நெ.1 சமூகத் தொழிலதிபர் மின்னூல் வெளியீடு! - அமேஸான் வலைத்தளம்
அன்பு நிறை நண்பர்களுக்கு, வணக்கம். நான் முதலில் முத்தாரம் பொது அறிவு வார இதழில் ஸ்டார்ட்அப் மந்திரம் என்ற தொடரை எழுத தொடங்கினேன். அப்போது பிரதமர் மோடியின் அரசு, ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தை தொடங்கியிருந்தது. இத்திட்டத்தின் கீழ் நிறைய நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் எப்போதும் அரசு மிக நிதானமாக அனுமதிகளை பரிசீலித்து செம்மையாக பணியாற்றியதில் பல்வேறு நிறுவனங்கள் காணாமல் போயின. நான் அந்த தொடரை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழை ஆதாரமாக கொண்டே எழுதினேன். அப்போது இணையத்தில் பல்வேறு வலைத்தளங்களை தேடி தகவல் சேகரிக்க யோசிக்கவில்லை. இதழை வேகமாக முடிக்கவேண்டிய டெட்லைன் நெருக்கடி வேறு. என்னளவில் நான் எழுதிய தொழில்சார்ந்த முதல் தொடர் அது. ஏறத்தாழ எழுதி முடித்தபிறகு பார்த்தால் படுமோசமான எழுத்தாகவே தென்பட்டது. அதற்குப் பிறகுதான், குங்குமத்திற்காக வணிகம் சார்ந்து எழுத ஆசிரியர் கே.என்.எஸ் கேட்டார். ஆனால் பிஸ்னஸ் இந்தியா நிருபர் எழுதிய தமிழக தொழிலதிபர்கள் பற்றிய நூலைப் படித்ததும் புரிந்துவிட்டது. என்னால் தொடருக்கான தகவல்களை திரட்ட முடியாது. எனக்கு தொழில்சார்ந்து எழுதும் திறமை கிடையாது என ஆசிரியரிடம் சொல்லிவி