இடுகைகள்

விஷவாயு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போபால் விஷக்கசிவு சம்பவத்தில் அரசியலை மட்டுமே அதிகம் கூறும் நூல்!

படம்
 போபால் அழிவின் அரசியல் மருதன் கிழக்குப் பதிப்பகம் மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால் நகரில் யூனியன் கார்பைடு ஆலை இயங்கி வந்தது. இங்கு 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நடந்த விஷவாயு கசிவில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த விஷ வாயு பாதிப்பு நிலம், நீர், காற்று என்ற பரவி இன்றுவரை மக்களை வதைத்து வருகிறது.  நூலில் அக்காலகட்ட காங்கிரஸ் கட்சி அரசியல், அதிலுள்ள தலைவர்களின் நிலைப்பாடு, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் வரையில் கறைபடிந்தவர்கள் என நிறுவ முயல்கிறார் நூலாசிரியர்.   ராகுல் என்ற பாத்திரம், இந்திராகாந்தியின் மரணத்திற்கு பழிவாங்கவேண்டும் என்று கூறுகிறது. யார் இந்த ராகுல்  என புரியவில்லை. நூலை வாசிக்கும்போது நிறைய இடங்களில் இது புனைவா, கட்டுரையா என்று குழப்பம் வந்துகொண்டே இருக்கிறது.  நூலாசிரியர், கட்டுரைகளை எழுதுவதில் திறமையானவர். ஆனால், புனைவில் எப்படியோ தெரியவில்லை. இந்த நூலில் புனைவை முயன்றிருக்கிறார். அது எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையவில்லை.  பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரத்ன நடார், அவரது பிள்ளை பத்மினி வழியாக கதை சொல்லப்படுகிறது. இரண்ட...

கலிஃபோர்னியா காட்டுத்தீ - போபால் விஷவாயு, சீனாவில் நச்சு நீர்,

படம்
  ஆஸ்பெடாஸ் உடலுக்குள் செல்வதால் ஏற்படுத்தும் தீமைகள்   ஆஸ்பெடாசிலுள்ள நார்கள், மனிதர்களின் உடலுக்குள் செல்லும்போது நுரையீரலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஒருவர் நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட முடியாது. மூச்சு விடவே திணறுவார். நுரையீரலின் மேலுள்ள மெல்லிய அடுக்கின் பெயர், பிலுரா. இதை ஆஸ்பெடாஸ் வேதிப்பொருள் தடிமனாக்குகிறது. எனவே மூச்சுவிடுவது கடினமாகிறது. ஆஸ்பெடாஸ் காரணமாக ஏற்படும் புற்றுநோய்க்கு மெசோதெலியோமா என்று பெயர். இந்த நோய் ஒருவருக்கு ஆஸ்பெடாஸ் உடலுக்குள் செல்வதால் ஏற்படுகிறது. அதாவது, மெல்ல கொல்லும் விஷம் போல. முதலில் நுரையீரலில் பரவும் புற்று பிற உறுப்புகளுக்கும் வேகமாக பரவுகிறது. நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுவிடுவது கடினமாகிறது என்றால் இதயம் கடினமாக வேலை செய்யும்படி ஆகிவிடும். இதனால் இதயத் தசைகள் மெல்ல கடினமான இயல்பை பெறும். இது மார்பு வலியை உருவாக்கும்.   அமெரிக்காவின் மாண்டனாவில் உள்ளது லிபி. இங்கு ஆஸ்பெடாஸ் பல்வேறு பொருட்களில் கலந்து, மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை அகற்ற மட்டுமே அமெரிக்க அரசுக்கு அரை பில்லியன் டாலர்கள் தேவைப்பட்டன. அர...

ஆயுதங்களால் ஜப்பான் அரசை வீழ்த்த திட்டம்போட்ட தந்திரமான சாமியார்! - ஓம் ஷின்ரிக்கியோ! பா.ராகவன்

படம்
          ஷோகோ அசஹாரா -  ஓம் ஷின்ரிக்கியோ            ஓம் ஷின்ரிக்கியோ பா.ராகவன் ஜப்பானில் தொடங்கப்பட்ட பௌத்த - இந்து மத கலவைதான் ஓம் ஷின்ரிக்கியோ. ஷோகோ அசஹாரா என்பவர் இதன் தலைவர். இவருக்கு ஆன்மிகம் எல்லாம் நோக்கம் இல்லை. போர்தான் லட்சியம். அதை சொன்னால் காசு யார் கொடுப்பார்கள். எனவே ஆன்மிகத்தை கையில் எடுத்து வில்லாக வளைந்து யோகா சொல்லிக்கொடுப்பது போல டுபாக்கூர் வேலைகளை செய்து காசு சம்பாதித்தார். அதை வைத்து அவர் செய்த கொடூர செயல்கள்தான் நூலின் முக்கியமான பகுதி. மதம், சாமியார் என்றால் ஆசிய நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கர்கள் கூட காசு பணத்தை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். காலில் விழுந்து யோசிப்பதை நிறுத்தி விடுகிறார்கள். ஜப்பானில் அப்படி அதிரடித்த சாமியார் ஒருவரின் கதை. பா.ராகவனின் அசரடிக்கும் எழுத்து நடைதான் சாயியார் ஷோகோவை முக்கியமான மத தலைவராக நிலைநிறுத்துகிறது. மற்றவர்கள் கிண்டல் செய்யும் முன்னர் எழுத்தாளரே அவரை தக்காளிப்பழம் என்று அவரை கிண்டல் செய்கிறார். நடுத்தர வர்க்க குடும்பத்தில பிறந்தவருக்கு உலகை ஆளும் ஆசை பிறக்க, இந்தியா வந்த...

பிரிவினைக்குள்ளாக்கி மக்களை ஆராய்ச்சி செய்யும் ஆபத்தான மனிதர்கள்! டைவர்ஜென்ட் - அலிஜீயன்ட்

படம்
          டைவர்ஜென்ட் - அலீஜியன்ட்                   டைவர்ஜென்ட் - அலீஜியன்ட்   டைவர்ஜென்ட் - அலீஜியன்ட் directed by Robert Schwentke   with a screenplay by Bill Collage, Adam Cooper, and Noah Oppenheim Based on Allegiant by Veronica Roth   Music by Joseph Trapanese Cinematography Florian Ballhaus   ஒரு நாட்டை பிரித்து அதனைக் கண்காணித்து அங்கு வாழும் மக்கள் மீது மரபணு ஆராய்ச்சி செய்கிறது ஒரு கூட்டம்.  அதனை ஒரு ஆட்சிக்குழுத் தலைவியின் மகன் தலைமையிலான இளைஞர்களின் குழு கண்டுபிடித்து தனித்தனியாக இருக்கும் நாடுகளை எப்படி ஒன்றாக இணைக்கிறார்  என்பதுதான் கதை. படத்தில் நாயகனுக்கு பெயரே 4தான். ட்ரிஸ் தான் நாயகியின் பெயர். அவரது மாசு மருவற்ற மேனியைப் போலவே அவரது டிஎன்ஏ மட்டும் பரிசுத்தமாக உள்ளது. இதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்குழுவினர், அவளை அவர்களது நாட்டிற்கு வரவைத்து அழைத்துச்செல்கின்றனர். அவளது டிஎன்ஏ மாதிரியைப் பயன்படுத்தி தூய மனித இனத்தை உருவாக்குவதே அவர்களது லட்சியம். தொடக்கத்தில் அவர்களது...