இடுகைகள்

வலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வதை முகாமில் மூன்று ஆண்டுகள் சித்திரவதைகள் அனுபவித்து உளவியல் கொள்கைகளை உருவாக்கிய விக்டர் பிராங்கல்!

படம்
  வியட்நாமைச் சேர்ந்த உளவியலாளர் விக்டர் ஃபிராங்கல். மன அழுத்தம், தற்கொலை எண்ணத்தை தடுப்பது ஆகியவற்றில் புகழ்பெற்ற வல்லுநர். 1942ஆம் ஆண்டு விக்டர் அவரது மனைவி, பெற்றோர், சகோதரர் ஆகியோர் நாஜிகளின் வதை முகாமுக்குகொண்டு செல்லப்பட்டனர். அங்கு மூன்று ஆண்டுகள் கடுமையான சித்திரவதையில் உயிர் பிழைத்தவர் விக்டர் மட்டுமே. 1946ஆம் ஆண்டு மேன்ஸ் சர்ச் ஃபார் மீனிங் என்ற நூலை தனது வதை முகாம் அனுபவங்களை முன்னுதாரணமாக வைத்து எழுதினார். மனிதர்களுக்கு இரண்டுவிதமான மனநிலைகள் உண்டு. அவை வலி, வேதனையைப் பொறுத்துக்கொண்டு துயரமான சூழ்நிலையைக் கடந்து வாழ்க்கையை வாழ உதவுகிறது. முடிவெடுக்க உதவுவதோடு, சுதந்திரமான இயல்பையும் உருவாக்கித் தருகிறது. நம்மைச்சுற்றி நடைபெறும் சூழ்நிலைகள் மூலம் நாம் எப்படி மாற்றம் பெறுகிறோம் என்பதை நாமே தீர்மானிக்கலாம். அதற்கு சூழலின், பிறரின் கருணையை எதிர்பார்க்க வேண்டியதில்லை என விக்டர் கூறினார்.  விக்டரிடம் ஆலோசனைக்கு நோயாளி ஒருவர் வந்தார். அவருக்கு கவலை அவர் இறப்பது பற்றியல்ல. அவர் இறந்த மனைவியை நினைத்து வருந்தினார். அவரிடம் விக்டர், உங்கள் மனைவிக்கு  முன்னரே  நீங்கள் இறந்துபோனால் என்ன

நீ விரும்பி விளையாடும் பொம்மை நான்!

படம்
  காதல் விகடன் கவிதைகள்   உன் கோணல் எழுத்துக்கள் போல இல்லை இந்த நேர்த்தியான எஸ்எம்எஸ்-கள் ஒரு கடிதம் இடேன்   யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் கைதட்டி அழைத்தபோது திரும்பிய உன்னை யாரோ ஒருத்தியாக நினைக்க முடியவில்லை -ஜா.பிராங்க்ளின் குமார் ஒரு சில முத்தங்களிலேயே உதறி விலகினாய் நாணமா என்றேன் நாளைக்கும் கொஞ்சம் இருக்கட்டும் என்றாய். அடிகள்ளி நாளைய முத்தங்களை இன்றுவரையா வைத்திருப்பேன்? -மா.காளிதாஸ் திருக்கல்யாணம் வண்டி கட்டி வந்து குவிகிறது ஊர் மொத்தமும் நம் திருமணத்திற்கு தேர் கட்டி வந்து குவிவார்கள் கடவுள் மொத்தமும் -பொன்.ரவீந்திரன் உன் விழி வில்லால் உயிர் உடைந்திட்ட ராமன் நான்   -ப்ரியன் கனிவானதொரு சொல்லோ நேசம் துளிர்க்குமொரு பார்வையோ சில்லறையற்ற பொழுதில் நீயெடுக்கும் பயணச்சீட்டோ போதுமானதாயிருக்கிறது உன்னை நேசிக்க -யாழினி முனுசாமி உப்பைக் கொட்டியவர்கள் கூட அள்ளிக்கொண்டு போகிறார்கள் ஆனால் நீயோ உன் உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு அள்ளாமலே போகிறாயே -தபூ சங்கர் நீ நடந்த தடங்களின் அடியில்தான் கிடக்கிறது நம்

