இடுகைகள்

நவீனச்சிற்பி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேசத்தந்தையின் உண்மை, வலிமை, மனிதநேயத்தை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்! - ஜவாகர்லால் நேரு

படம்
                நியமன நாள் நமது நியமன நாளை விதி உருவாக்குகிறது . அதை இந்திய மக்களான நாம் சுதந்திரமான நாட்டை உருவாக்கி அதற்காக நிலைநிறுத்தவேண்டும் . இறந்த கால சம்பவங்கள் நாம் இப்போது செய்யவிருக்கும் பல்வேறு செயல்களில் எதிரொலிக்கலாம் . நாம் இந்தியாவில் வாழும் வாழ்க்கையை வரலாறாக பிறர் எழுதுவார்கள் . இதில் திருப்புமுனை என்று முன்னர் கூறப்பட்டவையெல்லாம் இறந்த காலமாக மாறும் . விதி இயற்றப்படும் முக்கியமான தருணம் இது . ஆசியா மற்றும் உலகத்திற்கானது . கிழக்கில் புதிய விண்மீன் உதிக்கிறது . அதன் பின்னணியில் சுதந்திரம் மற்றும் நம்பிக்கை உள்ளது . நமது நம்பிக்கை ஏமாற்றப்படாதபோது , விண்மீன் அஸ்தமிக்கும் நிலை ஏற்படாது . நமது மக்களைச் சுற்றிலும் சோக மேகங்கள் இருந்தாலும் , வேறு பிரச்னைகளால் வாடி நின்றாலும் கூட நாம் பெற்றுள்ள சுதந்திரத்தைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளவேண்டும் . நாம் இந்த நேரத்தில் நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தேசத்தந்தை , சுதந்திரத்தை வடிவமைத்தவர் , நம்மைச்சுற்றி இருந்த இருளை நீக்கியவரை நினைவுகூரவேண்டும் . நாம் அவரைப் பின்பற்றாத மக்களாக இருந்தாலும் கூட அடுத்தடுத்த த