இடுகைகள்

மனித உரிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இனவெறிக்கு எதிராகவும், சமூகநீதிக்காகவும் உழைத்தவர் - மிச்செல் பாச்லெட்

படம்
      1,000 × 667             மிச்செல் பாச்லெட் சிலி நாட்டில் இரண்டு முறை அதிபராக இருந்து பல்வேறு சீர்திருத்தங்கள் செய்தவர். அண்மையில் ஐ.நா அமைபின் மனித உரிமை அமைப்பில் இருந்து பதவி ஓய்வு பெற்றார். தனது பணிக்காலம் முடியும் முன்னர் சீனாவின் ஷின்ஜியாங் நகரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மிச்செலின் பதவிக்காலம் அதிகாரப்பூர்வமாக நிறைவு பெறும் சில நிமிடங்கள் முன்னதாகத்தான் அவர் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகிறது. மிசெல் சிலி நாட்டின் அரசியல்வாதி என்பதோடு, எதிர்ப்புகளைப் பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படாமல் செயல்படும் அதிகாரியும். கூட. அப்படித்தான் 2020ஆம் ஆண்டு இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மக்கள் அரசால் பாகுபாடாக பிரிக்கப்பட்டு அவர்கள் துயரப்படக்கூடாது என்ற அக்கறையும் கரிசனையும் இருந்ததே வழக்கு தொடுக்க காரணம். இதற்கு இந்திய அரசியல்வாதிகள் இதெல்லாம் எங்கள் உள்நாட்டு விவகாரம் என சப்பைக்கட்டு கட்டி பேசினார்கள். மி

சிறையில் கொல்லப்பட்ட ஸ்டேன்சாமி!

படம்
ஸ்டேன்சாமி, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டு மத்திய அரசின் அமைப்புகளால் கைது செய்யப்பட்டார். மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் தனது 84 வயதில் காலமாகியுள்ளார். பல்வேறு நோய்களால் வதைபட்டு தவித்தவருக்கு தேவையான உதவிகளை அரசு அளிக்காமல் அலைகழித்த விவகாரங்கள் இப்போது வெளியாகத் தொடங்கியுள்ளன.  பாதிரியாரான ஸ்டேன் சாமி, பழங்குடி மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வந்தவர். நோய்களால் அவதிப்பட்டு வந்தவரை விசாரணை என அலைகழித்து சிறையில் தள்ளி தேவையான வசதிகளைக் கூட செய்து தராமல் மத்திய அரசு படுகொலை செய்துள்ளது. மனித உரிமைகளுக்காக போராடியவர், சிறையில் இறந்துபோனது பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவின்  கௌரவத்திற்கும் மதிப்புகளுக்கும் பாதகமான செய்தியாகவே வரலாற்றில் இடம்பெறும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புலனாய்வு முகமை, மும்பை உயர்நீதிமன்றம் என அரசு அமைப்புகள் தனி மனிதருக்கு எதிராக அநீதி இழைத்துள்ளதாகவே அனைத்து ஊடகங்களும் இப்போது கூறிவருகின்றன.  தீவிரவாத தடுப்புச்சட்டம் என்ற பெயரில் ஸ்டேன்சாமி எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு இற

தேச பாதுகாப்பு சட்டம் என்பது பசுக்கொலைகளை உள்ளடக்கியது அல்ல! முன்னாள் நீதிபதி கோவிந்த் மாத்தூர்

படம்
            கோவிந்த் மாத்தூர் , முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் , தேர்தல் ஆணையத்தின் மீது கொரோனாவை பரப்பிய காரணத்திற்காக வழக்கு பதியவேண்டும் என்று கூறியுள்ளதே ? நீங்கள் நீதிமன்றம் இயங்கும் விதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் . நீதிமன்றம் சொல்லும் ஒவ்வொரு வாக்கியங்களையும் ஆராய்ந்தால் கடினமாகவே இருக்கும் . நீதிமன்றங்கள் இப்படி கூறுவது இயல்பானதுதான் . இதனை தலைப்புசெய்தியாக ஊடகங்கள் மாற்றுகின்றன . ஆனால் இதனால் முக்கியமான விஷயங்கள் மக்களின் கவனத்திற்கு வராமல் போகின்றன . நீதிபதிகள் தங்கள் வரையறைகளைத் தாண்டி நடந்துகொள்கிறார்கள் என்று புகார்கள் கூறப்படுகின்றனவே ? உயர்நீதிமன்றம் இப்படி நடந்துகொள்வதாக தெரிந்தால் உடனே உச்சநீதிமன்றத்தை அணுகலாம் . அதில் எந்த தவறும் இல்லை . நீதிமன்றங்கள் நடந்துகொள்வதற்கான விதிமுறைகள் உள்ளன . தவறுகள் கண்டறியப்பட்டால் அவை மெல்ல சரிசெய்யப்படுவது உறுதி . பெருந்தொற்று காலத்தில் நீதிமன்றத்தின் செயல்பாடு எப்படியிருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள் ? அவர்களின் பணி என்ன ? அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளைக் காப்பதுதான

