இடுகைகள்

இஸ்ரோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்ரோ - செய்த சாதனைகள் - இந்தியா 75

படம்
  இஸ்ரோ - சாதனைகளின் வரலாறு 1962  விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய கமிட்டி - இன்கோஸ்பார் அறிவியலாளர் சாராபாயால் உருவாக்கப்பட்டது.  1963 நவம்பர் 21  தும்பாவில் சவுண்டிங் ராக்கெட்டை தயாரித்து விண்ணில் ஏவினார்கள் 1969 ஆகஸ்ட் 15  இஸ்ரோ அமைப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.   1975 ஏப்ரல் 19 இந்தியாவின் முதல் செயற்க்கோளான ஆர்யபட்டா உருவாக்கப்பட்டு செலுத்தப்பட்டது.  1971 ஸ்ரீஹரிகோட்டாவில் ஷார் மையம் உருவாக்கப்பட்டது. தற்போது இதன் பெயர் எஸ்டிஎஸ்சி.  1977 ஜனவரி 1  செயற்கைக்கோள்களால் கிராமங்களிலும் டிவி ஒளிபரப்பு கிடைத்தது.  1979 ஜூன் 7  பூமியைக் கண்காணிக்கும் பாஸ்கரா என்ற சோதனை முறையிலான செயற்கைக்கோள்  விண்ணில் ஏவப்பட்டது.  1979 ஆகஸ்ட் 10 எஸ்எல்வி 3 முதல்முறையாக தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதுவும் சோதனை முறையிலான முயற்சிதான்.  1981 ஜூன் 19  ஏரியன் விண்வெளி ராக்கெட்டில் ஆப்பிள் என்ற தொலைத்தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள் ஏவப்பட்டது.  1987 மார்ச் 24 எஸ்எல்வி மேம்படுத்தப்பட்ட வடிவில் உருவாக்கப்பட்டு அறிமுகமானது.  1993 செப்டம்பர் 20 பிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிக்கப்பட்டு செலுத்தப்பட்டது

இஸ்ரோவின் வரலாற்றில் ஜனவரி 10!

படம்
1962ஆம் ஆண்டு தி இந்தியன் நேஷனல் கமிட்டி ஃபார் ஸ்பேஸ் ரிசர்ச் நிறுவனம், ஜவகர்லால் நேருவால் உருவாக்கப்பட்டது. பின்னாளில், இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் இதன் பெயர் இஸ்ரோ என மாற்றப்பட்டது. இப்படி மாற்றப்பட்ட ஆண்டு 1969. முதலில் இஸ்ரோவின் நோக்கம், செயற்கைக்கோள்களை ஏவி தகவல் தொடர்பை ஏற்படுத்துவதாகவே இருந்தது. பின்னாளில்தான் பல்வேறு ஆய்வுகளுக்காக விண்வெளியில் விண்கலன்களை ஏவத் தொடங்கியது. சந்திரயான், மங்கல்யான், ககன்யான் வரை இப்போது முன்னேறி வந்துள்ளது. ஜனவரி 10, 2017 அன்றுதான் விண்வெளியில் கேப்சூல் ஒன்றை அனுப்பி அதனை அங்கு பனிரெண்டு நாட்கள் வைத்திருந்துவிட்டு பின் பூமிக்கு திரும்ப வரச்செய்தனர். எஸ்ஆர்ஈ -1 என்ற விண்கல கேப்சூல் சோதனை மூலமே, விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்ற நம்பிக்கையை ஆய்வாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையில் பெற்ற வெற்றிதான். இனி எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களுக்கு அடிப்படையாக இருக்கப்போகிறது. ஆனால் இஸ்ரோ இப்போது சீனாவின் ஆப்போ நிறுவனத்தோடு சேர்ந்து செய்யும் ஆய்வுகள், திகைப்பை ஏற்படுத்தியுள்ளன. நாவிக் என

