இடுகைகள்

பெண்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆண், பெண் என இருபாலினத்தவரை ஈர்க்கும் உடைகளின் டிரெண்ட்! - மாறும் கலாசாரமும் வணிகமும்

படம்
  டாக்டர் ஸ்ட்ரேஞ்சர்  - கே டிராமா இட்ஸ் ஓகே நாட் டு பி ஓகே ஆண், பெண் என இருந்த உடை வேறுபாடுகள் இப்போது உடையத் தொடங்கிவிட்டன. ஆண்கள் அணிந்த ஆடைகளை பெண்களும், பெண்களின் தேர்வாக இருந்த நிறங்களில் ஆண்கள் பல்வேறு உடைகளை வாங்கி அணியத் தொடங்கிவிட்டனர். ஆண்களும் நிறைய பூச்சட்டைகளை வாங்கி அணிந்துகொண்டு கடற்கரைகளில் உலாவத் தொடங்கிவிட்டனர். உச்சமாக, இந்தியாவில் கூட பாலின பேதமற்ற உடைகளை தைத்து விற்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த ஆடைகளை ஆண்களும், பெண்களும் யார் வேண்டுமானாலும் வாங்கி அணியலாம். ஆண், பெண் என பர்பியூம்கள் கூட வேறுபட்டு விற்றுக்கொண்டு இருந்த நிலை இருந்தது. இன்று அதுவும் கூட மாறி வருகிறது. உண்மையில் யோசித்து பாருங்கள். பர்ஃபியூம்களில் ஆண் என்ன, பெண் என்ன? வியாபாரம் அப்படி தனியாக பிரிந்துவிட்டது. அதற்கேற்ப விளம்பரங்களை உருவாக்கி மனதில் பிரிவினையை ஏற்படுத்தி பொருட்களை கூவி விற்கிறார்கள். இன்று உலகின் எந்த மூலையில் உள்ள ஒருவரும் பல்வேறு நாடுகளிலுள்ள டிவி தொடர்களைப் பார்க்க முடியும். தமிழ்நாட்டில் தென்கொரிய டிவி தொடர்களைப் பார்த்து உச்சிகுளிர்ந்து போனவர்கள் அதிகம். அந்த நாட்டு டிவி தொடர்கள

தாய்ப்பால் அருந்தினால் உடல் பருமனை தடுக்கலாமா?

படம்
தாய்ப்பால் கொடுப்பது உடல் பருமனைத் தடுக்குமா? நிச்சயம் தடுக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். போர்ச்சுக்கல் தேசிய சுகாதார நிறுவனமும், உலக சுகாதார நிறுவனமும் ஒன்று சேர்ந்து செய்த ஆராய்ச்சியில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. தாய்ப்பால் அருந்தாத 22 சதவீத குழந்தைகள் உடல் பருமன் பிரச்னைக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஒபேசிட்டி ஃபேக்ட்ஸ் எனும் இதழில் செய்தி வெளிவந்துள்ளது. 22 நாடுகளிலுள்ள 30 ஆயிரம் சிறுவர்களை சோதித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பதினாறு ஐரோப்பிய நாடுகளும் உள்ளடங்கும். தாய்ப்பால் கொடுப்பது இன்றைய பொருளாதார சூழலில் தவிர்க்கப்பட்டு வருகிறது. காரணம், பெண்களும் வேலைக்கு செல்லும் சூழல்தான். குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஆறுமாதம் தாய்ப்பால் தருவது அவசியம். இந்த காலகட்டத்தின் அளவு குறைந்தால் அவர்கள் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் மாற்றாக பசுவின் பாலை அருந்துகிறார்கள். இதிலுள்ள புரதம் உடலின் கொழுப்பை அதிகரிக்கிறது. மேலும் இன்சுலின் சுரப்பை மறைமுகமாக தூண்டுகிறது. தாய்ப்பால் அருந்தாத குழந்த