இடுகைகள்

துரோகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவைக் கொன்ற அரசியல்வாதியை, போலீஸ்காரர்களை பழிவாங்க முயலும் மகனின் சட்டப்போராட்டம்!

படம்
யூ ஆர் ஆல் சரவுண்டட் கொரிய டிராமா இருபது எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்  நகரில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் அடித்துக் கொல்லப்படுகிறார். அதை அங்கு வேலை செய்யும் நர்ஸ் ஒருவர் பார்த்துவிடுகிறார். காவல்துறை அவரை சாட்சி சொல்ல அழைக்கிறது. ஆனால் அவரை பணக்கார தொழிலதிபர் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டுகிறார். நர்சிற்கு கணவர் இல்லை. ஒரே ஆளாக நின்று வேலை பார்த்து மகனை வளர்க்கிறார். மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என போலீஸ் அதிகாரி சியோ பான் சியோக் உறுதிதருகிறார்.  இதனால் அந்த நர்சம்மாவும் சாட்சி சொல்ல ஒத்துக்கொள்கிறார். ஆனால் அதற்குப் பிறகு சில நாட்களிலேயே அவர் வீட்டில் கொலையாகி கிடக்கிறார். கொலையாளி விட்டுச்சென்ற டாலர் ஒன்றைப் பற்றி நர்சின் மகன் தகவல் சொல்கிறான். ஆனால் அவனையும் கொலையாளி கொல்ல முயல்கிறான். அந்த நேரத்தில் கொலையாளி போனில் பேசும்போது, சியோ என்ற உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்த அதிகாரியின் பெயரைக் கூறுகிறான். இதைக்கேட்ட சிறுவன், நம்பிய அதிகாரியே மோசம் செய்துவிட்டதாக நொந்துபோகிறான். இவர்களை பழிவாங்குவது என முடிவெடுத்து அந்த நகரில்

பட்டுநூல் மாவீரனின் மறுபிறப்பு பழிவாங்கல் கதை!

படம்
  ஸ்வார்ட் டைனஸ்டி 23 எபிசோடுகள் - மொத்த எபிசோடுகள் 30க்கும் அதிகம சீன டிராமா ராக்குட்டன் விக்கி  பா எனும் வாள் பயிற்சி அகாடமி இருக்கிறது. அதன் தலைவர் ஹெங் என்ற அரசருக்கு போரில் உதவுகிறார். இதனால் அரசர மூன்று ராஜ்யங்களையும் வெற்றி கொள்கிறார். ஆனால் போரின் இறுதியில் வாள் பயிற்சி அகாடமி தலைவரின் பங்களிப்பு காரணமாகவே தான் வெற்றிபெற்றோம் என தாழ்வுணர்ச்சியால் தவிக்கிறார். இதிலிருந்து மீள துரோகம் செய்து வாள் பயிற்சி அகாடமி தலைவரைக் கொல்கிறார். இதில், அவருக்கு அகாடமி தலைவர் காதலியும் உதவுகிறார். இருவரும் சேர்ந்து அவரை விருந்து ஒன்றில் தாக்கி கொல்கிறார்கள். பிறகு அந்த காதலி மன்னரை மணந்துகொள்கிறாள். அந்த துரோகத்தை எதிர்கொள்ள முடியாத வாள்வீரர், தன்னைத்தானே அழித்துக்கொண்டு இறந்துபோகிறார். இது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதை.  அகாடமி தலைவரிடம் பயிற்சி செய்த மாணவர்கள் சிலர், அவருக்காக பழிவாங்க காத்திருக்கிறார்கள். அதற்கெனவே உயிரை பத்திரமாக வைத்திருக்கிறார்கள். மற்றும் சிலரோ, ஹெங் அரசில் இணைந்து சுயநலமாக மாறி தங்கள் வாழ்க்கைக்கு என்ன கிடைக்கும் என பார்க்கிறார்கள். நிகழ்காலத்தில், ஹெங் நாட்டில்

துரோகம் செய்த இனக்குழு தலைவரை மறுபிறவி எடுத்து பழிவாங்க கிளம்பும் வீரனின் பயணம்!

