இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பீர் குடித்தால் ஹேங் ஓவர் ஏற்படுகிறதா?

படம்
giphy மிஸ்டர் ரோனி பீர் குடிப்பதற்கு முன்பு ஒயின் குடித்தால் ஹேங்ஓவர் ஏற்படாது என்கிறார்களே? அது உண்மையா? இந்த விஷயத்தில் பாதிப்பு ஏற்படுத்துவது ஆல்கஹால்தான். இதில் பல்வேறு மதுபானங்களில் உள்ள ஆல்கஹால் அளவுதான் போதை ஏற்படுத்துகிறது. பீர் குடிப்பதற்கு முன்பு வைன் என்பது ஆராய்ச்சிப்படி மோசமான தலைவலியை சிலருக்கு ஏற்படுத்தியது. அடிப்படையில் மது குடித்தால் உடலிலுள்ள நீரை டீ, காபியை விட வேகமாக வெளியேற்றுகிறது. இதன் காரணமாக உங்களுக்கு உடலில் நீரின் அளவு மிகவும் குறைகிறது. இதனால் காலையில் தலைவலி கண்டிப்பாக ஏற்படும். இதனைத் தவிர்க்க வைனை முன்னால் குடித்து பீரை பின்னால் குடிக்கலாமா என்று கேட்க கூடாது. மதுவை குறைவாக அருந்தினால் பாதிப்பு குறைவாக இருக்கும். மதுவை கல்லீரல் பிரித்து செரிக்கும்போது அசிட்டால்டிஹைடு எனும் நச்சுப்பொருள் உருவாகிறது. இதுவும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே எதைக்குடித்தாலும் நீரை குறிப்பிட்ட இடைவெளியில் நீங்கள் குடித்தே ஆகவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் நீர் நமது உடலில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

அதிகளவு தண்ணீர் குடித்தால் என்னாகும்?

படம்
giphy மிஸ்டர் ரோனி நாம் தினசரி அவசியம் குடிக்கவேண்டிய நீரின் அளவு என்று ஏதாவது உண்டா? உங்களுக்கு தாகம் ஏற்பட்டால் கோலா, ப்ரூட்டி குடிக்காமல் தண்ணீர் குடித்தாலே போதும். இவ்வளவு நீர் என்று எந்த அளவும் நீர் குடிப்பதில் கிடையாது. ஏசியில் உட்கார்ந்து இருப்பவருக்கும், பைக்கில் வெளியே அலைபவருக்கும் உணவு, நீர் தேவை மாறுபடும். நீங்கள் பிஸ்லெரி நீரை பாட்டில் பாட்டிலாக கேன் கேனாக குடித்தாலும் உடலைப் பொறுத்தவரை  ஒருமணி நேரத்திற்கு 800 மி.லி அல்லது ஒரு லிட்டர் நீரை வெளியேற்றும். மூன்று மணிநேரத்தில் ஏழு லிட்டர் நீரைக் குடித்தாலே உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். உடலிலுள்ள சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவற்றை அளவுக்கு அதிகமான நீரை குடிப்பது வெளியேற்றி விடும். இது உடலை கடுமையான சோர்வில் தள்ளும். இந்தவகையில் மூளை பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி

ஜனநாயக இந்தியாவுக்கான போராட்டக்காரர்கள்!

படம்
இந்தியாவில் சிஏஏ, என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு கட்சிகள் பின்னாளில் ஆதரவு கொடுத்தாலும், பெரிய தலைவர்களின் முன்னணி இன்றியே இப்போராட்டங்கள் கச்சிதமாக உதவுகின்றன. அனைத்துக்கும் தொழில்நுட்பங்கள் சிறப்பாக உதவி வருகின்றன. இவர்களில் முக்கியமான சில போராட்டக்கார ர்களைப் பற்றி பார்ப்போம்.  சரித்தர் பார்தி - 27 சிங்கப்பூரைச் சேர்ந்த வழக்குரைஞர் 2014ஆம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது. அதிலிருந்தே அரசு அமைப்புகள், கொள்கைகள் அனைத்தும் வேறுபடத்தொடங்கின. அவர்கள் தம் கொள்கைகளுக்கு ஏற்ப நாட்டின் அனைத்து விஷயங்களையும் மாற்றி அமைக்கத் தொடங்கினர். இது ஆபத்தானது என்று எனக்குத் தோன்றியது என்கிறார். இதன் விளைவாக இந்தியாவில் போராட்டங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளார். இதனை இவர் மற்றொரு மாணவர்களின் போராட்டமாக கருதவில்லை. நாட்டின் ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டமாக கருதுகிறார்.  ஷால்மொலி ஹால்டர், 26 மேம்பாட்டு ஆலோசகர் அரசு மக்களின் மதிப்புகளுக்கு உணர்ச்சிகளுக்கு இடமளிக்கவில்லை என்கிறார் ஹால்டர். இவர், அரசு மதம், குடியுரிம

புத்தகங்கள் புதுசு! - மொழிகளை அறிவதில் மூளையின் பங்கு!

படம்
இயற்கையில் நாம் அனைவரும் ஒருவரே என்று பல்வேறு ஆதாரங்களைச் சொல்லி விளக்குகிறார் சூழலியலாளர் டாம் ஆலிவர். நம் அனைவரும் தானியங்கியாக சுயமாக இயங்குவதாக தோன்றலாம். ஆனால் அனைவரும் குறிப்பிட்ட விதமாக இணைக்கப்பட்டிருக்கிறோம் என்று  கூறுகிறார் ஆசிரியர்.  நாற்பது ஆண்டுகால நரம்பியல் மருத்துவத்துறையில் தான் சந்தித்த நோயாளிகள் பற்றி எழுதியுள்ளார் டேவிட். நோயாளிகளின் நோய்களோடு இன்றுள்ள உளவியல் பிரச்னைகளையும் இணைத்து எழுதியுள்ளார் ஆசிரியர். உளவியல் பற்றி ஆழமாக தெரிந்துகொள்ள உதவும் நூல் இது.  உண்மையில் மொழிகளை கற்பது என்பது சாதாரணமானதல்ல. அப்படி பல்வேறு மொழிகளை கற்றவரை நாம் அறிவாளி என ஏற்றுக்கொள்கிறோம். ஆல்பெர்ட் காஸ்டா இருபது ஆண்டுகளாக இதுபற்றி ஆராய்ச்சி செய்து தன் முடிவுகளை, அதில் கண்ட ஆச்சரிய விஷயங்களை எழுதியுள்ளார். படித்துப்பாருங்கள்.பிரமித்துபாருங்கள்.  நன்றி - பிபிசி 