ஆழமான துயர் தரும் வலி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஆழமான துயர் தரும் வலி ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? உங்கள் உடல் , மனம் மேம்பட இறைவனை வேண்டுகிறேன் . மறைமலை அடிகள் எழுதிய கடித நூலொன்றைத் தரவிறக்கி வாசித்தேன் . தமிழ் , ஆங்கிலம் என இரண்டிலும் தேர்ந்து விளங்கிய ஆளுமை . தனித்தமிழில் எழுதுவது , சைவத்தைப் பரப்புவது என வாழ்ந்து வந்திருக்கிறார் . தமிழக அரசு இணைய மின் நூலகத்தில் நிறைய அரிய நூல்கள் கிடைக்கின்றன . இந்த நூலை அங்கிருந்தே தரவிறக்கி வாசித்தேன் . இன்று சன் மோகன்ராஜ் அண்ணா அறைக்குச் சென்றேன் . அவர் தனது மனைவி , குழந்தை ஆகியோரை சென்னைக்கு கூட்டி வர உபாயம் யோசித்து வந்தார் . வருமான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார் . மின்னல் முரளி மலையாளப் படம் பார்த்தேன் . கிராமத்து சூப்பர் ஹீரோ கதை . நன்றாக திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள் . படத்தில் நம்மை யோசிக்க வைக்கும் எதிர்மறை நாயகன் பாத்திரம் ஷிபு தான் . அதாவது , நாடக கலைஞரான குரு சோமசுந்தரம் . இவர் , தனது அம்மா , காதலி என இருவரையும் வெவ்வேறு காலகட்டங்களில் சுற்றியுள்ளவர்கள் காரணமாகவே இழக்கிறார் . பூமியில் வாழ்வதற்கான பொருளை அவர் இழக்கும்போது கடுமையாக கோபமுறுகிறார் . அதில் ஏதும்

வீடு தேடி வந்து வலியைப் போக்கும் தன்னார்வ அமைப்பு - கேன் சப்போர்ட் தன்னார்வ அமைப்பு

படம்
              வலிநிவாரண சிகிச்சைக்கு நாங்க இருக்கோம் - கேன் சப்போர்ட் அமைப்பின் மருத்துவ சேவை இந்திய மாநிலங்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு, அதன் இறப்பு அளவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. புற்றுநோய் தொடக்கத்தில் கண்டுபிடித்தால் தடுக்கலாம் என்பது உண்மை. ஆனால் அறிகுறிகளை கவனிக்காதவர்களுக்கு இறப்பு உறுதி. இறுதிக்கட்டத்தில் புற்றுநோய் காரணமாக ஏற்படும் வலி என்பது நோயாளிகளின் உறவினர்களே பயங்கொள்ளும்படியாக இருக்கும். டெல்லியைச் சேர்ந்த கேன் சப்போர்ட் என்ற தன்னார்வ அமைப்பு, புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகரங்களில் வலி நிவாரண சிகிச்சைகளை வழங்கி வருகிறது. இந்த தன்னார்வ அமைப்பு திரட்டும் நன்கொடைகள் மூலமே மாத்திரை, சிகிச்சை, நோயாளிக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றையும் வழங்க முடிகிறது. பொதுவாக இந்தியாவில் தற்போது மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் என்பது ஏழைகளுக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கிறது. அதுவும் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை, மருந்துகள் என்பது ஏழைக் குடும்பங்களை கடன் வலையில் சிக்க வைத்துவிடும். இப்படி வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று மருந்து, மாத்தி

