இடுகைகள்

கலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் யார் என்ற கேள்வியை எழுப்புவதுதான் கலை! - ஸ்டீபன் ஸ்பீல்பர்க்

படம்
  ஸ்டீபன் ஸ்பீல்பர்க், திரைப்பட இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் திரைப்பட இயக்குநர். ஸ்டீபனுக்கு எழுபத்தாறு வயதாகிறது. ஜாஸ்   பாகங்ள், சேவிங் பிரைவேட் ரியான், மைனாரிட்டி ரிப்போர்ட், ஈ.டி எக்ஸ்ட்ரா டெரஸ்டெரியல், ஷிண்ட்லர் லிஸ்ட் ஆகிய திரைப்படங்களை உருவாக்கியவர். இவர் உருவாக்கிய தயாரித்த படங்களின் வணிக லாபம் 38.7 பில்லியன் டாலர்கள்.   சினிமாவின் சக்தியை எப்போது உணர்ந்தீர்கள்? இளமையிலேயே சினிமாவின் சக்தியை உணர்ந்தேன். திரைப்படங்களை பார்ப்பதன் வழியாக என்னுடைய பெற்றோருடனான உறவும் கூட மாறியது. குறிப்பாக என்னுடைய அம்மாவினுடைய உறவு. அவர், அப்பாவைக் கடந்து இன்னொருவரை காதலிப்பதை அறிந்தபிறகு, அவரை நான் என்னுடைய அம்மாவாக கருதவில்லை. ஒரு மனிதராக அவரை அனைத்து பலவீனங்களும் கொண்டவராக என்னை நானே பார்ப்பது போல பார்த்தேன். பத்தாண்டுகளுக்கு   எனது அம்மாவை,   அவராகவே கருதிப் பார்த்தேன். அப்படிப் பார்த்தது குடும்பத்தில் வேறு எவரையும் விட அவரை நெருக்கமானவராக உணரச் செய்தது. உங்கள் குடும்ப வாழ்க்கை பற்றிய சுயசரிதை படங்களை எடுக்க நினைத்துள்ளீர்களா? எனது அம்மா, எப்போது திரைப்படங்களில் நமது கதையைச் சொல

சாளுக்கிய இளவரசன் கீர்த்திவர்மனிடமிருந்து ரத்தம் சிந்தாமல் காஞ்சியை மீட்கும் நந்திவர்மன்! - சமுத்திரகோஷம் - உதயணன்

படம்
  எழுத்தாளர் உதயணன் சமுத்திர கோஷம் உதயணன் வைதேகி பதிப்பகம் விலை ரூ.110 பல்லவ மல்லன் நந்திவர்மன், பாண்டியர்களோடு எல்லையில் போரிடும்போது ஜென்ம எதிரியான சாளுக்கிய அரசு, பின்புறமாக வந்து மன்னன் இல்லாத காஞ்சி கோட்டையை சூழ்ச்சியாக கைப்பற்றுகிறது. பாண்டியர்களை வென்ற நந்திவர்மன், திரும்பி வந்து தனது பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியை எப்படி கைப்பற்றுகிறான் என்பதே கதை. இந்த சரித்திர நாவலில் கல்வெட்டுகளின் சான்றுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலுள்ள தகவல்படி, நந்திவர்மன் இல்லாத காலகட்டத்தில் சாளுக்கியர்கள் காஞ்சியை தங்கள் வசமாக்குகிறார்கள். பிறிதொரு காலகட்டத்தில் சாளுக்கியர்களிடமிருந்து அதை நந்திவர்மன் மீட்கிறான். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.   அந்த இடத்தை பயன்படுத்தி நாவலை எழுத்தாளர் உதயணன் எழுதியிருக்கிறார். நாவலில் பராக்கிரம யுத்தங்கள், ஒற்றைக்கு ஒற்றை என சண்டைகள் ஏதும் கிடையாது. அனைத்துமே சூழ்ச்சி, தந்திரம் என மூளை விளையாட்டுகள்தான் நிறைந்திருக்கின்றன. நந்திவர்மன் கதையில் வரவே அதிக பக்கங்களை நீங்கள் தாண்டவேண்டும். நந்திவர்மனை பிழையில்லாத வீரனாக எழுத்தாளர் உத