வெறும் வயிற்றில் காபி குடித்தால் செரிமானம் பாதிக்கப்படுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி காபியை வெறும் வயிற்றில் குடிக்கலாமா? நெஸ்லே சன்ரைஸ், ப்ரூ இன்று பலரின் காலை நேரங்கள் விடிவதில்லை. ஆனால் இது சரிதானா? தண்ணீருக்கு அடுத்து அதிகப்படியாக உலகமெங்கும் பருகப்படுவது காபிதான். இதற்கு சாதகமான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் உண்டு. எப்படி கோலா பானங்களில் பாதிப்பில்லை என்று சொல்கிறார்களோ அதேபோல காபியையும் சொல்வதுண்டு. வெறும் வயிற்றில் காபியை குடித்தால் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகரிக்கும். அதுவும் கூட தற்காலிகமாகத்தான். பின்னர் தொடர்ந்து நீங்கள் காபியை வெறித்தனமாக காலையில் குடித்து வந்தால், இதன் அளவு குறைந்துவிடும், காஃபீன் அளவு தினசரி 400 மி.கி அளவுக்கு குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது. எதற்கு தெரியுமா? அப்போதுதான் காபிக்கு நீங்கள் அடிமையாக இல்லாமல் இருப்பீர்கள். இதன்விளைவாக காபியை குடித்தே ஆகவேண்டும் என்ற நிலை வராது. காபி குடித்தால் எந்த விளைவும் ஏற்படாமல் இருந்தால் எப்படி? பதற்றம், கழிச்சல், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதற்கு பதிலாகத்தான் தூக்கம் வராமல் சக்திமானாக உட்கார்ந்து வேலை செய்வதற்கான சக்தியை காபி வழங்குகிறது. வெறும்

சுயநலம், காசு இவற்றை மட்டுமே பார்க்கும் ஒருவனின் இரவு வாழ்க்கை! - இடம் ஜகத்

படம்
இடம் ஜகத் - தெலுங்கு இயக்கம் அனில் ஸ்ரீகாந்தம் ஒளிப்பதிவு இசை ஸ்ரீசரண் பகலா கதை முழுக்க நெகட்டிவ்வான கதை. ஆனால் யதார்த்தமாக இருக்கிறது. டிலேய்டு ஸ்லீப் டிஸ் ஆர்டர் எனும் தூக்க குறைபாடு பிரச்னை நிஷித்திற்கு இருக்கிறது. இக்குறைபாட்டால் இரவு முழுக்க விழித்திருப்பவர், பகல் முழுக்க தூங்குகிறார். இதனால் அவருக்கு வேலை பறிபோகிறது. என்ன வேலை செய்யலாம் என்று தேடுபவருக்கு ப்ரீலான்சாக செய்திகளை டிவி சேனலுக்கு தரும் வீடியோகிராபர் வேலையை அமைத்துக்கொள்கிறார். இதில் இரக்கமே அவருக்கு கிடையாது. சேனலுக்கு அவர் தரும் செய்திகளுக்கு முடிந்தளவு அதிக காசு வாங்குகிறார். இதில் அவருக்கு சீனியரான ஒருவருடன் முட்டல் ஆகிறது. அப்போது, போதைப்பொருள் கும்பல் ஒன்றின் போலி விபத்து வீடியோவை பதிவு செய்கிறார். இதனால் அவரின் காதல், நட்பு அனைத்தும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இதனை எப்படி அவர் சமாளித்தார் என்பதுதான் கதை. ஆஹா இயக்குநரின் கதை. இறுதிவரை மாறாமல் பயணிக்கும் திரைக்கதைதான். கதைக்கு சரியான நடிகர்களை அவர் தேர்வு செய்யவில்லை. சுமந்தின் நண்பராக வரும் சத்யா பிரமாதப்படுத்தியிருக்கிறார். சுயநலம

சிறைக்கைதியை மீட்க அபாய போராட்டம் - வேய்ன் ஷெல்டன் அதிரடி!

படம்
ஒரு போராளி ஒரு ஜென்டில்மேன் வேய்ன் ஷெல்டன் தோன்றும் ஒரு பயணத்தின் கதை! துரோகத்தின் கதை ! லயன் காமிக்ஸ் நெவர் பிஃபோர் ஸ்பெஷல் கலாக்ஜிஸ்தானில் நடைபெறும் விபத்து எப்படி முக்கியமான தொழிலதிபரின்(க்வெய்ல்) வணிக ஒப்பந்தத்திற்கு தடையாகிறது. இதற்கு காரணமான ஓட்டுநரை சிறையிலிருந்து மீட்க தொழிலதிபர் நினைக்கிறார். அதற்கு புகழ்பெற்ற ஷெல்டனை அழைக்கிறார்கள். ஷெல்டன் தன் திட்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் செய்யநினைக்கிறார். ஆனால் தொழிலதிபரின் பி.ஏ. (கரினி) ஷெல்டனை ஏமாற்றி டபுள் கிராஸ் ஏஜெண்டாக மாறுகிறார். இதனால் நடக்கும் பிரச்னைகள், வன்முறைகள், துரோகங்களை ஷெல்டன் எப்படி சமாளித்து சிறையிலிருந்து ஓட்டுநரை மீட்கிறார் என்பதுதான் கதை. இக்கதையில் வரும் கதாபாத்திரங்களை தனி புத்தகமாக போட்டு எழுதலாம். திருடர்களுக்கும் ஷெல்டனுக்கும் நடக்கும் சண்டைக்காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. ஷெல்டன் குழுவைத் தீர்த்துக்கட்ட நடக்கும் குறுக்கும் மறுக்குமான துரோக சம்பவங்களை கதையை சுவாரசியப்படுத்துகின்றன. கதையில் ஷெல்டன் தன் வயதை அடிக்கடி நினைவுப்படுத்திக்கொண்டுதான் சண்டையிடுகிறார். இதனால் நேரட

கொரோனா வைரஸ் பாதிப்பு - தெரிஞ்சுக்கோ டேட்டா

படம்
தெரிஞ்சுக்கோ கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது. மருந்து நிறுவன பங்குதாரரான பில்கேட்ஸ் மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் இதைப் பார்த்துக்கொண்டு இருப்பார். சீனாவில் நூற்றுக்கும் மேலான மக்கள் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் சீனாவிலிருந்து வந்த அறுபதிற்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம். கொரோனா வைரஸில் ஏழு வகைகள் உண்டு. அத்தனையும் மனிதர்களை தாக்கி கொல்லும். வுகான், ஹியூபெய் ஆகிய நகரங்களில் உள்ள மக்கள் தொகை 35 மில்லியன் ஆகும். வைரஸ் பிரச்னையால் இவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசிற்கு முன்பே சார்ஸ் பாதிப்பால் 774 பேர் பலியாகி உள்ளனர். 2012ஆம் ஆண்டு மெர்ஸ் பாதிப்பில் 858 பேர் வைகுந்தம் சேர்ந்தார்கள். 2019-2020 ஃப்ளூ காய்ச்சல் சீசனில் 8,500 முதல் 20 ஆயிரம் பேர் வரை இக்காய்ச்சலுக்கு பலியானார்கள். உலகம் முழுக்க நிமோனியா காய்ச்சலின் அறிகுறிகளை ஏற்படுத்தி மக்களை தாக்கி வருகிறது கொரோனா வைரஸ். பாதிப்பின் அளவு 33 சதவீதம். சார்ஸ் உடன் கொரோனா வைரஸ் ஒத்துப்போகும் அளவு 70%. மெர்ஸ் உடன் ஒத்துப்

கொத்துமல்லி சுவை ஓவ்வொருவருக்கும் மாறுபடுமா?