நாங்கள் எந்த மதத்தையும் குறிப்பிட மதமாற்றச்சட்டத்தை உருவாக்கவில்லை! பிரிஜேஷ் பதக்

படம்
              பிரிஜேஷ் பதக் நீதித்துறை அமைச்சர் உத்தரப்பிரதேசம் மாநில அரசு கொள்கையை மசோதாவாக கொண்டு வந்து விவாதிக்காகமலேயே சட்டமாக மாற்றியது ஏன் ? விதான் சபா இப்போது நடைபெறவில்லை சட்டவிரோத மதமாற்ற செயல்பாடுகள் அதிகரித்து வந்தன . இது இப்படியே தொடர்ந்தால் சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாறும் கலவரங்கள் ஏற்படும் என்பதால் அரசு உடனடியாக சட்டமாக கொண்டுவந்துவிட்டது . அப்படி அரசுக்கு என்னவிதமான புள்ளிவிவரங்கள் கிடைத்தன என்பதைச் சொல்லமுடியுமா ? நான் உங்களுக்கு அதுபற்றிய சரியான தகவல்களைக் கொடுக்க முடியாது . மதமாற்றம் தொடர்பான சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகின . பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருவதை ஊடகங்கள் வெளிப்படுத்தின . இதுபோன்ற நிகழ்ச்சிகளால் குற்றங்கள் அதிகரித்து வந்தன . எனவே கட்டாய மதமாற்ற நிகழ்ச்சிகளை உடனடியாக நிறுத்த அரசு முயன்றது . நீங்கள் கொண்டு வந்துள்ள சட்டம் குறிப்பிட்ட மதத்தைக் குறி வைப்பதாக பயம் எழுந்துள்ளதே ? சோர் கி தாதி மெய்ன் டின்கா என்று இந்தியில் சொல்லுவார்கள் . இதுபற்றி பயப்படுபவர்கள்தான் , சட்டவிரோத மதமாற்றங்களை செய்து வருகின்றார்கள

நான் உளவாளியாக விரும்பவில்லை! - அலெக்ஸ் யங்கர், முன்னாள் தலைவர் எம்16 அமைப்பு

படம்
         அலெக்ஸ் யங்கர் முன்னாள் எம்16 தலைவர் நீங்கள் உளவாளியாக விரும்பினீர்களா? ரகசிய உலகில் பணியாற்ற வேண்டும் என்று எப்போதும் நான் நினைக்கவில்லை. என் வழியில் இந்த வாய்ப்பு வந்தது என்று சொல்லலாம். தொழில் வாழ்க்கையில் தனியாக வாழ வேண்டியிருக்கும் அல்லவா? வழக்கத்திற்கு மாறான வாழ்க்கையைத்தான் நான் வாழ்ந்து வந்தேன். 30 ஆண்டுகளில் அது இயல்பாகிவிட்டது. வேலைக்காக தனிமைப்படுத்தப்பட வேண்டி இருந்தது. இப்படிப்பட்ட ஆட்களுக்கு இடையில் நெருக்கமான உறவு இருந்தது. உங்கள் குடும்பத்தினரிடம் நீங்கள் உண்மைகளை சொல்லியிருக்கிறீர்களா என் குழந்தைகளிடம் சரியான நேரம் வரும்போது சொல்லமுடியும் என்று நம்புகிறேன். மற்றபடி அனைவரிடமும் இதுபற்றி பேசுவது கடினமானது. நீங்கள் திரைப்படங்களில் காணும் அறமில்லாத சூழ்நிலை வேறு. உண்மையில் அமைப்பு, அதிலுள்ள மனிதர்கள், நமது மதிப்புகள் எப்போதும் இப்பணியில் மாறுவதில்லை. நீங்கள் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியுள்ளீர்கள். அமெரிக்கா அங்கு, அமைதிக்கான ஒப்பந்தம் சார்ந்து செயல்பட்டுள்ளது. இங்கு அங்கு தாலிபன்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையை எப்படி பார்க்கிறீர்கள்? இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும

தாய்மொழியை மறக்கும் திபெத் மாணவர்கள்!

