இடுகைகள்

சினிமா - தி அதர் சைட் ஆப் தி டோர்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கதவுக்கு மறுபுறம் என்ன இருக்கிறது?

படம்
  தி அதர் சைட் ஆப் தி டோர் பாசமும்,  குற்றவுணர்ச்சியும் ஒரு குடும்பத்தை குழிதோண்டி புதைக்கிறது. இதுதான் ஒன்லைன். இதில் சில ஆவிகளைச் சேர்ந்தால் படத்தை பயத்துடன் பார்த்து ரசிக்கலாம். மரியா, கதையின் நாயகன், நாயகி இவர்தான். இந்தியாவில் வாழும் இவருக்கு தன் மகன் ஆலிவரை விபத்தில் காப்பாற்ற முடியாமல் கொன்று விட்டோம் என்ற வலி குற்றவுணர்ச்சி தினந்தினம் அவரைக் கொல்கிறது.  தற்கொலை முயற்சியும் கூட செய்கிறார். ஆனால் கணவர் காப்பாற்றிவிடுகிறார். மிச்சமுள்ள மகளையும் கணவரையும் காப்பாற்ற நினைக்கிறார். அப்போது வீட்டு நிர்வாகம் செய்பவர், தொலைதூரத்திலுள்ள இந்து கோவிலுக்கு சென்று வரச்சொல்கிறார். அப்போதுதான், இறந்த ஆன்மாவை விட்டு நாம் வெளியே வரமுடியும் என்பவர் ஆலிவரின் உடைகளை தீயிட்டு கொளுத்த கோருகிறார். ஆனால் மரியா உடைமைகளை கொளுத்த மறுத்துவிட்டு கோவிலுக்கு செல்கிறார். கோவிலில் பிரார்த்திக்கும்போது என்ன சத்தம், மிரட்டல் வந்தாலும் தாழிட்ட கதவை திறக்ககூடாது என்பதே விதி. ஆனால் பாசத்தின் முன் எப்படி விதிகள் வெல்லும்? மகனின் குரல் கேட்டதும் நரகத்தின் கதவை திறந்துவிடுகிறார். ஆலிவரின் அழிச்சாட்டிய ஆவியுடன் ந