படம்
மிஸ்டர் ரோனி கொத்துமல்லியை சாப்பிடும் சிலர் அதை சோப்பின் சுவையுடன் ஒப்பிடுகிறார்களே அது ஏன்? காரணம், அவர்களின் உடல் அந்தளவு நுட்பத்தன்மையுடன் இருப்பதுதான். இதனால், கொத்துமல்லியை சுவைக்கும் ஐந்தில் ஒருவருக்கு அது சோப் சுவையைப் போல உள்ளதாக தோன்றுகிறது. இதற்கு காரணமான வேதிப்பொருள் அல்டிஹைடு. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 14 ஆயிரம் பேரின் டிஎன்ஏவை ஆராய்ந்தனர். அதில் இரண்டு டிஎன்ஏ மட்டும் மாறுபட்டு இருந்தது. அதுவே கொத்துமல்லியை சோப்பு சுவையில் காண்பித்த மனிதர்களுடையது. இவர்களின் மரபணுவில் அல்டிஹைடு இருப்பதே காரணம். நன்றி - பிபிசி

புத்தகம் புதுசு! - பழைய ஆடைகளை அணிந்தால் சூழலுக்கு நல்லதா?

படம்
இன்று டயட் என்ற வார்த்தையை நினைக்காத ஆட்கள் கிடையாது. வெள்ளையர்கள் இறுக்கிப் பின்னிய நரம்பு நாற்காலி போல இருக்க, இந்தியர்கள் பலருக்கும் வயிறு முன்னே தள்ளிவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்த டயட் சார்ந்து கோலா, சத்து பானங்கள், மாத்திரைகள், ஊட்டச்சத்து பானங்கள் என பெரும் சந்தை இயங்கி வருகிறது. இதன் மதிப்பு பல கோடிகள் வரும். டயட் கலாசார வரலாறு, அதன் தன்மை, பாதிப்புகள் ஆகியவற்றை ஆசிரியர் பல்வேறு நோயாளிகளிடம் பேட்டி கண்டு எழுதி உள்ளார். எனவே டயட் சார்ந்த பல்வேறு போலி நம்பிக்கைகளை நீங்கள் இதன் மூலம் உணர்ந்து வெளியே வரமுடியும். அண்ணன்களைக் கொண்ட தம்பிகள் அனைவருக்கும் கிடைப்பது செகண்ட்ஹேண்ட் ஆடைகள்தான். இதுவே உலகம் முழுக்க பெரிய சந்தையாக உள்ளது.. பயன்படுத்திய ஆடைகளை வெளுத்து புதிய துணிகளைப் போல விற்கும் நிறுவனங்கள் இப்போது அதிகமாக உருவாகி வருகின்றன. அடிக்கடி புதிய துணிகள் வாங்கினால் உங்கள் பீரோ தாங்காது. காரணம், பழைய துணிகளை உங்களுக்கு போடவும் மனசு வராது. மயிலாப்பூரிலுள்ள அட்சய பாத்ரா மாதிரியான இடங்கள் உங்கள் பழைய துணிகளை பிறருக்கு கொடுக்க உதவின. உண்மையில் இத்துற

ஆட்டிச பாதிப்பைக் குறைக்கும் புதிய மருந்து!

படம்
ஆட்டிச பாதிப்பை குறைக்கும் மருந்து சோதனை முறையில் செயல்படுத்தி வெற்றி கொண்டுள்ளது உலக ஆராய்ச்சியாளர்கள் குழு. ஆட்டிசம் என்பதை தன்முனைப்பு குறைபாடு என தமிழில் கூறலாம். இதில் பிற குழந்தைகள் இயல்பாக செய்வதை குறிப்பாக பட்டன் போடுவது, உடை விலகுவதை நாமாக உணர்ந்து சரி செய்வது போன்ற விஷயங்களை இவர்களால் செய்ய முடியாது. ஒருங்கிணைந்த செயல்பாடுகளாக இவர்களின் செயல்பாடுகள் இருக்காது. இப்படி பல்வேறு விஷயங்களில் கூட்டுச் செயல்பாடாக ஆட்டிசம் உள்ளதால், இதற்கு மருந்து அளித்து முன்னேற்றம் காண்பது கடினமாக உள்ளது. ஆனாலும் இதற்கான சரியான தெரபிகளை அளித்தால், உலகில் பிறருடன் கலந்து வாழ்வதற்கான திறன்களை ஆட்டிசக் குழந்தைகள் பெற்றுவிட முடியும்.  மூளையிலுள்ள முக்கியமான நரம்பு தகவல் தொடர்பு மையம் ஜிஏபிஏ. இதன் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் ஆட்டிசம் ஸ்பெக்டரம் டிஸ்ஆர்டராக மாறுகிறது.. சோதனையில் பயன்படுத்திய பூமெட்டனைடு எனும் மருந்து குழந்தைகளுக்கு சிறப்பான செயல்பாட்டால் முன்நிற்கிறது. ஏறத்தாழ ஆட்டிசத்திற்கு கடந்த 50 ஆண்டுகளில் சிறப்பான பலன்களைக் கொடுத்த மருந்து என இதனைக் குறிப்பிடுகிறார்கள்.  இம்மருந்த

காபியை குடித்துவிட்டு தூங்கினால் என்னாகும்?

படம்
giphy மிஸ்டர் ரோனி காபி குடித்து தூங்கினால் என்ன விளைவு ஏற்படும்? நீங்கள் கடுமையான உழைப்பாளி. வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். தூங்க கூட நேரமில்லை. அப்போது என்ன செய்வீர்கள்? டீயை விட காபியை இப்போது தேர்வு செய்யலாம். இதன் விளைவுகள் என்ன? பொதுவாக மிகவும் சோர்வாக இருக்கிறது. உடனே காபியை குடிக்கத் தோன்றுகிறது. உடல் சோர்வாக தூக்கம் வருவது போன்று இருந்தால் 30 நிமிடங்கள் ஓய்வு எடுப்பது நல்லது. காபி குடித்தால் இதே தூக்க நேரத்தை பத்து நிமிடங்களாக மாற்றிக்கொள்ளலாம். இது ஆழமான தூக்கத்தை ஒத்த நல்ல பயன்களைக் கொடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உண்மையில் டீ, காபி குடித்தால் உங்களுக்கு தூக்கம் வராது. அப்படி தூங்கி எழுந்தாலும் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். எப்படி? காபி குடித்தவுடன் அதன் மூலக்கூறுகள் சிறுகுடலுக்கு செல்கிறது. அங்கிருந்து அதிலுள்ள அடென்சின் மூலக்கூறுகள் மூளையில் உள்ள செல்களுக்கு செல்கிறது. காபீனின் தன்மையால் மூளை சோர்விலிருந்து விழிக்கிறது. இந்த மாற்றங்கள் காபி குடித்த 20 நிமிடங்களிலிருந்து தொடங்கிவிடுகிறது. இதனால் காபி குடித்து எழும் நேரம் குறைகிறது. எழும்போத

டிரட்மில்லில் ஓடியிருக்கிறீர்களா- தெரிஞ்சுக்கோ தகவல்கள்!

படம்
giphy தெரிஞ்சுக்கோ! டிரட்மில் வெளியே ஓடிப்போய் உடற்பயிற்சி செய்ய ஆசைதான். ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமில்லை. அதற்காகத்தான் டிரட்மில் மெஷின் உருவானது. இதில் வேகம் அதிகம் வைத்து ஓடிக் களைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக டிரட்மில்லில் உடற்பயிற்சி செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேசமயம் சிறையில் இக்கருவியில் கீழே விழுந்து இறக்கும் ஆட்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதுபற்றிய தகவல் தொகுப்பை பார்ப்போம். 19ஆம் நூற்றாண்டில் 200க்கு 109 சிறைகளில் டிரட்மில்கள் சிறையில் உடற்பயிற்சி செய்ய ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டன. துர்காம் எனும் சிறையில் டிரட்மில்லில் பயிற்சி செய்யும் கைதிகளில் வாரத்திற்கு ஒருவர் அடிபட்டு பலியாகி வந்தார். 1960களில் பேஸ்மாஸ்டர் எனும் நிறுவனம் 399 டாலர்கள் விலையில் வீட்டிலேயே டிரட்மில்லை அமைத்து கொடுத்தனர். இப்போது இதன் விலை 2,800 டாலர்கள். சிறையில் அல்லது வீட்டில் அமைக்கப்படும் டிரட்மில்லின் ஆயுட்காலம் 7 முதல் 12 ஆண்டுகள். இருப்பதிலேயே விலைகுறைவான டிரட்மில்லை அமைத்துக்கொடுத்த நிறுவனம்

ஆப்பிளின் எதிர்காலத் தோற்றம்!

படம்
கணினி உலகில் தன்னை தனித்துவமான நிறுவனமாக காட்டிக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் அளவு யாரும் மெனக்கெட்டு இருக்க மாட்டார்கள். பலரும் கணினியின் வேகம் பற்றி கவலைப்பட்டபோது, கணினியின் அழகைப் பற்றி ஸ்டீவ் ஜாப்ஸ் கவலைப்பட்டார். இன்று மேக் கணினி என்றால், அது வீடியோ, கிராபிக் டிசைனர் சார்ந்தது என்று மாறிவிட்டது. அங்கு விண்டோஸ் உள்ளே நுழைய அணுவளவும் வாய்ப்பில்லை. காரணம், ஆப்பிளின் சமரசம் இல்லாத தரம்.  தற்போது தனது எதிர்காலத்திற்கான கணினி தோற்றத்திற்கு ஆப்பிள் காப்புரிமை பெற்றுள்ளது. முழுக்க கண்ணாடியால் ஆனது போன்ற தோற்றத்தை புதிய ஆப்பிள் கணினி கொண்டுள்ளது. சற்றே திரை வளைந்தது போல செம ஸ்டைலாக இருக்கிறது. பழைய கணினியில் கீபோர்ட் தனியாக இருக்கும். கணினிக்கு ஏற்றபடி வெள்ளை நிறத்தில் கொடுத்திருப்பார்கள். இம்முறை புதிய கணினியில் விசைப்பலகை கணினியுடன் அப்படியே இணைக்கப்பட்டுள்ளது. இது புதிதாக இருக்கிறது. கடந்த ஜனவரி 23ஆம் தேதி கணினியின் வடிவமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.  விரைவில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இன்றே கவனமாக பார்த்து புக் செய்யப் பாருங்கள். நன்றி -

பட்ஜெட்டை தீர்மானிக்கும் நிதி அமைச்சக குழு! - ஐவர் குழு இவர்கள்தான்

படம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2020 - தீர்மானிப்பவர்கள் இவர்கள்தான். எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலாகவிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை இரண்டாம் முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை அளிக்கும் அதிகாரிகள் சிலரைப் பார்ப்போம். ராஜீவ்குமார்,  நிதித்துறை செயலர்  நிதியமைச்சகத்தின் முக்கியமான அதிகாரி. பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கும் சர்ச்சைக்குரிய சீர்த்திருத்தங்களை உருவாக்கி முன்மொழிந்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. வாராக்கடன் பாதிப்பைக் குறைத்து வங்கிகள் தொழில்துறைக்கு கடன்களை வழங்குவதற்கான முயற்சிகளுக்கான பரிந்துரைகளை இவர் நிதி அமைச்சருக்கு வழங்குகிறார். வங்கித்துறையின் பின்னணியில் இருந்து கடன்களை வழங்க வைத்து மக்களின் நுகர்வு மூலம் பொருளாதாரத்தை மீட்கும் முக்கிய முயற்சியை இவர் செய்து வருகிறார். அதானு சக்ரபொர்த்தி,  பொருளாதார விவகாரங்கள் துறை செயலர். பொதுத்துறை பங்குகளை விற்கும் திறனில் அதானு வல்லுநர். மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை இ

கர்ப்பிணிகளுக்கு சுவையுணர்வு மாறுவது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி கர்ப்பிணிகளுக்கு நாக்கின் சுவை ஏன் மாறுகிறது? புளி, சாம்பல் தேடி ஓடுகிறார்கள் என்று நேரடியாக கேட்காமல் மறைத்து கேட்கிறீர்கள். காரணம் ஒன்றுதான். உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் வேகமாக அதிகரிக்கும் காலகட்டம் அது. இதனால் உடலில் நடக்கும் மாறுதல்களால் நாக்கின் சுவை அறியும் தன்மை மாறுபடுகிறது. ஜிங்க் குறைபாட்டால் சுவை அறியும் தன்மை மாறுகிறது என்று முதலில் பலரும் நினைத்து வந்தார்கள். ஆனால், 2009ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் ட்ரைமெஸ்டரில் கர்ப்பிணிகளின் சுவையுணர்வு மாறுபடுவதில்லை. ஜிங்க் அளவிலும் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார்கள். 2006ஆம் ஆண்டு பிரிஸ்டல் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில், உடலில் சிறுநீர் பாதையில் பல்வேறு பிரச்னைகளை கர்ப்பிணிகள் சந்திப்பதாக கண்டறிந்து கூறினர். இதுதான் நாக்கின் சுவையுணர்வை பாதிக்கிறதா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் நாக்கின் சுவை உணர்வுக்கும் நம் மூளைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. நன்றி - பிபிசி

உளவியல் ஆப்களால் நன்மை உண்டா?

