இடுகைகள்

சொத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வி, மனநலன் ஆராய்ச்சிக்கென தானமளிக்க தொடங்கியுள்ள தொழிலதிபர்கள்!

படம்
  Graeme hart rank group க்ரீம் ஹார்ட் தலைவர், ரேங்க் குழுமம் வயது 58 நியூசிலாந்து க்ரீம் ஹார்ட் இன்றைக்கு பல்வேறு பொருட்களை அடைத்து விற்கும் பேக்கேஜிங் பொருட்களை விற்கலாம். ஆனால், அவருக்கு ஒருகாலத்தில் பள்ளியில் படிக்கும்போது, பள்ளிப்படிப்பை தொடரமுடியாத பொருளாதார சூழ்நிலை இருந்தது. தற்போது பால் பாக்கெட், குடிநீர் புட்டிகள், காகிதம், அலுமினிய தாள் ஆகியவற்றை தயாரித்து வழங்கிவருகிறார். இவரின் சொத்து மதிப்பு 8.8 பில்லியன் டாலர்களாக உள்ளது.  அண்மையில் ஸ்டார்ஷிப் எனும் குழந்தைகள் மருத்துவமனைக்கு ஹார்ட், அவரது மனைவி ராபின் ஆகியோர் இணைந்து 3.8 மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளனர். அந்த மருத்துவமனை தொடங்கி 32 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த மருத்துவமனைக்கு கிடைத்த தனிநபர் நன்கொடையில் இதுவே அதிகம். கிடைத்த நிதியில், தீவிரமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை பராமரிக்கவும், செவிலியர்களுக்கு பயிற்சிகளை அளிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டு, ஹார்ட் தம்பதியினர் 10 மில்லியன் டாலர்களை ஒடாகோ பல்கலைக்கழகத்திற்கு வழங்கினர். ஆக்லாந்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரிக்கு 28.2 மில்லியன்

தொழிலதிபரான மனைவி சொத்தை அபகரிக்க திட்டம் போடும் கணவர்!

படம்
  மணி மணி ஜேடி சக்ரவர்த்தி, பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் மணி படத்தின் இரண்டாவது பாகம். இந்த படத்தைப் புரிந்துகொள்ள முதல் பாகத்தை பார்ப்பது நல்லது. இல்லையெனில் முதல் நான்கு நிமிடங்களுக்கு போடும் காட்சிகளைப்பார்த்தால் கூட போதும்தான்.  ஆன்ட்டி ஜெயசுதா நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். அவரிடம் போஸ், சக்ரவர்த்தி என இருவர் வேலை செய்கிறார்கள். அங்கு புதிதாக ஒரு பெண் வந்து வேலை கேட்கிறார். சக்கரவர்த்தி அவரின் அழகில் மயங்கி வேலைக்கு பரிந்துரை செய்கிறார். அந்த பெண் வந்தது முதலே சக்ரவர்த்தி மீது பிரியமாக இருக்கிறார். ஜெயசுதாவின் சொத்தை அபகரிக்க அவரது கணவர் சுப்பாராவ் முயல்கிறார். அதற்கு ரவுடி ஒருவரை அணுகுகிறார். அவர்தான் அலாவுதீன். சொத்தில் ஐம்பது சதவீதம் எனக்கு கொடுத்தால், ஜெயசுதாவை கொல்வதாக வாக்கு கொடுக்கிறார். இதற்கிடையில், சக்ரவர்த்தியால் பாதிக்கப்பட்ட பிரம்மானந்தம் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வெளியே வருகிறார். இவர், சக்ரவர்த்தியைக் கொல்ல முயல்கிறார். இப்படி பல்வேறுகதைகள் நடக்கின்றன.  படத்தில் நாயகர்கள் என்று சொன்னால் பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் ஆகியோரைத்தான் சொல்ல வேண்டும். இரண்

தனது குடும்ப சொத்தை மீட்டு சிதறிய குடும்பத்தை ஒருங்கிணைக்கும் நாயகன்!