படம்
  மூன் ஸ்வார்ட் எம்பரர் மாங்கா காமிக்ஸ் டிமோன் செக்டில் உள்ள ஆட்களுக்கு காசுக்கு அடிமையாக விற்கப்பட்ட வீரன், துரோகத்தால் வீழ்த்தப்பட்டு இறந்துபோகிறான். இறக்கும் கடைசி நேரத்தில் புத்த துறவி மூலம் மறுபிறவி வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் வாய்ப்பை அவன் எப்படி பயன்படுத்தி டிமோன் செக்ட் இனக்குழு தலைவரை அழிக்கிறான் என்பதே கதை. இந்த கதை இன்னும் நிறைவடையவில்லை.  மறுபிறவியில் கூட டிமோன் செக்ட் ஆட்களிடம்தான் நாயகன் அடிமைச் சிறுவனாக இருக்கிறான். ஏற்கெனவே டிமோன் செக்ட் ஆட்கள், அடிமை சிறுவர்களை எப்படி சித்திரவதை செய்து பிறரை கொலை செய்ய பயிற்சி வழங்குவார்கள் என்பது தெரியும். எனவே, அவர்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு, சில பெண்களைக் காப்பாற்றி அவர்களின் மூலம் தங்குவதற்கான இனக்குழு  ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். இனக்குழுவில் நிர்வாகியின் உதவியாளராக பணிக்குச் சேர்கிறான். டிமோன் செக்டில் பயன்படுத்தும் கலைகளை நேரடியாக கற்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால், அடிப்படையான ஆன்ம ஆற்றல் சக்தியை மட்டும் உருவாக்கிக்கொள்கிறான். அவனுக்கு மின்னல் சக்தியை அடிப்படையாக கொண்ட வூ ஜின் என்ற வீரரின் வழிகாட்டுத

வெறுப்பு, பழிவாங்கும் வெறி ஆகியவற்றால் உருவாகும் மகத்தான நாயகன்! - அல்டிமேட் சோல்ஜர் - ரோக்

படம்
  அல்டிமேட் சோல்ஜர் மங்கா காமிக்ஸ் சீனா ரீட்எம்.ஆர்க் வயது வந்தோருக்கு மட்டுமே..... அரசின் ரகசிய அமைப்பில் வேலை செய்தவர் ஜெடோ. ஆனால், அவர் திடீரென தன் சக நண்பர்களை ஏமாற்றிக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிடுகிறார். இதன் காரணமாக அவரது குடும்பத்தினரான மனைவி ஸ்மைல் ரோஸ், ரோக் என்ற மகன் என இருவருமே துரோகிகள் என ஊராரால் தூற்றப்படுகிறார்கள். அடித்து உதைக்கப்படுகிறார்கள். ரோக் சிறுவனாக இருந்தபோதும், ஊர் மக்களால் சக வயதுடைய சிறுவர்களால் அடித்து உதைக்கப்படுகிறான். யாரும் சிறுவனை எதற்காக அடிக்கிறீர்கள் என்று கேட்பதில்லை. அந்தளவு மக்களின் மனதில் வன்மம் பெருகி வளர்கிறது. ரோக் சிறுவனாக இருந்தாலும் அவனது அப்பா பற்றி பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் அவரின் செயலால் அம்மா கஷ்டப்படுவது பற்றித்தான் அதிகம் நினைக்கிறான். எனவே, அவளை நல்லபடியாக பார்த்துக்கொள்ளவேனும் வலிமையாகவேண்டும் என நினைக்கிறான். இதனால் ஆன்ம ஆற்றல் உள்ளவர்களுடன் முரட்டுத்தனமாக மோதுகிறான். காயம்பட்டாலும் கூட எழுந்து நின்று அவர்களை பீதியூட்டுகிறான். இதற்கு காரணம், அவன் மனதில் மக்கள் மீது எழும் வெறுப்புதான். என்னை ஏன் தேவையில்லாமல் வெறுப்பேற

