இடுகைகள்

விவசாயிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாயிகளின் துயர் துடைக்கும் மிரிட்ஸா!

படம்
  விவசாயிகளுக்கு உதவும் மிரிட்ஸா! ஆந்திர விவசாயிகளுக்கு உதவ பள்ளி மாணவிகள் நால்வர் இணைந்து  திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். புராஜெக்ட் மிரிட்சா எனும் திட்டத்தை நந்தினி ராஜூ(16), ஸ்ரீலக்ஷ்மி ரெட்டி(16), சாரதா கோபாலகிருஷ்ணன் (14), அம்ருதா பொட்லூரி (16) ஆகிய மாணவிகள் தொடங்கியுள்ளனர். இதுவரை 1.5 லட்சம் ரூபாய் நிதி திரட்டி இயற்கை விவசாயம் செய்யவும் குளிர்பதனக்கிடங்குகளைக் கட்டவும் விவசாயிகளுக்கு உதவி வருகின்றனர். இதில் சாரதா கோபாலகிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். அம்ருதா, அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர்.  கடந்த ஜூன் மாதம் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் வீடியோக்களை  உருவாக்குவது, தானியங்களை சேமிப்பதற்கான கிடங்குகளை ஏற்படுத்துவது, இயற்கை விவசாய மாதிரிகளை பிரசாரம் செய்வது, அரசு திட்டங்களை விளக்குவது ஆகியவற்றை செய்து வருகின்றனர்.  ஆந்திரத்தின் குண்டூர் பகுதியில் இன்ஸ்டாகிராம், யூடியூப் என பல்வேறு சமூக வலைத்தளங்களையும் நான்கு மாணவிகளும் பயன்படுத்தி விழிப்புணர்வு பிரசாரங்களை செய்கின்றனர். இங்கு கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின

இந்தியாவில் அதிகம் அறியப்பட்ட முகங்கள்! - 2021 முகங்கள் புதிது

படம்
  கங்கனா  ரணாவத் மணிகர்ணிகா படத்தில் பொம்மைக் குதிரையில் அபிநயம் பிடித்து தேசப்பற்றில் பொங்கினார். ஆனால் ஷூட்டிங் முடிந்தும் கூட அம்மணியிடம் வைப்ரேஷன் குறையவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகுதான் கிடைத்தது, அமைதி வழியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சொன்னது, விவசாயிகளை ஆதரித்த அமெரிக்க பாப் பாடகியை முட்டாள் என்று சொன்னது என ஏதாவது உளறி வைத்துக்கொண்டே இருந்தார். இதனால் அவர் பத்ம விருது வாங்கிய செய்தி கூட காணாமல் போனது. தமிழில் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக அரிதாரம் பூசி நடித்தார். ஆனால் படத்தில் அவருக்கு எதுவுமே சிங்க் ஆகவில்லை என்பதால்,  படம் அப்பளமாய் நொறுங்கியது. நடிப்பை விட வாய்ப்பேச்சால் சமூக வலைத்தளங்களில் வலிமையாக இருந்தார் கங்கனா.  நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றார். அப்புறம் அவர் வேறு ஏதும் செய்யவேண்டியிருக்கவில்லை. ஏராளமான பரிசுகள் அவருக்கு வழங்கப்பட்டன. நூறு ஆண்டுகளாக தங்கப்பதக்கம் வாங்க காத்திருந்தோம் என ஊடகங்கள் உணர்ச்சி கொந்தளிப்பில் பொங்கின. இந்த நேரத்தில் பாஜக ஐடி ஆட்

விவசாயிகள், மத, ஜாதி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து வென்றிருக்கிறார்கள்! - சதேந்திரகுமார்

