இடுகைகள்

கு.ப.ரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உரையாடல்களை சிறப்பாக அமைத்த கு.ப.ரா! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என். சிவராமன் அவர்களுக்கு, வணக்கம்.  நான்கு மாதங்களுக்குப் பிறகு உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி. பள்ளி தொடங்கியதும் எங்களுக்கு தினசரி வேலைகளின் அழுத்தம் கூடிவிடும்.நாங்கள் செய்து வரும் நூல்களின் தொகுப்பு வேலைகள் படு சுணக்கமாகவே நகருகின்றன. தினசரியில் தொடர்கள் எழுதக்கூடாது என்பது பொறுப்பாசிரியரின் உத்தரவு. இதனால் நூல்களை புதிதாக எழுதி தொகுக்கவேண்டியுள்ளது. இதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. நூல்களை விற்பதற்கு ஏற்ப தயாரிக்க அதிக மெனக்கெடல் தேவை. பல நல்ல ஐடியாக்களை கூட தினசரி இதழில் அதிக தூரம் பயன்படுத்த முடியவில்லை.  ஒருவகையில் அதனை அந்தளவேனும் பயன்படுத்த முடிகிறது என்பதே மகிழ்ச்சிதான். நேருவின் போராட்டகால சிந்தனைகளில் விடுபட்ட சில அத்தியாயங்களைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். கு.ப.ராவின் வேரோட்டம் என்ற குறுநாவலைப் படித்தேன். கதையை நகர்த்திச்செல்லும் கருவியாக உரையாடல்கள் நன்றாக அமைந்துள்ளன.  பொதுமுடக்க காலத்தில் கிடைத்த நேரத்தில் அசுரகுலம் குற்றங்களின் பின்னணி பற்றிய நூலை மட்டுமே எழுத முடிந்தது. மருத்துவம் தொடர்பாக ஏதாவது நூல்களைப் படிக்கவேண்டும். விரைவில் இந்த ஆண்டிற