முரடன், சாமுராய், துறுதுறு பெண் என மூன்று பேரும் இணைந்து சாமுராயைத் தேடிச்செல்லும் பயணம்! - சாமுராய் சம்புலு - அனிமேஷன்

படம்
                  சாமுராய் சம்புலு அனிமேஷன் தொடர் இருபத்தி ஆறு எபிசோடுகள் குருவைக் கொன்றுவிட்டு சுற்றும் சாமுராய் வீரனும் , ரைகு தீவில் வளர்ந்த குற்றவாளி ஒருவனும் நண்பர்களாகி , இளம்பெண் ஒருவளுக்கு அவளது தந்தையைக் கண்டுபிடிக்க உதவுகிறார்கள் . தொடரின் டைட்டிலிலேயே ஜின் என்ற சாமுராய் வீரன் எப்படி , முகன் என்பவன் எப்படி , இவர்களை தனது பாதுகாவலர்களாக கொண்டு தந்தையைத் தேடும் ஃபு என்ற பெண்ணின் குணம் எப்படி என சொல்லிவிடுகிறார்கள் . இருபத்தி ஆறு அத்தியாயங்களில் சிறுகதை போல ஒரு கதையைச் சொல்லுகிறார்கள் . இவற்றில் ஜின் , முகன் என இருவருமே தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொண்டு சண்டைபோடுகிறார்கள் , நகைச்சுவை செய்கிறார்கள் , காதலிக்கிறார்கள் , தங்களை நிழல் போலத் தொடரும் இறந்தகாலத்தை நினைத்து வருந்துகிறார்கள் , புதிய விஷயங்களைக் கற்கிறார்கள் . இரண்டு ஆண்கள் , ஒரு பெண் என்றால் முக்கோண காதல் இருக்குமே என்றால் அதில்தான் வேறுபாடு காட்டுகிறார்கள் . முகன் , காசு கொடுத்தால் எதையும் செய்யும் முரடன் . அதிகம் யோசித்து செயல்படுவது இவனுக்கு சரிவராது . கோபம் வந்தால் உடனே

மகனின் அறுவை சிகிச்சைக்காக மோசடியில் இறங்கும் பொருளாதார பேராசிரியர்! - தி சாய்ஸ் - துருக்கி தொடர்

படம்
              தி சாய்ஸ் துருக்கி பத்து எபிசோடுகள் writers..... Nuket Bicakci Özlem Yücel Damla Serim மூளையில் கட்டி ஏற்பட்டதால் அடிக்கடி கண்பார்வை மங்கி , கைகளில் பலமின்றி மயங்கி விழும் மகனைக் காப்பாற்ற பொருளாதார பேராசிரியர் செய்யும் மோசடி வேலைகள்தான் கதை ..   இர்பான் சாயூன் என்ற பொருளாதாரப் பேராசிரியர்தான் கதை நாயகன் . பொருளாதாரமும் , பணமும் பற்றிய அத்தனை நுணுக்கங்களும் அறிந்த பேராசிரியர் . ஆனால் பல்கலைக்கழகம் ஒன்றில் தற்காலிக வேலை பார்த்து வருகிறார் . பல்கலைக்கழக அரசியலால் வேலை இழக்கிறார் . அதேசமயம் அவரது மகன் டென்னிஸிற்கு மூளையில் கட்டி எனும் தகவலையும் அறிந்துகொள்ள மனமுடைந்து போகிறார் . அவனைக் காப்பாற்ற நாற்பது ஆண்டுகளாக நேர்மையாக வாழ வேண்டும் என்ற கொள்கையையும் தூக்கிப்போட்டுவிட்டு மோசடிக்காரனாக மாறுவதுதான் மையக் கதை . இதைச்சுற்றி அவனை காதலித்துவிட்டு பின்னர் தூக்கியெறிந்த இலாய் , எப்போதும் மோசடிகளில் ஈடுபடும் இர்பானின் நண்பர் எக்மன் , தன்