படம்
  சதேந்திர குமார் சமூகவியலாளர் இவர் ஜிபி பான்ட் சமூக அறிவியல் கழகத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இக்கழகம் அலகாபாத் பல்கலையின் ஓர் அங்கமாக உள்ளது.  வேளாண்மை சட்டங்கள் மூன்றுமே திரும்ப பெறப்பட்டுள்ளன. விவசாய அமைப்புகளின் போராட்டம் வெற்றி பெற என்ன காரணம்?  இந்த வெற்றிக்கு காரணம் இயக்கங்களின் பல்வேறு போராட்ட முறைகள்தான். அமைப்பை நிர்வாகம் செய்த தலைவர்களின் அணுகுமுறை, தகவல் தொடர்பு ஆகியவை முக்கியமான காரணம். நகரம் மட்டுமன்றி, கிராமப்புற  விவசாயிகளையும் போராட்டத்தில் பங்கெடுக்க வைத்தது முக்கியமானது. இந்த போராட்டத்தில் இளைஞர்களும் பெண்களும் பங்கெடுத்தனர். விவசாயிகள் போராட்டங்களில் இருந்தபோது, வீட்டிலுள்ள பிற குடும்ப உறுப்பினர்கள் நிலங்களில் விவசாயம் செய்துகொண்டிருந்தனர். இதுதான் போராட்டத்தை பெரும் ஊக்கமாக எடுத்துச்செல்ல உதவியது. பல்வேறு குரல்கள் ஒலிக்கும்படியான தேசிய அளவிலான இயக்கமாக விவசாயிகளின்போராட்டம் மாறியது இதனால்தான்.  கொரோனா பெருந்தொற்று போராட்டத்தை பாதித்ததா? நகரங்களில் வேலை பார்த்து வந்த இளைஞர்கள், பெருந்தொற்று காரணமாக வேலைகளை இழந்தனர். இவர்களுக்கும் வி

விவசாயிகள் போராட்டமும், உள்குத்து அரசியலும்!

படம்
  விவசாயிகள் போராட்டமும், உள்குத்து அரசியலும் கடந்த சில மாதங்களாக பாஜக அரசு ஆளும் ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் வேகம் பெற்றுள்ளது. இதனை முடக்க அந்த மாநில அரசு இணையத்தை துண்டித்தது. தங்களது உரிமைகளுக்காக போராடிய மக்கள் மீது, தேச துரோக வழக்கு போடப்பட்டது. தடியடி நடத்தி விவசாயிகளை காவல்துறையினர் தாக்கினர். ஆனாலும் கூட விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ஹரியானா முதல்வர் எம்எல் கட்டார், உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் இதெல்லாம் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசின் சதி என ஊடகங்களில் பேட்டி தட்டி விட்டுக்கொண்டிருக்கின்றனர்.  என்னதான் பிரச்னை? ஹரியானா அரசு, ஜாட் அல்லாதவர்களின் வாக்குகளை கணக்கு செய்து போராட்டத்தை முக்க நினைக்கிறது. ஒருவகையில் இப்படி போராட்டத்தை முடக்குவதும் கூட பிரித்து ஆளும் தந்திரம்தான். பின்னாளில் இவர்கள் ஜாட் இனத்தவர், ஜாட் அல்லாதவர் என வாக்குவங்கி பிரியும் என்கிறார் அரசியல் செயல்பாட்டாளர் பிரமோத் குமார். மத்திய அரசும் தன் பங்குக்கு விவசாயிகள் போராட்டத்தை தீவிரவாத த்துடன் இணைத்து பார்த்து பேசி வருகிறது. ராம் ராம் என்று கூறுபவர்களை எப்படி நீங்கள் காலி

உற்பத்தி துறையை மேம்படுத்த மேக் இன் இந்தியா, ஆத்மாநிர்பார் போதாது! சேட்டன் பகத்

படம்
                இந்தியாவின் உற்பத்திதுறையை மேம்படுத்த மசோதா தேவை ! சேட்டன் பகத் சில சமயங்களில் நமக்கு மக்கள் எதிர்க்கும் விஷயங்களில் கூட நல்ல விஷயங்கள் கிடைக்கும் . வகுப்பறையில் மாணவர்களுக்கு பாஸ்தா , பீட்ஸா கொடுப்பதை விட காய்ச்சலைக் குணப்படுத்த கசப்பு மாத்திரை கொடுக்கும் மருத்துவர் முக்கியமானவர் . அதேபோலத்தான் அரசு மக்களுக்கு ஏராளமான இலவச சலுகைகளை வழங்கி பின்னர் வரி ஏற்றி மக்களை வருத்துவதை விட கடினமான முடிவுகளை முன்னமே எடுத்து மக்களை காப்பது சிறப்பானது . பொதுவாக மக்கள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பதை விரும்புவதில்லை . ஆனால் , அதனை அவர்கள் செய்யும்போது கிடைக்கும் பலன்கள் அபாரமானவைதானே ! நாம் பல்லாண்டுகளாக காத்திருந்துவிட்டோம் . உற்பத்தித்துறை சார்ந்த துறையில் இந்தியா முன்னேறுவதற்கான திட்டங்கள் உருவாகவில்லை . ஆனால் இப்போது இந்திய அரசு அந்த திசையில் தனது காலடிகளை மெல்ல எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது . மேக் இன் இந்தியா , ஆத்மாநிர்பார் ஆகிய திட்டங்களை இந்த வகையில் நாம் கூறலாம் . அரசு இத்திட்டங்களுக்காக லட்சம் கோடிகளில் நிதியை ஒதுக்கி வருகிறது . இப்படி