படம்
giphy மிஸ்டர் ரோனி ஸ்மார்ட் போன்கள் ஆப்கள் நம் உளவியலை மேம்படுத்துமா? கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் ஆகியவை தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஆப்ஸ்களை வெளியிடுகின்றன. பொதுவாக ஆப்களை நீங்கள் பயன்படுத்தும்போது, அதன் விளைவாக தனிமைப்படுதல், தூக்க குறைவு, உடல் சோர்வு ஆகியவை ஏற்படும். ஆனால் உளவியல் ரீதியான அறிகுறிகளை கண்டறிந்து அதற்கான மருத்துவரை தொடர்புகொள்ள உதவும் ஆப்கள் இன்று சந்தையில் உள்ளன. இவை எல்லாமே மருத்துவமனை சென்று ஏராளமான சோதனைகளை செய்வதற்கு முன்னாடியே உங்களை சோதித்து உங்களது பிரச்னைகளை உங்களுக்கு சொல்பவை என்பதை மறந்துவிடாதீர்கள். அதைத்தாண்டி இதில் பெரிய சிறப்புகள் இல்லை. இங்கிலாந்திலுள்ள என்ஹெச்எஸ் அமைப்பு 2014இல் செய்த ஆய்வுப்படி, அங்கு வாழும் மக்கள் வாரத்தில் ஆறில் ஒருவருக்கு மன அழுத்த பிரச்னைகள் ஏற்படுவதாக கூறியுள்ளனர். அமெரிக்காவின் மசாசூசெட்சிலுள்ள போஸ்டன் நகரில் பெத் இஸ்ரேல் மருத்துவ மையம் உள்ளது. இதில் பணிபுரியும் ஜான் டோரஸ் ஆப்ஸ்களை ஆதரிக்கிறார். இலவசமாக உங்களுக்கு ஆப் ஸ்டோரில் கிடைக்கும் ஆப்களில் மிகச்சிலவே உங்களது தகவல்களை தம் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த

பத்ம விருது சாதனையாளர்கள்!

படம்
யானை டாக்டர் குஷால் கொன்வர் சர்மா - அசாம் அசாமைச் சேர்ந்த குஷால் கொன்வர் சர்மா,யானைகளுக்கு அளித்த சிறப்பான சிகிச்சையால் பத்ம விருதை வென்றிருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக 5 லட்சம் கி.மீ வனப்பரப்பிற்குள் பயணித்து 10 ஆயிரம் யானைகளுக்கு சிகிச்சை அளித்த சாதனையாளர் இவர். தனக்கு கிடைத்த வார இறுதி விடுமுறையைக் கூட இவர் பொருட்படுத்தாமல் தன் பணியை அப்படியே தொடர்ந்திருக்கிறார். ஆண்டுக்கு 800 யானைகளுக்கு சிகிச்சை அளிப்பவர், குவகாத்தி கால்நடை கல்லூரிப் பேராசிரியர். நான் மாணவர்களுக்கு ஆர்வமாக பாடம் நடத்தும்போது, யானைகளுக்கான சிகிச்சை அழைப்பு வரும். என்ன செயவது, உடனே ஓடவேண்டியதுதான். என்னால் நேர நிர்வாகத்தை சரியாக கடைபிடிக்க முடியவில்லை என்று வருந்துகிறார். பத்ம விருதைப் பெறுவதை விட மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தருவதுதான் மகிழ்ச்சி. நீதிக்கான குரல்  அப்துல் ஜப்பார், மத்தியப்பிரதேசம் மத்தியப் பிரதேசத்தில் 1984ஆம் ஆண்டு போபாலில் நடந்த அணுஉலை விபத்து காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர். ஆனால் அரசுகள் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிவிட்டதால், இழப்பீடு பெறுவது கூட கடினமான காரியமானது. அப

வேலை இழப்பால தவிக்கும் காஷ்மீர்!

படம்
விடுதி மேலாளர் குலாம் ஜிலானி ஆகஸ்ட், 5, 2019 அன்று இந்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. சட்டத்திற்கு எதிரான போராட்டம் மாநிலமெங்கும் நடத்தப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த 135 நாட்கள் இணையம் தடை செய்யப்பட்டது. இதன் விளைவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் தம் பயணத்தை ரத்து செய்தனர். மாநிலம் முழுவதம் ராணுவம் சூழ்ந்து நிற்க, திறந்தவெளி சிறைச்சாலை போன்ற சூழலை அரசு வலிந்து உருவாக்கியது. இதன் விளைவாக அங்கு 1 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இழக்கப்பட உள்ளன. தற்போது நீதிமன்ற தலையீட்டால 2ஜி இணைப்புகள் மட்டும் வேலை செய்யத் தொடங்கியுள்ளன. இணையதளங்கள் முழுக்க செயல்படத்தொடங்கவில்லை. குறிப்பிட்ட அரசு ஏற்ற பட்டியலில் உள்ள வலைத்தளங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. தால் ஏரி அருகில் உள்ள விடுதியில் குலாம் ஜீலானி என்பவர் மேலாளராக உள்ளார். இங்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட தினத்தில் இருந்து அங்கு புக் செய்யப்பட்ட அனைத்து பயணிகளும் தம் இடங்களை ரத்து செய்துவிட்டனர். தற்போது மூன்று பேர் மட்டுமே அறை எடுத்து உள்ளனர். அதற்கு முன்பு 88 பேர் இங்கு தங்கியிருந்

பனிக்காலத்தில் நமது மூச்சுக்காற்றை நாம் பார்ப்பது எப்படி?

படம்
giphy மிஸ்டர் ரோனி நம் மூச்சுக்காற்றை நாம் எப்படி பார்க்க முடிகிறது? டிசம்பர் தொடங்கி ஜனவரி முடியும் வரை கூட பனியின் தாக்கம் அதிகம் இருக்கும். அப்போது உங்கள் மூச்சுக்காற்றை எளிதாகப் பார்க்க முடியும். நாம் ஆக்சிஜனை இழுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவது போல தோன்றும். அப்போது நீர் மூலக்கூறுகளையும் நாம் ஆவியாக்கி வெளியிடுகிறோம். வாயு வடிவில் நீர் பெரியளவு ஆற்றல் இழப்பின்றிதான் உள்ளது. வெப்பமாக உள்ள நீர், உங்கள் உடலுக்குள் செல்லும்போது குளிர்கிறது. ஆனால் இதனை நீங்கள் எளிதாக உங்கள் மூச்சுக்காற்று என அடையாளப்படுத்த முடியாது. குளிர்காலத்தில் உடல் தன்னை சூடுபடுத்திக்கொள்ள முனைகிறது. அப்போது உங்கள் மூச்சுக்காற்றிலிருந்து வெளிவரும் நீர் ஆவியாதலை எளிதாக கவனிக்கமுடியும். பனிக்காலத்தில் சூழல் ஏற்கெனவே தீவிரமான அடர்த்தியில் இருக்கும். எனவே, வெயில் காலத்தை விட பனிகாலத்தில் நம் மூச்சுக்காற்றை நம்மால் கவனிக்க முடியும். பிறருக்கும் நமது மூச்சை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். நன்றி - மென்டல் பிளாஸ்

மது அருந்தினால் உடலில் என்ன நடக்கிறது?