சிபாரிசு ஏற்படுத்தும் சங்கடங்கள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  3 13.8.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? முத்து செல்லக்குமார் போன்றவர்கள் திறமையானவர்களாக இருந்தால் கவலைப்படவே வேண்டாம். அவர்களுக்கான வாய்ப்பு கேட்காமலேயே அவர்களுக்கு கிடைக்கும். அதில் சாதித்து வெல்ல முடியும். நான் வேலை செய்யும் இதழின் ஆசிரியர் வலதுசாரி கருத்து கொண்டவர். இவர் போன்றவர்களிடம் திறமையைத் தாண்டி கவனமாக நடந்துகொள்வது அவசியம். எனக்கு வேலை சிபாரிசில் தான் கிடைத்தது. நான் பிறருக்கு சிபாரிசுகளை செய்வது கிடையாது. இதுவரையிலும் வேலை சிபாரிசுகள் பெரும் சங்கடங்களையே உருவாக்கியுள்ளது.   இப்போது முழங்கால் வழி மட்டுப்பட்டுள்ளது. இதனால் நடக்க முடிகிறது. உடல் பலவீனமாக இருப்பதை உணர்கிறேன். இதனால் முட்டை சாப்பிட முயன்று வருகிறேன். அலுவலகத்திற்கு நடந்து சென்று வருவதை ஈடுகட்ட சரியாக சாப்பிடுவது அவசியம்.  அன்பரசு  4 22.8.2021 அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? வேலைப்பளு காரணமாக நேரம் ஒதுக்கி பேச முடியவில்லை. அலுவலகத்தில் அமர்ந்து வலைப்பூ எழுதுவதில்லை என முடிவு செய்துள்ளேன். எனவே அறைக்கு வந்துதான் செய்திகளை, கட்டுரைகளை தட்டச்சு செய்ய

வலியால் மரத்துப்போகும் உடல்! - கதிரவனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.7.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  வீட்டில் அப்பாவும் அம்மாவும் நன்றாக இருக்கிறார்களா? வேலை எப்படி போகிறது? தாய் - மார்க்சிம் கார்க்கி நாவலைப் படித்தேன். 1334 பக்கம். தொழிலாளர்களின் போராட்டம்தான் கதையின் மையம். பொதுமக்களிடம் புரட்சி பற்றி நீலவ்னா பாத்திரம் பேசுவது போல அமைந்த பகுதிகள் உணர்வெழுச்சியுடன் அமைந்துள்ளன.  ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி இதழுக்கான வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அப்படித்தான் மேலிடம் கூறியிருக்கிறது. பார்ப்போம். பதிப்பக வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன. இந்தளவு பதிப்பாக வேலைகள் ஜவ்வாக இழுபடுவதை நான் எங்கும் பார்க்கவில்லை. ரூமில் படுத்து தூங்க பாய் இன்னும் வாங்கவில்லை. பிளாஸ்டிக் பாய்தான் என்னுடைய விருப்பம். சாதாரண பாய் வாங்கினால், எளிதாக பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுகிறது. தேவன் எழுதிய சின்னஞ்சிறு கதைகள் எனும் நூல் தொகுதியைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். குறைவான விவரிப்புகளுடன் புன்னகையோடு படிக்கும் சிறுகதைத் தொகுதி இது.  அன்பரசு  2 21.7.2021 மயிலை அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. ஒரு கடிதம் எழுதி அன

வலியைத் தாங்குவதில் யார் பெஸ்ட் - ஆணா, பெண்ணா? உண்மையா? உடான்ஸா?

