தினசரி மூன்றுமுறை செக்ஸ், ஐந்துமுறை சுய இன்பம்! - பாபியின் ரூல்ஸ் புதுசு




Bobby Long's Wedding Photo
மனைவி சிந்தியாவுடன் பாபி ஜோ லாங்


அசுரகுலம்

பாபி ஜோ லாங்


நீங்களே சொல்லுங்கள். உடலுறவு அனுபவிப்பதில் தவறு என்ன இருக்கிறது? அதுவும் பாபி தன் மனைவியிடம்தான் அனுபவித்தார். கல்யாணமான புதிதில் வேகமாக இருப்பவர்கள், பின்னாளில் மெல்ல தளர்வார்கள். எண்ணிக்கை சரசரவென குறையும். குழந்தை பிறந்தபிறகு உடலுறவு கொள்ளும் எண்ணிக்கை இன்னும் குறையும்.

பிறந்த குழந்தையை தந்தை தூக்கி உடல்மணத்தை நுகரும்போது டெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோன் குறையும் என்கிறது மருத்துவ ஆய்வு.

ஆனால் பாபிக்கு நடந்த துரதிர்ஷ்ட விபத்து அனைத்தையும் மாற்றிவிட்டது. தினசரி மூன்று முறை மனைவியிடம் உடலுறவு கொள்வார். பின்னர் ஐந்து முறை சுய இன்பம் அனுபவிப்பார். காரணம் ராணுவப்பணிக்கு பிறகு அவருக்கு நேர்ந்த சாலை விபத்துதான். அதன்பிறகுதான் அமைதியாக இருந்த பாபி ஆக்ரோஷமாக மாறினார். கூடுதலாக உடலுறவு  வேகமும் கூடியதில் பள்ளித்தோழியாக இருந்து புரமோஷன் பெற்று காதல் மனைவியாக மாறிய சிந்தியாவுக்கு மூச்சு வாங்கியது. எத்தனை முறை? இப்படியே போனால் மாதத்திற்கு என கணக்கு போட்டால் சாதனை தம்பதி என இந்தியா டுடே செக்ஸ் சர்வேயில் கட்டுரை போடலாம் அல்லவா?

பின்னே மூளையில் அபரிமிதமாக சுரக்கும் ஹார்மோன்களின் வேகத்திற்கு உடல் இயங்கவேண்டும் என்கிற நிர்பந்தம் இருக்கிறதே?

பாபிக்கு பிறகு மனைவியிடமும் உடலுறவு கொள்வதில் விலக்கம் ஏற்பட வேறு பெண்களைத் தேடத் தொடங்கினார். வில்லங்கம் தொடங்கியது அதிலிருந்துதான். செக்ஸ்தான் சந்தோஷம் என்றிருந்தவர், விலைமாதுக்களிடம் ஏராளமாக உல்லாசம் அனுபவித்தார். ஆனால் மனதில் ஏதோ விலக்கம் ஏற்பட்டது. திருப்தி இல்லையே எனத் தோன்ற,  சாலையில் நின்று கைகாட்டும் விலைமாதுக்களிடம் சாட்டையை எடுத்தார். சித்திரவதை செய்து அவர்களை வன்புணர்வு செய்தார்.

இந்த இடத்தில் ரேப் செஞ்சா கல்யாணம் செஞ்சு வெச்சுடுவாங்களே என்ற வடிவேலு ஐடியா வேலை செய்யாது. காரணம், பாபியின் மூளை இதற்கு அடுத்து அடுத்து என கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் 1984 இல் மட்டும் ஒன்பது பெண்களை வன்புணர்வு செய்து கொன்று தீர்த்தார். இதில் ஆதரவற்றை ஒரு பெண்ணை காரில் ஏற்றி உடலுறவு கொண்டுவிட்டு உயிரோடு விட்டார். அந்த காரியம்தான் பின்னாளில் அவரது சிறை தண்டனைக்கும், மரண தண்டனை பெறவும் காரணமானது.

1980 -84 இல் அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தையே தன் காம வெறியால் பீதியடைய வைத்தார் பாபி. இவரது முறை முதலில் அகிம்சையாகத்தான் இருந்தது. பின்னர்தான் டுஃபேன்டஸி.காம் ரக காமிக்சாக மாறியது. நாற்காலி, சேர்கள், சோபா என விற்கிறோம் என்று விளம்பரங்களை மயிலாப்பூர் டைம்ஸ் முதல் இந்து வரையில் கொடுக்கிறார்கள். அதைப் பார்த்திருப்பீர்கள். சிம்பிள். அதுதான் பாபியின் பிளான். பழைய பொருட்களை விற்கும்  வீடுகளைத் தேர்ந்தெடுத்து மெல்ல காலையில் கிளம்புவார். வீட்டில் இருப்பது யார் எனப் பார்ப்பார். ஆண் துணையின்றி  இளம்பெண்ணா, ஆன்டியா, ஆயாவோ யாராக இருந்தாலும் சரிதான்.

கோழி எப்படி இருந்தால்தான் என்ன?  நமக்கு குழம்புதானே முக்கியம் என கவுண்டர் பாணியில் உள்ளே சென்று விலையை விசாரிப்பார். அப்படியே பேச்சு கொடுத்தபடி வீட்டில் உள் அமைப்புகளை நோட்டம் விட்டு, பிற உறுப்பினர்கள் இல்லை என கண்காணித்தால் குஷியாவார் பாபி. உடனே அந்தப் பெண்ணைத் தனிமைப்படுத்தி கதவைச் சாத்தினால் அவ்வளவுதான். கடிகாரத்தின் பெரிய முள்ளும் சின்ன முள்ளும் ஒன்றாகும் வரை அந்த பெண் பாபியை விட்டு மீள முடியாது.  தாக்கி கீழே வீழ்த்தி பெண்ணுக்கு விந்து தானம் செய்வார். பெண் என்ன செய்வாள்? உயிர் முக்கியமாச்சே. ஒத்துழைப்பதைத் தவிர்த்து வழியென்ன? சமாச்சாரத்தை கூச்சம் விட்டு வெளியே சொல்லவும் முடியாது.

இப்படி மாதம் முழுக்க குறிப்பிட்ட தெருவில் கசமுசா சமாச்சாரம் நடந்தது. பாபி நடத்தினார். சற்று துணிச்சலான பெண்கள் புகார் கொடுக்க போலீஸ் தேடும்போது கிளாசிஃபைடு ரேபிஸ்ட் என்ற அடைமொழி பாபிக்கு கிடைத்தது.

ஆனால் உண்மையில் நடந்த இந்த சம்பவம் இயல்பானதல்ல. 1953 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் பிறந்த பாபிக்கு, தனிமை ஏக்கம், விரக்தி எல்லாமே உண்டு. அனைத்து பிரச்னைகளும் அவருக்கு தாய் மூலமே நடந்தது. அதை அடுத்து பார்ப்போம்.

தொகுப்பும், எழுத்தும்:
வின்சென்ட் காபோ













பிரபலமான இடுகைகள்