சாதாரண டைப்ரைட்டரில் ஏஐயை இணைத்தால்.... தொழில்நுட்ப வல்லுநர் அரவிந்த் சஞ்சீவ்

படம்
  இப்போது எல்லோருமே சாட் ஜிபிடி, அதானி பங்கு, மோசடி, வாழ்க்கை, எதிர்காலம், வேலை போய்விடுவோமோ என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சாட் ஜிபிடி சொல்லும் பதில்களில் உள்ள சரி தவறு என்பதைப் பற்றி நாமும் விவாதங்களை செய்யப்போவதில்லை. பிங் தன்னுடைய தேடுதல் தளத்தில் சாட் ஜிபிடியை இணைத்துள்ளது. அதுபோல ஏஐயை வேறு ஏதாவது சாதனங்களில் இணைக்க முடிந்தால் எப்படியிருக்கும்? யோசித்ததோடு அதை தனது திறமை மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார் இளைஞரான அரவிந்த் சஞ்சீவ். ‘’ஏஐ யைப் பயன்படுத்தி சோதனைகளை செய்வது, மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்குமான உறவை மேம்படுத்தும்’’ என்கிறார். இவர், இ காமர்ஸ் தளத்தில் வாங்கிய சாதாரண டைப்ரைட்டரை ஏஐ ஆற்றல் கொண்டதாக மாற்றியிருக்கிறார். இதற்கென சில மாறுதல்களை எந்திரத்தில் செய்திருக்கிறார்.   இந்த எந்திரம், ஓபன் ஏஐயின் சாட் ஜிபிடி 3 மாடலில் இயங்குகிறது. அரவிந்த் பயன்படுத்துவது, எண்பதில் வெளியான பிரதர்ஸ் நிறுவனத்தின் டைப்ரைட்டர். சாதாரண டைப்ரைட்டரில் எப்படி ஏஐயை இணைக்கும் யோசனை வந்தது? எல்லாம் ஒரு கலைதாகம்தான் அப்படி ஒரு திசை நோக்கி செலுத்தியிருக்கிறது. அரவிந்

கூத்துக்கலைஞர்களை அடையாளப்படுத்தும் மருதம் கலைவிழா! - விழுப்புரத்தில் புதிய முயற்சி

படம்
  புதிய தலைமுறையினருக்கான மருதம் கலைவிழா பொங்கல் என்றால் பலருக்கும் தனியார் தொலைக்காட்சியில் போடும் சினிமாக்களைப் பார்ப்பதும், இன்ஸ்டா ரீல்ஸ் செய்வதிலும் பொழுது கழியும். அந்த நேரத்தில் விழுப்புரத்தில் நாட்டுப்புற கலைஞர்களை வரவைத்து மருதம் விழாவை இருநாட்கள் நடத்துகிறார் ஏ கார்த்திகேயன் என்ற சமூக செயல்பாட்டாளர். ‘’இன்று இளைஞர்கள் பொங்கல் போன்ற விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. போனில் அல்லது டிவி முன்னே அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவே 15-16 என இரு நாட்களில் நாங்கள் மருதம் விழாவை நடத்த தொடங்கினோம்’’ என்றார் கார்த்திகேயன். இவர் தனது இளம் வயதில் புரட்சிகர இயக்கங்களில் இயங்கி வந்தவர். இந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவில் தெற்கு ஆற்காடு பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், புத்தக விற்பனை நிலையம் ஒன்று. கலைப்பொருட்களின் அரங்கு ஆகியவை இடம்பெற்றிருந்தது. கரகாட்டம், பொய்க்கால் குதிரை, பறை, தெருக்கூத்து ஆகியவற்றை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் நடத்துகிறார்கள். மருதம் விழாவில் சமூக செயல்பாட்டாளர்களை கௌரவிக்கும் பணியும் நடைபெறுகிறது. பச

