இடுகைகள்

பழக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேரம் தவறாமல் சாப்பிடுவது, லக்கி சீட்டில் உட்காருவது என பழக்கத்தை மாற்றிக்கொள்ளாத மனிதர்களின் உளவியல்!

படம்
  எங்கள் அலுவலகத்தில் ஹசார் என்ற ஓவியர் பணியாற்றி வந்தார். அவருக்கு வேலையில் பெரிதாக ஈடுபாடு ஏதும் கிடையாது. காலையில் பத்து மணிக்கு வருபவர், வந்தவுடனே சோற்றுக்கு யார் என்ன கொண்டு வந்தார்கள் என ஹர ஹர மகாதேவகி குரலில் விசாரிக்கத் தொடங்குவார். தான் எங்கே உட்காருவது, தனக்கு வேண்டும் விஷயங்கள் மீது தீவிர ஆர்வம் உண்டு. அதை யாரும் தடுக்க கூடாது என்று நினைப்பார். தான் வேலைக்கு வரும்போது அலுவலகத்தில் மின்விளக்கு எரிய வேண்டும் என்பதே அவரது சென்டிமெண்ட். ஆனால் அலுவலகமோ நீங்கள் வேலை செய்யும்போது மின் விளக்கை பயன்படுத்துங்கள். சீட்டில் இல்லாதபோது விளக்கை அணைத்து விடுங்கள் என மிரட்டல் விடுத்திருந்தது. அதை நான்  கடைபிடித்தபடியே இருந்தேன். ஒருமுறை காலையில் அப்படி வேலை செய்துகொண்டிருந்தபோது,தனது இருக்கைக்கு விளக்கு போடவில்லை என சண்டைக்கு வந்துவிட்டார் ஹஸார். அவருக்கு இருந்த சென்டிமென்ட் பற்றி எனக்கேதும் தெரியவில்லை.  அலுவலக விதியை விளக்கியபோதும், அதை அவர் துளியும் ஏற்கவில்லை. இவர் மட்டுமல்ல இதுபோல நிறைய முட்டாள்தனமான கொள்கைகளை நம்புகிற பைத்தியங்கள் உலகம் முழுக்க உண்டு. உலகம் தட்டையானது, குறிப்பிட்ட நேர

மனிதர்களின் முன்னோடி விலங்குகளின் பழக்கம், வாழ்க்கைமுறை!

படம்
                              முன்னோர்களின் பழக்கங்கள்… . பாலூட்டி இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் , தங்களது பழக்கவழக்கங்களை எப்படி பெற்றார்கள் ? இதற்கான விடையை மானுடவியலாளர்கள் பல்வேறு ஆய்வுகளின் வழியாக தேடி வருகிறார்கள் . சிம்பன்சி , ஏப் , உராங்குட்டான் , கொரில்லா . போனபோ ஆகிய விலங்குகளின் நம்மின் மரபணுக்களோடும் , பழக்கங்களோடும் ஓரளவு நெருக்கமாயிருக்கின்றன . சாப்பிடுவது , தூங்குவது , குடும்பத்தலைவர் , அதற்கு கீழ் உள்ள அதிகாரப் படிநிலை , குழுக்களின் செயல்பாடு , தினசரி வாழ்க்கை சவால்கள் என பலதையும் இதில் நாம் பார்க்கலாம் . சிம்பன்சி வம்சாவளிப்பிரிவில் நெருங்கிய உயிரினமாக உள்ளது . நாம் இந்த விலங்கின் மரபணுக்களோடு 98 சதவீதம் ஒத்துப்போகிறோம் ., தனது ஐம்பது ஆண்டுகால வாழ்க்கையில் குட்டிகளை பராமரிப்பதிலும் பெரும் குழுக்களாக வாழ்வதிலும் திறன் பெற்றவைகளாக உள்ளன . பதிமூன்று வயது தொடங்கி சிம்பன்சிகள் கருத்தரிக்கத் தொடங்குகின்றன . குட்டிகளை இரண்டு வயது வரை கண்ணும் கருத்துமாக தோளில் தூக்கி வைத்து பராமரிக்கின்றன . ஆண் சிம்பன்சிகள் முதிர்ச்சியடைய அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன . இவ

மக்களைக் கண்காணிக்கும் பெரு நிறுவனங்கள்! - தகவல் சேகரிப்பில் கொட்டும் லாபம்!