படம்
ஆல்கஹால் ஊக்கமூட்டியா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதனைக் குடித்தவுடன் உடலில் நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டது போன்ற இலகுவான தன்மை ஏற்படும். காற்றில் பறப்பது போல. இதனால்தான் இலகுவான இந்நேரத்தில் பல்வேறு ரகசிய விஷயங்களை நண்பர்களிடம் கொட்டி விடுகின்றனர். ஆனால் அதேசமயம் இதனை குடித்தான் பேசினான் என்று ஒதுக்கிவிட முடியாது. குடித்தாலும் அம்மாவுக்கும், மனைவிக்கும் வேறுபாடு தெரியாமல் போவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஊக்கமூட்டியா அல்லது மூளைத்திறன் குறைப்பு மருந்தா காபி, டீ ஆகியவற்றை குடிக்கிறீர்கள். இவற்றின் அளவு அதிகமானால் என்னாகும்? சிம்பிள். தூக்கம் வராது. இரவில் டீ, காபி குடிப்பதை தொடர்ந்தால் இன்சோம்னியா எனும் தூக்க குறைவு பிரச்னை எழும். அதுவே ஆறுமணிக்கு ஆபீஸ் விட்டதும் மது அருந்துவதை வழக்கமாக்கினால் என்னாகும்? உங்களின் இதயத்துடிப்பு குறையும். மூளை ரிலாக்ஸ் ஆனது போல தோன்றும். ஆனால் உங்கள் உடலில் ஒட்டுமொத்த பணிகளையும் மது தடுத்து மாய உலகை உருவாக்குகிறது. டீ, காபி ஆகியவற்றிலுள்ள காஃபீன் உடலை ஊக்கமூட்டி, தூங்கி வழிந்துகொண்டிருந்தால் கூட உங்களுக்கு கூடுதலாக அரைமணிநேரம் ப

நோயாளிகளுக்கு தசை தளர்வு மருந்து கொடுத்து கொன்ற கொலையாளி - நெசட்

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் ஆர்ன்ஃபின் நெசட் நார்வே  சீரியல் கொலைகாரர்கள் குறிப்பிட்ட துறை சார்ந்து இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் நெசட் மருத்துவத்துறை சார்ந்த கொலைகாரர். 1936ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி பிறந்தவர். ஓர் மருத்துவமனையில் செவிலியராக இருந்தார். அப்பணியில் அங்கிருந்த 22க்கும் மேற்பட்ட நோயாளிகளை விஷம் கொடுத்து கொன்றார். எத்தனை பேரை கொன்றீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு, எனக்கு சரியாக நினைவில்லை என்று தில்லாக பேசினார். அதே தில்லுடன்தான் அனைத்து கொலைகளை சிம்பிளாக செய்தார். ஆர்க்டலிலுள்ள ஜெரியாரிக் இன்ஸ்டிடியூட் எனும் நிறுவனத்தில் நெசட் இயக்குநராக இருந்தார். அங்குதான் கியூராசிட் எனும் தசை தளர்வு மருந்தைப் பயன்படுத்தி பலரையும் வைகுந்தம் அனுப்பி மகிழ்ந்தார். 22 பேர்களை கொன்றதற்காக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் பின் ஐந்து மாதங்கள் விசாரணை நடந்தது. நார்வே நாட்டு சட்டப்படி உச்ச தண்டனையாக 21 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. விடுதலையானவர் 2004ஆம் ஆண்டு முதல் தன் பெயரை மாற்றிக்கொண்டு நார்வேயில் வேறிடத்தில் வசித்து வருவதாக க

சந்நியாசினியை துரத்தி காதலிக்கும் டிவி கேமராமேன் - தேசமுத்ரு

படம்
தேச முத்ரு - தெலுங்கு  2008 இயக்கம் பூரி ஜெகன்னாத் ஒளிப்பதிவு   சியாம் கே நாயுடு இசை சக்ரி கதை? அது கிடக்கிறது. கழுதை. மா டிவி கேமராமேன் அல்லு அர்ஜூன். ஊர் முழுக்க செய்தி சேகரிக்க சென்று அடிதடி. வம்பு தும்பு அவரைக் காப்பாற்ற டிவியில் வேலை செய்யும் அவரது அப்பா, கம்பெனி இயக்குநர் அவரை குலுமணாலி அனுப்புகிறார்கள். அங்கு ஆசிரமத்தில் உள்ள வைசாலி என்ற பெண்ணை பார்த்து காதல் வசப்படுகிறார். இதற்கிடையில் உள்ளூரில் செய்த அடிதடியில் கோமாவுக்கு போன ரவுடிகள் டீம், அல்லு அர்ஜூனை வேட்டையாடத் துடிக்கிறது. குலுமணாலியிலும் கராத்தே டீம் வைசாலியை வல்லுறவு செய்ய முயல்கிறது. இத்தனை கச்சடா பயல்களையும் சமாளித்து தன் நண்பர்கள் உதவியுடன் எப்படி பாட்டு பாடி சண்டை போட்டு ஆஸ்தியுள்ள அம்மணி வைசாலியை கரம் பிடிக்கிறார் அல்லு என்பதுதான் கதை. கரம் மசாலா. படத்தில் பாதி நேரம் அல்லு அர்ஜூனின் சிக்ஸ்பேக் உடம்பையே காட்டுகிறார்கள். அதையும் தாண்டி நம்மாள் நடிக்க முயன்றிருக்கிறார். நாயகி ஹன்சிகாவுக்கு பாடல்களுக்கு மட்டும் வந்து போகும் வேலை. சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி காமெடிக்கு அலி சிறப்பு. மற்றபடி அ

இந்த வாரம் முழுக்க நடைபெறும் பிரபல விழாக்கள் - ஒரு பார்வை

படம்
இந்த வாரம் நடைபெறும் விழாக்கள் விழாக்கள் ஆதிவாசி திருவிழா ஜன.26-பிப்.9 வரை ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஷ்வரில் ஆண்டுதோறும் நடைபெறும் பழங்குடியினர் திருவிழா. இதில் 60க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பங்கேற்கின்றனர்.  தம் கலாசார விஷயங்களை பார்வையாளர்களுக்கு கலை, உணவு, இசை, நடனம் ஆகியவற்றின் வழியாக வெளிப்படுத்துகின்றனர். சிலிகா பறவைத் திருவிழா  ஜன.27-28 ஒடிசா மாநிலத்திலுள்ள மங்கலஜோடி சதுப்புநிலம் மற்றும் நலபானா ஆகிய இடங்களில் இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவை, சுற்றுலாத்துறை நடத்துகிறது. புகைப்பட கண்காட்சி, பறவைகளை பார்த்தல், பறவைகளைப் பற்றிய செய்திகளை கூறுவது என நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ரீத் 2020  ஜன.29 -பிப்.2 ராஜஸ்தானின் நடைபெறும் கலைவிழா. கைவினைப்பொருட்கள், இசை, சூஃபி நடனம், இசையோடு தியானம் என களைகட்டும் விழா இது. ராஜஸ்தானிலுள்ள ஜெய்சல்மீரில் உள்ள நச்சானா ஹவேலி, நாராயண நிவாஸ் பேலஸ் ஆகிய இடங்களில் இந்த விழா நடைபெறுகிறது.  இந்தியா கலை விழா ஜன.30 - பிப்.2 2008ஆம் ஆண்டு தொடங்கி நடைபெறும் விழா. டில்லியிலுள்ள ஓக்லா தொழிற்

குழந்தைகள் இடம் மாறினால் வாழ்க்கை என்னவாகும்? - ஆல வைகுந்தபுரம்லோ

படம்
ஆல வைகுந்தபுரம்லோ இயக்கம் திரிவிக்ரம் ஒளிப்பதிவு - பி.எஸ் வினோத் இசை - எஸ்எஸ் தமன் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான வன்மம் இருக்கும். அவர்கள் அதனை சந்தர்ப்பங்களைப் பொறுத்து வெளிப்படுத்துவார்கள். இப்படத்தில் வால்மீகி என்ற கணக்காளர் தன் வன்மத்தை சரியாகப் பயன்படுத்துகிறார். இதனால் அவரது குழந்தை வசதியாகவும், முதலாளி வீட்டுக்குழந்தை இவரது வீட்டில் பல்வேறு வசைகளை கேட்டும் வளருகிறது. இதனால் இவர்களது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. ஆஹா சுவாரசியமான கதை. அல்லு அர்ஜூன் பின்னி எடுத்துவிட்டார். பெரும்பாலும் நாயகிகள் பாடலுக்கானவர்கள்தான். வால்மீகியாக நடித்துள்ள முரளி சர்மா அசத்தல். வைகுந்த புர நடிகர்களில் தாத்தாவாக வரும் ஏஆர்கே - சச்சின் கேடேட்கர் பிரமாதமாக நடித்திருக்கிறார். இவருக்கு மகிழ்ச்சி, பெருமை, சோகம் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது. பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஜெயராம் தன் பார்வையில் தன் மகன் தன்னைப் போல வேகமாக இல்லையே நடித்துவிடுகிறார். தன் மகனை விட்டுக்கொடுக்காத தன்மையில் தபு பின்னுகிறார். வால்மீகியும், ஜெயராமும் கிள

டீ பேகை அழுத்திப் பிழிந்து குடித்தால் என்னாகும்?

படம்
giphy மிஸ்டர் ரோனி க்ரீன் டீ குடிக்கும்போது டீ பேக்கை சிலர் மெதுவாக நனைத்து எடுக்கிறார்கள். சிலர் அதனை கையில் வைத்து பிழிகிறார்கள். இது ஆபத்தானதா? துணியைக்கூட இறுக்கமாக வைத்து பிழியாதீர்கள். ஆயுள் குறையும் என துணிக்கம்பெனி சொல்கிறார்கள். அதற்காக வேலைக்காரர்கள் என்ன இலவம் பஞ்சையா வைத்து தேய்த்து அழுக்கை நீக்குகிறார்கள். அடித்து பிழிகிறார்கள் அல்லவா? அப்புறம் என்ன? டீ பேக்கை அப்படி விரல்களால் கசக்கி பிழிந்தால் என்னாகும் தெரியுமா? அதிலுள்ள டானின் எனும் மஞ்சள் நிற அமிலம் டீயில் அதிகம் கலக்கும். கசப்புச்சுவை அதிகரிக்கும். இது ஒன்றும் உங்களுக்கு பெரிய ஆபத்தை கொண்டு வந்து சேர்க்காது. பயப்படாதீர்கள். நன்றி: பிபிசி 

உடல் களைத்து தளர்ந்து தூங்குகிறீர்களா?

படம்
மிஸ்டர் ரோனி மிகவும் உடல் தளர்ந்து சோர்ந்து தூங்குவது சாத்தியமா? கணக்கு பாடத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தாலே தலை கிறுகிறுவென்று ஆகி படுத்து தூங்கியவனைப் பார்த்து இந்தக்கேள்வி. பொதுவாக நமக்கு ஐம்புலன்கள் பகலில் வேலை செய்யும். அதில் சிலருக்கு பாரபட்சமாக சில உறுப்புகள் வேலை செய்யப்பட திறன்கள் மாறும். ஆனால் இயல்பாக கண்கள் சோர்ந்து போனால், மூளை படுத்துவிடும். உடனே ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்றுவது போல எதையும் செய்ய முடியாது. உடனே தூங்கிப்போனால் உடல் புத்துணர்ச்சியோடு எழும். அப்போது உணவு, தண்ணீர் கூட உடலுக்கு தேவைப்படாது. பேய்த்தூக்கம் போல சிலர் தூங்குவார்கள். மிகவும் உடல் தளர்ந்து தூங்குவது என்பது அரிசி மூட்டை தூக்குவது, பழக்கமின்றி திருவண்ணாமலை கிரிவலம் சுற்றுவது போன்றவை செய்தால் நிச்சயம் கடுமையாக சோர்ந்து போய் தூக்கம் வரும். நன்றி - பிபிசி

ஏ டூ இசட் இந்தியா எப்படி இருக்கும்?

படம்
அரசியலமைப்புச் சட்டத்தில் ஏ முதல் இசட் வரையில் பல்வேறு அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாம் இப்போது பார்ப்போம். இவை மிகச்சரியானவையா என்பதைவிட சரியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதே முக்கியம். ஏ –அம்பேத்கர் காந்தியின் மென்மையான இந்துத்துவத்திற்கு எதிராக போராடி சேகுவேரா. இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த குழுவின் தலைவர். அவர் ஏற்ற அரசியல் பணிகளிலும் தன் கருத்தை உள்ளே நுழைத்து சமூகத்தில் அனைவருக்குமான இடத்தை உறுதி செய்தார். தன் அரசியல் பணிகளுக்கு இடையில் ஏராளமாக எழுதியவர். பி – பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார். ஆனால் இதுபற்றிய எந்த ஆர்வமும் மக்களுக்கு கிடையாது. ஏனெனில் வெங்காயம் விலை ஏறியதிலிருந்து பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் வரை அம்மணி பேசிய அரிய கருத்துக்களை அவரது கட்சியினரே சகித்துக் கொள்ள முடியவில்லை. சட்டப்பிரிவு 112, இதனை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை என்கிறது. இதனால் என்ன பயன்? பட்ஜெட் தயாரிப்பு அறிக்கை முடிந்தபின் அல்வா கிண்டி சாப்பிடுவார்கள். அதே அல்வாவில் மிஞ்சியதை மக்களுக்கு கொடு