படம்
  சர்தா புல்லோடு  வெங்கடேஷ் , நக்மா, சங்கவி  தனது அம்மாவை வேசி என சொல்லி அப்பாவிடம் இருந்து பிரித்து அவரை குடிநோயாளியாக்கி, தங்கையை பணி மனுஷியாக்கும் அத்தையை பழிவாங்கும் நாயகனின் கதை.  மேலே சொன்ன விஷயங்களை சீரியலுக்கு பொருத்தமாக வைக்கலாம். ஆனால் படத்திற்கு கதையாக வைத்து எடுத்தால் எப்படியிருக்கும்? கண்றாவியாகவே இருக்கும். மாற்றமே இல்லை. அதேபோல்தான் இருக்கிறது. கொஞ்சம் ஆசுவாசமாக இருக்க சங்கவி, நக்மாவின் கிளுகிளு நடனம் உதவுகிறது.  தெலுங்குபடங்களில் நாயகியை ஸ்டாக்கிங் செய்து காதலிக்கும் வம்பு பண்ணும் நாயகன் கூடவே அவரது மாமியாரையும் பாலியல் சீண்டல்களை செய்து ஆண்மையை நிரூபிப்பது வழக்கம். இதை நகைச்சுவை என நினைத்து செய்கிறார்கள். ஆனால் சண்டாளமான காட்சியாக வந்துவிடுவது வாடிக்கை. இதிலும் மாமியார் மஞ்சுளாவுக்கு அப்படியான காட்சிகள் ஒன்றல்ல இரண்டை வைத்திருக்கிறார் இயக்குநர். தெலுங்கில் இரு நாயகிகளை இடுப்பில் வைத்து ஆடுவது, அத்தை, அத்தை பெண்கள் இருவர் என த்ரீசம், ஃபோர்சம் செய்வதெல்லாம் உண்டு. கண்களைக் கட்டும் காம வித்தைகள் அவை.  கோட்டா சீனிவாசராவ், சத்ய நாராயணா என இரு நடிகர்கள் நன்றாக நடித்திருக்கிற

காவல்துறைக்கு மாற்றாக பணியாற்றும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவன காவலர்கள் - அதிகரிக்கும் குற்றங்கள்

படம்
  பிங்கர்டான் நிறுவன பாதுகாப்பு காவலர்கள் அமெரிக்காவில் தனிநபர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு நிறுவனங்கள்! -   நம்பிக்கையிழந்து தடுமாறும் காவல்துறை 2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி, ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரை இனவெறி காரணமாக கொன்றார். இதற்கு அன்றைய அதிபர் ட்ரம்ப் தொடங்கி வைத்த வெறுப்புவாதம், இனவெறி, நிறவெறி என பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நடைமுறையில் காவல்துறையில் சேர்ந்த ஆட்கள் கூட காவல்துறையில் இப்படித்தான் நிலைமையா என பணியை விட்டு வேகமாக விலகி அடுத்தவேலைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதம் பேர் இப்படி காவல்துறைக்கு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பின்னாளில் விலகி விட்டதாக ஆராய்ச்சி அமைப்புகள் தகவல் கொடுக்கின்றன. பிலடெல்பியா, லாஸ்ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் காவல்துறைக்கு குற்றங்களை தடுக்க போதுமான அதிகாரிகள் இல்லை.இதனால் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை, வல்லுறவு ஆகியவை அதிகரித்து வருகின்றன. பிலடெல்பியாவில் ஏடிஎம் கொள்ளை அடிக்கப்பட்டு ஆறுமணிநேரங்களுக்கு பிறகு காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அரசு காவல்துற

நோயாளிகளைக் கொன்று வாழ்வில் உயர்ந்த மருத்துவர்!