அமெரிக்க மாப்பிள்ளை போல ஆன டேஞ்சர் டயபாலிக்! - துரோகம் ஒரு தொடர்கதை - முத்து காமிக்ஸ்

படம்
  டேஞ்சர் டயபாலிக்கின்  துரோகம் ஒரு தொடர்கதை லயன் முத்து காமிக்ஸ் ரூ. 50 இக்கதையை டேஞ்சர் டயபாலிக் கலக்கும் என்று கூட சொல்ல முடியாது. கோரா என்ற பெண் மரகத கற்களுக்காக மூன்று ஆண்களை பகடைக்காயாக எப்படி சுழற்றி விளையாடுகிறாள் என்பதுதான் கதை. இதில் டேஞ்சர் டயபாலிக் அமெரிக்க மாப்பிள்ளை போல வந்து போகிறார். அவரையும் அவரது காதலி ஈவா தான் காப்பாற்றும் சூழல் உள்ளது. இந்த லட்சணத்தில் டேஞ்சர் டயபாலிக் இந்த கதைக்கு தேவையா? அட்ரினோ, ரொடால்டோ, குற்றங்களில் தொடர்புடைய கத்திகளை சேகரிக்கும் மனிதர் என மூவரையும் கோரா என்ற பெண் மரகத கற்களை ஆட்டையைப் போட்டு எப்படி ஏமாற்றி சுற்ற விடுகிறாள் என்பதுதான் பாதிக்கதை. காமத்தால் மூன்று ஆண்களையும் கட்டிப்போட்டு சொகுசாக வாழும் நோக்கம் கோராவுக்கு உண்டு.  பெண்கள் தினம் வருவதால் இக்கதையை விஜயன் தேர்ந்தெடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. ஈவாவும், கோராவும்தான் கதையில் முக்கியமான ட்விஸ்டுகளை செய்கிறார்கள். கதையை நடத்துகிறார்கள். வீட்டிற்குள் புகும் டேஞ்சர் டயபாலிக் சில மணி நேரத்திலேயே காவல்துறையால் பிடிக்கப்படுவது கதையை தொய்வடையச் செய்கிறது.  கதையை நடத்திச்செல்வது முழுக்க கோரா என்

குடும்பத்தில் ஒன்றாக இணையுங்க ப்ரோ! ஓவர் தி ஹெட்ஜ் 2006

படம்
                ஓவர் தி ஹெட்ஜ் அனிமேஷன்    Director: Tim Johnson, Karey Kirkpatrick Produced by: Bonnie Arnold Screenplay by: Len Blum, Lorne Cameron, David Hoselton, Karey Kirkpatrick     போக்கிரியாக பிறரது உணவைத் திருடி தின்று வாழும் நரி , தனக்கு ஏற்பட்ட வாழ்வா சாவா சூழ்நிலையில் உயிர்பிழைக்க செய்யும் பிரயத்தனங்களே கதை . கதையின் லைன் சின்னதுதான் . நரி கரடிக்கு மக்கள் கொடுத்துள்ள தீனியை திருடுகிறது . போதும்கிற எண்ணம் நரிக்கு வராமல் போக அத்தனை தீனியையும் திருடுகிறது . அதனை கொண்டுபோகும் போது ஏற்பட்ட லாஜிஸ்டிக் பிரச்னையால் கரடி உறக்கம் கலைந்து விழித்துவிட அப்புறம் என்ன சண்டைதான் . இதில் கொள்ளையிட்ட தீனி அனைத்தும் சாலையில் விழுந்து வாகனங்களில் அரைபட்டு நாசமாகிறது . கோபமாகும் கரடி பௌர்ணமி வரை டைம் கொடுத்து ஸ்னாக்ஸை வாங்கித் தரச்சொல்லுகிறது .   அதற்காக நரி அப்பாவி குடும்பம் ஒன்றை பயன்படுத்திக்கொள்கிறது . இதனால் அந்த குடும்பத்திற்கு நேரும் பாதிப்புகள் என்னென்ன என்பதை காமெடி , நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள் . தனியாக இருப்பதை விட குடும்பமாக ஒன்றாக சேர