பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் தாக்குதல்!- என்ன செய்யலாம்?



Image result for drone in punjab




ட்ரோன்கள்

அண்மையில் பாகிஸ்தானிலிருந்து இயக்கப்பட்டு பஞ்சாப் அருகே பறந்த ட்ரோன் விமானங்களை ராணுவம் கண்டுபிடித்து அழித்தது. ஆளில்லாத ட்ரோன் விமானங்கள் மூலம் எளிதாக எதிரிநாடுகளை உளவு பார்க்க முடியும். குறிப்பிட்ட ஆட்களை குறிவைத்து தாக்கி அழிக்க முடியும். இவற்றை எப்படி செயலிழக்க வைப்பது என்பது பற்றி இந்திய ராணுவம் தற்போது பயிற்சி எடுத்து வருகிறது. ட்ரோன்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று நாம் பார்ப்போம்.

புரோட்டோகால் இன்டர்டிக்ஷன்

ட்ரோன்களை இயக்கும் தொலைத்தொடர்பு மையத்தை முடக்கி அதனை செயலிழக்க வைக்கலாம். இதனை சாத்தியமாக்குவது கடினம்தான் ஆனாலும் முயற்சிக்கலாம்.

சென்சார் பேஸ்டு இன்டர்டிக்ஷன்

ட்ரோன்களிலுள்ள சென்சார்களை ஹேக் செய்து அதனை தரையிறக்குவது அல்லது செயலிழக்கச்செய்து நொறுங்கச்செய்வது. ட்ரோன்களை குறிப்பிட்ட இலக்கு நோக்கி செட் செய்து இருப்பார்கள்.

ஜிபிஎஸ் அமைப்பை மாற்றி வைத்துவிட்டால் போதும். ட்ரோன் தானாகவே அழிந்துவிடும்.

ட்ரோன்களை குறிப்பிட்ட இடத்தில் இருந்த ரேடியோ அலைகள் மூலம் இயக்கினால் நாம் அதனை தொழில்நுட்பத்தின் மூலம் மறிக்கலாம். தவறான சிக்னல்களை கொடுத்து ட்ரோன்களை திகைக்க வைக்கலாம். செயலிழக்க வைக்கலாம். தானியங்கியாக இயங்கும் ட்ரோன்களை இம்முறையில் செயலிழக்க வைப்பது கடினம்.

அடுத்து விஜயகாந்த் போல லேசர் துப்பாக்கி எடுத்து சுட்டு நேரடியாக அழிப்பதுதான். ஆனால் ட்ரோன்களின் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தால், அந்த ட்ரோன் மிஷன்தான் உங்களுக்கு கடைசி மிஷன். யெஸ் ட்ரோன் வெடித்தால் நாமும் வைகுந்தம் சென்றுவிடுவோம்.

நன்றி - இந்தியாடுடே