படம்
                பழக்கங்களை பின்பற்றுதல் காலையில் எழுகிறீர்கள் . எழுந்த உடனே பெரும்பாலும் முகங்களை கூட இப்போது எல்லாம் யாரும் கழுவுவதில்லை . உடனே போனில் பேஸ்புக் , வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் என பல்வேறு தளங்கள் உள்ள பதிவுகளை பார்க்கிறோம் . இரவில் தூங்கும்போது மாறியுள்ள விஷயங்களை எப்படி கவனிப்பது ? பின் கிளம்பி அலுவலகம் சென்று இணையத்தில் ஷூ வாங்குவது பற்றி தேடுகிறீர்கள் . இன்ஸ்டாகிராமில் காபியை குடிப்பது போன்ற புகைப்படத்தை டீ பிரேக்கில் பதிவிடுகிறீர்கள் . சிறிதுநேரத்தில் இணையத்தில் நீங்கள் எங்கு சென்றாலும் புதிய ஷூக்கள் பற்றிய விளம்பரங்கள் வரத் தொடங்கும் . எப்படி என்று இந்நேரம் யூகித்திரப்பீர்கள் . அனைத்து வலைத்தளங்கள் நுழைந்தவுடன் குக்கீஸ்கள் நம்மை பின்தொடர அனுமதி கொடுப்பதை மறந்திருக்க மாட்டீர்கள் . இந்த குக்கீஸ்கள்தான் நாய்க்குட்டிபோல நம்மைப் பின்தொடர்ந்து வந்து பல்வேறு தகவல்களை சேகரிக்கின்றன . அதனால்தான் விளம்பரங்கள் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் வருகின்றன . சில சமயங்கள் விளம்பரங்களை கிளிக் செய்யும்போது , கூகுள் இந்த விளம்பரம் பொருந்தவில்லையா என்று கேள்வி கே

குழுவாக பழக்கங்களை கையாண்டு வெற்றி பெறுவது எப்படி? - பன்னாட்டு நிறுவனங்களின் வெற்றி மந்திரங்கள்

படம்
                  குழுவாக வெற்றி பெறுவது எப்படி ? குழுவின் தலைவராக இருப்பவரின் பல்வேறு விதிகள் அந்த குழுவினரின் மீது தாக்கம் ஏற்படுத்தும் . குறிப்பிட்ட நேர வரையறையில் வேலைகளை முடித்தல் , எதற்கு முன்னுரிமை கொடுப்பது . அலுவலக கலாசாரம் , காதலை அனுமதிப்பது என இதில் நிறைய விவகாரங்கள் உள்ளன . அடிப்படையில் பழக்கங்கள் என்பது தனிநபரிலிருந்துதான் தொடங்குகிறது . அப்பழக்கம் அவருக்கு வெற்றியைத் தந்தால் அது பிறருக்கு அப்படியே காப்பிகேட் செய்யப்படுகிறது . இதில் என்ன தவறு இருக்கிறது ? வெற்றி பெற்ற பார்முலாதானே ? பல்வேறு நிறுவனங்களிலுள்ள குழுக்கள் சிறப்பான பழக்கங்களை கடைபிடிப்பதால்தான் வெற்றி பெற்று நிறுவனத்தையும் உயரத்திற்கு கொண்டு செல்கின்றன . சிறிய பழக்கங்களாக இருந்தாலும் கூட பெரிய மாற்றங்களை இவை ஏற்படுத்துகின்றன . வணிக உலகைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேலை செய்வதைப் பொறுத்தவரை சில கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றன . பல்வேறு கொள்கைகள் , நோக்கங்கள் , துறைகள் என்றாலும் பழக்கங்கள்தான் நிறுவனங்களின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன . வணிக வட்டாரங்களில் தோல்வியை நேர்மறையாகவே ஏற்று

நோ சொன்னால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!