வாழ்க்கையின் போக்கிலேயே வாழ்ந்தால் ... உல்லாசம் - ஷான் நிகாம், பவித்ரா லட்சுமி

படம்
  உல்லாசம் மலையாளம் ஷான் நிகம், பவித்ரா லட்சுமி லட்சியத்தைக் கொண்ட துயரங்களா, இலக்கைப் பற்றி கவலைப்படாத மகிழ்ச்சியா என இரு வேறுபட்ட விஷயங்களைப் பற்றி பேச முயல்கிற படம்தான் உல்லாசம். ஹாரி மேனன் என்ற இளைஞரும், யாரிடமும் அதிகமாக பேசாத கர்ப்பிணிகளைக் கண்டால் மட்டும் மனம் பதைபதைக்கிற இளம்பெண்ணும் ஊட்டியில் சந்திக்கிறார்கள். மோதல் தொடங்கினால் காதலாகத் தானே மாற வேண்டும். அந்த வகையில் காதல் ஆகிறது. ஆனால் இதில் இளம்பெண், ஹாரி மீது நம்பிக்கை வராமல் தன்னைப் பற்றிய எந்த விஷயங்களையும் கூறுவதில்லை. ஹாரிக்கு அந்த பெண்ணை திரும்ப சந்திக்க ஆசையிருக்கிறது. மனதில் காதலும் இருக்கிறது. ஆனால், அவள் எங்கே இருக்கிறாள் என்று கூட தெரியாது. ஹாரி கோவையிலும், இளம்பெண் கேரளாவுக்குமாக பிரிந்து செல்கிறார்கள். இருவரும் பிறகு சந்தித்தார்களா இல்லையா என்பதே கதை. ஹாரியாக ஷான் நிகம் நடித்திருக்கிறார். படம் நெடுக   ஷானின் இளமைத் துடிப்பும் நடிப்பும்தான் படத்தை காப்பாற்றுகிறது. இதில், நிமா என்ற பாத்திரத்தில் பவித்ரா லட்சுமி நடித்திருக்கிறார். மாடல் போல தோற்றமிருந்தாலும் இந்த படத்திற்கு அவரின் பங்களிப்பு என்பதே குறைவ

சீனாவின் கலைப்பொக்கிஷங்களை விற்கும் தொழிலதிபர் குழுவோடு மோதும் தடய அறிவியல் துறை - ட்ரூத் - சீன டிவி தொடர்

படம்
  ட்ரூத் - சீன  டிவி தொடர்  யூட்யூப்  தடய அறிவியல் பற்றிய நிறைய தொலைக்காட்சி தொடர்களை உலகமெங்கும் எடுத்து வருகிறார்கள். ட்ரூத் சீனாவில் ஒளிபரப்பாகிய டிவி தொடர்.  பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கேப்டன் லின் என்பவர், வழக்கு ஒன்றை விசாரித்துக்கொண்டிருக்கும் நிலையில் மரணமடைகிறார். அவர் மரணமடைவது காரோடு நீருக்குள் மூழ்கி என்பது அப்போதைக்கு பரபரப்பான குற்றச்செய்தியாகிறது. அதற்குப் பிறகு அப்பாவை வழிகாட்டியாக கொண்ட லின்னின் மகள், காவல்துறையில் சேர்ந்து தடய அறிவியல் துறையில் வேலை செய்கிறாள். பின்னாளில் அவர்கள் ஒரு வழக்கை துப்பறிய அதில் அவளது அப்பாவின் மரணமும் இடையில் ஒன்றையொன்று சந்திக்க கடந்தகால குற்றங்களை எப்படி தேடித்துருவி குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள் என்பதே மையக் கதை.  பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவு சார்ந்த கதை கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே, சண்டைக்காட்சிகளை எதிர்பார்க்க வேண்டியிருக்காது. அப்படி பார்த்தாலும் இதில் சண்டைகள் ஏதும் கிடையாது. எப்படி தடய அறிவியல் மூலம் அரசு வழக்குரைஞர்க்கு வழக்கின் சாட்சியங்களை உறுதிப்படுத்துகிறார்கள் என்பதே முக்

