விலங்குகளின் ஹார்மோன்களை மனிதர்களின் உடலில் செலுத்தி வினோத ஆராய்ச்சி!
ஹார்மோன் மாயாஜாலம் ! உடலில் நடைபெறும் பல்வேறு மாற்றங்கள் , தனக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் ஏற்பது , பெண்களின் கூட்டத்தை ஆர்வமாக கவனிப்பது , குரல் உடைவது , நடவடிக்கையில் துணிச்சல் வருவது என கூறிக்கொண்டே போகலாம் . இன்று ஹார்மோன் என்றால் பெரும்பாலானோர்க்கு என்ன விஷயம் என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது . நீரிழிவு அல்லது கருவுறுதலை தடுப்பதற்கு ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தொடங்கியுள்ளது . எண்டோகிரைன் சுரப்பி மூலம் ரத்தத்தில் இணையும் இந்த வேதிப்பொருள் , உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் , மனநிலை என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது . இருபதாம் நூற்றாண்டு வரை ஹார்மோன்கள் இருக்கிறதா இல்லையா எப்படிவேலை செய்கிறது என்பது பற்றிய எந்த கேள்விகளுக்கும் விடை தெரியாமல்தான் இருந்தது . மண்டையோடு , உடல் உறுப்புகள் , தசைகள் ஆகியவற்றில் உள்ளதாக தொடக்கத்தில் நம்பினர் . பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹார்மோன்களை எண்டோகிரைன் சுரப்பி சுரக்கிறது என்பதை கண்டறிந்தனர் . ஆனாலும் கூட அதன் செயல்பாடு பற்றி முழுமை யாருக்கும் தெரியவில்லை . ஹார்மோன்களிடையே வேறுபாடு தெரிய