விவசாயிகளை மத்திய அரசு கலந்து ஆலோசிக்காமல் மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது! - கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் முதல்வர்

படம்
                கேப்டன் அம்ரீந்தர்சிங் பஞ்சாப் மாநில முதல்வர் காங்கிரஸ் கட்சி 2019 ஆம் ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக உருவாக்கியிருந்தது . இன்று அதனை மறைத்து பேசுகிறது என குற்றம்சாட்டியுள்ளாரே ? மண்டிகளை நீக்கும் திட்டம் பற்றி… . ஆனால் காங்கிரஸ் கட்சி 2017 இல் ஏன் இப்போதும் கூட மண்டிகளை நீக்குவதாக கூறவில்லையே . நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியது தனியார் நிறுவனங்களை உள்ளே அனுமதிக்கவேண்டும் என்பதுதான் . ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள் . விவசாயம் என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது விவகாரம் . இதற்கு மத்திய அரசு உள்ளே நுழைந்து வணிக விதிகளை வகுப்பது தேவையில்லாதது . இதை நாங்கள் விரும்பவில்லை . அப்படியென்றால் பிரதமர் மோடி உங்களை கலந்து ஆலோசிக்கவேண்டும் என்கிறீர்கள் . பிற விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேசியிருக்கவேண்டும் என்பது உங்கள் கருத்து அப்படித்தானே ? ஆமாம் . ஆலோசித்தபிறகு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுவது சரியான முறை . ஆனால் அரசியலமைப்பு நடைமுறையை ஒதுக்கி மசோதா சட்டமாக மாற்றப்பட்டுள்ளது . இந்தியாவில் விவசாயிகள

விவசாய சீர்திருத்த புரட்சி 2.0 வெல்லுமா? - பஞ்சாப் விவசாயிகள் டேட்டா கார்னர்

படம்
          விவசாய புரட்சி 2.0 என்று பிரதமர் மோடி அறிவித்த விவசாய சீர்திருத்த சட்டங்கள் விவசாயிகளின் தீவிரமான போராட்டங்களில் முடிந்திருக்கிறது . கோவிட் -19 காலத்திலும் கூட விவசாய சீர்திருத்தங்களை சரியாக செய்துவிடவேண்டும் என்கிற வேட்கை தணியாமல் அதனை நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு . இச்சட்டம் மூலம் விவசாயிகள் அரசின் மண்டிக்கு பொருட்களை விற்றே தீரவேண்டிய கட்டாயம் இனி இல்லை . அவர்கள் விருப்பம் போல பிற மாநிலங்களுக்கு கூட விற்கலாம் . தனியார் நிறுவனங்களுக்கு விற்கலாம் . மேலும் தனியார் நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்த விவசாயமும் இனி நாடெங்கும் பெருகும் வாய்ப்புள்ளது . செப்டம்பரில் இம்மசோதாவை அரசு மக்களவையில் தாக்கல் செய்தது . உடனே உணவு பதப்படுத்ததல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார் . அவரது கட்சியான சிரோமணி அகாலிதள் கட்சியும் பாஜக அரசின் கூட்டணியிலிருந்து விலகியது . பஞ்சாப்பில் வேர் கொண்டுள்ள கட்சி இது என்பதால் , மெல்ல போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின . பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் , மத்திய அரசின் சட்டங்களுக்கு பதில் வேறு சட்டங்களை இ

விவசாயிகளின் பிரச்னைகளை புரிந்துகொள்ளாமல் அறிவுரைகள் சொல்பவர்களே இங்கு அதிகம்! ஹன்னன் மொல்லா

