இடுகைகள்

பிரெக்ஸிட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரெக்ஸிட் குழப்பங்கள்!

படம்
ozy பிரெக்ஸிட் சாத்தியமாகுமா? இரண்டே வாரங்கள்.இங்கிலாந்து, ஐரோப்பியா யூனியனிலிருந்து பிரியவிருக்கிறது. ஆனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரியும் மசோதா, முதலில் ஆரவாரமாக தொடங்கினாலும் பின்னால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்தவர்கள் மெல்ல பின்வாங்கத் தொடங்கினர். பிரெக்ஸிட்டைத் திரும்ப பெறும் மசோதாவிலும் தோல்வியைச் சந்தித்துள்ளார். என்ன காரணம், பிரெக்ஸிட் சாத்தியமானால், நாட்டின் உணவு, தொழில்துறை என அனைத்தும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இப்போது தெரசாவின் அரசு அட்டர்னி ஜெனரல் ஜியோப்ரி காக்ஸ் இதற்கு பெரிய ஆர்வம் தெரிவிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெரசா மே, பிரெக்ஸிட் மசோதாவை உருவாக்கினார். மார்ச் 29, 2019 அன்று விலகும் என்பது திட்டம். நாடாளுமன்றம் இன்னும் இதில் தெளிவாகவில்லை. இன்னும் காலதாமதம் ஆனால், அதற்கும் நாடுகள் ஒப்புதல் தருவது அவசியம். இதற்கு தெரசா மே, ஐரோப்பிய யூனியனை அணுகக்கூடும். மிக அதிக காலம் ஐரோப்பிய யூனியன் அளிக்க வாய்ப்பில்லை. அதிகபட்சமாக மே 24 முடிவாகும் வாய்ப்புண்டு. அதற்குப்பிறகு ஐரோப்பிய யூனியனுக்கு தேர்தல் வேலைகள் தொடங்கிவிடும். ஆனால் இதில் இங்கிலாந்

பிரெக்ஸிட் பிரிவால் இங்கிலாந்துக்கு என்னாகும்?

படம்
பிரெக்ஸிட் பிரிவால் இங்கிலாந்துக்கு என்ன நடக்கும்? பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவது உறுதி. இது தாமதமானாலும் நடக்கப்போகிறது. தனிநாடாக நிற்கும் வணிகம் உட்பட அனைத்தையும் இங்கிலாந்து அரசு தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக தெரசா மே பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி என்பது 9 சதவீதம் குறைவாகவே இருக்கும். ஐரோப்பிய யூனியனிலிருந்து கிடைத்து வந்த பொருட்கள் அனைத்தும் இனி கிடைக்காது. இதன் அர்த்தம், இங்கிலாந்து இனி சுங்கவரி அதிகமாக கட்டவேண்டி இருக்கும். இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து 30 சதவீத உணவுப்பொருட்கள் இங்கிலாந்துக்கு வருகின்றன. நன்றி: தி கார்டியன்.காம்