இடுகைகள்

யூமா வாசுகி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது நட்சத்திரங்களை நமது வானத்திற்கும் இடமாற்றும் கவிதைகள் - யூமா வாசுகி கவிதைகள் - யூமா வாசுகி

படம்
  யூமா வாசுகி யூமா வாசுகி கவிதைகள் தன்னறம் வெளியீடு  விலை 300 யூமா வாசுகியின் கவிதைகள் ஆறு நூல்களிலிருந்து பெறப்பட்டு தொகுத்து தனி நூலாக்கப்பட்டிருக்கிறது. நூலின் அட்டைப்படம் வினோத் பாலுச்சாமியின் ஒளிப்படக்கலை மூலம் கண்ணைக் கவருகிறது. ஆலமரத்தின் கீழ் கவிஞர் யூமா வாசுகி நிற்கிறார்.   வேலைவாய்ப்பின்மை, இயலாமை , பசி, மரணம், நோய் பற்றியெல்லாம் எழுதும்போது கவிதைகளில் தனிக்கூர்மை தெரிகிறது. இதெல்லாம் கவிஞரை கடுமையாக பாதித்திருக்கிறதா என்று தெரியவில்லை. தனது மனதில் உள்ள வருத்தங்களை தமிழ்மொழியில் சாணை பிடித்து எழுதியிருக்கிறார். படிக்க படிக்க மனங்களில் ரத்தம் தெறிக்கிறது. வழிகிறது. இந்த நூல் தொகுப்பில் முக்கியமானது என நினைப்பது குழந்தைகள் பற்றிய கவிதைகள்தான். முயலை வீட்டில் வளர்ப்பதாக பொய் சொல்வது, பெண்களைப் பற்றிய ஆச்சரியத்துடன் இருந்து   மகளைப் பெற்றவுடன் கடவுளாக மாறுவது, குழந்தையை ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாற்றும்போதுகூட பயந்துவிடாதே   என்று ஆறுதல் கூறுவது, ஓவியங்களை தீட்டும் குழந்தைகளை மலர்க்கூட்டம் என வர்ணிப்பது, பேருந்தில் கையில் கிடைக்கும் குழந்தையை ஆசிர்வாதமாக   நி

பஷீர் -தனிவழியிலோர் ஞானி! வாழ்க்கை முழுவதும் கனிவும் முரட்டுத்தனமுமாக வாழ்ந்த எழுத்தாளனின் கதை - யூமா வாசுகி

படம்
  வைக்கம் முகமது பஷீர் தனி வழியிலொரு ஞானி - வைக்கம் முகமது பஷீர் ஸாநு மாஸ்டர் தமிழில் - யூமா வாசுகி பாரதி புத்தகாலயம்  தலையோலபரம்பில் பஷீராக பிறந்தவர், எப்படி புகழ்பெற்ற வைக்கம் முகமது பஷீராக மாறினார் என்பதைச் சொல்லும் சுயசரிதை நூல்தான் தனி வழியிலொரு ஞானி. பஷீர் எழுதியதை விட அவரைப் பற்றிய இட்டுக்கட்டிய கதைகள் கொண்ட நூல்கள் அதிகம் என கூறப்படுகிறது. அந்தக் கூற்றை இந்த நூலின் இறுதிப்பகுதியிலும் கூறுகிறார்கள். அவற்றை எல்லாம் புறந்தள்ளினாலும் தனி வழியிலொரு ஞானி நூல் அதன் எழுத்து சிறப்புக்காக முக்கியத்துவம் பெறுகிறது.  தொடக்கத்தில் நூல் பஷீரைப் பற்றிய தகவல்களை அவரது சிறுகதைகள், நாவல்களிலிருந்து திரட்டுவது சற்று சோர்வு அளிப்பது உண்மை. ஆனால் அவையெல்லாம் பஷீரின் பிறந்த நாள் எது என்பதைக் கண்டுபிடிக்கும் வேகம்தான். அதைத் தாண்டி விட்டால் பஷீர் என்ற மனிதரின் பிம்பத்தை நாம் பிரமாண்டமான வடிவில் காண்கிறோம்.  இந்த நூல் படைப்பு சார்ந்து பஷீரின் சிறப்புகளைக் கூறுவதோடு அவருக்கு ஏற்பட்ட மனநோய் அதன் பாதிப்புகளையும் வெளிப்படையாக விவரிக்கிறது. இதனால் நூல் எழுத்தாளரை புனிதப்படுத்தி, படைப்புகளை உயர்வாக பேசுவது