இடுகைகள்

துருவப்பகுதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துருவப்பகுதியை உருக்கும் காட்டுத்தீ

படம்
  அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி! உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக,  ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.   இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார்.  ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்மதி பெரு

உருகும் பனி அதிகரிக்கும் வெப்பம்!

படம்
  ஆண்டிஸ் மலைத்தொடரில் உருகும் பனி! தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் நீர்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.  மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் 27 சதவீதம் உருகியுள்ளது. இதனால், மக்கள் நீருக்கு தவிக்கும் நிலை ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அன்டார்டிகா, க்ரீன்லாந்து, இமாலயம் ஆகிய பகுதிகளிலும் செய்த ஆய்வில் பனிப்பாறைகள் 37 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.  மேற்சொன்ன இடங்களில் பனிப்பாறைகள் அடர்த்தியாக இருந்தால், அது நீர்ப்பற்றாக்குறைக்கு தீர்வாக அமையும். ஆனால் அவை மெலிந்தால், குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலை உருவாகும். “ இப்போது பனிப்பாறைகள் பற்றி வெளியாகியுள்ள தகவல்தொகுப்பு, நீராதாரங்கள் விவகாரத்தில் தாக்கம் ஏற்படுத்தும்” என்றார் பிரான்சிலுள்ள கிர்னோபில் ஆல்ப்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரோமைன் மில்லான். இமாலயப் பகுதியில் பனிப்பாறைகள் உருகுவது குறைந்தது, அங்கு வாழும் மக்களுக்கு சாதகமான செய்தி. மற்றொருபுறம், ஆண்டிஸ் மலைத்தொடரில் பனிப்பாறைகள் உருகத் தொடங்குவது ஆபத்தான விஷயமாக உள்ளது.   எட்டு லட்சத்து 10 ஆயிரம் செயற்கைக்கோள் புகை

அடேலி பெங்குவின்களின் வாழ்க்கைப்பாடு!

படம்
  பிட்ஸ்  பெங்குவின்  அன்டார்டிகாவில் பொதுவாக காணப்படும் பெங்குவின் இனத்திற்கு அடெலி பெங்குவின் என்று பெயர். இவை உண்ணவும், குடிக்கவும் கடல்நீரை நாடுகின்றன. சாதாரணமாக ஒருவர் உப்பு அதிகமுள்ள உணவை சாப்பிட்டால் நோய்வாய்ப்படுவார். அடெலி பெங்குவின்கள், கண்களுக்கு மேலுள்ள உறுப்பு மூலமாக அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. இந்த உறுப்பு வடிகட்டி போல செயல்படுகிறது. ”அடிக்கடி தலையை உதறுவது, தும்மல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. இப்படி நடக்கும்போது அதனை சுற்றிலும் உப்புநீர் தெறிப்பதைப் பார்க்கலாம்” என்றார் பெங்குவின் ஆராய்ச்சியாளரான டையான் டேநெபோலி.  அடேலி பெங்குவின்களின் உடலிலுள்ள தோல்தான் அவற்றைக் குளிரிலிருந்து பாதுகாக்கிறது. நீரால் உடல் நனைவதை தடுப்பதோடு, உடல் வெப்பம் வெளியேறி செல்லாமல் பாதுகாக்கிறது. உடலில் உள்ள முடிகளை சிறு துண்டுகளாக உள்ள பார்புலஸ் எனும் உறுப்பு ஒன்றாக இணைக்கிறது. இதன் உரோமங்களை வெல்க்ரோ (velcro) அமைப்பு போல இணைக்கிறது. உரோம அமைப்பு, வெளியிலுள்ள காற்று உள்ளே வரும்போது அதனை கதகதப்பானதாக மாற்றுகிறது.  பெங்குவின்களால் பறக்க முடியாது. ஆனால் அதன் கால்களில