இடுகைகள்

இனப்படுகொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போர்நிறுத்தமல்ல, இனப்படுகொலை

இது ஒரு போர் நிறுத்தம் அல்ல,' காசா குறித்து எல்லைகளற்ற மருத்துவர்கள் கூறுகின்றனர், 'இது இனப்படுகொலையின் தொடர்ச்சி' ஆசிரியர்: ஜெசிகா கோர்பெட் (Common Dreams-ன் மூத்த ஆசிரியர் மற்றும் செய்தியாளர்) --- காசா பகுதியில் 'போர் நிறுத்தம்' அமலாகி கிட்டத்தட்ட 10 மாதங்களாகியும், செவ்வாய்க்கிழமை அன்று இஸ்ரேல் நுசைராத் அகதிகள் முகாமில் நடத்திய வான்தாக்குதலில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியரைக் கொன்றதைத் தொடர்ந்து, எல்லைகளற்ற மருத்துவர்கள் (Doctors Without Borders) அறிக்கை ஒன்றில் கூறியதாவது: "போரின் காயங்கள் ஆறவில்லை என்பதோடு மட்டுமல்ல, அவை இன்னும் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன." மெடெசின்ஸ் ஸான்ஸ் ப்ரோன்டியர்ஸ் (MSF) என்றும் அழைக்கப்படும் அந்த மருத்துவ அமைப்பு, "இது ஒரு போர் நிறுத்தம் அல்ல. ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனியர்கள் துன்பத்தை அனுபவிக்கும் வகையில் வன்முறையானதாகவும், ஆனால் சர்வதேச கோபத்தைத் தூண்டாத அளவுக்கு அமைதியாகவும் வடிவமைக்கப்பட்ட இது இனப்படுகொலையின் தொடர்ச்சியாகும்," என்று ஒரு அறிக்கையில் கூறியது. அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட இ...

முஸ்லீம்களை முழுமையாக அரசு அமைப்பு மூலம் களையெடுத்தல்! - அசாமில் பரவும் மதவாதமும் வெறுப்பு அரசியலும்!

படம்
  அசாம் நெல்லி இனப்படுகொலை அசாமில் முஸ்லீம்களின் குடியிருப்பை செப்.23 அன்று அசாம் மாநில அரசு அகற்றியது. பலவந்தமாக செய்த இந்த நடவடிக்கையால் முஸ்லீம்களோடு வங்காள இந்துகளும் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தனர். இங்கு கவனிக்கவேண்டியது அரசு, மேம்பாட்டுப் பணிகளுக்காக வீடுகளை இடித்து முஸ்லீம்களை நடுத்தெருவில் நிறுத்தவில்லை.  பூர்விக அசாம் மக்கள் முஸ்லீம்கள் ஆற்று ஓரத்தில் குடியிருக்கும் இடங்களில் விவசாயம் செய்வார்களாம். அதற்காக நிலங்களை அரசு அவர்களுக்கு அளிக்குமாம். இப்படி சொன்னாலும் அரசு நிலங்களை பூர்விக மக்களுக்கு அதாவது தகுதியுள்ளவர்களுக்கு அளிக்கும் வரையில் தனது கையில்தான் வைத்திருக்கும்.  அரசு 28 வயதான மைனல் ஹாக்கிக் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது காவல்துறை. இறந்து கிடக்கும் உடல் மீது புகைப்படக்கார ர் பிஜய் பனியா என்பவர் வெறியோடு குதிக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் பலரும் பார்த்திருப்பார்கள். இப்படி அரசின் ஆதரவோடு மதவாத, இனவெறியை அங்கு பரப்பி வருகின்றனர். எதற்கு? மக்களை பிரித்தால்தானே தேர்தலில் ஜெயிக்கவேண்டும். அனைத்து மக்களுக்கும் பொதுவான எதிரியை உருவாக்கவேண்டும் என்க...