இடுகைகள்

காமெடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவை எரித்துக்கொன்ற நான்கு நபர்களை பழிவாங்க முயலும் பரதநாட்டிய மாஸ்டர்!

படம்
  செஸ்  திலீப், பாவனா, சலீம்குமார், அசோகன் விஜய் கிருஷ்ணன் பரதநாட்டியம் சொல்லித்தரும் பள்ளி நடத்துகிறார். அவரது அம்மா, அவனுக்கு அதை கற்பித்திருக்கிறார். அம்மா, காவல்துறையில் வேலை செய்யும் ஒருவரை விரும்பி இணைந்து வாழ்கிறார். திருமணம் செய்துகொள்வதில்லை. இது விஜய்க்கு வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் அவன் அம்மா வருத்தப்படுவாள் என எதையும் கூறுவதில்லை. அவனது பள்ளிக்கு பாவனா கல்லூரி மாணவி வருகிறாள். கல்லூரி ஆண்டுவிழாவில் ஆடும் பரதநாட்டிய பயிற்சிக்காக விஜய்யின் உதவியை நாடுகிறாள்.  அங்கு அவனிடம் பயிற்சி செய்து ஆடி கல்லூரியில் முதல் பரிசு வெல்கிறாள். அதோடு அவளுக்கு விஜய்யை பிடித்திருக்கிறது. இருவரும் சாதி, மதம், அந்தஸ்து பார்க்காமல் காதலிக்கிறார்கள். ஆனால் நாயகியின் தாத்தாவுக்கு அதெல்லாம் குறையாக தெரிகிறது. குறிப்பாக, விஜய்யின் அப்பா யாரென்று கேட்க அவனால் உண்மையைக் கூறமுடியவில்லை. இப்படியாக காதலி, கல்யாணம் என இரண்டுமே கனவு போல கலைந்து போகிறது.   படம் காதலைப் பற்றியதல்ல. பழிவாங்குவதைப் பற்றியது. விஜய்யின் அப்பா, மரணப்படுக்கையில் இருக்கும்போது அவனையும், மனைவியையும் அழைத்து எனது சொத்துகள் ஒரே மகனான உ

காதலியின் அண்ணன் காதலை ஒன்று சேர்க்கப் போராடும் நாயகன்!

படம்
  ஆடு மகாடுரா புஜ்ஜி தெலுங்கு சுதீர் பாபு, அஸ்மிதா சூட் அப்படியே தமிழில் மொழிபெயர்த்தால்... அவன் ஆம்பளடா புஜ்ஜி... என தலைப்பு வரும்.  தெலுங்கு படம்தான். ஆனால் தேவையில்லாத ரவுடிகள், சண்டை என்று இல்லாமல் நகைச்சுவையாக கொண்டாட்டமாகவே படம் பாதிக்கும் மேல் நகர்கிறது. படத்தின் முக்கியமான பாத்திரம் சித்து. இவனைப் பொறுத்தவரை வாழ்க்கை ஜாலியோ ஜிம்கானா என வாழ்ந்து வருகிறான். அனைவரிடமும் வம்பு செய்து மாட்டிவிடுவது, சக வயது பிள்ளைகள் தொடங்கி ஆசிரியர்கள், பள்ளிக்கு வெளியில் ஐஸ் விற்பவர் தொடங்கி யாரையும் விட்டு வைப்பதில்லை. இதனால் அவனது அப்பாவுக்கு மகனுக்காக அபராதம் கட்டுவதே தொழிலாக இருக்கிறது. கூடவே சித்துவை அடிக்க முடியாதவர்கள் அவனது அப்பாவி அப்பாவை அடித்துவிட்டு செல்கிறார்கள். வம்பு செய்யும் மகனின் பெயரை எங்கும் சொல்லாமல் வாழ்ந்து வருகிறார் அவனது அப்பா.  இந்த சூழலில் சித்து கல்லூரிக்கு செல்கிறான். அதுவும் கூட அவன் காதலிக்கும் இந்து என்ற பெண்ணுக்காகத்தான். அவன் காதலிக்கும் பெண்ணின் அண்ணன் செர்ரி, தனது தங்கையை காதலிக்க நினைப்பவர்களை அடித்து துவைக்கிற ஆள். அவனை டபாய்த்து தங்கை இந்துவை காதலிப்பதோடு, அத

நேசிக்கும் காதலியை, இன்னொருவருக்கு திருமணம் செய்துகொடுக்க கொடுக்க முன்வரும் காதலன்!

