இடுகைகள்

கல்லறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனப் பொக்கிஷங்களை ஜப்பான்காரனுக்கு விட்டுக்கொடுக்க மறுக்கும் நாயகன்!

படம்
  ஷூ ஃபூ டிரஷ்சர் சீன திரைப்படம்  ஒன்றரைமணிநேரம் ஐக்யூயி ஆப் கல்லறைக்கு சென்று பொக்கிஷங்களை தேடும் படங்களுக்கென இருக்கும் சில அம்சங்களைப் பார்ப்போம்.  நாயகன் பொக்கிஷ புதிர்களை அவிழ்ப்பதில் திறமைசாலி. அவனுக்கென நகரில் கலைப்பொருட்களை விற்கும் கடை வைத்திருப்பான். தங்கம், வெள்ளி பாத்திரங்களை கொள்ளையிடுவதில் ஆர்வம் இருக்காது.  நாயகனின் நண்பன் பேராசை கொண்ட வியாபாரி. சூதாடி கலைப்பொக்கிஷங்களை அடகு வைப்பான். இவனுக்காகவே நாயகன் வெளிநாட்டுக்காரர்கள் அல்லது எதிரிகளோடு கூட்டு சேர்ந்து கல்லறைகளை கண்டுபிடித்து உள்ளே செல்லவேண்டியிருக்கும். இந்த காட்சிகள் கடுப்பாக இருந்தாலும் திரை நடிகர்கள் காமெடி என்பதாக பாவ்லா செய்வார்கள்.  நாயகி பெரும்பாலும் நாயகனின் தோழியாக இருப்பாள். எதிரியாக இருந்து நட்பாகி தனது காணாமல் போன அப்பாவை கல்லறைக்குள் தேடிக்கொண்டிருப்பாள். நாயகன் ஊடல் கொள்வதும், ஊடாடி மகிழ்வதும் இவருடன்தான்.  சீன படங்களில் ஜப்பானியர்கள் மேல் துவேஷம் மறைக்கப்படாமல் இருக்கும். அந்த நாட்டினர், சீனாவின் மீது படையெடுத்து நிறைய அக்கிரமங்கள் செய்திருக்கிறார்கள். அதை இன்றுவரை மறந்து...

ஜப்பானிய கூலிப்படையிடமிருந்து அமரத்துவ பொக்கிஷங்களை காக்கப் போராடும் நாயகன்!

படம்
  ஃபாக்குயின் - லாஸ்ட் லெஜண்ட் சீன திரைப்படம் ஐக்யூயி ஆப் ஒரு மணிநேர திரைப்படம் சீன கலாசாரத்தில் பிரிட்டிஷார், ஜப்பானியர்கள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். இன்றும் கூட சீனாவில் ஜப்பானியர்களை தங்களது தீவிர எதிரியாக நினைக்கும் குடிமக்கள் அதிகம். இதற்கு முக்கியமான காரணம், ஜப்பானியர்கள் சீனாவில் போரிட்டு செய்த ஆக்கிரமிப்புகளும், அக்கிரமங்களும்தான். அதை இந்த தொடரும் பிரதிபலிக்கிறது்.  சீனத்தின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த கல்லறை உள்ளது. அதிலுள்ள பொக்கிஷங்களை கொள்ளையடிக்க ஜப்பானிய ஆட்கள் முயல்கிறார்கள். அதை சீன நாட்டைச் சேர்ந்த நாயகன் சாமர்த்தியாக தடுத்து அனைவரையும் கல்லறையில் பிணமாக்குகிறான். ஜப்பானியர்கள் எதற்கு சீனாவில் உள்ள ஏதோ ஒரு கல்லறையைத் தேடி வரவேண்டும்? இங்குதான் அமரத்துவம் தரும் கனிகளைக் கொண்ட யுன்சி என்ற மரம் உள்ளது. அதற்காகத்தான் பேராசை கொண்ட மனிதர்கள் வேறு நாட்டுக்கே பயணம் செய்து வருகிறார்கள். பொக்கிஷங்களைக் கொள்ளையிட முயல்கிறார்கள்.  படத்தில் நாயகன் எந்திர புதிர் அமைப்புகளை திறக்கும் சூட்சுமம் கற்றவன். அவனது நண்பன், கதவுகளை திறக்கும் வழிமுறைகளை அறிந்தவன். தோழி, மல...

