உலகை மாற்றியுள்ள ஆன்லைன் கல்வி - மாறும் கல்வி சூழல்கள் பற்றிய அலசல்
மாறும் கல்விப்பயணம்! கோவிட் -19 நோய்த்தொற்று அனைத்து துறைகளையம் பாரபட்சமின்றி தாக்கியுள்ளது. இதன் காரணமாக எந்த வேலைகளையும் நாம் நிறுத்தப்போவதில்லை. வேலைகளை வேறுவிதமாக செய்யப்போகிறோம். தொழிற்சாலைகள் என்றால் குறைவான தொழிலாளர்களை வைத்து பன்னிரெண்டு மணிநேரம் பிழியப்போகிறார்கள். சம்பளமும் குறைவாக இருக்கலாம். முடிந்தவரை ஆட்களைக் குறைத்துவிட்டு தொழிற்சாலை நிர்வாகம் இயந்திரங்களுக்கு மாறுவார்கள். கல்வி விவகாரத்தில் பள்ளியில் முழுநாட்களையும் கழித்த மாணவர்கள் இனி ஆன்லைன் பாதி, பள்ளி மீதி என வகுப்புகளை பயிலப் போகிறார்கள். தலைநகரான டில்லியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் கல்வி தொடங்கிவிட்டது. தனியார் பள்ளிகளில் மட்டுமல்ல, அரசுப்பள்ளிகளிலும் கூட ஆன்லைன் கல்விதான். டில்லியிலுள்ள கேரியர் லான்ச்சர் என்ற கல்வி நிறுவனம் அரசுப்பள்ளிகளில் ப்ராஜெக்ட் ஆஸ்பிரேஷன் என்ற பெயரில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் வீடுகளில் கணினிகளுக்கு முன்பு தயாராகவேண்டியதிருக்கிறது. நாற்பது நிமிடங்கள் நடைபெறும் வகுப்புகள் ஆன்லைனில் ஒன்றரை மணிநேரம் நடத்தப்படுகிறது. ஆன்லைன் கல்வி மூலம் தற்போது 1.65 லட்சம்