படம்
  கீமோதெரபி தலையில் வளரும் முடியில் மாற்றம் ஏற்படுத்துகிறது! உண்மை. புற்றுநோயாளிகளுக்கு நோய் பாதிப்பைக் குறைக்க கீமோதெரபி கொடுக்கப்படுகிறது. இதன் விளைவாக, தலையில் முடிகொட்டும். இதை தவிர்க்க நோயாளிகளுக்கு முடியை மொட்டையடித்துவிடுகிறார்கள். இதற்குப் பிறகு முளைக்கும் முடியின் நிறமும், அதன் வடிவமும் சற்றே மாறியிருக்கும். தலைமுடியின் உரோமக்கால்கள் கீமோதெரபியால் மாற்றம் பெறும். இதன் விளைவாகவே முடியின் வடிவம், நிறம் மாறுகிறது. ஆனால் இது நிரந்தரமான மாற்றம் அல்ல. ஓராண்டிற்குள்  முடியின் வடிவமும் நிறமும் இயல்பானபடி மாறிவிடும்.  ஆண்களை விட பெண்களால் அதிகளவு வலியைத் தாங்கமுடியும்! உண்மை. குழந்தையை பிரசவிக்கும் பெண்களைப் பார்த்து இதனை எளிதாக யூகித்துவிடலாம். ஆராய்ச்சிகளின் அடிப்படையில் குழந்தை பிறக்கும் காலத்தில் பெண்களின் உடலில் வலியைத் தாங்கும் திறன் அதிகரிக்கிறது என  ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு அவர்களின் உடலில் அதிகரிக்கும் ஹார்மோன்களின் அளவு முக்கியக் காரணம். பொதுவாக வலியைத் தாங்கும் திறன் பற்றி ஆராய்ந்தால், அதற்கு ஒருவரின் வயது, சாப்பிடும் உணவு, செய்யும் வேலை ஆகியவற்றைப் பற்றியும் கவனம்

புனைவு ஏற்படுத்திய வலி! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
எ மிராக்கிள் - துருக்கி தொடர் தமிழில்   புனைவு ஏற்படுத்திய வலி!  25.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம் நலமாக இருக்கிறீர்களா? அலுவலகம் விட்டு தங்கியிருக்கும் அறைக்கு வரும்போது மழை பிடித்துக்கொண்டது. இப்போது வரை பெய்துகொண்டே இருக்கிறது. அதன் பின்னணி இசையுடன்தான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.  இன்றுதான் எ மிராக்கிள் என்ற துருக்கி தொடரின் இறுதி அத்தியாயத்தைப் பார்த்தேன். இந்த தொடர், தென்கொரியாவில் வெளியான குட் டாக்டர் என்ற டிவி தொடரைத் தழுவியது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவக்கல்வி கற்ற இளைஞர், அறுவை சிகிச்சை வல்லுநராக மாற முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை.  ஆட்டிசம் பாதிப்பு, இவர்களை எப்படி கையாள்வது, பெற்றோர் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும், இவர்களின் அறிவுத்திறன், பிறருடன் உரையாடும்போது இவர்களை புரிந்துகொள்வது எப்படி என நிறைய விஷயங்களை காட்சிகளுக்கு இடையில் புரிந்துகொள்ளும்படி அமைத்திருக்கிறார்கள். உங்களுக்கு இதுபோன்ற டிவி தொடர்களில் விருப்பமிருக்காது. முழுக்க வெளிவயமானவர். உள்வயமான எனக்கு கொரியத் தொடரை ரீமேக் செய்த துருக்கி தொடர் பிடித்திருந்தது. டாக்டர் அலி வெஃபா என்

2022இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் புதிய நூல்கள்!

படம்
  டிரேஸி ஃபிளிக் கேனாட் வின் டாம் பெரட்டா டிரேஸி ஃபிளிக்  என்ற பாத்திரம் எப்படி பாலின வேறுபாடுகளைத் தாண்டி தனது துறையில் வெல்கிறார் என்பதே கதை. எலக்சன் என்ற நூலை எழுதியபிறகு 25 ஆண்டுகள் கழித்து டிரேஸி ஃபிளிக் என்ற பாத்திரத்துடன் வாசகர்களை எழுத்தாளர் டாம் பெரட்டா சந்திக்க வந்துள்ளார். உயர்நிலைப்பள்ளி துணை முதல்வராக உள்ள டிரேசி பல்வேறு சவால்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.  தி கிரேன் வைஃப் சிஜே ஹாசர் ஆய்வுக்காக செல்லும் பயணத்தில் காதல், அன்பு, திருமணம் ஆகியவற்றை புரிந்துகொள்கிறார் எழுத்தாளர் ஹாசர். இதன் விளைவாக நடக்கவிருந்த தனது திருமணத்தைக் கூட நிறுத்திவிடுகிறார். இப்படி செய்ய என்ன காரணம் என்பதை நூலில் ஹாசர் வாசகர்களுக்கு கூறுகிறார்.  ரெயின்போ ரெயின்போ லிடியா கான்கிளின் நூல் முழுக்க மாற்றுப்பாலினத்தவர்களின் கதைகள் நிரம்பி வழிகின்றன. ஓரினச்சேர்கைத் தம்பதிகள், சமூகத்தோடு இணைந்து வாழ விரும்பும் மாற்றுப்பாலினத்தவர்கள் சந்திக்கும் அனுபவங்கள், இதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என பல்வேறு உணர்வுகளை சொல்லும் கதைகளாக உள்ளன. விரும்புபவர்கள் இதனை வாங்கி வாசிக்கலாம்.  எய்தர் ஆர்

