இடுகைகள்

பீட்டர் கர்டன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சொந்த சகோதரிகளை வல்லுறவு செய்த காமக்காளை!

படம்
  பீட்டர் கர்டன் ஜெர்மனியைச் சேர்ந்த கொலைமகன். 1883ஆம் ஆண்டு கோலன் முல்ஹெய்ம் எனும் நகரில் பிறந்தவர். வன்முறை நிறைந்த சிக்கலான குழந்தைப் பருவத்தைக் கொண்டவர். மொத்தம் பதிமூன்று பேர்களைக் கொண்ட குடும்பம். இவர்கள் வாழ்வதற்கு ஒற்றை அறை. ஒரே அறை என்பதால் கணவன், மனைவி, மகள், மகன் என அனைவரும் நெருங்கித்தான் படுக்கவேண்டிய சூழல், இதுவே அவர்கள் குடும்பத்தில் பாலியல் ரீதியான சிக்கலை உருவாக்கியது. குடிநோயாளியாகிவிட்ட பீட்டரின் தந்தை, பிள்ளைகளின் முன்பே அம்மாவை உறவுக்கு அழைத்து, உடலுறவு கொள்வார். பின்னாளில் அவர் தனது மகளுடன் வல்லுறவு கொள்ள முயன்று அப்புகார் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். அப்பா செய்ய முடியாததை மகன் பீட்டர், தனது சகோதரிகளுக்கு செய்தார். கிடைத்த வாய்ப்புகளில் சகோதரிகளை தடவினார்.தேய்த்தார். ஆக மொத்தம் மகிழ்ச்சி கொண்டார். இவருக்கு ஊக்க உந்துதலைக் கொடுத்தவர், அருகில் வாழ்ந்த நாய் கண்காணிப்பாளர். இவர், நாய்களை அடித்து உதைத்து கொடுமை செய்ததோடு, விலங்குகளை சுய இன்பம் அனுபவிக்கச் செய்து அதை பார்த்து வந்தார். ஒன்பது வயதில் பீட்டரின் குற்ற வரலாறு தொடங்குகிறது. தன்னோடு விளையாடிக் கொண்ட

ரத்தம் பார்த்தால் இன்பம் பெருகும் - பீட்டர் கர்டன்

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் பீட்டர் கர்டன் ஜெர்மனியின் கிளின்ஜென்பல்ட்ஸ் சிறைச்சாலை. சூரியன் மெல்ல சோம்பல் முறித்து கதிர்களை விரித்தபோது, அந்த கைதியை கில்லட்டினால் வெட்டுவதற்கு போலீஸ் அழைத்தனர். ஆண்டு 1931 ஜூலை 2 ஆம் தேதி.  அந்தக் கைதியின் பெயர் பீட்டர் கர்டன். 70க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை கடத்தி கொன்று அவர்களின் ரத்தம் குடித்தவர். புகைப்படத்தை நன்கு உற்றுப்பார்த்தால் ஹிட்லர் கூட தெரியலாம். வல்லுறவு, சித்திரவதை, உடல் உறுப்புகளை தின்பது என அனைத்து கொடூரங்களிலும் முனைவர் பட்டம் வாங்கியவர் பீட்டர் கர்டன். மரியாதைக்குரிய ஆள் போல புகைப்படங்களில் தெரிவார். வெளியே ரோஜாப்பூ போல சிரித்தாலும் அவரின் உள்ளுக்குள் மிருகம் உறுமிக்கொண்டிருப்பதை யாரும் அறியவில்லை.  சிறுவயது வாழ்க்கை பிற கொலைகார ர்களை போலவே இவருக்கும் அமைந்தது. குடிகாரப் பெற்றோர். கிடைத்த கேப்பில் எல்லாம் தவறுகளைக் கண்டுபிடித்து பீட்டரின் கன்னத்தில் அறைந்தனர். தாங்கள் பாலுறவு கொள்வதை அவரது தந்தை மகன் முன்னிலையில் நடத்துவார். அவன் கண்டிப்பாக பார்த்தே ஆகவேண்டும், முகத்தை திருப்பினால் நெஞ்சிலேயே மிதிப்பார்