தலைக்கு மேலே கூரை இல்லை! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்
அன்புக்குரிய வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமா? உங்களின் நிலைமை அறியாமல் தங்குவதற்கு இடம் கேட்டு சங்கடப்படுத்தியதற்கு மன்னிப்பு கோருகிறேன். நான் மனதில் உள்ளதை உடனே சொல்லிவிட்டேன். இனிமேல் நான் திருவண்ணாமலை வந்தால் விடுதியில் தங்கிக்கொள்கிறேன். தங்களைப் பார்க்கும் வாய்ப்பு திகைந்தால் பார்க்கிறேன். இதனை தங்களது பணிச்சூழலைப் பொறுத்து முடிவு செய்துகொள்ளலாம். சென்னையில் இப்போதைக்கு நிறைய வேலைகள் இருப்பதால், ஒருநாளுக்கு மேல் தங்க முடியாது. குறைந்த விலை கொண்ட பட்ஜெட் விடுதியை நீங்கள் பரிந்துரை செய்தால் நன்றாக இருக்கும். எனக்கு திருவண்ணாமலை மனதை ரிலாக்ஸ் செய்வதற்கான இடம். ஆனால் உங்களுக்கு அதுதான் வாழிடமே. இரண்டிற்குமான வேறுபாட்டை உணரவில்லை. இனிமேல் தவறு நேராது. கடிதம் எழுதுவது பற்றி இணையதளம் ஏதாவது இருக்கிறதா என தேடினேன். chitthi exchange,Mumbai chapter என பல்வேறு கடிதம் எழுதும் வலைத்தளங்கள் இருப்பதை இந்து நாளிதழில் எழுதியிருந்தனர். இது ஆச்சரியமான செய்தி. மயிலை காபி என்ற கடையில் டீ குடித்தேன். குங்குமத்தில் வேலை செய்யும் நண்பர் சக்தி அங்கு கூட்டிப்போனார். ஒரு டீ 25க்கு விற்கிறார்கள். கா