இடுகைகள்

உதவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரஷ்யாவின் கிரெம்ளினுக்கு பணிந்து மக்களைக் காட்டிக்கொடுக்கும் டெலிகிராம் ஆப்!

படம்
  டெலிகிராம் ஆப் - ரஷ்யா அரசின் உறவு டெலிகிராமை வளைக்கும் ரஷ்யா ரஷ்யாவுக்கு பணிந்துபோகும் டெலிகிராம் நிறுவனம்! டெலிகிராம் என்றில்லை. எந்த ஒரு டெக் நிறுவனமும் குறிப்பிட்ட நிலப்பரப்பிலுள்ள அரசுகளின் விருப்பத்திற்கு, விதிகளுக்கு பணிய வில்லை என்றால் சுதந்திரமாக செயல்பட முடியாது. அதை தடை செய்வார்கள். வருமான இழப்பை டெக் நிறுவனத்தை நிலைகுலைய வைக்கும். இந்த நிலையில் நிறுவனம் அரசுடன் பரஸ்பர சகாய ஒப்பந்தத்திற்கு வந்தே ஆக வேண்டும். டெலிகிராம் கூட பரவாயில்லை. நெருக்கடி கொடுத்து அதை கீழே வீழ்த்தினார்கள். ஆனால், மெட்டாவின் குறுஞ்செய்தி, சமூக வலைத்தள நிறுவனங்கள் உலகமெங்கும் சர்வாதிகார அரசுகளிடம் மண்டியிட்டு காசு வாங்கிக்கொண்டு இயங்கி வருகிறார்கள். மெட்டா அதிக பயனர்களைக் கொண்டுள்ள நாடுகளில் கலவரம், போராட்டம், இனவெறி என அமைதி இல்லாத நிலையே நிலவுகிறது. இதை எந்த ஊடகங்களும் வெளிப்படையாக பேச மாட்டார்கள்.   ரஷ்யாவில் உள்ள அரசியல் சமநிலை குலைவைப் பற்றிய செய்திகளை நாளிதழில் படித்திருப்பீர்கள். டிவி சேனல்களில் செய்தித்தொகுப்புகளையும் பார்த்திருப்பீர்கள். அங்குள்ள தனியார் கூ லிப்படை ராணுவமே, அரசின் நகரங்க

பழங்குடி மாணவர்களுக்காக பள்ளிக்கட்டிடம் கட்டியவர் - கிரிதரன்

படம்
    மரத்தின் கீழே மாணவர்கள் படிப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பீர்கள். ரவீந்திரநாத்தின் சாந்தி நிகேதனைப் போன்ற கல்விமுறையை இங்கேயும் பின்பற்றுகிறார்கள் என்றா? படித்தவர்கள், மாற்றுக்கல்வி முறையை கற்றுத் தரும் ஆட்கள் அப்படி நினைக்கலாம். ஆனால் சாதாரணமான மக்கள் நினைப்பது, பள்ளிக்கட்டிடம் எங்கே என்றுதான். அப்படித்தான் யதார்த்தமாக ஒரு கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டார் வேலூரின் காட்பாடியைச் சேர்ந்த கிரிதரன். அந்த கேள்விக்கு பதில் தே அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆம், கிரிதரன் பள்ளி மாணவர்களுக்காக 400 பேர்களிடம் நிதியுதவி பெற்று பள்ளிக்கட்டிடத்தைக் கட்டியிருக்கிறார். இன்னும் அதில் டிவி பொருத்தும் விரிவாக்கத் திட்டம் இருக்கிறதாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது 39ஆம் வயதில் மருதவலியம்படி வந்து பார்த்தபிறகுதான் அவருக்கு பள்ளிக்கட்டிட யோசனை தோன்றியிருக்கிறது. மரத்தடியில் பாடம் கற்ற மாணவர்கள் பல்வேறு இயற்கைச்சூழல் பிரச்னைகளால் கல்வி கற்க முடியாத இடையூறுகள் இருந்தன. காற்று வேகமாக அடித்தால் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகள் காதில் கேட்காது.   முக்கியமாக இப்படி பாடம் கற்றுக்கொண்டிருந்த மா

பழங்குடி மனிதன் குல்லுபாயை துரத்த அலையும் மாபியா குழு! குலு குலு - ரத்னகுமார்

படம்
  குலுகுலு சந்தானம், பிரதீப் ராவத், தீனா இசை சந்தோஷ் நாராயணன் இயக்கம் ரத்னகுமார் மதிமாறன் என்ற இளைஞன் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு ஊருக்கு வருகிறான். அவனுக்கு அப்பா தன் மீது பாசம் காட்டவில்லை என்று வருத்தம். இதனால் தான் கடத்தப்பட்டது போல நாடகமாடுகிறான். இதில், ஏற்படும் குளறுபடிகளால் மதிமாறனை இலங்கை தமிழ் ஆட்கள் கடத்திப் போகிறார்கள். இவர்களை மீட்க ஊருக்கே உதவி செய்யும் கூகுள் என்பவரை மதிமாறனின் நண்பர்கள் தேடிப்போகிறார்கள். அதேநேரம் டேவிட், ராபர்ட் என்ற மாபியா கும்பல், இறந்துபோன தந்தைக்கு பிறந்த பெண்ணை அதாவது அவர்களது தங்கையை தேடிப்பிடித்து கொல்ல  நினைக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே புள்ளியில் சந்திப்பதுதான் படத்தின் இறுதிக் காட்சி.   கூகுள் என்ற குல்லு பாய் ஆக சந்தானம் நடித்திருக்கிறார். படம் நெடுக அவல நகைச்சுவை அதிகம். அதில் பெரும்பகுதி குல்லு பாயின் செயல்களை ஒட்டித்தான் நடக்கிறது. அமேசான் மழைக்காட்டிலிருந்து வந்த பழங்குடி மனிதன். மொழியை தொலைத்துவிட்டு அந்த வருத்தம் தாளாமல் மதிமாறனின் நண்பர்களோடு அழுவது உருக்கமான காட்சி. பாடல்களில் எல்லாம் வெடிக்கும் நகைச்சுவை  இசைக்கு சந்தோஷ் நார

வினோதரச மஞ்சரி - ரேடியோ தகவல்தொடர்பு, கனிமங்களின் வகைகள்

படம்
ரேடியோ தகவல் தொடர்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தகவல்தொடர்பு மெதுவாக நடைபெற்று வந்தது. பிறகுதான் ரேடியோ அலைகள் கண்டறியப்பட்டன. மின்காந்த அலைகளில் ரேடியோ அலையும் ஒன்று.இதன்மூலம் தொலைவிலுள்ள ஒருவருக்கு எளிதாக தகவல் அனுப்பி, பதிலைப் பெறமுடியும். இதற்கு உதவுவதுதான் டிரான்ஸ்சீவர் (Transceiver).இதில் உள்ள ஆன்டெனா மூலம் சிக்னல்களைப் பெற்று பதில் அனுப்ப முடியும். டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரீசிவர் என இரு பணிகளையும் தனது பெயருக்கு ஏற்ப டிரான்ஸ்சீவர் கருவி செய்கிறது.  மலையேறும் வீரர்கள், டிரான்ஸ்சீவரைப் பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் மலையேற்றக் குழுவில் யாராவது விபத்து காரணமாக காணாமல் போனாலும், கருவியில் உள்ள சிக்னல் மூலம் எளிதாக கண்டுபிடிக்க மீட்க முடியும். போக்குவரத்திற்கு பயன்படும் காருக்கான ஸ்மார்ட் கீ, ரேடியோ அலை மூலமே இயங்குகிறது. இதன்மூலம் காரின் கதவுகளை திறப்பது, மூடுவது, காரின் இஞ்சினை ஆன் செய்வது ஆகியவற்றை செய்யலாம்.  2 போர்னைட் (Bornite) இயற்கையில் கிடைக்கும் வண்ணமயமான கனிமங்களில் இதுவும் ஒன்று. போர்னைட், செம்பு மற்றும் இரும்பு கொண்ட சல்பைட் வடிவம். இதற்கு, ஆஸ்திரியாவைச் சேர்ந்த  கனி

பெண்களே நடத்தும் பூம்புகாரின் டால்பின் உணவகம்!