படம்
                    நோ சொல்லிப்பழகுவது கடினமாக இருக்கிறதா ? எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது எப்போதும் சாத்தியமில்லை . ஆனால் அப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் உண்டு . இதனால் பிறருக்காக நிறைய விஷயங்களை ஓகே சொல்லி மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள் அனேகம் . நோ என்று சொல்லுவது குழந்தையாக , சிறுவனாக இருக்கும்வரை ஓகேதான் . பிடிவாதக்காரன் என்று விட்டுவிடுவார்கள் . ஆனால் வேலையில் இதனை சொல்லும்போது அதனை எளிதானதாக பார்க்க மாட்டார்கள் . ஆம் , இல்லை என்று சொல்லப்படும்போது அது எப்படி மக்களிடம் விளைவுகளை உருவாக்குகிறது என்பதை அனைவருமே உணர்ந்திருப்பார்கள் . இதுபற்றி உளவியலாளர் டாக்டர் ஹாரியட் பிரைக்கர் தி டிசீஸ் டு ப்ளீஸ் க்யூரிங் தி பீப்பிள் ப்ளீசிங் சிண்ட்ரோம் என்ற நூலில் விளக்கியுள்ளார் . பொதுவாக அனைவருக்குமான நன்மையாக அனுசரித்து செல்வதாக ஒருவர் அனைத்து விஷயங்களுக்கும் சரி , ஆம் என்று சொல்வது முதலில் சரியாக செல்வது போலவே தோன்றும் . ஆனால் பிறருக்காக இப்படி செயல்படும் தன்மை , ஒருவருக்கு உடல்நலம் , மனநலத்தை அழித்து பல்வேறு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் .

வாழ்க்கையை மாற்றும் பல்வேறு பழக்கங்கள், இதன் பின்னணியில் உள்ள உளவியல் ஆய்வுகள்!

படம்
                முடிவெடுக்கும் பழக்கம் ! உலகம் இன்று நவீனமாக மாறி வருகிறது . அதற்கேற்ப தினசரி வாழ்க்கையிலும் , தொழிலை சார்ந்தும் ஏராளமான முடிவுகளை எடுத்துவருகிறோம் . இதில் எது சரி , எது தவறு என்பதை உணர்வதற்கு காலம் தேவைப்படலா்ம் . ஆனால் இப்படி முடிவு எடுப்பதற்கான தகவல்களை நாம் எப்படி பரிசோதிக்கிறோம் , அலசுகிறோம் என்பதை புரிந்துகொள்வது அவசியம் . அப்போதுதான் ஆபத்தான காலங்களில் மனிதர்கள் உயிர்பிழைத்து வந்திருப்பதற்கான திறனை அறிய முடியும் . சுயநலன் , பொதுநலன் என இரண்டு சார்ந்தும் முடிவுகளை வேகமாக அல்லது நிதானமாக எடுப்பது நடைபெறுகிறது . இதில் முன்னுரிமை தருவதைப் பற்றி யோசிப்பதும் எப்படி நடைபெறுகிறது என்பதை அனைவரும் அறிந்துகொள்வது முக்கியம் . தள்ளுபடி ஆதாயங்கள் இயல்பாகவே மனித மனம் உடனடியாக பரிசுகளை ஆதாயங்களை எதிர்பார்க்க கூடியது . இதனால் உலகம் முழுக்க பொன்ஸி திட்டங்கள் இன்றும் கூட செயல்பட்டு மக்களை ஏமாற்றுகின்றன . இதுபற்றிய செய்திகளைப் படித்தாலும் கூட அதிக லாபம் என்ற சொல்லை மக்கள் கைவிடத் தயாராக இல்லை . இது அடிப்படையான மனிதர்களின் பழக்கவழக்கங்களை வடிவமைக்கிற தன்

குற்றம் செய்யும் சாகச உணர்வை அழுத்தி வைக்க முடியாது!