படம்
  மருத்துவத்துறையில் நிறைய தொடர்கொலைகாரர்கள் உண்டு. இவர்களை அடையாளம் கண்டு தடுப்பது மிக கடினம். தடுப்பதற்குள் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிடும். பிணக்கூராய்வு செய்து உண்மையை அறிந்தகொள்ள வேண்டும். இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர். இரண்டாம் உலகப்போர் சமயம் ஊக்கத்துடன் செயல்பட்டு 500 பேரை கொன்றார். உண்மையில் இப்போது கூறியுள்ளது கூட தோராயமான எண்ணிக்கைதான். உண்மையான எண்ணிக்கை அல்ல. ஃபிரெட், 1946ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். நல்ல படிப்பாளி. விளையாட்டு வீரரும் கூட. எப்போதும் தன்னைப் பற்றிய பெருமிதத்தில் அலைந்த ஆள். எனவே, நெருங்கிய நட்பு அமையவில்லை. லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதல் முறை விண்ணப்பத்து தோற்றுப்போனவர். இரண்டாவது முறை வெற்றி பெற்று மருத்துவப்படிப்பு படித்தார். தனிமையாக வகுப்பறைக்கு வந்து படித்தவர், பதினேழு வயதான பிரைம்ரோஸ் ஆக்ஸ்டோபி என்ற தனது ஜூனியர் பெண்ணை மணம் செய்தார். 1966ஆம் ஆண்டு மணம் செய்தவருக்கு, 1967ஆம் ஆண்டு மகள் பிறந்தாள். 1971ஆம் ஆண்டு மகன் பிறந்தான். 1974ஆம் ஆண்டு தொடங்கி மருத்துவப் பயிற்சி செய்யத் தொடங்கினார். தனது சக மருத்துவர்கள், நோயாளிகளிடம் ப

ஒருவர் எதற்காக முதலீடு செய்யவேண்டும்?

படம்
  முதலீட்டின் தேவை 1 ஒருவர் எதற்காக முதலீடு செய்யவேண்டும்? நாம் இந்த கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்பாக, ஒருவர் முதலீடு செய்யவில்லை என்றால் அவரின் நிலை என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். தோராயமாக நீங்கள் மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதில் ரூ.30 ஆயிரத்தை வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து, பொருட்கள் வாங்குவது, மருத்துவ சிகிச்சை   மேலும் பல செலவுகள் என்ற வழியில் செலவழிக்கிறீர்கள். சம்பளத் தொகையில் மீதமிருப்பது ரூ. 20 ஆயிரம் ஆகும். இதுதான் உங்களின் மாதச் சம்பளத்தில் மீதமாகும் உபரித்தொகை.   எளிமையாக விளக்குவதற்காக, தற்போதைக்கு உங்களின் வருமான வரியை விட்டுவிடுவோம். 1.        இப்போது நாம் சில அம்சங்களை யூகித்துப் பார்ப்போம். 2.        உங்கள் நிறுவனத் தலைவர் கருணையோடு ஆண்டுக்கு பத்து சதவீத அளவுக்கு சம்பளத்தை உயர்த்துகிறார். 3.        விலைவாசி ஆண்டுக்கு எட்டு சதவீதம் அளவுக்கு உயர்ந்து வருகிறது. 4.        உங்களுடைய தற்போதைய வயது 30. ஐம்பது வயதில் வேலையில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளீர்கள். உங்களிடம் ஓய்வுக்குத் தேவையான ப

செத்தும் பிழைத்து வந்து எதிரிகளை அடித்து நொறுக்கும் அதிசாகச நாயகன்! யமுடிக்கி மொகுடு - சிரஞ்சீவி, ராதா, விஜயசாந்தி