படம்
  சீகா ஃப்ரம் ஶ்ரீகாகுளம்  இயக்குநர் - eshwar அல்லரி நரேஷ், மஞ்சரி, ஷ்ரத்தா தாஸ், வேணு, எம்எஸ் நாராயணா நரேஷ் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு உடல் பலம் குறைவு என்றாலும் புத்திசாலித்தனமும் சமயோசிதமும் அதிகம். அதைப் பயன்படுத்தி கல்லூரியில் பெண் ஒருத்தியை வல்லுறவு செய்பவனை தடுக்கிறான். இப்படியானவன், அங்கு படிக்கும் பேரழகியான பெண்ணை பிளான் செய்து மடக்குகிறான். ஆனால் பிறகுதான் தெரிகிறது. அவளின் அப்பா ஊரிலேயே பெரிய ரௌடி என. உயிரு முக்கியம்ப்பா என முடிவெடுத்து காதலெல்லாம் வேண்டாம். உனக்கு உங்கப்பாவே நல்ல பையனா பார்ப்பாரு கட்டிக்கோ என சொல்லி ஜகா வாங்குகிறான். ஆண் காதலிப்பது பிரச்னையில்லை. அந்த ஆணை பெண் காதலிக்கத் தொடங்கினால்தானே கதை தாறுமாறாக ட்விஸ்ட் ஆகிறது. அதுதான் இங்கும் நடக்கிறது. அந்தப்பெண் கட்டினால் நரேஷைத்தான் காதலிப்பேன் என அடம் பிடிக்கிறாள். இறுதியாக நரேஷ் தனக்கு நிச்சயம் முடிந்து கல்யாணம் ஆகும்வரை ஊரில் வந்து இருந்தால் போதும். தான் அவனை விட்டுவிடுகிறேன் என கூறுகிறாள். அது எப்படியான பொறி என தெரியாமல் நரேஷ் அவளுடைய ஊரான கர்னூலுக்கு செல்கிறான்.  அங்கு என்ன நடந்தது, நரேஷூ

ஜோம்பி தனது கடந்தகாலத்தை தானே டிடெக்டிவ்வாகி கண்டறியும் கதை!

படம்
              ஜோம்பி டிடெக்டிவ் கொரிய தொடர் ராகுட்டன் விக்கி மருத்துவக் கழிவு கொட்டிக்கிடக்கும் இடத்தில் இருந்து ஒரு உருவம் எழுகிறது . அதுதான் நாயகன் காங் மின்கோ . எழுந்தவர் சிகரெட் பிடிக்கிறார் . வாயில் புகைவிட நினைத்தால் வயிற்றில் உள்ள ஓட்டை வழியாக புகை வெளியே செல்கிறது . அப்போதுதான் அவர் வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை உணர்கிறார் . அங்கிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் அதிர்ந்துபோ கிறார் . இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிர் வந்தால் உடல் சதைகள் எப்படி சிதைந்து கிடக்கும் . அப்படித்தான் அவர் உடல் முழுக்க பஞ்சர் ஒட்டியது போல சதைகள் கிழிந்து ஒ ட்டுப்போடப்பட்டது போல உள்ளன . சுருக்கமாக வாழும் பிணம் . அதாவது ஜோம்பி . அவருக்கு தான் யார் , பெயர் , ஆதார் எண் , வங்கியில் கொடுத்த பான் எண் , வீட்டு முகவரி என எதுவுமே நினைவில்லை . தான் யார் , எப்படி கொல்லப்பட்டோம் . ஏன் ஜோம்பி ஆனோம் என்ற உண்மையை மெல்ல கண்டுபிடிக்கிறார் . இந்த கதையை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்கள் . அடுத்த பாகம் தொடங்கி ஒளிபரப்பப்பட்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை . காங் சன்ஜ

ஆர்டர் செய்த ஹேர் ஆயிலுக்கு பதிலாக மும்பை கேங்ஸ்டரின் துப்பாக்கி பார்சலில் வந்தால்... ஹீரோ - தெலுங்கு

