நாளைய நாயகர்கள் - கார்டியன் நாளிதழ் தொகுப்பு
நாளைய நாயகர்கள் பெண்களுக்கான அரசியல் பங்கேற்பு உரிமை - எம்பாம்பரா உகாண்டா நாட்டில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், போட்டியிடுபவர் நாற்பது ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள முசெவானி. அவர் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் அனைவரும் ஆண்கள். பெண்கள் கிடையாது. ஒரே ஒரு பெண் மட்டுமே, தன் உடல், பாலினம் மீதான அவதூறுகள், திட்டமிட்ட கேலி கிண்டல் ஆகியவற்றைக் கடந்து போட்டியிடுகிறார். அவர்தான் நம்முடைய நாயகர். வழக்குரைஞர் எம்பாம்பரா. உகாண்டா நாட்டில் அரசியல் என்பது முழுக்க ஆண்களுக்கானது. அங்கு முசெவானிக்கு எதிராக போட்டியிடுபவர்கள் பலரும் ஆண்கள்தான். மொத்தம் எட்டுப்பேர். இதில் எம்பாம்பரா மட்டும்தான் பெண். எனவே, அவரை அரசியலில் முன்னேற பிற அரசியல்வாதிகளோடு உடலுறவு கொண்டார் என வதந்திகளை ஊடகங்கள் வழியாக இழிவான பிறவிகள் பரப்பி வருகிறார்கள். இதெல்லாம் எம்பாம்பராவை பாதிக்காமல் இல்லை. ஆனால், அவர்தான் அந்த நாட்டிலுள்ள பெண்களுக்கான முன்னோடி தலைவர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை என்பதை வலியுறுத்தி போராடி வருகிறார். பெண்களை உறுப்பினர்களாக கொண்ட கட்ச...