படம்
சீன அரசு திபெத் பகுதியை தன்னுடைய பகுதியாக சொந்தம் கொண்டாடி வருகிறது. திபெத் மாணவர்களுக்கு இருமொழி முறையில் கல்வி கற்பித்து வருகிறது. இதில் பெரும்பாலும் தாய்மொழியை விட மாண்டரின் மொழியைக் கற்றுத்தர ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்குள்ள தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு திபெத்திய தாய்மொழியை விட மாண்டரின் மொழியைக் கற்றுத்தர சீன அரசு முயன்று வருவதை மனித உரிமைகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஜிங் பிங் தலைமையில் சீனாவில் நடந்து வரும் ஆட்சி, தேசியவாதத்தை  தீவிரமாக வலியுறுத்துகிறது. இதன் விளைவாக, திபெத் பகுதிகளில் சிறுபான்மையினருக்கான உரிமைகள் சட்டம் திரும்ப ப்பெறப்பட்டது. இருமொழி கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டது. அங்கு மூன்று வயதிலிருந்து குழந்தைகளுக்கு பள்ளிகளில் சீனமொழியை பயிற்றுவிக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் நாட்டை ஒரே நாடாக ஒருங்கிணைக்க முடியும் என அரசு நினைக்கிறது. 2010-12 காலகட்டத்தில் திபெத்தின் கிங்கெய் பகுதியில் சீனமொழி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.  ஆனாலும் அரசை எதிர்த்து நிற்கமுடியவில்லை. பின்னர், பள்ளிகளில் அனைத்து பிரிவுகளிலும் சீனமொழியை கொண்ட

பத்திரிகையாளர் மீது ஒடுக்குமுறை! - நைஜீரியாவில் நடக்கும் அநீதி

படம்
நைஜீரியாவைச்சேர்ந்த பத்திரிகையாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ஓமோயெலே சோவோரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நைஜீரியத் தேர்தலிலும் போட்டியாளராக இருந்தார். ஆகஸ்ட் 3 ஆம் தேதி நாடு தழுவிய ரிவல்யூசன் நவ் என்ற போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார். உடனே அரசின் மாநில சேவைகள் துனை சோவோரேவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டும் சிறையில் இருந்து விடுவிக்க அரசுக்கு மனம் வரவில்லை. அரசு இப்போராட்ட அழைப்பை தன்னைக் கவிழ்க்கும் முயற்சியாக பார்க்கிறது. ஆகஸ்ட் எட்டாம் தேதி, சோவோரோவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 45 நாட்கள் அனுமதி கொடுத்தது. உடனே வெகுண்ட சுதந்திர ஊடகங்கள் அமைப்பு, ஐ.நா அமைப்பிடம் சோவோரோவை விடுவிக்க மனு கொடுத்தது. அவரைக் கைது செய்தது மனித உரிமை மீறல் என்று இந்த அமைப்புகள் புகார் தெரிவித்தன. அரசு ஒருவரைக் கட்டம் கட்டிவிட்டால் சும்மா விடுமா? 45 நாட்கள் கழிந்தபின்னர் அவரை விடுவிக்க வேண்டுமே? உடனே இணைய மோசடி, பண மோசடி வழக்குகளை சோவோரே மீது பதிந்தது. சோவோரே, சகாரா ரிப்போர்டர்ஸ் என்ற இணைய பத்திரிகையை 2006 முதல் நடத்தி வந்தா

இறப்புக்காக பிராத்தியுங்கள்- நைஜீரிய பெண்களின் அவலநிலைமை!