படம்
  டால்பின் உணவகம் நடத்தும் மீனவப் பெண்கள் பூம்புகாரில் உள்ள கடற்கரையோரமாக அமைந்துள்ளது. டால்பின் உணவகம். ஆஸ்பெஸ்டாஸ் போட்ட கூரைகளால் அமைந்து உணவகம் இது. கடற்கரையோரம் இதுபோல கடைகள் அமைவது பெரிய ஆச்சரியம் அல்ல. இதனை முழுக்க பெண்களே கூட்டாக பணம் போட்டு நடத்துவதுதான் ஆச்சரியமானது.  கடற்கரையோரமாக வாழும் பெண்கள், தொழில்முனைவோராக இருப்பது ஆச்சரியமல்ல. ஆனால் இப்படி முறையாக கடை தொடங்கி நடத்துவது வியப்பளிப்பதுதான். தங்களது இனக்குழுவில் உள்ள ஆண்கள், பெண்கள், போட்டி கடைகள் என நிறைய சவால்களைச் சந்தித்துத்தான் பெண்கள் டால்பின் உணவகத்தை நடத்தி வருகிறார்கள்.  பெருந்தொற்றுக்கு முன்னதாக, தினசரி 5 ஆயிரம் வரை வருமானம் வந்துகொண்டிருந்தது. ஆர்டர்களுக்கு ஏற்று உணவு தயாரித்தால்,  தொழிலில் உள்ள பெண்களுக்கு தலைக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கூறுகிறார்கள்.  டால்பின் உணவகம் நடத்துவதற்கான ஐடியா, உதவிகளை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்னேகா என்ற அமைப்பின் எல் கிருஷ்ணன் செய்துகொடுத்துள்ளார். இந்த அமைப்பு, சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை கொடுத்து உதவியதோடு, பொருட்களை மதிப்புகூட்டி எப்படி விற்பனை செய்வது என பயிற்சி

எஸ்ஓஎஸ் சிக்னல்- ஆபத்தில் உள்ளவர்களை காக்கும் அடையாளம்

படம்
  எஸ்ஓஎஸ் சிக்னல் (SOS Signal) கடலில் அல்லது மலைப்பகுதியில் அவசர நிலையின்போது, ஆபத்தில் உள்ளவர்கள் தீப்பந்தம் ஒன்றை எரிய விடுகிறார்கள். இதனை ஃபிளேர்ஸ் (flares) என்று அழைக்கின்றனர். இதிலுள்ள வேதிப்பொருட்கள் பல்வேறு நிறங்களில் எரியும் என்பதால், தொலைதூரத்தில் உள்ளவர்களும் இதனைப் பார்க்கலாம். ஆபத்து சமிக்ஞையைப் பார்க்கும் விமானப்படையினர், எளிதாக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறார்கள்.  ஃப்ளேர்ஸ், பெரும்பாலும் அடர்த்தியான சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. பகல் மற்றும் இரவிலும் இதனை எளிதாக காணலாம். இதில் சிலவகை ஃபிளேர்ஸ், எரியும்போது புகையை மட்டுமே வெளிவிடும். காடுகளில் இவ்வகையைப் பயன்படுத்துகிறார்கள். வானில் விமானத்திலிருந்து பார்க்கும்போது காடுகளின் பகுதிகளை  துல்லியமாக பார்க்க முடியாது. இச்சமயங்களில், நெருப்பை விட புகையை எளிதாக அடையாளம் காணலாம்.   ஒருவர் கையில் பிடித்து ஃப்ளேர்ஸை எரித்தால் அது 1 நிமிடம் முழுதாக எரியும். அதனை ஐந்து கி.மீ. தூரத்தில் இருப்பவர்கள் பார்க்கலாம்.  ஃப்ளேர்ஸில் உள்ள வேதிப்பொருட்கள் எரியும்போது, ஆக்சிஜனை வெளியேற்றுகிறது. இதன் காரணமாகவே அதில் பற்றிவைக்கப்படும்

ஹிஜாப்பை விட பெண்களுக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன! - நூர்ஜெகான் சஃபியா நியாஸ்

படம்
  நூர்ஜெகான் சஃபியா நியாஸ், பாரதிய முஸ்லீம் மகிலா அந்தோலன் நூர்ஜெகான் சஃபியா நியாஸ்  நிறுவனர், பாரதிய முஸ்லீம் மகிலா அந்தோலன்  நூர்ஜெகான், டாடா சமூக அறிவியல் இன்ஸ்டிடியூட்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  யுவா எனும் தன்னார்வ தொண்டுநிறுவனத்தில் சேர்ந்து முஸ்லீம் சமூக பெண்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.  1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு, மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கான வாழிடங்களைப் பெற்றுத்தர உழைத்து வருகிறார். பிஎம்எம்ஏ எனும் அமைப்பை 2007இல் தொடங்கினார். இதன்மூலம் பெண்களின் குரல்களை பல்வேறு தளங்களில் ஒலிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.  கர்நாடகத்தில் உருவாகிய ஹிஜாப் பிரச்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அங்கு நடைபெறுவது முஸ்லீம் மக்களுக்கு எதிரான வலதுசாரி இந்துத்துவ தாக்குதல்தான். அங்கு இதுபோல நிறைய பிரச்னைகளை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது கொரோனா ஜிகாத் முதல் குழு படுகொலை வரை நடைபெற்று வருகிறது. முஸ்லீம் சமூகத்தை மெல்ல சுவர் நோக்கி தள்ளிக்கொண்டே வருகிறார்கள். மாணவர்கள் கல்வி கற்பதை எதற்கு தடுக்கிறார்கள்? கல்வி கற்பது அவர்கள