மனிதர்களின் கண்களில் மாற்றம் ஏற்பட்டது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி பாலூட்டிகளின் கண்களில் வெள்ளை நிறம் அதிகம் இருப்பதில்லை. ஆனால் நமது கண்களில் வெள்ளை நிறம் அதிகமாக  இருக்கிறது. என்ன காரணம்? பொதுவாக கூடி வேட்டையாடும் விலங்குகள் தமக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்ள இந்த வெள்ளை நிற சங்கதியை பயன்படுத்திக்கொள்கின்றன. பிற பாலூட்டிகளுக்கு இந்த நிறம் குறைவாக இருப்பதன் காரணம், பரிணாம வளர்ச்சிதான். புலி, சிங்கம்  போன்றவை தனியாக வேட்டையாடும். ஆனால் ஓநாய்கள் கூட்டாக வேட்டையாடும். இந்நேரங்களில் சின்ன சின்ன ஒலிகள், ஊளைகள் என சிக்னல்கள் கொடுத்து வேட்டையாடப் பாயும். இதில் மூத்த ஓநாய்களின் அறிவுரைப்படி இளைய ஓநாய்கள் ஆட்டு மந்தைகளை கொல்லும். பரிணாம வளர்ச்சி பங்காளிகளான மனிதக்குரங்களுக்கு கூட கண்களில் வெள்ளைநிறத் தன்மை குறைவுதான். இதனை உறுதியாக இப்படித்தான் என உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இன்று நம்மிடையே மிக குறைவாக உள்ளன. நன்றி - பிபிசி

மருத்துவமனைக்குள் பேய்! - நந்தினி நர்சிங் ஹோம் படம் எப்படி?

படம்
நந்தினி நர்சிங் ஹோம் - தெலுங்கு இயக்கம் - பிவி கிரி இசை- அச்சு, சேகர் சந்திரா சந்து ஊரில் எம்பிஏ படித்துவிட்டு வேலை தேடி நகருக்கு வருகிறார். வருகிற இடத்தில் மருத்துவமனையில் வேலை கிடைக்கிறது. அப்போது எம்பிஏக்கு பதில் எம்பிபிஎஸ் ரெஸ்யூமில் எழுத்துகள் மாற பிரச்னைகள் தொடங்குகிறது. ஜூனியர் டாக்டராக அவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். தன் நண்பர் மூலம் எப்படியோ சமாளித்து வேலை செய்கிறார். ஆனால் மருத்துவர் என்றால் அடிப்படையே தெரியாமல் உள்ளவர் எப்படி சமாளிக்கிறார்? அங்கு அவருக்கு மருத்துவமனை நிர்வாகி மீது காதல் வருகிறது. காசுதான் முக்கியம் முதல் காதல் காசுக்காக புட்டுக்கொண்டு விட்டது. இதுவும் அப்படி ஆக கூடாது என சந்து நினைக்கிறார். இதற்கிடையில் மருத்துவமனையில் மர்ம நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்குகின்றன. அதனை சந்து உணர்ந்தாரா என்பதுதான் கதை. ஆஹா படத்தில் பெரும்பலம் வெண்ணிலா கிஷோர், சப்தகிரியின் காமெடிக் காட்சிகள்தான். மற்றபடி நாயகி, நாயகன் நடிக்க வாய்ப்பு குறைவு. படத்தின் பாடல்கள் கேட்க கேட்கத்தான் பிடிக்கும். மோசம் படத்தின் நீளம். தக்கனூன்டு கதையை வைத்துக்கொண்டு எவ்வளவு  தூரத்தி

எலிகள் பற்றி நமக்கு என்ன தெரியும்?

படம்
தெரிஞ்சுக்கோ - எலிகள் எலிகள் என்றால் டிஸ்னியின் எலிகள் நினைவுக்கு வருகிறதா? அல்லது அறுவடை காலத்தில் நெற்கதிர்களை திருடி வைத்து பஞ்சத்தை உருவாக்குகிறது. பிளேக் போன்ற நோய்களை உருவாக்குகிறது. நாய்களைப் போலவே நம் காலுக்கடியில் குறுக்கும் மறுக்குமாக ஓடினாலும் எலிகளைப் பற்றி நாம் அறிந்தது மிக குறைவுதான். கஷ்டமோ நஷ்டமோ அத்தனை பிரச்னைகளையும் கடந்து குட்டி போட்டு ரேஷன் கார்டு வாங்காமல் அடுத்தவன் சோற்றில் கைவைத்து பிழைத்து வாழும் எலியை மக்கள் மறக்கவே முடியாது. ஜெனஸ் ராட்டுஸ் இனத்தில் பழுப்பு நிற எலிகள் உட்பட 51 இனங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றும் உடலில் செயலில் மாறுபட்டவை. பழுப்பு நிற எலியின் எடை 0.8 கி.கி என பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பௌண்டு எடை கொண்ட எலியை யாராவது பார்த்து பதிவு செய்தால் 500 டாலர்களை தான் பரிசளிப்பதாக ஆராய்ச்சியாளர் ராபர்ட் காரிகன் கூறியுள்ளார். சாதாரண எலி 2.5 செ.மீ. அளவுள்ள துளையை எலிகள் உருவாக்குகின்றன. எலிகள் பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைகள் ஒரு மணிநேரத்திற்கு ஒன்று என்று என உலகம் முழுக்க வெளியாகி வருகின்றன. ஆப்பிரிக்க வயல்களில் எலிகள் ஏறத்தாழ 15 சதவ

கலாசாரத்தை காக்கும் மனவாடுகள் ஸ்ரீனிவாச கல்யாணம்

படம்
ஸ்ரீனிவாச கல்யாணம் இயக்கம் - சதீஸ் வகீஸ்னா ஒளிப்பதிவு - சமீர் ரெட்டி இசை - மிக்கி ஜே மேயர் கலாசாரம், பாரம்பரியம் என வாழும் ஒருவரின் வாழ்க்கை. ஷெட்யூல் போட்டு வாழும் தொழிலதிபரோடு முட்டிக்கொண்டால் என்னாகும்? இதுதான் கதை. ஆஹா தெலுங்கு கலாசாரம் விரும்புவர்களுக்கான படம் இது. அனைத்து பிரச்னைகளையும் ஸ்ரீனிவாசன் பேசியே சமாளிக்கிறார். இதுவே நாயகி ஸ்ரீக்கு பிடித்தமானதாக இருக்கிறது. மேலும் அவரின் பெரிய குடும்பத்தோடு அவருக்கு இருக்கும் அப்டேட், ஸ்ரீக்கு ஸ்ரீனிவாசனின் மீது பொறாமையை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அவரது குடும்பம் தொழில், வருமானம் ஆகியவற்றுக்கு மட்டும் கைதட்டி மகிழும். இந்த வேறுபாட்டை நன்றாக விளக்கி எது வாழ்க்கை என்று சொல்லி இருக்கிறார்கள். படத்தை உறுத்தலின்றி நிதானமாக பார்க்கலாம். நிதின், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திர பிரசாத் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஐயையோ படம் மெதுவாகவே நடக்கிறது. ஸ்ரீனிவாச கல்யாணம் என்பதால் சடங்கு நடைபெறும் வேகத்தில் படத்தை அழைத்து சென்றால் எப்படி? கிராமம் என்றால் சாணி தட்டுவதை ஏன் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. நந்தி