படம்
நைஜீரியாவைச் சேர்ந்த அதாராவுக்கு பதினேழு வயதானபோது நடந்த சம்பவம், அவரது வாழ்க்கையை மாற்றியது. அவரிடம் பேசிய பெண், லிபியாவில் வேலைவாய்ப்பு உள்ளது என்றார். இவர் மிகவும் சிரமப்பட்டு, அங்கு சென்றபோதுதான் 4 ஆயிரம் டாலர்களுக்கு விற்கப்பட்டிருப்பது தெரிந்தது. அங்கு பாலியல் தொழில் செய்ததோடு, அவரது எஜமானியோடும் உடலுறவு கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டது. பின்னர் அவர் ஐஎஸ் படையின் பாதாள சிறையில் உடலுறவுக்கான அடிமையாக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு லிபியா படையினரால் மீட்கப்பட்டுள்ளார். தற்போது, உலக அகதிகள் அமைப்பு மூலம் நைஜீரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர், காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். காரணம் அவரது வீட்டில் பெற்றோரின் கட்டற்ற வன்முறை அதாராவால் தாங்க முடியாமல் இருந்தது. காப்பகத்திலும் உணவு, சுகாதார வசதிகள் குறைவுதான். ஆனால் அவருக்கு வேறு என்ன வழி இருக்கிறது? நைஜீரிய ஊடகங்கள் வேலை என்ற பெயரில் கடத்தப்படும் பெண்களைப் பற்றி பரபரப்பான செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் இம்முறையில் மீட்கப்படும் பெண்களின் நிலைமை பற்றி கள்ள மௌனம் சாதிக்கின்றன. அரசும் இதில் பெர

கஜகஸ்தானில் குழந்தைகளுக்கு நேரும் அநீதி!

படம்
கஜகஸ்தானில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கடுமையாக வன்முறைக்கும் புறக்கணிக்கும் உள்ளாவதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் கூறிவருகிறது. நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகள் கஜகஸ்தானில்  வன்முறைக்கு இலக்காவதோடு, குடும்பத்தைச் சந்திக்கவும் வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த மித்ரா ரிட்மன். அக். 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் 27 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை நேர்காணல் செய்த தில் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது. கஜகஸ்தான் நாட்டிலுள்ள 19 மாநில காப்பகங்களில் மனநிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் 2 ஆயிரம் குழந்தைகள் வாழ்ந்து வருகின்றன. இக்குழந்தைகளுக்கு சில மருந்துகளைக் கொடுத்து மயக்கமுறச்செய்து அவர்களை மனநல மருத்துவமனைகளுக்கு பணியாளர்கள் அழைத்துச் சென்று அழைத்துவிடுகின்றனர். இவர்களுக்கு சிசோபெரெனியாவுக்கு அளிக்கும் மருந்துகளை அளிப்பதுதான் பிரச்னை. இம்மருந்து அச்சிறுவர்களை 24 மணிநேரத்திற்கு தூக்கத்திலேயே வைத்திருக்கும் சக்தி கொண்டது. இங்கு வளரும் குழந்தைகளை பணியாளர்கள் தாக்குவது இயல்பாக இரு

குற்றவாளிகள் ஆக்கப்படும் சிறுவர்கள்!

படம்
குழந்தைகளைக் கொடுமைப்படுத்தும் ஈராக் காவல்துறை! தீவிரவாதம் என்ற பெயர் வந்தாலே மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்தியும் தவறாமல் வந்துவிடும். காரணம், தீவிரவாதம் மக்களைச் சாராமல் தனியாக உருவாவதில்லை. இதற்கு என்ன காரணம்? அரசின் திட்டங்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாததும், குறிப்பிட இனவெறுப்புடன் மக்கள் நடத்தப்படுவதும்தான். ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளை ஈராக் அரசு கைது செய்து சிறையில் சித்திரவதை செய்துவருவதை மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. “குழந்தைகள் மீதான அரசின் இந்த நடவடிக்கையின் தாக்கம் அவர்களின் வாழ்க்கை முழுவதும் தொடரும் அபாயம் உள்ளது” என்கிறார் மனித உரிமை கண்காணிப்பகத்தின் குழந்தைகள் உரிமை இயக்குநரான ஜோ பெக்கர். குழந்தைகளை கைகளைக் கட்டி கேபிள், பிரம்புகள் மூலம் அடித்து ஐஎஸ் தொடர்பை வலுக்கட்டாயமாக ஏற்கச்செய்கின்றனர். நீதிபதி முன் நிற்கவைக்கும் முன்னரே, குற்றத்தை ஏற்கவில்லையென்றால் மீண்டும் சித்திரவதைகளைத் தொடங்குவோம் என போலீஸ் சிறுவர்களை எச்சரிக்கிறது. அப்புறம் உண்மை எப்படி வெளியே வரும்? நம் ஊரைப்போலவேதா