                    ஹன்னன் மொல்லா , அனைத்திந்தியா விவசாய சங்கம் விவசாயிகள் மூன்று விவசாய சட்டங்களை மாற்றவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் . இப்போது போராட்டம் எப்படியுள்ளதுழ விவசாயிகள் கடந்த ஆறுமாதங்களாகவே விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள் . ஆனால் அரசு கவனிக்கவில்லை . விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் சட்டங்களை நிறைவேற்றிவிட்டனர் . ஜனநாயக நாட்டில் அரசு இப்படி செயல்பட்டால் போராடங்களைத் தவிர வேறு என்ன வழி உள்ளது ? எனவே தலைநகருக்கு திரண்டு வந்து சட்டங்களுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் . அரசு சட்டங்களை மாற்றவில்லை என்றால் என்ன செய்வீர்கள் ? அரசு உருவாக்கிய மூன்று சட்டங்களை விலக்கிக்கொள்ளவேண்டும் . சிறு திருத்தங்கள் செய்வது சட்டங்களின் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்காது . போராட்டங்களுக்கு உலகளவிலான கவனம் கிடைப்பது அதனை பின்தங்க வைக்கிறதா ? குறிப்பாக காலிஸ்தான் தொடர்பான சர்ச்சை எழுகிறதே ? யாரும் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி பேசுவது இல்லை . நாங்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவும் தயாராக இல்லை . ஆனால் ஏராளம

மனநல பிரச்னையால் தவிக்கும் இந்தியா!

படம்
pinterest பொதுவாக உடல்நல பிரச்னைகளையே இந்தியர்கள் பெரிதாக எடுத்துகொள்வதில்லை. ஏதாவது ஒன்றிரண்டு மருந்துகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு வேலை பார்ப்பார்கள். ஆனால் இப்போது மன அழுத்தம் சார்ந்த தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதுபற்றிய கவனமும் தேவை என வல்லுநர்கள் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிரத்தால் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 1300 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இறப்பதற்கான காரணம் எதுவாக இறந்தாலும் இப்படி அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோவது ஆபத்தான அறிகுறி. அங்குள்ள யவட்மால் மாவட்டத்தில் மட்டும் ஜூலை வரை 139 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலைகளைத் தடுக்க பிரேர்னா பிரகல்ப் எனும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இங்குள்ள பதினான்கு மாவட்டத்தில் ஆஷா பணியாளர்கள் இதற்கான பணியாற்றி வருகின்றனர். முழுமையான உளவியலாளர்கள் இத்திட்டத்திற்கு இன்னும் நியமிக்கப்படவில்லை. அறுபதாயிரம் ஆஷா பணியாளர்கள் எப்படி தங்களின் பணிச்சுமையோடு இப்பணியை செய்வார்கள் என்று தெரியவில்லை. இதில் பாதியளவிலான பணியாட்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தற்கொலை - மகராஷ்டிரா முந்துவது எப்படி?

படம்
விவசாயிகள் தற்கொலை விவசாயிகளுக்கு வருமானம் இரட்டிப்பாகும் என தந்தி தலைப்புச்செய்தி இன்று சொல்லுகிறது. ஆனால் அதே தினத்தில் மகாராஷ்டிரத்தில் 808 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது, தினசரி ஏழு விவசாயிகள் கடன்தொல்லை, சரியான விலை கிடைக்காத பிரச்னையில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மகாராஷ்டிராவின் 42 தாலூக்காக்களிலும் வறட்சி படமெடுத்து ஆடியதில் மக்களின் உயிர் பறிபோனதுதான் மிச்சம். ஆட்சியாளர்கள் எப்போதும்போல எண்களாக குறித்து வைத்துக்கொண்டனர். விதர்பா, மராத்வடா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இறப்பு நேர்ந்துள்ளது. விதர்பாவில் 344, மராத்வடாவில் 161, வடக்கு மகாராஷ்டிராவில் 244 என தற்கொலைகள் பதிவாகியுள்ளன. விவசாயிகள் கடந்த ஆண்டு கடன் தள்ளுபடி கோரி போராட்டம் நடத்தினர். அதைக் கண்டுகொள்ளாதது போல இருந்த அரசு, தேர்தல் நெருங்கியவுடன் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தது. இத்திட்டத்திற்கு கிஷான் சம்மான் நிதி என்று பெயர் வைக்கப்பட்டது. நன்றி: எகனாமிக் டைம்ஸ் - பிரியங்கா ககோட்கர்.