இடுகைகள்

மருந்து = நஞ்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை

படம்
  மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை நண்பர்களே, ஓமியோபதி முறையைப் பற்றி பேசுவது எனது சொந்த அனுபவம் மற்றும் வாசித்த சில ஆங்கில, தமிழ் மொழி நூல்களை மையமாக வைத்து மட்டுமே. எனவே, ஓமியோபதியை தேர்ந்தெடுக்கும்போது சரியான மருத்துவர் உதவியுடன் மருந்துகளை உண்ணுங்கள். வைட்டாலிட்டி என்பதை உயிர்சக்தி என மொழிபெயர்ப்போம். அதாவது, நாம் பிறக்கும்போது, நம் உடலை பாதுகாக்கும் சக்தி உடலோடு உருவாகிறது. இதுவே, பல்வேறு நோய்கள் வந்தாலும் கூட அதில் பாதிக்கப்பட்டு மீண்டு வருவதற்கு காரணமாக உள்ளது. இந்த சக்தி நோய்கள் வரும்போது பாதிக்கப்படுகிறது. அதை தீர்க்கும் முயற்சியில் செலவாகிறது என்று சொன்னாலும் சரிதான். உயிர்சக்தி என்பது ஒருவரின் ஆயுளை தீர்மானிக்கிறது. ஒவ்வாமை பிரச்னை என்பதை ஒருசமயம் மறந்து நூடுல்ஸில் நிலக்கடலை போட்டு இறுதியாக முட்டையை மேலே ஊற்றி ஆப்பாயில் போல வைத்து சாப்பிட்டேன். உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. உடலுக்கு ஒரு உணவுப்பொருள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அதை வெளியேற்ற இரு வழிகள் உண்டு. வாந்தி, பேதி. இரண்டுமே இரவு வேளையில் ஏற்பட்டது. பிறகு, அதையொட்டி ஒருவாரம் காய்ச்சல் வந்ததில் ஒவ்வாமைக்கான சித்த...

மருந்து = நஞ்சு ஹோமியோபதி மருத்துவம் பற்றிய அனுபவங்கள்

      மருந்து = நஞ்சு ஹோமியோபதி மருத்துவம் பற்றிய அனுபவங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஹோமியோபதி மருத்துவம் புழக்கத்தில் உள்ளது. ஒப்புநோக்கில், தெற்கை விட வடக்கில் ஹோமியோ மருத்துவர்கள் அதிகம். இதற்கு காரணம், ஆங்கில மருத்துவர்கள் அங்கு குறைவு. அவர்களை ஏனோ அரசு சரியான சம்பளத்தில் நியமனம் செய்யவில்லை. அரசின் அடிப்படை நோக்கமே அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதுதானே? மக்களுக்கு உதவ வேண்டும் என்பது அவசியமா என்ன?  நாட்டின் ஆட்சித்தலைவரே போலி அறிவியலை மனமுவந்து ஊக்குவிக்கும்போது, அலோபதி பின்தங்குவதில் ஆச்சரியமென்ன? சமுதாய மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளில் ஒன்றிய அரசு கொடுக்கும் நிதி குறைந்துவிட்டது. எனவே, தமிழ்நாடு அரசு மட்டுமே நிதி கொடுத்து குறைந்த மருத்துவர்களை வைத்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சிகிச்சை செய்கிறார்கள். அடிப்படை தேவைகளுக்கான நிதியை கோவில்களைகட்ட, சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களை இடிக்க, மதக்கலவரங்கள் செய்ய வடக்கு தேசம் பயன்படுத்துகிறது. அதேபோக்கு, தெற்கிலும் தொடங்க அச்சாரம் ஆந்திரத்தில் போடப்பட்டுள்ளது. அடிப்படையாக நாம் தெரிந்துகொள்ள வேண்டி...