மட்டுமே முழங்கும் ஆக்சன் படம்! - பேட்டில் ட்ரோன்

படம்
  பேட்டில் ட்ரோன் - ஆங்கிலம் 2018 இயக்கம் - மிட்ச் குட் ஒளிப்பதிவு இசை சிஐஏவில் கேப்டனாக இருந்த விலகியவர் ரெக்கர். இவர் காசு கொடுத்தால் சில நாடு கடந்த பிரச்னைகளை முடித்துக்கொடுக்கும் விஷயங்களைச் செய்கிறார். இவருக்கென துப்பாக்கி, மல்யுத்தம் என அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்ற கொலைகாரக் கூட்டம் உள்ளது. இவர்கள் ரஷ்யாவில் ஒருவரைக் கொன்று பணக்காரர் ஒருவரை அமெரிக்க அரசுக்காக மீட்டு கொடுக்கின்றனர். ஆனால் சிஐஏவில் உள்ள சிலர் இவர்களின் மிதமிஞ்சிய ஆற்றலைக் கண்டு பயப்படுகின்றனர். எனவே இவர்களை வலையில் சிக்க வைக்கின்றனர். அதுதான் ட்ரோன்களோடு சண்டையிடுவது., உக்ரைனில் உள்ள செர்னோபில் அருகில் உள்ள தொழிற்சாலையில் ஆயுதங்களை மீட்க அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு இவர்களை ட்ரோன்கள் கொல்ல முயற்சிக்கின்றன. இவற்றை ரெக்கர் குழு எப்படி அழித்தனர், உயிரோடு மீண்டனர் என்பதைக் சொல்லுகிறது படம். ஆக்சன் படம் என்றால் துப்பாக்கிகள் எண்ணற்ற முறை வெடித்தால் போதும் என்ற நம்பிக்கையில் எடுத்த படம். எனவே புத்திசாலித்தனமான விஷயங்களை இயக்குநர் யோசிக்கவே இல்லை. எப்படி ட்ரோன்களை வீழ்த்துகிறார்கள் என்பதும் க

பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் தாக்குதல்!- என்ன செய்யலாம்?

படம்
ட்ரோன்கள் அண்மையில் பாகிஸ்தானிலிருந்து இயக்கப்பட்டு பஞ்சாப் அருகே பறந்த ட்ரோன் விமானங்களை ராணுவம் கண்டுபிடித்து அழித்தது. ஆளில்லாத ட்ரோன் விமானங்கள் மூலம் எளிதாக எதிரிநாடுகளை உளவு பார்க்க முடியும். குறிப்பிட்ட ஆட்களை குறிவைத்து தாக்கி அழிக்க முடியும். இவற்றை எப்படி செயலிழக்க வைப்பது என்பது பற்றி இந்திய ராணுவம் தற்போது பயிற்சி எடுத்து வருகிறது. ட்ரோன்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று நாம் பார்ப்போம். புரோட்டோகால் இன்டர்டிக்ஷன் ட்ரோன்களை இயக்கும் தொலைத்தொடர்பு மையத்தை முடக்கி அதனை செயலிழக்க வைக்கலாம். இதனை சாத்தியமாக்குவது கடினம்தான் ஆனாலும் முயற்சிக்கலாம். சென்சார் பேஸ்டு இன்டர்டிக்ஷன் ட்ரோன்களிலுள்ள சென்சார்களை ஹேக் செய்து அதனை தரையிறக்குவது அல்லது செயலிழக்கச்செய்து நொறுங்கச்செய்வது. ட்ரோன்களை குறிப்பிட்ட இலக்கு நோக்கி செட் செய்து இருப்பார்கள். ஜிபிஎஸ் அமைப்பை மாற்றி வைத்துவிட்டால் போதும். ட்ரோன் தானாகவே அழிந்துவிடும். ட்ரோன்களை குறிப்பிட்ட இடத்தில் இருந்த ரேடியோ அலைகள் மூலம் இயக்கினால் நாம் அதனை தொழில்நுட்பத்தின் மூலம் மறிக்கலாம். தவறான சிக்னல்களை கொடுத்து

கடத்தல் பிஸினஸில் ட்ரோன்கள்!

படம்
கடந்த ஜூன் 8 இல் அரசின் டிஆர்ஐ துறை சென்னையில் 48 ட்ரோன்களை கடைகளில் இருந்து பறிமுதல் செய்தனர். இந்த ட்ரோன்களின் மதிப்பு 23 லட்ச ரூபாய். இந்த ட்ரோன்களை எழும்பூரிலுள்ள கடைகளிலிருந்து அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ட்ரோன்கள் சீனாவிலிருந்து மியான்மர் வழியாக இந்தியாவிற்குள் கடத்தப்படுகிறது. இதற்கு பயன்படும் அதே வழியில்தான் நம் நாட்டிற்குள் தங்கமும் பயன்படுத்தப்படுகிறது. தங்கமும் ட்ரோனும் ஒன்றா எனக்கேட்பீர்கள். ட்ரோன் மார்க்கெட் 2021 ஆம் ஆண்டுக்குள் 881 மில்லியன் டாலர்களை எட்டவிருக்கிறது. சீனாவிலிருந்து பெரும்பான்மையான ட்ரோன்கள் விற்கப்பட்டு வருகின்றன. அதன் அசல் விலையை விட 40 சதவீதம் அதிகமாக உள்ளது.  சென்னையில் ட்ரோன்களை வாங்க முடியுமா? நிச்சயம் முடியும் ஆனால் பில் இல்லாமல்தான் கிடைக்கும். சென்னையில் 15 முதல் 20 வரையிலான ட்ரோன்கள் தினசரி இங்கு விற்கின்றன. இடைத்தரகர்கள் இதற்கும் உண்டு. கடத்தல் ஐடியா எலக்ட்ரானிக் ஐட்டம் என்று கூறி ட்ரோன்களை பகுதிப் பொருட்களாக வாங்கி பின்னர் ஆன்லைன் டுடோரியல் மூலம் அசெம்பிள் செய்து பயன்படுத்துகின்றனர். விற்கின்றனர். இதனைக் கண்டுபிடித்து