படம்
  ஹீரோ தெலுங்கு இசை ஜிப்ரான் இயக்கம் ஶ்ரீராம் ஆதித்யா   மகேஷ்பாபு குடும்பத்தில் இருந்து நடிக்க வந்திருக்கும் நாயகன் நடித்த படம். அர்ஜூன் சினிமா ஹீரோவாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அவரது நண்பர் சத்யா, ராப் பாடகர். அர்ஜூன் தனது வீட்டுக்கு அருகில் குடிவரும் சுப்புவை (நிதி அகர்வால்) வலுக்கட்டாயமாக காதலிக்கிறார். பின்னர் அவரும் வேறு ஆப்சனின்றி சம்மதிக்கிறார். சுப்பு, கால்நடை மருத்துவராக இருக்கிறார். எங்கே, அர்ஜூனின் அப்பா வேலை செய்யும் இடத்தில்தான். படம் தொடங்கி அரைமணிநேரம் ஜாலியாக செல்கிறது. அதற்குப் பிறகுதான் கதையே தொடங்குகிறது. அர்ஜூனுக்கு சினிமா ஹீரோவாகும் வாய்ப்பு தள்ளிப்போகிறபோது, தலைமுடி வேறு கொட்டுகிறது. இதை அவரது காதலியே சொல்லி வருத்தப்படுகிறார். இதனால், வெண்ணிலா கிஷோர் டிவியில் விளம்பரம் செய்யும் சீன ஹேர் ஆயிலை வாங்க ஆர்டர் செய்கிறார் அர்ஜூன்.  ஆனால், அவருக்கு வரும் பார்சலில் துப்பாக்கி இருக்கிறது. இதனால் பதற்றமாகும் நாயகன், அவரது ராப் பாட்டு நண்பனைக் கூட்டிக்கொண்டு வந்து நிலையை சொல்லுகிறார். ஆனால் அவர் அப்போதுதான் மதுபானக்கடையிலிருந்து வருவதால், துப்பாக்கி என்பதே

பேய்ப்படங்களை கேலி செய்யும் சிரிப்பே வராத படம் - இடியட் - ராம் பாலா

படம்
  இடியட் இயக்குநர் ராம்பாலா மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி செம்மனூர் ஜமீன், அவரது படைத்தளபதிகளால் நயவஞ்சகமாக கொல்லப்படுகிறார். கூடவே அவரது மனைவி, மகன், மகள் என எல்லோரும்தான்.அவர்கள் ஆவியாக வந்து தங்களைக் கொன்றவர்களின் வம்சாவளியை எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதே கதை. படம் பேய்ப்படமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பேய்ப்படங்களை கிண்டல் செய்வதுதான் படம் நெடுக நடக்கிறது. ஆனால் படத்தில் எந்த காட்சிக்கும் நமக்கு சிரிப்பே வருவதில்லை என்பதுதான் பேரதிர்ச்சி. ராசுக்கவுண்டர், அவரது மகன் சின்ராசு ஆகியோருக்கான உறவு காட்டப்படும்போது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனந்தராஜின் நடிப்பும், மிர்ச்சி சிவாவின் வசனக் காமெடிகளும்தான் முதல் பகுதியில் நம்மைக் காப்பாற்றுகிறது. பிற்பகுதி படம் முழுக்க சேனாபதி மனநல மருத்துவமனையில்தான் நடக்கிறது. இடியட் படம் பேய்ப்படங்களை கிண்டல் செய்கிற படம். எனவே, இது பயமூட்டும் பேய் படமாக உருவாகவில்லை. குறைந்தபட்சம் அப்படி கிண்டல் செய்கிற இயல்பில் பார்வையாளர்கள் சந்தோஷப்பட ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. திரையில் இருவர் இருக்கிறார்கள். எப்போதும் பேசிக்கொண்டே

போலி கொலையாளியைக் கண்டுபிடிக்கும் மர்ம கொலைகாரன்! தி மேன் ஃபிரம் டொர்னாடோ

படம்
  மேன் ஃபிரம் டொர்னாடோ இயக்கம் பேட்ரிக் ஹியூகெஸ் கெவின் ஹார்ட், வூடி ஹெரால்சன் நெட் பிளிக்ஸ் காமெடியை மையமாக கொண்ட சண்டைப்படம். குறிப்பிட்ட அழிவு ஆயுதத்தை தூண்டிவிட்டு அழிவு வேலையை செய்து காசு பார்க்க ஒரு கூட்டம் ஆசைப்படுகிறது. அதற்கு உதவும் கூலிப்படையைச் சேர்ந்த ஆள், மேன் ஃபிரம் டொர்னாடோ. இவர் நிறைய ஆட்களை சித்திரவதை செய்து விஷயங்களை கறப்பதில் வல்லவர் என இன்ட்ரோ கொடுக்கிறார்கள். ஆனால் அவர் சொல்லும் கதையும், நடந்துகொள்ளும் முறையுமே பலருக்கும் மூத்திரத்தை முட்டிக்கொண்டு வரச்செய்துவிடும் ரகத்தில் உள்ளது. இவரின் அடையாளத்தை இன்னொருவர் பயன்படுத்தி சிக்கலை ஏற்படுத்திவிட, மேன் ஃபிரம டொர்னாடோ கோபம் கொண்டு எவட்ரா நுவ்வு என துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு தனது ரெமுனரேஷனைத் தடுத்து ரெபுடேஷனைக் கெடுத்தவனை அழிக்க கிளம்புகிறார். படிக்க கதை சீரியசாக இருந்தாலும் படம் முழுக்க காமெடிதான். மேன் ஃபிரம் டொர்னாடோ , சீரியசான ஆள். பணம் சேர்க்கத்தான் கூலிப்படை வேலையை செய்கிறார். அதில் இடையில் புகுந்து கலாய்த்து காரியத்தை கெடுக்கும் ஆள். டெடி. இவர் ஜிம்மில் வேலை செய்யும் மார்க்கெட்டிங் ஆள். ஆனால்