டைம் இதழில் இடம்பிடித்த கலைத்துறை பிரபலங்கள்! பீட்டே டேவிட்சன், குவிண்டா பிரன்சன், மிலா குனிஸ்

படம்
        குவின்டா ப்ரன்சன் கல்வியும் நகைச்சுவையும் quinta brunson குவின்டா ப்ரன்சனை வெறும் எழுத்தாளர் என்று கூறிவிடமுடியாது. அவர் தயாரிப்பாளர், நகைச்சுவைக் கலைஞர் என பொறுப்புகளை ஏற்று செய்தார். தான் செய்யும் வேலையை மாணவராக கற்றுக்கொள்ளவும், அதில் தேர்ந்த குருவாகவும் இருக்க முடிவது ஆச்சரியம்தான். டிவி தொடர்களில் நிறைய மாற்றங்களை தனது நடிப்பு, தயாரிப்பு மூலம் செய்து வருகிறார். அப்போட் எலிமெண்டரி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பொதுக்கல்வியில் உள்ள பிரச்னைகளைப் பற்றி பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் வரும் நகைச்சுவையில் பிரச்னைகளை பேசுவதுதான் குவின்டாவின் தனித்துவம். மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் தனது நிகழ்ச்சி மூலம் சிறப்பாக இணைத்து அறிய வேண்டுவனவற்றை அறிய வைப்பதுதான் குவிண்டாவின் புத்திசாலித்தனம். தடைகளை உடைத்து நகைச்சுவை மூலம் நிறைய கதவுகளை குவின்டா திறந்து வைத்துள்ளார். லெப்ரோன் ஜேம்ஸ் கூடைப்பந்தாட்ட வீரர் மிலா குனிஸ் ஆங்கிலப்பட நடிகை மிலா குனிஸ், அமெரிக்காவிற்கு தனது அம்மா, சகோதரருடன் வந்தவர். நடிகர் ஆஸ்டின் கட்சரை மணந்துகொண்டவர் மிலா குனிஸ். இருவருமே உக்ரைன் மீது ரஷ்யா போர்

பெண்கள் தங்களின் பலம் அனைத்தையும் தொழிலில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்! - டாக்டர் லீனா, நெயில் ஆர்டிஸ்டரி

படம்
  டாக்டர் லீனா நிறுவனர், நெய்ல் ஆர்டிஸ்டரி டாக்டர் லீனா  பெண்களில் கைகளில் உள்ள நகங்களில் கூட ஓவியங்களை இப்போது வரையத் தொடங்கிவிட்டார்கள். அப்படித்தான் நெய்ல் ஆர்டிஸ்டரி தொடங்கியது. இதனை தொடங்கிய லீனா துபாயைச் சேர்ந்தவர். பிறந்ததும், வளர்ந்ததும் துபாயில்தான். லீனாவின் பூர்விகம், தென்னிந்தியா என்பதால் இந்தியாவின் கலாசாரம் மீது இவருக்கு ஆர்வம் இருந்தது. இதன்  காரணமாக பள்ளிப்படிப்பை முடித்தவர் மேற்படிப்பை படிக்க இந்தியாவுக்கு வந்தார். இங்கு பல் மருத்துவம் படித்தார்.  படித்துவிட்டு வேலை பார்க்க நினைத்தபோது அதை ஏன் எங்கேயோ போய் செய்யவேண்டும். இந்த நாட்டிலேயே செய்யலாம் என முடிவுக்கு வந்தார். அப்படித்தான் நகத்தில் ஓவியங்களை வரையும் தொழிலை தொடங்க முடிவெடுத்தார்.  முதலில் கேரளத்தின் கொச்சியில் தொழிலை தொடங்கியவர் பிறகு சென்னையில் ஒரு கிளையை திறந்துள்ளார். அவரிடம் பேசினோம்.  உங்களுக்கு எப்படி அழகுப்பொருட்கள் சார்ந்த துறையில் ஈடுபாடு வந்தது? இந்த துறை மிகவும் தனித்துவம் வாய்ந்தது என்பதை அடையாளம் கண்டுதான் தொழிலை தொடங்க முடிவு செய்தேன். நகம் என்பது சிறியதாக இருந்தாலும் மிகப்பெரியத தாக்கம் ஏற்படுத்த