இந்தியாவின் ராக்கெட் பெண்மணி! - ரிது கரிதால் ஸ்ரீவஸ்தவா

படம்
  டாக்டர் ரிது கரிதால் ஸ்ரீவஸ்தவா மங்கல்யான் படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அதில், செவ்வாய் கோளுக்கு செல்லும் விண்கலத்தை பெண் விஞ்ஞானிகள் குழுதான் ஊக்கமுடன் வேலை செய்து குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்தும்.  இந்த குழுவில் முக்கியமான விஞ்ஞானிதான், ரிது கரிதாய் ஸ்ரீவஸ்தவா. விண்வெளி பொறியியல் படித்தவரான ரிது, 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று லக்னோவில் பிறந்தவர். எந்த மாநிலம் முன்னேறினால் நாடு முன்னேறும் என பிரதமர் மோடி சொல்கிறாரோ அந்த மாநிலத்தில் பிறந்தவர் ரிது.  சிறுவயதில் வானத்தைப் பார்த்தபடியும் நட்சத்திரங்களை எண்ணியபடியும் தனது நேரத்தை செலவழித்தவர் ரிது. லக்னோ பல்கலையில் எம் எஸ்சி இயற்பியல் படிப்பை நிறைவு செய்தார். இயற்பியலில் மேற்கொண்டு படித்து முனைவர் படிப்பையும் முடித்தார். பிறகு கேட் தேர்வு எழுதி பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சில் இணைந்தார். அங்குதான் விண்வெளி பொறியியல் படிப்பை படித்தார். பிறகு 1997ஆம் ஆண்டு இஸ்ரோவில் வேலைக்கு சேர்ந்தார்.  2012 ஆம் ஆண்டு மங்கல்யான் -1 திட்டத்தில் துணை செயல் இயக்குநராக பணி செய்தார்.  திட்டத்தை முழுமையாக மேற்பார்வை செய்வதோடு அதன் செ

விண்வெளியில் இந்தியாவின் யுரேகா சாதனைகள் ! இந்தியா 75

படம்
  இந்தியாவின் யுரேகா தருணங்கள்! இந்தியா 75 சிறந்த அண்டைநாடு இதற்கு இந்தியாவைத்தான் அடையாளமாக சொல்லவேண்டும். அண்மையில் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசை உருவாக்க பல்வேறு பிரயத்தனங்கள் செய்து முதலீடு செய்து கோட்டை விட்டாலும் அங்குள்ள மக்களின் வாழ்வாதார நம்பிக்கையாக இந்தியா இருக்கிறது. இருக்கும். 1971ஆம் ஆண்டு வங்கதேசம் விடுதலை பெறுவதற்கு இந்தியா உதவி செய்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இந்த விஷயத்தில் தீவிரம் காட்டி வெற்றி பெற்றார். அகதிகள் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் செல்வதற்கும் உதவினார். பாகிஸ்தானின் ராணுவ அத்துமீறல்கள் குறித்த உலக நாடுகளின் கருத்துகளையும் கவனப்படுத்தினார். சோவியத்துடன் ஒப்பந்தங்களை செய்தார். மதம் சார்ந்த நாடு என்பதை இந்தியா, தனது செயல்பாடுகளால் மாற்றியது என மேற்சொன்ன சம்பவங்களை வைத்து உறுதி செய்யலாம்.  இறுதியாக ஜெயம்! 1961ஆம் ஆண்டு கோவாவை போர்ச்சுகீசியர்களிடமிருந்து இந்திய அரசு மீட்டது. இதற்கு ஆபரேஷன் விஜய் என்று பெயரிட்டனர். இப்போராட்டத்தில் ஏழு ராணுவ வீர ர்கள் பலியானார்கள். இந்த வெற்றியின் மூலம் 450 கால ஐரோப்பியர்களின் காலனி ஆட்சி முழுமையாக முடிவுக்கு வந்தது. 36 ம

இமயமலையிலுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளக்கப்பட்ட வரலாறு!

