இடுகைகள்

பாப் பிஸ்வாஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வியைக் கற்கும் பெண்களே திருமண வயதைத் தீர்மானிக்கவேண்டும்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா? இன்று நான் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு நண்பர் சக்திவேலைப் பார்க்க சென்றேன். படம் பார்க்கலாம் என்றார். தினசரி மூன்று படங்களைப் பார்க்கும் சினிமா விரும்பி அவர். நான் உங்களுடன் பேசினாலே போதும் என்றேன். மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் மனிதர்.  திறக்கக்கூடாத கதவு - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். பேய்க்கதை. தியாகு என்பவர் கதையை சொல்கிறார். நல்ல ஆவி, அதை முடக்கும் கெட்ட ஆவி என கதை சுவாரசியமாக செல்கிறது. நண்பர் சக்திவேலிடம் சுவிசேஷங்களின் சுருக்கம் - லியோ டால்ஸ்டாய் எழுதிய நூலை படிக்க வாங்கி வந்தேன். நேரம் ஒதுக்கி படிக்கவேண்டும். மனம் முழுக்க வேலை பற்றிய அலுப்பு உள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை.  கணினி பழுதாகிவிட்டது. அதுவும் ஒருவகையில் நல்லதுதான். இப்போதுதான் நூல்களை ரிலாக்ஸாக படிக்க முடிகிறது.  நன்றி! அன்பரசு  11.12.2021 ------------------ அன்பு நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமா? வீட்டில் உள்ளோரையும் கேட்டதாக சொல்லுங்கள். சுவிசேஷங்களின் சுருக்கம் நூலை 50 பக்கங்கள் ப

தனது தவறுகளுக்கான விளைவை எதிர்கொள்ளும் பாப் பிஸ்வாஸ்! - பாப் பிஸ்வாஸ் - இந்தி

படம்
  பாப் பிஸ்வாஸ்  சுஜய் கோஸ் ஜீ5  பாப் பிஸ்வாஸ், என்பவர் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கோமாவிலிருந்து எழுகிறார். அவருக்கு தனக்கு மனைவி இருக்கிறார். டீனேஜ் பெண் ஒருவர், பள்ளி செல்லும் சிறுவன் என இருவர் பிள்ளைகள் என்பதே அவருக்கு நினைவில் இல்லை. உண்மையில் அவர் யார், எதனால் அவருக்கு பழைய விஷயங்கள் மறந்து போயின் என்ற விஷயங்களை ரத்தம் தெறிக்க நாம் தெரிந்துகொள்வதுதான் பாப் பிஸ்வாஸின் முக்கியமான கதை.  2012 இல் வெளியான கஹானி படத்தில் வரும் பாத்திரம்தான் பாப் பிஸ்வாஸ். அவரைப் பற்றிய ஸ்பின் ஆப் படம்தான் பாப் பிஸ்வாஸ். இவர் எப்படி காவல்துறைக்கு ஆதரவாக கொலைகாரராக மாறினார் என்பதை படம் பேசுகிறது. அப்பாவியாக இருக்கும் அபிஷேக் எப்படி கொலை செய்யும் ஆளாக மாறுகிறார் என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை யாருக்கும் எந்த பிரச்னையும் தராத  மனிதர். ஆனால் அவர்களுக்கு தெரியாத வாழ்க்கையில் அவர் கூலிக்கொலைகாரர். அதுவும் போதைமருந்தான ப்ளூ மாத்திரையை விற்கும் கும்பலுக்கும் காவல்துறைக்குமான சம்பந்தம் தெரியாதவர். அந்த விவகாரம் தெரிந்தபிறகு அவரது வாழ்க்கையில் இழப்புகள்தான் கூடுகின்றன.  அவருக்கு பின