இடுகைகள்

ஶ்ரீலால் சுக்ல லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊழலால், அநீதியால் இழிந்த நிலைக்கு தள்ளப்படும் மூடநம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் கிராமம்! - தர்பாரி ராகம் - ஶ்ரீலால் சுக்ல

படம்
            மறுவாசிப்பு- தர்பாரி ராகம் ஶ்ரீலால் சுக்ல தமிழ் மொழிபெயர்ப்பு - சரஸ்வதி ராம்னாத் நேஷனல் புக் ட்ரஸ்ட் அரசு மீது அங்கத தன்மையோடு கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் இந்தி இலக்கிய நூலை வெளியிட்டதற்காகவே அரசு வெளியீட்டு நிறுவனத்திற்கு நன்றி கூறவேண்டும். புண்பட்ட மனங்கள் அதிகரித்துவிட்ட காலத்தில், இந்த நூலெல்லாம் மறுபதிப்பு கண்டு வெளியானால் அதுவே பெரிய ஆச்சரியம். நூலாசிரியர், ஶ்ரீலால் சுக்ல. இவரது வேறு எந்த நூல்களையும் நான் படித்தது இல்லை. இந்த நூலும் வாசிப்பில் ஆர்வம் கொண்ட பிறரையும் வாசிக்க வைக்கும் நோக்கில் உள்ள சகோதரர் முருகு மூலமாகவே வாங்கினேன். அந்த வகையில் அவருக்கு நன்றி. முந்நூறு பக்கங்களுக்கும் அதிகம் கொண்ட நூலின் அச்சிடப்பட்ட விலை ரூ.28. புத்தக திருவிழா தள்ளுபடியில் ரூ.14க்கு வாங்கினேன். இந்நூலில் உள்ள கருத்துகளை காங்கிரஸ் அனுமதித்து அரசு நிறுவனம் மூலம் வெளியிட்டது.  தற்போதுள்ள வலதுசாரி மதவாத அரசு, இத்தகைய நூலை நிச்சயம் ஏற்காது. புறக்கணிக்கவே செய்யும். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் நூலில் ஏராளம் உள்ளன. சிவபால்கஞ்ச் எனும் கிராமம்...