கனவுகளின் மீது கவனம் குவிக்கும் மேற்கு நாடுகள்! - கற்றதும் பெற்றதும் என்ன?

படம்
  கனவுகளின் ஆராய்ச்சி! கனவுகளை தானே கட்டமைக்கும் லூசிட் முறையில் கற்றலையும் புதுமைத்திறனையும் அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர்.  விண்வெளிக்கு சுற்றுலா சென்றுவருவது, சூரியனுக்கு விண்கலங்களை அனுப்புவது வரையில் முடியாத விஷயங்களே விஞ்ஞானிகளுக்கு கிடையாது. ஆனால் அவர்களையும் குழப்ப வைக்கும் விஷயம், கனவுகள்தான். நம் அனைவருக்கும் தூங்கும்போது வரும் கனவுகளைத் தான் இங்கு சொல்லுகிறோம். இந்த கனவுகள் அன்றாட நிகழ்ச்சிகள் அல்லது நிறைவேறாத ஆசைகளை அடிப்படையாக கொண்டிருக்கலாம். இவற்றை ஆய்வு செய்து உண்மையான துல்லியத்துடன் கனவுகளை பார்க்க அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர்.  பொதுவாக ஒருவர் கனவுகண்டு காலையில் எழுந்தால் 90 சதவீதம் மறந்துவிடவே வாய்ப்பு அதிகம். அப்படியும் அதனை கூறினால் அதில் நிறைய தவறுகள் இருக்கும். துல்லியமான தன்மை இருக்காது. கனவுகளை நாமே திட்டமிட்டு உருவாக்கினால் எப்படியிருக்கும்? கனவு காணும்போதுகூட நாம் கனவில்தான் இருக்கிறோம் என்ற விழிப்புணர்வையும், அதில்  வரும் சம்பவங்களையும் கூட நம்மால் உருவாக்க முடிந்தால் அதை லூசிட் கனவுகள் என்று கூறலாம். அமெரிக்காவின்

நீண்டகால வலியைப் போக்கும் மருத்துவக் கண்டுபிடிப்பு!

படம்
  கடந்த திங்களன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் படாபௌடியன் ஆகிய விஞ்ஞானிகள் வெப்பத்தை உடல் எப்படி உணர்கிறது. தொடுதலை எப்படி புரிந்துகொள்கிறது என்ற ஆராய்ச்சிக்காக பரிசு பெறுகிறார்கள்.  மிளகாய் சாப்பிடும்போது காரம் என்ற வலி உணர்வைத்தாண்டில் உடலில் வெப்பத்தை  பலரும் உணர்வார்கள். ஜூலியசும் கூட அதைத்தான் ஆய்வு செய்தார்.  உடலிலுள்ள குறிப்பிட்ட உணர்வுப்பகுதி மிளகாயின் கெபாசைசின் வேதிப்பொருளுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்தார்.  ஆர்டெம், ஒருவரை தொடுவதால் உடலில் இயக்கப்பெறும் செல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்.  நமது உடல் வெளிப்புற சூழ்நிலைகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பதை புதிய கண்டுபிடிப்பு விளக்குகிறது.  வெவ்வேறு சூழல்கள், வெப்பம், குளிர் ஆகியவற்றுக்கு உடல் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்கிற வகையில் ஆய்வு முக்கியமானது.  இந்த ஆய்வு மூலம் நீண்டகாலமாக வலியில் தவித்து வருபவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பதை எளிதாக அறியலாம்.  டிஆர்பிவி1 என்ற உணர்வுப்பகுதி வெப்பத்தை உணர்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றன பிஐஇஇசட் 0

வலியை உணர்வது முக்கியமா?