உயிரை ஆரோக்கியத்தை காக்கும் சில ஆப்கள்!

படம்
what3words இதனை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடியும். வாழ்க்கையை எட்டு எட்டாக பிரித்துக்கொள்ள சூப்பர்ஸ்டார் சொல்லியிருக்கிறார். இந்த ஆப் 3*3 என பிரித்துக்கொள்கிறது. இதில் உள்ளவர்களுக்கு மூன்று  வார்த்தைகளை அளிக்கிறது. உங்களுக்கு அவசரநிலை என்றால் இதைவைத்து அவர்களுக்கு தகவல் அளிக்கலாம். இங்கிலாந்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப் இது. இதன்மூலம் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.  whatsapp வாட்ஸ்அப்பில் ஏராளமான சில்மிஷங்களை செய்திருப்போம். ஆனால் அதிலும் அவசரகால சங்கதிகள் உண்டு. ஆபத்தான சூழலில் ஒருவரின் சாட் பாக்ஸில் பிளஸ் கீயை அழுத்தி ஷேர் லைவ் லொகேஷன் அனுப்பலாம். அந்த சாட்டுக்கு உரிய நபர் உங்களது இடத்தை குறிப்பிட்ட நேரம் பார்க்க முடியும்.  skinvision ஸ்கின் விஷன் எனும் ஆப்பிற்கு காசு கட்டியே ஆக வேண்டும். இந்த ஆப் உங்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அதனை கண்டுபிடித்து சொல்லும். பாதிக்கப்பட்ட இடத்தை புகைப்படம் எடுத்து ஆப்பில் அனுப்பவேண்டும். இதனை அவர்கள் சோதித்து என்ன பாதிப்பு என்று சொல்லுவார்கள். இதற்கு 30 நொடிகள் போதும். இந்த முடிவுகளைக் கூட மருத்துவர்கள்தான் சொல்கிறார்கள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து உதவும் ஆனந்த்! - திருச்சி தன்னார்வத் தொண்டர் கதை!

படம்
  சூரியன் வானில் வெளிச்சம் காட்டியபோதும் கூட சிகே ஆனந்தின் பணி நிற்கவில்லை.  அவரது போன் அழைப்புகள் வந்துகொண்டு இருந்தன. மழைப்பொழிவால் நீரில் மூழ்கிய பல்வேறு இடங்களிலிருந்து உதவி கேட்டு அழைக்கும் அழைப்புகள்தான் அவை. படகு வேண்டும், உணவுக்காக காய்கறிகள் வேண்டும் என குரல்கள் ஏதேனும் உதவிகளை கோரியபடி இருந்தன.  அத்தனை அழைப்புகளையும் சமாளித்து காய்கறிகளை தேவையான உதவிகளை ஆனந்த் வழங்கிக்கொண்டே இருந்தார். முப்பது வயதான ஆனந்த், தன்னையொத்த உதவும் மனம் கொண்ட தன்னார்வலர்களின் குழுவை ஒருங்கிணைத்து மேற்சொன்ன அழைப்புகளுக்கு வரும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். வெள்ள பாதிப்பு பிரச்னை ஏற்பட்டபோது காலை ஏழுமணி தொடங்கி நள்ளிரவு வரை பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தது இக்குழு.  கருமேகங்கள் திருச்சி நகரை சூழ்ந்தபோது, லிங்கம் நகர், அருள் நகர், செல்வம் நகர், ராஜலட்சுமி நகர் ஆகிய இடங்களிலிருந்து உதவி கோரி அழைப்புகள் வந்தன. உடனே தன்னுடைய பகுதியை சேர்ந்த சில இளைஞர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றார் ஆனந்த். முதலில் முக்கொம்பு பகுதிக்கு போனவர், அங்கு மக்களுக்கு தேவையான தினசரி வாழ்க்கைக்க