மூன்று சகோதரர்களின் காதல் குளறுபடிகளின் கதை! காபி வித் காதல் - சுந்தர் சி

படம்
    பி வித் காதல் இயக்குநர் சுந்தர் சி இசை யு1   மூன்று சகோதரர்களின் காதல் வாழ்க்கை குளறுபடிகள்தான் கதை. இதில் மூத்த பிள்ளைக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் அவர் வேறு பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடத் தயங்காத ஆள். எந்த பெண் கிடைத்தாலும் சரி, பல் விளக்காமலேயே சேட்டு போல ஜிலேபி சாப்பிட நினைப்பவர். சரவணனுக்கு லிவ் இன் உறவில் காதலி இருக்கிறாள். ஆனால் அவள் பாப் பாடகர் ஒருவரைக் காதலித்து அவருடன் சென்று விடுகிறாள்.   இளையவன் கதிர். இவனுக்கு காதல் வாழ்க்கை அல்லது கல்யாண வாழ்க்கை எதாக இருந்தாலும் சரி தனக்கு லாபமாக அமையவேண்டும் என நினைப்பவன். தன்னை விரும்பும் தோழியின் காதலைக் கூட புரிந்துகொள்ளாமல் ஹோட்டல் கட்ட இடம் கிடைக்கும் என தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதிக்கிறான். மூத்தவர் ரவிக்கு இசை பேண்ட் வழியாக பெண் ஒருவர் அறிமுகமாகி உடலுறவு கொள்கிறார்கள். இந்த பெண்ணை அவரது தம்பி சரவணனுக்கு கல்யாணம் செய்துகொள்ள முடிவு எடுக்கிறார்கள். இது ரவியை சீண்ட அவர் கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறார். கதிருக்கு பார்த்த பெண் ஊருக்கு வரும்போது அவருக்கு ஊரைச் சுற்றிக்காட்ட, வெளியே கூட்டிச்செல்ல சரவ

ஒருதலைக்காதலில் இழுத்துவிடப்படும் பெருமாள் பக்தனின் நிலை! - நமோ வெங்கடேசா - வெங்கடேஷ், த்ரிஷா

படம்
    நமோ வெங்கடேசா - தெலுங்கு  விக்டரி வெங்கடேஷ், த்ரிஷா, பிரம்மானந்தம். முகேஷ் ரிஷி, அலி இயக்கம் சீனு வைட்லா   வெங்கட்ரமணா, ஹைதராபாத்தில் தனது சித்தப்பா குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தொழிலே கலை நிகழ்ச்சிகளை செய்வதுதான். இந்த நிலையில் வயசாகிறதே திருமணம் செய்யலாம் என நினைத்து ஜோதிடம் பார்க்கிறார்கள். ஆனால் ஜோதிடர் போட்ட சோளிகளில் ஒன்று எந்த பக்கமும் திரும்பாமல் நடுவில் நிற்கிறது. அதாவது கல்யாணம் நடந்தாலும் நடக்கும். இல்லையானாலும் சரி. வெங்கட்ரமணாவைப் பொறுத்தவரை அவர் பிறரை ஏமாற்றுவதில்லை. அவரும் ஏமாறுவதில்லை. இப்படி இருப்பவருக்கு பாரிசில் நிகழ்ச்சி நடத்த அழைக்கிறார்கள். அழைத்த ஆள் லேசுபட்டவரில்லை. ஆனால் அவரையும் வெங்கட் ரமணா எந்த கல்மிஷம் இல்லாமல் நடந்துகொண்டு பீதிக்குள்ளாக்குகிறார். பிரசாத் என்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வெங்கட் ரமணாவை தனது சொந்தக்காரப் பெண் காதலிப்பது போல மாயையை உருவாக்குகிறார். அதையும் வெங்கி நம்புகிறார். ஆனால் உண்மையில் அவர் காதலிக்கும் பெண் யார், அவர் யாரை விரும்புகிறார், பிரசாத்தின் பழிவாங்கும் திட்டம் நிறைவேறியதா என்பதை நகைச்சுவையாக சொல்ல