படம்
              புத்தகம் புதுசு ! ஸ்பேஸ் லைப் மேட்டர் ஹரி புலக்கட் ஹாசெட் 699 குறைந்த ஆதாரங்களைக் கொண்ட நாட்டில் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வளர்த்தெடுப்பது எப்படி ? இந்தியா எந்த அடிப்படையும் இல்லாத இடத்தில் இருந்துதான் வானியல் ஆய்வுகளை நடத்தத் தொடங்கியது . இதன்விளைவாக கோலார் தங்க வயலில் காஸ்மிக் கதிர் சோதனை , ஊட்டியில் தொலைநோக்கி அமைத்தது , இப்படி இந்தியாவில் ஆய்வுகளை சிறப்பாக நடத்தி , வலிமையான அறிவியல் நிறுவனங்கள் எப்படி அமைக்கப்பட்டன என்பதை இந்த நூல் விளக்குகிறது தி ஹன்ட் பார் மவுன்ட் எவரெஸ்ட் கிரேக் ஸ்ட்ரோர்டி ஹாசெட் 699 இமயமலையிலுள்ள சிகரத்தை எப்படி அளவிடுகிறார்கள் , இதில் நேபாளம் , திபெத் ஆகிய நாடுகளின் பங்கு , பிரிட்டிஷ் காலத்தில் அங்கு வந்த ஆராய்ச்சியாளர்கள் அதனை எப்படி அளவிட்டனர் என்பது பற்றிய ஏராளமான தகவல்களை இந்த நூல் கொண்டுள்ளது . எ டேஸ்ட் ஆப் டைம் மோகனா காஞ்சிலால் 899 ஸ்பீக்கிங் டைகர் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தலைநகராக இருந்த நகரம் . இந்த நகரில் ஏராளமான கலாசார பன்மைத்துவம் கொண்ட குழுக

எனக்கு ஆர்சனிக் நச்சூட்டப்பட்டது பற்றி அரசு அமைப்புகள் அமைதியாக இருப்பது தவறானது! - இஸ்ரோ ஆலோசகர் தபன்மிஸ்ரா

படம்
              தபன் மிஸ்ரா இஸ்ரோ ஆலோசகர் 2017 ஆம்ஆண்டு மே 23 அன்று இஸ்ரோ நிறுவன ஆலோசகரான மிஸ்ரா , பெங்களூருவிலுள்ள நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றார் . அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட உணவில் ஆர்சனிக் நச்சு கலக்கப்பட்டிருந்தது . இப்படி மூன்று முறை அவரைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்ட்டது . மேலும் அவர் குடியிருந்த வீட்டில் வளாகத்திற்குள்ளும் பாம்புகள் விடப்பட்டன . கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பீதியில் வாழ்ந்துவருகிறேன் என ஊடகத்தில் கூறியுள்ளார் தபன் மிஸ்ரா . விஷத்தால் பாதிக்கப்பட்டவரான நீங்கள்மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே ? எனக்கு பைல்ஸ் பிரச்னை உள்ளது . எனது ஆசனவாயில் ரத்தக்கசிவு ஏற்பட்டது . அதற்கு மருந்துகளை தந்தார்கள் . ஆனால் அது கேட்கவில்லை . சந்திப்பு நிறைவுபெற்றதும் நான் அகமதாபாத் சென்றுவிட்டேன் . என்னால் நடக்கவே முடியவில்லை . இண்டிகோ விமானத்திலுள்ள பணியாளர்கள் எனக்கு உதவினர் . அடுத்தநாள் ஸைடஸ் மருத்துவமனைக்கு நான் சென்று சிகிச்சை பெற்றேன் . சிகிச்சை தவறாக அளிக்கப்பட்டிருந்தால் நான் உறுப்புகள் செயலிழந்து இறந்துபோயிருப்பேன் .   இது

இஸ்ரோவால் இத்துறையில் பெருகும் தேவையை தீர்க்க முடியாது! - கே.சிவன்

படம்
பிக்ஸாபே இஸ்ரோ மட்டும் ஆதிக்கம் செலுத்திவந்த விண்வெளித்துறையில் இனி தனியார் நிறுவனங்களும் பீடு நடை போடப்போகின்றன. அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஒப்பந்தங்களை இன்ஸ்பேஸ் என்ற நிறுவனம் கவனிக்கவிருக்கிறது. விண்வெளித்துறையின் செயலரும், இஸ்ரோ அமைப்பின் தலைவருமான கே.சிவனிடம் பேசினோம். இன் ஸ்பேஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினால் இஸ்ரோ அமைப்பின் பணிகள் பாதிக்கப்படாதா? அந்த அமைப்பு தனியார் அமைப்புகள் இஸ்ரோவுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களை கவனிக்கும். இதற்கென தனி இயக்குநர், குழு உருவாக்கப்பட உள்ளது. இந்த அமைப்பை தன்னிச்சையாக இயங்கும் அதிகாரத்தைக்கொண்டது. சந்திராயன் 3 திட்டம் என்னவானது? இந்த திட்டம் அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும். நாங்கள்முன்னர் அனுப்பிய ஆர்பிட்டர் செயல்பாட்டில் உள்ளதால், அடுத்து அனுப்பவிருக்கும் விண்கலனில் ஆர்பிட்டர் இருக்காது. லேண்டர், ரோவர் மட்டுமே இடம்பெற்றிருக்கும். 2022இல் விண்வெளி வீரர்களை விண்கலனில் அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்பாட்டுக்கு வருமா? பெருந்தொற்று காரணமாக ரஷ்யாவில் வீரர்களுக்கு கிடைத்த பயிற்சியும் நிறுத்தப்பட்டுள்ளது? பிரதமர் 75 ஆவது க

பிட்ஸ் எக்ஸ்ட்ரா - சந்திரயான் 2 புதிய தகவல்கள்!