தடைகளை சமாளித்து வென்ற கார்ப்பரேட் நிறுவன பெண்கள்! - நந்தினி பிரமள், நுவ்ருதி ராய், ரிச்சா அரோரா, சமீனா ஹமீத்

படம்
                    நந்தினி பிரமள் எக்சிகியூட்டிவ் டைரக்டர் , பிரமள் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டு்ம் ஆறு பிராண்டுகள் மூலம் 418 கோடி ரூபாய் வருமானத்தை பிரமள் நிறுவனம் சாதித்துள்ளது . இதற்கு ந ந்தினியின் ஐடியாக்களே முக்கியமான காரணம் . இந்த நிறுவனத்தில் தற்போது பத்தாயிரம் பேர் பணியாற்றுகிறார்கள் . மருந்துகள் தயாரிப்பு விற்பனையில் பிரமள் நிறுவனம் சாதித்து வருகிறது . சாரிடான் , ஐபில் ஆகிய மருந்து பிராண்டுகள் இந்த நிறுவனத்துடையதுதான் . அபோட் , கார்லைட் எனும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக நந்தினி முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார் . பிரமள் நிறுவனததின் மனிதவளத்துறை மற்றும் ஐடி செயல்பாடுகளை நந்தினி கவனிக்கிறார் . இவரை அஜய் பிரமள் நிறுவனத்திற்கு அழைத்து வந்தார் . இவர் வந்தபிறகு நிறுவனம் பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்படுகிறது . தற்போது குழந்தைகளுக்கான பிராண்டு ஒன்றைத் தொடங்கியுள்ளனர் . அடுத்து மாஸ்க் , சானிடைசர் ஆகியவற்றையும் தயாரித்து விற்கும் முடிவை எடுத்துள்ளனர் . நுவ்ருதி ராய் இந்தியத் தலைவர் , இன்டெல் நுவருதியை பல்வேறு சவால்கள

ஆடியோ மூலமாக என்னென்ன விஷயங்களை செய்யலாம்?

படம்
              ஆடியோவில் ஆடிப்பாடுவோம் ! ஸ்மார்ட்போன்களில் குரல் மூலம் செயல்படும் உதவியாளர் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகள் ஆகப்போகின்றது . இதனை இன்னும் நாம் சிறப்பாக பயன்படுத்த கற்கவேண்டும் . அப்போதுதான் எழுதுவதை விட எளிதாக பேசி ஒரு விஷயத்தை செய்யமுடியும் என்பதை உணர்வீர்கள் . உதவியாளரால் என்ன செய்யமுடியும் ? ஆப்பிளின் சிரி , கூகுளின் ஆண்ட்ராய்டு சாம்சங்கின் பிக்ஸ்பை ஆகியவை இன்று பெரும்பாலோனாரின் போன்களில் பயன்பாட்டில் உள்ளது . இதனை முழுமையாக பயன்படுத்த அதனைப் பற்றி அறிவது அவசியம் . எனவே இதுபற்றி இணையத்தில் தேடிப் பார்க்கலாம் . அல்லது போனில் உள்ள உதவியாளரிடமே உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி கேட்டு பதில் பெறலாம் . என்ன செய்யலாம் ? இன்று வேலைகள் என்னென்ன என்பது உங்களது அற்புதமான காந்தர்வ குரலில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் . போனில் நோட்ஸ் எடுக்கும் ஆப்புகளும் இருக்கும் . அதனைப் பயன்படுத்தலாம் . இல்லையெனில் போனில் கம்பெனியே கொடுத்துளமள ரெக்கார்ட் ஆப்பை பயன்படுத்துங்கள் . பட்டனை அழுத்தி பேசி பதிவுசெய்துகொண்டு அதனை கணினியில பதிவேற்றி பேக்கப் எடுத்து வைத்துக்

இந்திய மக்கள் இறப்பதற்கு அரசின் செயலற்ற தன்மைதான் காரணம்! - ஶ்ரீனிவாஸ் பி.வி. இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர்