டைம் இதழின் செல்வாக்கு பெற்ற திரைப்படம், இசை துறை கலைஞர்கள்!

படம்
  செல்வாக்கு பெற்ற மனிதரகள்  கலை சிமு லியூ சீன கனட நடிகர் கனடாவின் ஒன்டாரியோவில் வசிக்கும் சக மனிதர் என்ற வகையில் நடிகர் சிமு லியூவின் திரைப்பட வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திறக்காத சினிமா கதவுகளை அவர் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும்  கனடா நாட்டுக்காரர்களுக்கு திறந்து வைத்துள்ளார். இனிமேல் இதுதொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளும் சிமு லியூவின் வெற்றியால் தான் சாத்தியமானது என  பிறர் கூறுவார்கள்.  சாங் சீ  திரைப்படத்தை சிமு லியூவுக்காகவே நான் மூன்று முறை பார்த்தேன். படத்தில் அவரின் நகைச்சுவை உணர்வு, போர்க்கலை பயிலும் காட்சிகள் சிறப்பாக வந்திருந்தன. தன்னைத்தானே சுய கிண்டல் செய்யும் அரிய குணம் சிமு லியூவுக்கு உண்டு. கச்சிதமான உடைகள் அவரை அழகாகவும் காட்டுகின்றன என்பது முக்கியமானது.  வெறுப்புவாதம், இனவெறி, தீண்டாமை ஆகியவற்றுக்கு எதிராக வெளிப்படையாக பேசி வரும் நடிகர் சிமு லியூ. இவர் நமக்கான சூப்பர் ஹீரோவேதான்.   சாண்ட்ரா ஓ  2 ஜோ கிராவிட்ஸ்  அமெரிக்க திரைப்பட நடிகை ஜோ கிராவிட்ஸ் அழகு, புத்திசாலித்தனம் நிரம்பியவர். அவருடன் இரவு நேரங்களில் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறேன். அப்போதுதான் நடிப்புடன் அவ

காகிதத்தில் கலைப்பொருட்களை செய்து அசத்தும் கிருஷ்ணா!

படம்
  பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர், கிருஷ்ணா. இவர் செய்தித்தாள், பழைய காகிதங்கள் என எதையும் விட்டு வைக்காமல் அதில் கலைப்பொருட்களை செய்வதில் தேர்ந்தவர். தனது கலைப்பொருட்களை பல்வேறு அரசியல் பிரபலங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். அண்மையில் டெல்லிக்குச் சென்ற தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், கிருஷ்ணாவின் காகித கலைபொருட்களை வாங்கிக்கொண்டுதான் சென்றார். இதற்காக அவர் விமானநிலையத்தில் பொறுமையாக காத்திருந்தார் என்பதுதான் முக்கியமானது.  கிருஷ்ணா புதிய தூரிகை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் கிராம பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரது குரு அன்பழகன் மூலம் காகிதத்தில் சிற்பங்களை செய்யத் தொடங்கியுள்ளார். பிறகு அதனை பல்வேறு அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தர தொடங்கினார். காகிதத்தில் சிற்பங்களை செய்து அதற்கு வண்ணம் தீட்டி சோதிக்கத் தொடங்கினார். இப்போது அதில் உலோக வண்ணங்களை தீட்டி வருகிறார்.  பார்க்க எளிதாக இருந்தாலும் செய்வது கடினமானதுதான். குறிப்பிட்ட சிலை மாடலை பார்த்து, காகிதத்தை வளைத்து சிற்பங்களை செய்கிறார். இதில், சிலை அமைப்பை கச்சிதமாக செயத மூங்கில்

