மம்தாவை எங்கள் கட்சியினர் கொச்சைபடுத்தி பேசவில்லை! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
அமித்ஷா உள்துறை அமைச்சர் விவசாயிகள் போராட்டத்தில் பாஜகவின் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது . பஞ்சாப்பில் உள்ள சீக்கியர்களை மத்திய அரசு சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறதே ? சீக்கியர்களுக்கு என்று தனிச்சட்டம் கிடையாது . நாடு முழுக்க உள்ள விவசாயிகளுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாதா என்ன ? அவர்கள் வெவ்வேறு பெயர்களில் போராட்டங்களை நடத்தட்டும் . உண்மை என்னவென்றால் , நாட்டின் சட்டம் இப்படித்தான் உள்ளது . இது அந்த மாநிலத்தில் கட்சியை பாதிக்காதா ? அங்கு கட்சிக்கு சில சவால்கள் உள்ளன என்பது உண்மைதான் . அதை சரி செய்ய நாங்கள் உழைத்து வருகிறோம் . விவசாய சட்டங்கள் மக்களுக்கு உதவக்கூடியவை என்று கூறுவதற்கு முயன்று வருகிறோம் .. விரைவில் மக்களே அதனை உணர்ந்துகொள்வார்கள் . விவசாயிகளுக்கு ஆதரவாக ஷிரோன்மணி அகாலிதளம் உங்கள் கூட்டணியை விட்டு பிரிந்துபோய்விட்டது . அவர்களுடன் பேசினீர்களா ? நாங்கள் அக்கட்சி தலைவர் பர்காஷ் சிங் பாதலுடன் பேசினோம் . ஆனாலும் அவர் கூட்டணியை விட்டு விலகிவிட்டார் . என்ன செய்வது ? நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் பேச