படம்
பிட்ஸ் - சந்திரயான் 2  சந்திரயான் 2 விண்கலனில் மூன்று முக்கியப் பகுதிகள் உண்டு. ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகியவையே அவை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திற்கு அடித்தளமிட்ட டாக்டர் விக்ரம் சாராபாய் நினைவாக, லேண்டருக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சந்திரயான் 2 வுக்கான அல்காரிதத்தை முழுக்க இந்தியாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் எழுதி உருவாக்கி உள்ளனர். சந்திரயான் 1 போன்று இல்லாமல் சந்திரயான் 2 நிலவின் தரையில் சுமுகமாக இயங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லேண்டர் விக்ரம், ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் பிரக்யான் மூலம் பல்வேறு அறிவியல் சோதனைகள் செய்யப்படவிருக்கின்றன.  சந்திரயான் 2 இல் செயல்படும் ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஓராண்டு ஆகும். சந்திரயான் 2 நிலவின் தரைப்பரப்பை ஆராய்வதோடு அதன் சூழலையும் ஆராயும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்பிட்டர் வட்டப்பாதையில் நூறு கி.மீ. தள்ளி இருந்தாலும் லேண்டர், ரோவர் செய்யும் சோதனைகளை ரிமோட் முறையில் அறிய முடியும். சந்திரயான் 2 வில் உள்ள பல்வேறு ஆய்வுப் பொருட்கள் மூலம், நிலப்பரப்பு, நில அதிர்வு, கனிம

பிட்ஸ் - இஸ்ரோவின் சாதனைகள்!

படம்
இஸ்ரோ - சாதனைத் துளிகள் 1981ஆம் ஆண்டு, இஸ்ரோவின் ஆப்பிள் செயற்கைக்கோள் மாட்டுவண்டியில் வைத்துக் கொண்டுவரப்பட்டது. மோட்டார் வண்டிகளில் கொண்டு வரும்போது, அதிலுள்ள உலோகங்களோடு ஆன்டெனாவின் சிக்னல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கருதினர். 2013 ஆம் ஆண்டு இஸ்ரோ, செவ்வாயை ஆராய்வதற்கான விண்கலமாக மங்கல்யானை விண்ணில் ஏவியது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற இத்திட்டத்தின் செலவு 450 கோடி ரூபாய். 2008ஆம் ஆண்டு நிலவுக்குச் சென்ற சந்திரயான் 1, நிலவில் தடம் பதித்த நாடுகளில் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியாவுக்குக் கொடுத்தது. இஸ்ரோ கடந்த நாற்பது ஆண்டுகளாக செய்த பணிகளுக்கான செலவுத்தொகை, நாசாவின் ஓராண்டு பட்ஜெட்டில் அடங்கிவிடும். இஸ்ரோவின் வர்த்தக ராக்கெட் ஏவும் நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் (Antrix), 2008 ஆம் ஆண்டு இந்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்றது. 2016 -2019 வரையில் 239 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, 6,289 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.  இஸ்ரோ, பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சுபார்கோ தொடங்கியபிறகு ஆறு ஆண்டுகள் கழித்து தொடங்கப்பட்டது. இன்று இஸ்ர

நிலவுக்குச் செல்லும் தீவிரம் ஏன்?