மணல் சிற்பங்களை செய்து அசத்தும் கோவை அரசுப்பள்ளி மாணவர்கள்!

படம்
கடற்கரையில் சாதாரண மணல் வீடு கட்டும்போது அதற்கு வாசல், கதவு வைக்க அரும்பாடு படவேண்டியிருக்கிறது. இதில் அதனை சிற்பமாக வடித்தெடுக்க எந்தளவு நேரத்தை உழைப்பை போட வேண்டியிருக்கும். இதில்தான் கோவை மாணவர்கள் சாதித்துள்ளனர். கோவையில் உள்ள கிணத்துக்கடவு அரசுப்பள்ளி மாணவர் லோகநாதன், 2018ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற மணல் சிற்ப போட்டியில் வென்றார். இதுதான் அந்த பள்ளியில் உள்ள கலை ஆசிரியர்களின் மதிப்பை பலருக்கும் தெரிய வைத்தது. ஏளனமாக பார்த்தவர்களை மதிக்க வைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பள்ளி ஆசிரியர்களான கௌசல்யா, ராஜ லட்சுமி ஆகியோர்தான், மாணவர்களை பெண்டு நிமிர்த்தி கலைப்பாடங்களை சொல்லித்தந்து கொண்டிருக்கிறார்கள். கல்வி அமைச்சகம் நடத்தும் கலா உத்சவ் போட்டிகளில் மாணவர்களை பயிற்றுவித்து படைப்புகளை சமர்ப்பித்து ஏராளமான பரிசுகளை பெற்று வந்திருக்கிறார்கள். படித்து மாத சம்பளத்திற்கு வேலைக்கு போனால் பரவாயில்லை என்ற நினைத்த மாணவர்களை கலைகளைப் படித்து ஆசிரியராக அதனை சொல்லிக்கொடுக்கலாம் என்று நினைக்க வைக்கும் அளவு இரு ஆசிரியர்களின் உழைப்பும் இருந்தது. 2018ஆம் ஆண்டு, நாங்கள் மாணவர்களுக்

தலைமுறைகளை காப்பாற்றும் கலை ஐடியா!- துணிக்கழிவுகளிலிருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் பெண்மணி!

படம்
  2017ஆம் ஆண்டு ஸ்ரீநிதி உமாநாதன் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்திற்கு சுற்றுப்பயணமாக சென்றார். போகும் வழியில் மேல காலகண்டர் கோட்டை அருகே நிறைய கழிவுகள் கிடப்பதைப் பார்த்தார். அவற்றில் பெரும்பாலானவை துணிக்கழிவுகள்தான்.  அப்போது பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த 23 வயது பெண்தான் அவர். அப்போதே முடிவு செய்துவிட்டார். இனி பேஷன் டிசைனராக மாறினாலும் கூட கழிவுகளை முடிந்தளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என முடிவு செய்துகொண்டார். இப்போதுவரை துணிகளை மறுசுழற்சி செய்வது பற்றியும், சூழலுக்கு ஆபத்தில்லாமல் வாழ்வதும் பற்றியும் பிரசாரம் செய்.து வருகிறார்.  இரண்டாவது ஆண்டு படிப்பின்போது, ரீடெய்லர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதில் பயன்படுத்திய துணிவகைகளைப் பயன்படுத்தி பைகள், தலையணை உறைகள், ஸ்க்ரீன்கள், சிறு பைகள், கால் மிதியடிகள் என நிறைய பொருட்களை தயாரிக்கத் தொடங்கினார். மாற்றுத்திறனாளியான தனது சகோதரரிடமிருந்து, துணிகளை எப்படி கலைப்பொருளாக மாற்றவேண்டும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டார். பிறகு இப்படி தயாரித்த பொருட்களை திருச்சியில் உள்ள என்எஸ்பி சாலையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு

குறுகிய தேசியவாத நோக்கில் கலை வரலாற்றைப் பார்க்க கூடாது! - பிரதாம் ஆதித்யபால், எழுத்தாளர்

படம்
  பிரதாப் ஆதித்ய பால் பிரதாப் ஆதித்ய பால் கல்வியாளர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, பிஹெச்டி படித்தவர். 1967ஆம் ஆண்டு போஸ்டனில் உள்ள கலை அருங்காட்சியகத்தை நிர்வகிக்குமாறு பணிக்கப்பட்டார். சிகாகோவில் உள்ள கலை கழகத்திற்கு வருகை தரும் ஆசிரியராக 1995ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவை பெரும்பாலும் கலை தொடர்பானவைதான்.  2009ஆம் ஆண்டு இவருக்கு ஒன்றிய அரசு பத்ம ஸ்ரீ விருதுகொடுத்து கௌரவித்தது.  கலை வரலாறு பற்றிய படிப்பில் ஏன் இந்தியா பின்தங்கியுள்ளது? இந்தியாவில் கலை வரலாறு பற்றி படிப்பது பொருளாதார ரீதியாக பயன் கொடுக்குமாறு இல்லை. வசீகரமானதாகவும், பொருளாதார ரீதியாகவும் கலை வரலாறு சிறப்பாக இருந்திருக்குமானால், அசல் எது, போலி எது என அறிந்து சொல்லக்கூட கலை வல்லுநர்கள் யாரேனும் இருந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி யாரும் உருவாகவில்லை. கலை தொடர்பாக பட்டம் பெற்றிருந்தாலும் புத்திசாலியாக இருந்தாலும் கூட கலை தொடர்பான அத்தனை விஷயங்களிலும் திறமை பெற்றவராக சாதித்துவிட முடியாது. இந்தியா மட்டுமல்ல. இங்கு நிறைய வேறுபாடுகள் கொண்ட கலைத்தன்மை வடிவங்கள் இருப்ப

காமத்தைப் பற்றி பேசும் நூல்கள்! - எழுதியவர்கள் அனைவரும் பெண்கள்தான்!

படம்
  காமத்தைப் பேசும் நூல்களில் சில... தி ஆர்ட்ஸ் ஆப் செடக்ஷன் சீமா ஆனந்த் ஆலெப் சீதாஸ் கர்ஸ் ஸ்ரீமோயி பியு குண்டு ப்ளூம்ஸ்பரி லாஸிங் மை வர்ஜினிட்டி அண்ட் அதர் டம்ப் ஐடியாஸ் மாதுரி பானர்ஜி பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  எரோடிக்  ஸ்டோரிஸ் ஃபார் பஞ்சாபி  விடோஸ் பலி கௌர் ஜஸ்வால் வில்லியம் மோரோ செக்ஸ் ஈஸ் மெமோர் ஆப் எ வுமன்ஸ் செக்சுவாலிட்டி பல்லவி பர்ன்வால் ப்ளூம்ஸ்பரி பாலஸ்  கல்ச்சுரல் ஹிஸ்டரி டாக்டர் அல்கா பாண்டே ஹார்பர் கோலின்ஸ் தி எல் வேர்ட் லவ், லஸ்ட் அண்ட் எவ்ரிதிங்க் இன் பெட்வீன் ஆஸ்தா அட்ரே பனான் ஹார்பர்கோலின்ஸ் இந்த நூல்களை எழுதியவர்கள் அனைவருமே பெண்கள் என்பதை நம்புங்கள். அதுதான் உண்மை.