இடுகைகள்

பக்கவிளைவுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடுப்பூசி சதவீதம் வீழ்ச்சியுற்று வருகிறது!

படம்
தடுப்பூசிகள் ஆபத்தானவையா ? தடுப்பூசிகளில் நீர்த்துப்போன நுண்ணுயிரிகள், பாதி செயல்திறன் கொண்ட வைரஸ்கள், வேறு சில உயிரிகளின் நச்சுகள் இருக்கும். இவை உடலில் சென்றவுடன் நோய் எதிர்ப்பு சக்தி, இவற்றை எதிர்க்கும். இவை குழந்தையின் உடலில் நோய் வரும் முன்னரே செலுத்தப்படும். எதற்காக, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்காக. இதனை நாம் செய்யாதபோது, நோய் தாக்கினால் தாங்கும் சக்தி நமக்கு இருக்காது. சற்று நீர்த்த நிலையில் நோய்க்கிருமிகளைத்தான் நாம் தடுப்பூசியாக குழந்தைகளுக்குச் செலுத்துகிறோம். அவை நோய் பற்றிய நினைவை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது. இதனால்தான் குழந்தைகள் போலியோ, க க்குவான் இருமல், அம்மை போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க முடிகிறது. இங்கு நான் கூறுவது அறிவியல் பூர்வமான உண்மை. அதேசமயம் தடுப்பூசிகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளும் உண்டு. அனைவருக்கும் பொதுவாக மருந்து என்பது உலகில் கிடையாது. சில மருந்துகள் சிலருக்கு காய்ச்சலையும், வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி உயிரையும் கூட பறிக்கலாம். இன்றைய தகவல்படி உலகம் முழுவதும் சரியான தடுப்பூசிகள் போடப்படாமல் 30 லட்சம் குழந

ஒற்றைத் தலைவலிக்கான தீர்வுகள்

படம்
ஒற்றைத் தலைவலிக்கு இன்று விக்ஸ், அமிர்தாஞ்சன் ஸ்ட்ராங், ஜண்டு பாம் , டைகர் பாம் என விதவிதமான தீர்வுகள் உண்டு. ஆனால் அன்று ஒரே தீர்வு, பக்கத்து வீட்டுக்காரர் சொல்லும் கைமருந்துகள்தான். இல்லை ஆயா சொல்லும் பச்சிலை மருந்துகள்தான். ரத்தம் வெளியேறினால் தலைவலி நிற்கும் ஆம். நவீன மருத்துவம்  வரும் முன்பு உடலிலிருந்து  குறிப்பாக மூக்கிலிருந்து சிறிது ரத்த த்தை வெளியேற்றினால் தலைவலி குறையும் என ஊர் என்ன உலகமே நம்பியது. பின்னர் ஸ்விஸ் நாட்டு மருத்துவர், சாமுவேல் அகஸ்டே தலைவலிக்கான மருந்துகளை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்தினார். பூண்டு பேய் வந்தால் பூண்டைக் காட்டி தப்பிவிடலாம் என பேய் சீரியல்களை தூர்தர்ஷனில் பார்த்து நம்பிய அப்பாவி நான். ஆனாலும் பூண்டை தலைவலிக்கு பயன்படுத்தலாம் என்று கூறியபோது பெரிய ஆச்சரியமில்லை. வாயு சமாச்சாரத்திற்கு இதனைப் பயன்படுத்தும்போது வலி சமாச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாதா? என சமாதான சகாவு ஆனேன். 11 ஆம் நூற்றாண்டு அபு அல் காசிம் எனும் மருத்துவர் பூண்டை தலைவலிக்கான சூப்பர் மருந்தாக பரிந்துரைத்தார்.  கையில் காயம் செய்து அதில் பூண்டைப் புதைத்து விநோத வைத