படம்
  யமுடிக்கி மொகுடு சிரஞ்சீவி, ராதா, விஜயசாந்தி இயக்கம் - ராஜ் பினி செட்டி தமிழில் அதிசயப்பிறவி என்ற ரஜினிகாந்த் நடித்த படம் என நினைக்கிறேன். அதைத்தான் தெலுங்கில் ரீமேக் செய்து சிரஞ்சீவி அட்டகாசமாக நடித்து படமாக்கியிருக்கிறார்கள்.  சென்னையில் வாழும் காளி என்ற ரௌடிக்கும், சட்டவிரோத தொழில் செய்யும் இரு பணக்கார ர்களுக்கும் நேரும் பிரச்னைதான் படத்தில் வரும் முதல் பகுதி. இதில் பணக்கார ர்கள் விரோதிகளாக இருந்து பிறகு நண்பர்களாகி காளியை லாரி மூலம் விபத்துக்குள்ளாக்கி கொல்கிறார்கள். பிறகு, காளியின் ஆன்மா எமலோகம் சென்று தனக்கான நீதியைப் பெற்று திரும்ப வந்து எதிரிகளை அழிப்பதுதான் கதை.  இன்னொருபுறம், கிராமத்தில் பெரும் சொத்துள்ளவரின் வாரிசு, பாலு. இவரது சித்தப்பா. அதாவது பாபாய். பாலுவை பயந்தாங்கொள்ளியாக வைத்துக்கொண்டு அவரது சொத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். பாலுவின் அம்மா பெரிய வீட்டில் இருந்தாலும் வேலைக்காரி போல வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் இறந்துபோன காளியின் ஆன்மா பாலுவின் உடலுக்குள் புகுந்தால் எப்படி இருக்கும்? அதேதான். ரவுசுதான். கூடவே அப்பிராணி பாலுவுக்கு பாவாடை தாவணியில் வ

சொத்துக்கு ஆண்வாரிசே ஒரே வழி! கடிதங்கள் - கதிரவன்

படம்
  நேருவை மறக்கும் ஊடகங்கள் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உங்கள் பெற்றோரை கேட்டதாக கூறவும் . இன்று மழை சற்று விட்டுவிட்டு பெய்தது . மழை காரணமாக ஊரில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டுப்போகும் . ராயப்பேட்டை அலுவலகத்தில் இன்டர்நெட் போய்விட்டது . நேற்று காந்தியும் ஜவகரும் என்ற நூலைப் படித்தேன் . வெ . சாமிநாதசர்மா எழுதிய நூல் . நேருவுக்கும் காந்திக்குமான ஒற்றுமை வேற்றுமைகளை 34 பக்கங்களில் எழுதி தொகுத்து இருந்தார் . இந்த ஆண்டு நேருவின் 132 ஆவது பிறந்தநாள் அமைதியாக கடந்துபோயிருக்கிறது . இந்துத்துவ அரசு தாக்குதல் , மிரட்டல் காரணமாக நேரு பற்றி பேசுபவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர் . சில ஊடகங்கள் மட்டுமே நேரு பற்றிய கட்டுரைகளை அச்சிடுகின்றனர் . இந்து ஆங்கிலம் நாளிதழ் , தனது ஞாயிறு நாளிதழில் இணைப்பிதழான மேகஸினில் தொடர்ச்சியாக நேரு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது . அதைப் படித்தேன் . நேரு புரட்சிகாரரா இல்லையா என்பதே மையப்பொருள் . கட்டுரையில் நிறைய விஷயங்கள் இல்லை . நூல் ஒன்றிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்ட கட்டுரை . இன்று வாட்ஸ்அப் படித்துவிட்டு வியாக்கியானம் பேசுபவர்கள் அ