படம்
            கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக அரசு முழுக்கவே செயலிழந்துவிட்டதாக என நினைக்கத்தோன்றும் அளவுக்கு நிலை மோசமாக உள்ளது . பேஸ்புக்கில் மோடிபதவிவிலகு என எழுதும் அளவுக்கு மக்கள் விரக்தி நிலைக்கு வந்துவிட்டார்கள் . கோபம் கொள்வது சரி , செயல்வேகம் கொண்ட மனிதர்கள் இந்தியாவில் வேறு யாரும் இல்லையா ? என்றால் இருக்கிறார்கள் என உற்சாகமாக கூறலாம் . இளைஞர் காங்கிரசின் தேசிய தலைவர் ஶ்ரீனிவாஸ் பிவி , கட்சி பேதமில்லாமல் பலருக்கும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார் . நீங்கள் என்ன விதமான உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறீர்கள் ? நாங்கள் எங்களை தொடர்புகொள்ளும் நோயாளிகளிடம் பேசிவருகிறோம் . அவர்களை தனிமைப்படுத்தவும் , தேவையான தன்னார்வலர்களாக உள்ள மருத்துவர்களின் உதவிகளைப் பெற உதவுகிறோம் . நோயிலிருந்து மீண்டவர்களைப் பற்றிய பட்டியலைப் பெற்று அவர்களிடமிருந்து பிறருக்கு பிளாஸ்மா பெற உதவுகிறோம் . மேலும் மக்களுக்கு மருத்துவமனை படுக்கை , ஆக்சிஜன் சிலி்ண்டர்களையும் வழங்குகிறோம் . நாங்கள் ஆக்சிஜன் வழங்குபவர்களோடு தொடர்பில் இருக்கிறோம் என்வே , ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற முடியாத ஏழைகளுக்கு உ

பறவையால் அழகாகிறது வானம்! - இலவச மின்னூல் வெளியீடு

படம்
     இலவச மின்னூல் வெளியீடு.... விரைவில் .....       இந்த நூல் கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தவர்களைப் பற்றி குறிப்பிடுகிறது . இவர்களைப் பற்றி எழுதக்காரணம் , இதுபோன்ற உதவிகள் துயரமான காலத்தில் அனைவருக்கு்ம கிடைக்கவேண்டும் என்ற நோக்கம்தான் . தற்போதைய காலத்தில் அனைத்து மக்களுக்கும் இடையிலும் பிரிவினை வேலிகள் வேகமாக ஊன்றப்பட்டு வருகி்ன்றன . அதனை மனிதநேயமிக்க மனிதர்கள் தொடர்ந்து களைந்தெறிந்து மக்களுக்கு பாகுபாடு இன்றி உதவி வருவது மகிழ்ச்சியளிக்கிறது . இதில் குறிப்பிடப்பட்டவர்கள்தான் உயர்ந்த மனிதர்கள் என்பதல்ல . நம்மால் முடிந்த உதவியை பாகுபாடின்றி பிறருக்கு வழங்க முன்வருபவர்கள் அனைவருமே நாம் போற்றத்தகுந்தவர்கள்தான் . இந்தநூல் அதற்கான நம்பிக்கையை வாசிப்பவர்களுக்கு வழங்கும் என்று கருதுகிறேன் .  பொதுநலம் சார்ந்து உழைக்கும் பல்வேறு மனிதர்களை அறிமுகம் செய்த  நண்பர் திரு. இரா.முருகானந்தம் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம்.  

அரசுக்கு உதவிய துறவி நடத்தும் இலவச மருத்துவமனை! - லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை

படம்
              கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய இலவச மருத்துவமனை ! லடாக்கில் உள்ளது ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை . இதனை நடத்தி வருபவர் பௌத்த துறவியான லாமா தும்ப்ஸ்தான் சோக்யால் . இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் , செவிலியர்கள் என அனைவருமே சேவை நோக்கத்துடன் பகுதி நேரமாக செயல்படுபவர்கள் . இன்னும் ஒன்றை கூற மறந்துவிட்டேன் . இந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது . சோனம் நோர்பு நினைவு மருத்துவமனையை அரசு நடத்தி வந்தது . ஆனால் மாவட்ட நிர்வாகம் மெல்ல அதிகரித்து வந்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக சமாளிக்க முடியாத நிலை . உடனே லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க உதவி கேட்டனர் . அதற்கு துறவி லாமா ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்தார் . இங்குள்ள மருத்துவர்கள் போதாது . கூடுதலாக மருத்துவர்களை அழைத்து சிகிச்சை செய்துகொள்ளுங்கள் என்றார் . முதலில் இந்த மருத்துவமனையில் நோய் உள்ளதாக சந்தேகப்பட்டவர்களை தங்க வைத்து கண்காணித்தனர் . நோய் உறுதியானதும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்றிவிட்டனர் . இங்கு அதிக அறைகள் இல