சாப விடுதலைக்காக குன்லூன் கல்லறைக்குச் செல்லும் தொல்பொருள் குழு! - குன்லூன் டாம்ப் - சீனதொடர்-

படம்
  குன்லூன் டாம்ப் குன்லுன் டாம்ப் 2022 சீன டிவி தொடர் மூல நாவல்- கேண்டில் இன் தி டாம்ப் – ஸாங் மூ யே ராகுட்டன் விக்கி ஆப் சாகசத் தொடர் இயக்குநர் – ஃபெய் ஸென் ஷியாங்       ஓல்ட் ஹூ, ஃபேட்டி, ஒல்ட் ஜின், ஷிர்லி யாங் இந்த நால்வரும் தொன்மையான பொருட்களை தேடித் திரியும் ஆட்கள். கல்லறைகளுக்குள் நுழைந்து பொருட்களை தேடி எடுத்து வந்து விற்பதுதான் வேலை. ஒருமுறை இப்படியான வேலைக்கு செல்லும்போது ஓல்ட் ஹூ (ஹூ பாயி), ஃபேட்டி (வாங் கை சுவான்) ஷிர்லி யாங் ஆகியோரை வைரஸ் ஒன்று தாக்குகிறது. தொன்மை கலாசாரப்படி கல்லறைக்குள் நுழைபவர்களை தாக்கும் சாபம் இது. இதன் பெயர் ரெட் ஸ்பாட் கர்ஸ். இதன்படி இதற்கு பரிகாரமாக தீயசக்தி ராஜ்யமான குன்லுன் எனும் இடத்திற்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் போகாவிட்டால் வைரஸ் தாக்கி உயிர் போய்விடும் அபாயம் இருக்கிறது. இந்த மூவரையும் பயன்படுத்தி பொக்கிஷங்களை சம்பாதிக்க தொன்மை பொருட்களை விற்பவரும் செல்வந்தருமான மிங்க் யூ ஒரு மறைமுகத் திட்டம் வகுக்கிறார். இதன்படி, பொக்கிஷங்களைப் பற்றி ஏதும் சொல்லாமல் தன் தந்தை குன்லூன் டாம்பில் இறந்துபோய்விட்டார். உடலை...

பனாரஸ் போரில் இறந்து போன மருத்துவரின் நண்பர், மறுபிறப்பு எடுத்து வந்தால்? - எட்கர் ஆலன்போவின் மூன்று கதைகள் - மருதா பாலகுருசாமி

படம்
                எட்கர் ஆலன்போவின் மூன்று கதைகள் மருதா பாலகுருசாமி இதில் இடம்பெற்றுள்ள மம்மியுடன் ஒரு உரையாடல் , கரடுமுரடான மலைகளின் கதை , எலிநோரா என அனைத்து கதைகளும் அமானுஷ்யம் திகில் கலந்தவைதான் . இதில் எலிநோரா மூன்றாவது கதை . புல்வெளி , பனித்துளி என காதல் நெஞ்சமெங்கும் கொட்டுவது போலான கதை . இறந்துபோன காதலிக்கு செய்துகொடுக்கும் சத்தியத்தை காப்பாற்ற முடியாத காதலனின் கதை . ஆனாலும் நேர்மையாக காதலித்தால் போதும் என அதுவே சத்தியத்தை மீறியதற்கான விஷயத்தை நேர் செய்துவிடும் என்கிறார்கள் . கதையில் எழுதப்பட்ட கவித்துவமான வார்த்தைகளை பிரமாதமாக உள்ளன . காதலை மறக்கமுடியதாக மாற்றுகின்றன . மம்மியுடன் ஒரு உரையாடல் என்ற கதை எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட மம்மியின் உடலை சோதிப்பதில் தொடங்குகிறது . அதன் உடல் உள்ள பெட்டியை வர்ணிக்கும்போது , நமது மனதில் அதற்கான திகில் பனி சூழத்தொடங்குகிறது . ஆனால் அந்தளவு பயந்துவிட அவசியமில்லை என பிறகுதான் நாம் புரிந்துகொள்கிறோம் . காரணம் இந்த மம்மிக்கு இறப்பு நேர்ந்து பாடம் செய்யப்படவிலை . மூளையும் , குடலும...