பன்னீர் சோடா வாங்கித்தரும் பாக்கியத்தை அருளிய எழுத்தாளர்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
              ஆண் வாரிசுதான் எல்லாமே ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா |? நேற்று குங்குமம் டாக்டர் இதழை பீடிஎஃப்பாக படித்தேன் . ஹோமியோபதி பற்றிய கட்டுரையைப் படித்தேன் . நின்றுபோன டாக்டர் இதழ் மீண்டும் தொடங்கப்பட்டு வருவது சந்தோஷமான விஷயம் . அறையில் வெப்பம் கூடிவருவதால் , மொட்டைமாடியில் சற்றுநேரம் இருந்துவிட்டு வந்தால்தான் தூங்கவே முடிகிறது . நாங்கள் ஜூன் மாத நாளிதழுக்கான வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டோம் . பாடத்திட்டம் சார்ந்து எழுதும் ஆட்களைக் கண்டுபிடித்து வேலை சொல்லி எழுதி வாங்குவது கடினமாக உள்ளது . என்னுடைய மடிக்கணினி சீராக இயங்குவதில்லை . லினக்ஸ் இயக்குமுறை என்பதால் அதில் நேரும் பிரச்னைகளை விளக்கிக் கூறவும் முடியவில்லை . எழுத்து வேலைகள் தேங்கிவிட்டன . இனி இந்த வேலைகளை க்ளவுட் முறையில்தான் செய்து சேமித்துக்கொள்ள வேண்டும் . அண்மையில் எனக்கு பள்ளிக்கால நண்பர் ஒருவர் போன் செய்து பேசினார் . அவருக்கு இரண்டாவதாகவும் பெண் பிள்ளை பிறந்திருக்கிறது . ஆதங்கமும் , கோபமுமாக பேசினார் . எனக்கு அவருக்கு எந்த முறையில் ஆறுதல் சொல்லுவது என்றே தெரியவில்லை . அமைதியாக க

எதிரியை கொன்று குடும்பத்தை ஒன்றுசேர்க்கும் போலீஸ் அண்ணன், திருடன் தம்பி! மாத்தோ பெட்டுக்கோக்கு - பாலைய்யா

படம்
  மாதோ பெட்டுக்கோக்கு பாலைய்யா, ரம்பா, ரோஜா, சுஜாதா மற்றும் உங்களின் அபிமான நட்சத்திரங்கள்.  இயக்கம்  - கொடண்டராமி ரெட்டி  இசை - மாதவப்பெடி சுரேஷ்  கதை - பார்கவ் தயாரிப்பு நிறுவன கதை இலாக்கா 1995இல் வெளியான படம். அதைவிட பழைய காலக்கதையைக் கொண்டுள்ளது. ஒரே ஆறுதல் பாலைய்யா இரண்டு வேடங்களை போட்டு நம்மை குஷிப்படுத்துவது மட்டுமே.... அர்ஜூன் ஐபிஎஸ் அதிகாரி. அநியாயம் என்றால் காழ்ச்சி பாரேஸ்தா கொடுக்கா என பாயும் குணம் கொண்டவர். இவருக்கான இன்ட்ரோவே, வல்லுறவு செய்ய முயலும் இன்ஸ்பெக்டரை போட்டு அடித்து பிளந்து ஏறக்கட்டுவதுதான். அடிக்கிற காட்டு அடியில் சம்பவ இடத்திலேயே வல்லுறவு இன்ஸ்பெக்டர் ஏறத்தாழ கோமாவுக்கு போய்விட்ட மாதிரிதான். அப்போதுதான் உயரதிகாரி வந்து அர்ஜூனைத் தடுக்கிறார். அந்த உரையாடலில் அர்ஜூன், எனக்கு சீதாபுரம் காவல் நிலையத்தில் பதவி கொடுங்கள் என்கிறார்.  இது ஒரு பாலைய்யாவின் சீரியஸ் கதை. அதாவது அண்ணன், இன்னொரு பாலைய்யாவின் பெயர் கிட்டய்யா. இவருக்கு போங்கு வேடங்களை போட்டு திருட்டு, கொள்ளையடிப்பதுதான் ஒரே வேலை.  யாருக்கு யார் ஜோடி என்று சொன்னால் படம் பார்த்த திருப்தி தங்களுக்கு கிடைத்துவிட