இடுகைகள்

மொசாம்பிக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சட்டவிரோத வேட்டையைத் தடுக்க உதவும் மின் வாகனங்கள்!

படம்
  விலங்கு வேட்டையைத் தடுக்கும் மின்வாகனங்கள்! மொசாம்பிக் நாட்டின் தேசியப் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. 2021ஆம் ஆண்டுவரையில், இங்கு நடைபெற்ற சட்டவிரோத வேட்டைகளின் எண்ணிக்கை அதிகம்.  வனக்காவலர்கள் குழு, வேட்டைக் குழுக்களைத் தடுக்க இரவில் ரோந்து சென்றாலும் கூட நிலைமை மேம்படவில்லை.  இதற்கு முக்கியக் காரணம், வனக்காவலர்களின் பைக்குகள் தான்.  அவை இயங்கும்போது எழுப்பும் சத்தம் அதிகம்.  இதன் சத்தத்தை வைத்து வனக்காவலர்களின் நடமாட்டத்தை, வேட்டை கும்பல் எளிதாக அடையாளம் கண்டுகொண்டது. உடனே, தேசிய பூங்காவில் உள்ள பல்வேறு சதுப்புநிலங்கள், புதர்ப்பகுதிகள் ஆகியவற்றில் மறைந்து தப்பித்து வந்தனர்.  சாமர்த்தியமாக வன விலங்குக ளை வேட்டையாட, வேட்டை நாய்களையும் பயன்படுத்தினர்.  சத்தமின்றி பாதுகாப்பு ஆனால் இன்று வனக்காவலர்கள், சட்டவிரோத வேட்டையை வெற்றிகரமாக தடுத்து வருகிறார்கள்.  இதற்கு அவர்கள் கையாளும் இ பைக்தான் காரணம். ஸ்வீடனின் வாகன தயாரிப்பு நிறுவனம் கேக் (CAKE), வனக் காவலர்களுக்கு இ பைக்குகளை வழங்கியுள்ளது. இதன் காரணமாக, அதிக ஒலி எழுப்பாமல் வேட்டைக்காரர்களை பிடிக்க முடிகிறது. வன விலங்

புயல் பாதிப்பால் செக்ஸ் தொழிலுக்கு மாறும் மொசாம்பிக் மக்கள்!

படம்
மொசாம்பிக் நாட்டை இடாய் எனும் புயல் தாக்கியதால் பெரும் சேதம் விளைந்துள்ளது. கட்டிடங்கள் இடிந்து வாழ்வாதாரம்  சிதைந்துள்ளது. உள்ளூர் தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிபெற்று தராமல் தங்களை மட்டும் காப்பாற்றிக்கொண்டனர். இதனால் பாதிப்புக்குள்ளான பெண்கள் தங்கள் கற்பை விலைபேசி உயிர்வாழும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். அதுவும் ஒரு மூட்டை அரிசிக்காக. இடாய் தாக்கியுள்ள இடங்களில் பெண்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற தங்கள் கற்பையே இழக்க முன்வந்துள்ள அவலம் தவிர்க்கப்பட வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்கிழக்கு ஆசியப்பகுதி இயக்குநர் டேவா மாவ்ஹிங்கா கூறியுள்ளார். பெய்ரா, மணிகா, சோஃபாலா ஆகிய ஆகிய கிராமங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இதன் விளைவாக 1.85 மில்லியன் பெண்களும், குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் ஐ.நா மொசாம்பிக் அரசுடன் இணைந்த உணவு, குடிநீர் உள்ளிட்ட  தேவைகளை செய்ய முன்வந்துள்ளது. ஆனால் சுயநலவாதிகளான உள்ளூர் தலைவர்கள், அங்கு இடர்ப்பாட்டில் சிக்கி பட்டினியில் சிக்கிய பெண்களை தம் காமவெறிக்கு பலியாக்கி உள்ளனர். அங்குள்ள பெண் ஒரு