இடுகைகள்

ஐஎஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாமிய நாடாக மாற்றப்பட சிரியா நாடு சிதைக்கப்படுகிறது! - சமர் யாஸ்பெக்கின் நூல்

படம்
                பயணம் சிரியாவின்  சிதைந்த இதயத்தை நோக்கி சமர் யாஸ்பெக் தமிழில் ஶ்ரீதர் ரங்கராஜ் சிரியா நாட்டிற்குள் மூன்றுமுறை சென்று வந்த பத்திரிகையாளரும் சிரிய நாட்டவருமான சமர் யாஸ்பெக் என்ற பெண்மணியின் களப்பணி அனுபவங்கள்தான் நூலாகியிருக்கிறது . சிரியாவில் எப்படி ஜனநாயக ஆட்சி மலராமல் இஸ்லாமிய குழுக்கள் பார்த்துக்கொள்கின்றன , உலக நாடுகள் போரை எப்படி ஊக்குவிக்கின்றன , இதனால் அங்கு அழியும் சுன்னி - ஷியா மக்களின் வாழ்க்கை , அரசுப்படைகளின் தீவிரமான வன்முறை என பல்வேறு விஷயங்களை நெஞ்சை உருக்கும் எழுத்துக்களின் வழியாக பேசுகிறார் எழுத்தாளர் . ஐஎஸ்ஐஎஸ் குழுக்கள் , நூஸ்ரா முன்னணி , அல்ஹார் என பல்வேறு மதவாத குழுக்கள் கூட்டணி அமைத்து வெளிநாட்டு வீரர்களை உள்ளே கொண்டு வந்து சுதந்திர குடியரசு படைகளைக் கொன்று அரசு படைகளோடு உள்நோக்கத்தோடு போராடுவதும் , வென்ற பகுதிகளில் சிறுபான்மையினரான கிறிஸ்துவர்கள் , அலாவித்துகளை அடித்து விரட்டுவதுமான காட்சிகள் திகிலை ஏற்படுத்துவன . மதவாத அமைப்புகள் எப்படி அறக்கட்டளை வழியாக மக்களின் வாழ்க்கைக்குள் புகுந்து அவர்களை கட்டாய இஸ்

ஈரானின் வெளிநாட்டு படைகளை வழிநடத்தியவர் க்வாசிம் சோலெய்மானி!

படம்
the print ஈரான் படைத்தலைவர் க்வாசிம் சோலெய்மானி, பாக்தாத் விமானநிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டு உள்ளார். கார் மீது கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் கார் முழுவதும் எரிந்துபோனது. சொக்கப்பனையாக எரிந்து உயிரை விட்ட இவரது இடத்தில் இவருக்கு அடுத்தபணி நிலையில் இருந்த இஸ்மாயில் கானி நியமிக்கப்பட்டுள்ளார். ஈரானில் நாற்பது ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதார தடை அச்சுறுத்தல்களையும் தாங்கி நின்ற நம்பிக்கையான ஆளுமை இவர். சிரியாவில் அதிபர் பசார் ஆசாத்தின் பின்னே ஈரானின் படைகள் நின்றதால், அமெரிக்க படைகள் பெரும் உயிரிழப்பைச் சந்தித்து  வந்தன. 1980இல் ஈராக்குடன் நடந்த இஸ்லாமிய குடியரசு தொடர்பான போர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர் க்வாசிம் சோலெய்மானி. 2003ஆம் ஆண்டு வரை க்வாசிம் யாருக்கும் தெரியாமல் தன் உத்தரவுகளை இட்டு ஏராளமான அமெரிக்கர்களை கொன்று கொண்டிருந்தனர். பின்னர்தான் அமெரிக்க உளவுப்படை, க்வாசிமை முக்கியமான தளபதி என அடையாளம் கண்டு அவரை கொல்வதற்கான முன்தயாரிப்பு வேலைகளை முடுக்கிவிட்டது. அரசியலுக்கு பலரும் இவரை அழைத்தனர். ஆனால் தனக்கு ராணுவ விஷயங்களே போதும் என்று

பாகிஸ்தான் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது

படம்
scroll.in புல்வாமாவில் 43 இந்திய ராணுவ வீரர்கள் தற்கொலைத் தாக்குதலில் பலியாகியுள்ளனர். இதற்கு நாடெங்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி முன்னாள் வீரர் லியோடெனன்ட் ஜெனரல் டிஎஎஸ் ஹூடா கூறுகிறார். ஐஎஸ் தீவிரவாதக்குழு காஷ்மீரில் வளர்ந்து வருகிறதா? நான் அப்படி யோசிக்கவில்லை. அவர்களிடம் அவ்வளவு வலுவான கட்டமைப்பு கிடையாது. தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது, லஷ்கர் இ தாலிபா, ஹிஸ்புல் முஜாகிதின் ஆகிய அமைப்புகளே காரணம். ஐஎஸ் அல்லது அல் கொய்தா தீவிரவாத அமைப்புகள் இத்தாக்குதலில் இருக்கும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. கடந்த ஆண்டு காஷ்மீரில் வளர்ந்து வரும் பிரச்னைகளைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதனைக் கொஞ்சம் விளக்குங்களேன். நீங்கள் இன்னும் காஷ்மீர் பிரச்னையில் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் சேரும் அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டுமல்ல, கடந்த ஆண்டும் அதிகளவிலான பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதை இந்தியா இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில