இடுகைகள்

கால வேட்டையர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டாவது முறையாக கால வேட்டையர்களைத் தடுக்கும் பத்திரிகையாளர் குழு - கால வேட்டையர்கள் - 2

படம்
              கால வேட்டையர்கள் நூலில் உள்ள இரண்டாவது கதை....... இதில், புதுமையான பகுதிகளை சுற்றிப்பார்க்க ஆர்வமுடையவர்களை டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று வரவேற்கிறது. அவர்களின் பின்புலங்களை விசாரித்து முடிந்தளவு தனிநபர்களாக இருக்கும்படி பார்த்து சுற்றுலாவிற்கு கூட்டிச்செல்கிறது. இப்படி செல்பவர்கள் எவரும் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதில்லை. இதுபற்றி புலனாய்வு செய்ய பத்திரிகையாளர் மீண்டும் மாறுவேடத்தில் சுற்றுலா பயணியாக செல்கிறார். அப்படி செல்லும்போது, பயணத்தில் புதுமணத்தம்பதியாக முதல் கதையில் பார்த்தோமே ஆர்வக்கோளாறு லௌரியும் இருக்கிறாள். அவளுக்கு அந்த பயண பின்னணி தெரியாது. ஆனால் ஒருமுறை பத்திரிகையில் டிராவல்ஸ் விளம்பரத்தை பார்க்கிறாள். அது வினோதமான அறிவிப்பாக இருக்கிறது. மேலும், அதுபற்றி டிராவல்ஸ் நிறுவனத்திற்கு செ்ன்று விசாரிக்கிறாள். அங்கு வயதான பெண்மணி தன்னுடைய மருமகள் பயணத்திற்கு சென்றாள். ஆனால் திரும்ப வீடு திரும்பவில்லை என புகார் கொடுத்தபடி நிற்கிறாள். இதுபற்றி விசாரிக்க முற்படுகையில் அவளை குள்ளர்களின் ஆட்கள் சூட்களில் கடத்துவதற்கு நெருங்குகிறார்கள். இதை அடையாளம் கண்ட லௌரி சாமர்

மனிதர்களின் மூளையில் உள்ள நியூரான்களைத் திருடி அவர்களை பைத்தியமாக்கும் வேற்றுகிரக குள்ளர்கள்- கால வேட்டையர்கள் - முத்து காமிக்ஸ்

படம்
        கால வேட்டையர்கள் முத்து காமிக்ஸ் சிவகாசி மெக்சிகோவில் நடைபெறுகிற கதை. அங்கு ஒரு பத்திரிகையாளர் பணியாற்றுகிறார். அவர் தனது நாளிதழுக்காக வேடிக்கையான கட்டுரை ஒன்றை எழுதுகிறார். அதன் விளைவாக அவருக்கு நேரும் ஆபத்துகளும் அது பிறரை எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை. புதிதாக திருமணமான ஜோடி இருவர், கடற்கரையில் வந்து தேனிலவைக் கொண்டாடுகிறார்கள். அப்போது புகைப்படம் எடுக்க மணற்குன்று ஒன்றை நோக்கிச் செல்கிறார்கள். அங்குதான் வினோதமான குள்ளர்கள் ஒருவரை பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். கணவன், அவர்களிடமிருந்து அந்த மனிதனை மீட்க உதவுகிறான். மீட்கப்படும் மனிதன்தான், பத்திரிகையாளர். அடுத்த சம்பவம் தேனிலவு தம்பதிகளுக்கு நடைபெறுகிறது. அதில் கணவனைக் கொல்லும் முயற்சி தோல்வியில் முடிகிறது. மனைவியை பத்திரிகையாளரை கடத்த முயன்று தோல்வியுள்ள குள்ளர்கள் கூட்டிச்சென்று விடுகிறார்கள். அப்புறம் என்ன கதை தொடங்கிவிட்டது. அந்த குள்ளர்கள் யார், எதற்கு பத்திரிகையாளரை குறிவைத்து தாக்கி கடத்த முயன்றார்கள், இதில் புதுமணத் தம்பதிகளை ஏன் குள்ளர்கள் குறி வைக்கிறார்கள் என்பதற்கான விடையை காமிக்ஸ் விவரிக்கிறது. இந