படம்
                  வலியை , மகிழ்ச்சியை உணர்த்தும் நரம்பு அமைப்புகள் நாம் பூனையின் தலையை தொடும்போது உணரும் மென்மையான உணர்வு எப்படி வருகிறது ? இதற்கு நரம்பு அமைப்புகள்தான் காரணம் . வலியோ , மகிழ்ச்சியோ இந்த இரண்டுமே நரம்பு அமைப்புகளின் சென்சார்கள் மூலமே மூளைக்கு தெரிய வருகிறது . வலி என்பது உடலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை நாம் உணர உதவுகிறது . வலி எந்தளவு கூடுதலாக இருக்கிறதோ அந்தளவு பிரச்னை பெரிதாக இருக்கிறது என உணர்ந்து உடனே செயல்படவேண்டும் . வலி என்ற உணர்வு இல்லாதபோது நாம் நெருப்பில் கைவைத்தாலும் அது நம் கையை சுடும் என்று தெரியாது . இதனால் கை காயப்படும் அபாயம் உள்ளது . வலி என்பது நமது உயிரைக் காப்பாற்றும் புத்திசாலித்தனமான அறிகுறி . இந்த அறிகுறி தாவரங்களுக்கு கிடையாது . எனவே , அவற்றை வெட்டினாலும் தங்களது வலியை வெளிப்படுத்த முடியாது . மனிதர்களால் தங்களுக்கு ஏற்படும் வலியை பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியும் . வலியை உணர முடியாத தன்மை ஒருவருக்கு மரபணு காரணமாக ஏற்படலாம் . இதனை காக்னிடல் இன்சென்ஸிடிவிட்டி டு பெயின் என்கிறார்கள் . நீளமாக சொல்ல கடினமாக இருந்தால் சிஐபி . இப்படி ஒருவ

நடிப்பு, ஓவியம், பாடல், இசைப்பாடல்கள், நடனம் ஆகியவற்றில் சாதித்த கிளாசிக் பெண்கள்

படம்
                திரைப்பட நடிகை மர்லின் டயட்ரிச்   ஜெர்மனி அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் , நடிகராக புகழ்பெற்றவர் மர்லின் டயட்ரிச் . இவர் 1930 ஆம் ஆண்டு தி ப்ளூ ஏஞ்சல் என்ற படத்தில் தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கினார் . இதன்பிறகு ஆங்கிலத் திரைபடங்களில் நடித்தவர் , பாடல் , நடிப்புக்கென உலகமெங்கும் உள்ள தியேட்டர்களுக்கு பயணித்து வெற்றி கண்டார் . உலகப் போரின்போது ஜெர்மனியிலிருந்து வெளியேறிய மக்கள் அமெரிக்காவிற்கு வந்து குடியேற பல்வேறு உதவிகளைச் செய்தார் . மர்லின் மன்றோ திரைப்பட நடிகை   1926 ஆம் ஆண்டு பிறந்தவரின் இயற்பெயர் நார்மா ஜீன் மார்டென்சன் . இவர் காப்பகத்தில் வளர்ந்தவர் . 1950 களுக்குப் பிறகு படங்களில் நடித்து புகழ்பெற்றார் . தனது நடிப்பிற்காக கோல்டன் குளோப் விருது வென்றார் . தனது 36 வயதில் திடீரென இறந்துபோனாலும் சினிமா வரலாற்றில் இவரளவுக்கு கவர்ச்சியான பெண் என்று யாரையும் குறிப்பிட முடியாது . 1944 ஆம் ஆண்டு சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் மன்றோ ஆயுத தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார் . ஜோசபின் பேக்கர் பாடகர் , நடிகர்