படம்
                  குற்றவாளிகள் ஒரே விதமான குற்றங்களை திரும்ப செய்கிறார்கள் ? இதனை குடிநோய் போல குணப்படுத்த முடியுமா ? தொடர்ச்சியாக குற்றங்களைச் செய்பவர்கள் , குறிப்பிட்ட விதிகளுக்குள் அடங்குவதில்லை . இவர்களுக்கு பணம் , அதிகாரம் கட்டுப்பாடு ஆகியவை தேவைப்படுகிறது . எனவே கொலை , கொள்ளை , வல்லுறவு ஆகியவற்றை செய்கிறார்கள் . குடிநோய் போன்ற பயிற்சிகள் இவர்களுக்கும் உண்டு . இவர்களும் பிறர் போலவே வாழ விரும்புவர்கள்தான் . கொலைக்குற்றம் செயதவர்களை அதிலிருந்து மீ்ட்க வாழ்க்கைக்கல்வியை அளிக்கலாம் . சீரியல் கொலைகாரர்கள் , குற்றத்திற்கு அடிமையானவர்களா ? ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறி வருகிறவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் . கொலை செய்தவர்களை ஆராயும்போது முன்னர் அவர்கள் கொள்ளை அடித்தவர்களாக இருக்கிறார்கள் . அல்லது குழந்தைகளை வல்லுறவு செய்தவர்கள் , ஆபாச புகைப்படங்களை எடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் . எனவே இவர்களை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று கூட ஒருவகையில் குறிப்பிடலாம்தான் . இந்த குற்றவாளிக்கு இடையில் ஏதேனும் ஒற்றுமைகள் உள்ளனவா ? பெரும்பாலான குற்றவாளிகளுக்கு

மூளையில் சுரக்கும் எக்ஸ்ட்ரா டோபமைன் குற்றத்திற்கு ஆதாரமூலமா?

படம்
          குற்றமும் மனமும் டெட் பண்டியைப் பற்றி நாளிதழ்களில் வாசித்திருப்பீர்கள் . அமெரிக்காவில் பெண்களை தாக்கி சித்திரவதை செய்து கொல்வதில் புகழ்பெற்றவர் . குற்றம் செய்வதில் டாக்சி டிரைவர் ஜெஸ்பர்சனைப் போன்ற மனமுடையவர் . முதல் குற்றம் , இரண்டாம் குற்றம் என அவரது கொலை செய்வதின் அடிமைத்தனம் கூடிக்கொண்டே சென்றது . டெட் பண்டியைப் பற்றிய குறிப்பிடதக்க அம்சம் , செய்த குற்றத்தை புத்திசாலித்தனமாக செய்து காவல்துறைக்கு தண்ணி காட்டியதுதான் . 1978 ஆம் ஆண்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிப்ரவரி மாதம் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் தங்குமிடத்தில் நுழைந்தார் . அங்கு நான்கு பெண்களை படுகாயப்படுத்தி இரு பெண்களைக் கொன்றார் . 1976 ஆம் ஆண்டு டெட்டுக்கு பெண்களை கடத்துவது தொடர்பான விசாரணை நடைபெற்றது . அப்போதே அவர் டஜன் கணக்கிலான பெண்களை கொன்றிருந்தார் . ஆனால் அப்போது நீதிமன்றம் அவர் எப்படிப்பட்ட கொலைகாரர் என்பதை அறியவில்லை . பல்வே்று உளவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலிலிருந்து காயங்களைப் பார்த்து கொலை செய்தவர் ஆபத்தான மனிதர் என முடிவுக்கு வந்தனர் . இதுபற்றி ஆராய்ச்சி செய்த டாக்டர் அல் கா