படம்
சந்திரயான் சிறப்பிதழ்! நிலவுக்குச்செல்ல ஏன் இந்த அவசரம்? அமெரிக்கா அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு சென்று வந்த வரலாற்று நிகழ்ச்சி நடந்து அரைநூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்றும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்குச் செல்ல பேரார்வத்துடன் செயற்பட்டு வருகின்றன. இதற்கு என்ன காரணம்? பூமியைப் போல மற்றொரு மனிதர்கள் வாழும் சூழல் கொண்ட கோளைக் கண்டுபிடிப்பதுதான். இந்தியா நிலவை ஆராய முடிவெடுத்து சந்திரயான் -1 விண்கலனை விண்ணில் செலுத்தியபோது பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், நிலவின் பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததும்தான் விமர்சகர்கள் அமைதியானார்கள்.  சந்திரயான் 1 இல் வட்டப்பாதையைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மட்டுமே உண்டு. அமெரிக்கா, ரஷ்யா ஆகியோர் செலவழித்த தொகையில் பாதிக்கும் குறைவாக 386 கோடி ரூபாயை மட்டுமே இந்தியா கொண்டு புதிய கண்டுபிடிப்பை சாதித்தது. சந்திரயான் 2 இல் ஆர்பிட்டர், ரோவர், லேண்டர் ஆகிய சாதனங்களும் இடம்பெற்றுள்ளன. சோவியத் ரஷ்யா 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று லூனா 2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதுவே நிலவுக்குச் சென்ற முதல்

சந்திரயான் ஸ்பெஷல்!- நோக்கம் என்ன?

படம்
சந்திரயான் 2 ஏவப்பட்டதன் நோக்கம்! இஸ்ரோ நிறுவனம், சந்திரயான் 1யை விண்ணுக்கு அனுப்பி நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது உலக நாடுகள் நிலவை ஆராய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. காரணம், வெப்பமயமாதலால் பூமி பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. பூமியில் நீராதாரம் குறைந்து வருவதும், மக்கள் வாழ்வதற்கான இயற்கை வளங்கள் அரிதாகி வருவதும் முதன்மைக் காரணங்கள். இந்தியா, நிலவை ஆராய சந்திரயான் 2 வை அனுப்பி வைக்க 2018 ஆம் ஆண்டிலிருந்து  முயற்சித்து வருகிறது. ஆனால், தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக சந்திரயான் விண்ணுக்கு ஏவப்படுவது தள்ளி வைக்கப்பட்டு வந்தது. விண்ணில் ஏவப்பட்டு 52 நாட்களுக்குப் பிறகு நிலவின் தரைப்பரப்பில் சந்திரயான் 2 விண்கலம் இறங்கும். நாசா ஆய்வுக்கு அனுப்பிய விண்கலங்கள் ஈக்குவடார் பகுதியில் இறங்கின. சீனாவின் சாங் 4 விண்கலம் தெற்குத் துருவப் பகுதியில் இறங்கி நிலவின் மறுபுறத்தை சோதித்தது. இந்தியாவும் சீனாவின் வழியைப் பின்பற்றவிருக்கிறது. விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2, பதினாறு நாட்கள் பூமியின் வட்டப்பாதையை வலம் வரும்.

இந்தியாவின் ராக்கெட்டுகள் முன்னேறுவது அவசியம்!

படம்
எலன் மஸ்கின் ஸ்பேக்ஸ் எக்ஸ் ஃபால்கன் ராக்கெட், 28 டன்கள் பேலோடுகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டது. இதன் மூலம்தான் நாசா, விண்வெளி வீரர்கள் அடுத்த சில ஆண்டுகளில் நிலவுக்கு அனுப்பவிருக்கிறது. ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் மிக மெதுவாக செயல்பட்டு வருகிறது. இஸ்ரோ பாகுபலி என அழைக்கும் ஜிஎஸ்எல்வி எட்டு டன்களை மட்டுமே விண்ணுக்கு கொண்டு செல்லும் திறன் உடையது. இதனை வைத்துக்கொண்டு எப்படி 2022 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்புவீர்கள். இதே கேள்வியை டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், நடுப்பக்க கட்டுரையில் எழுப்பியிருந்தார். நிலவு கடந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் இன்னும் திறன் வாய்ந்த ராக்கெட்டுகளை கோருகிறது. ஆனால் இந்தியாவிடம் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி தாண்டி வேறெதுவும் சாத்தியமான ராக்கெட்டுகள் இல்லை. 2008 ஆம் ஆண்டு இலகுவான பிஎஸ்எல்வி ராக்கெட்டில் சந்திரயான் 1 விண்ணில் ஏவப்பட்டது. இதன் எடை 1380 கி.கிதான். பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரயான் 2, 3,850 கி.கி எடையில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. எஸ்எல்வி, ஏஎஸ்எல்வி எனும் ராக்கெட்டுகளை இஸ்ரோ ஆட்களே