இடுகைகள்

திருமணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதல் மீட்டர் - திருமண உறவைக் காப்பாற்ற என்ன செய்வது?

படம்
  காதல் மீட்டர்  4 பொதுவான திருமணங்களில் நிச்சயம் செய்வது முக்கியமான சடங்கு. இவரை இன்னாரை திருமணம் செய்துகொள்வதாக உறுதி செய்துகொள்வது. உறுதி செய்துகொண்டவரைத்தான் ஒருவர் திருமணம் செய்வார் என்று நிச்சயமில்லை. காலம் மாறிவிட்டது. கிராமங்களில் பெரும்பாலும் கொடுத்த வாக்குறுதியை யாரும் காப்பாற்றாமல் விடுவதில்லை. ஏனெனில் ஒருவரின் நம்பிக்கை தொலைந்துவிட்டால் அவர் பேசுவதை யார் கேட்பார்கள்.?  இந்த நிச்சய காலத்தில் இணையர்கள் உரையாடலாம். இன்று ஸ்மார்ட்போன் உள்ளது. போன் உயிரோடு இருந்தே ஆகவேண்டும். அதன் வழியாக பேசலாம். நிறைய விஷயங்களைப் பகிரலாம். பொதுவாக கல்யாணம் செய்துகொள்ளப்போகும் ஆட்கள் வெட்டி அரட்டைதானே அடிப்பார்கள். அதுவும் எதிர்கால உறவைப் பற்றி அறிவதற்கான வழிதான்.  ஜோதிடம், திருமண பொருத்தம் என்பதை பொதுவான பலரும் நம்புகிறார்கள். குறிப்பாக திருமணம் எனும்போது... ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் என்னுடைய நேரத்தை நானே உருவாக்குவேன் என இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்த ஒருவரை மணந்துகொள்ளலாம். நிச்சயத்திலும் மோதிரத்தை போடுவதுண்டு. இது ஒரு ஒப்பந்தம் போல செயல்படுகிறதாக கொள்ளலாம். இன்...

குணச்சித்திரம் - இரு திருடர்கள்

படம்
  இரு திருடர்கள்.  எங்கள் தெருவில் இரு திருடர்கள் இருக்கிறார்கள். இந்த இரு திருடர்களும் ஒருவரையொருர் நன்றாக அறிவார்கள். இருவரும் பெண்கள். இவர்களின்  கணவன்மார்கள் சகோதர்கள். சொத்துக்களை தனியாக வைத்துக்கொண்டு குடித்தனம் செய்கிறார்கள். பெரிதாக இருவருக்கும் இடையே நட்பும் கிடையாது. விரோதமும் கிடையாது. பொதுவாக யாராவது ஒருவரிடம் திருட வேண்டுமென்றால் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள்.   முதல் திருடரைப் பார்ப்போம். இவரது கணவர் தென்னை மரம் ஏறி பிழைப்பவர். இப்போது வயதாகிவிட்டது. இவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் அப்படியே திருட்டு, கொள்ளை, மோசடி, வஞ்சகம், துரோகம் ஆகியவற்றை செய்வதில் கைதேர்ந்தவர்கள். ஐந்து பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவர் மட்டுமே அந்தளவு மோசமில்லை என்று சொல்லாம். கடைசியாக பிறந்தது ஆண் பிள்ளை. இருப்பதிலேயே ஈவு இரக்கம் இல்லாத ஈனப்பிறவி.  முதலில் மின் பொருட்கள் சார்ந்த தொழிலை கற்றவர், பிறகு காப்பீடு முகவராக மாறினார். ஏஜெண்டாக மக்களிடம் பெற்ற பணத்தை அரசு நிறுவனத்திற்கு செலுத்தவில்லை. தன்னுடைய சொந்த கணக்கில் போட்டுக்கொண்டார். பிறகு நல்ல நாள் பார்த்து ராகு எமகண்டம்...

காதல் மீட்டர் - சமரசம் செய்து காதலிக்கலாமா?

படம்
  காதல் மீட்டர்  4 இன்று பல்வேறு கலாசாரங்களை சேர்ந்தவர்கள் காதலால் வேறுபாடுகளை மறக்கிறார்கள். ஒன்றாக சேர்கிறார்கள். எனவே, நீங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. எந்தளவு திறந்த மனது கொண்டவராக இருக்கிறீர்கள், நடந்துகொள்கிறீர்கள் என்பதே முக்கியம். இணையர்கள் சமூகத்திற்கு எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவர்களுடைய வாழ்வை முழுமையான திருப்தியோடு வாழ்ந்தால் போதும்.  டேட்டிங் செல்பவர்கள், திருமண வாழ்க்கைக்கு அந்த செயல்பாடு கூட்டிச்செல்லும் என ஈடுபடலாம். சிலர், அதில் பாலுறவிலும் கூட ஈடுபடுகிறார்கள். இதெல்லாம் சரியானதா இல்லையா என்றால் அதை தனிப்பட்ட இருநபர்கள்தான் முடிவு செய்யவேண்டும். இங்கு நான் பல்வேறு ஆலோசனைகளை அறிவுறுத்தல்களைக் கூறலாம். அவற்றை நீங்கள் பகுத்தாய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளலாம். அல்லது மறுக்கலாம். ஒருவர் கூறும் அறிவரையை அப்படியே நம்புவதும் தவறு. தன்னுடைய அறிவை முழுக்க புறக்கணிப்பதும் அழிவையே கொண்டு வரும்.  சமரசம் செய்துகொண்டால் சமாதான வாழ்க்கை என்று சில பழம்பெருச்சாளிகள் அறிவுரை கூறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை தரம், விதிகள் என எதிலும் பின்வ...

காதல் மீட்டர் - உறவுகளை பாதுகாப்பது எப்படி?

படம்
  காதல் மீட்டர்  2 ஒருவர் நண்பராக இருந்து அப்டேட் ஆகி காதலராக மாற வாழ்க்கையில் வாய்ப்பு உள்ளது. இதற்கும் அவர் நம்பிக்கையை சம்பாதித்து உழைக்கவேண்டும். ஒரு பதவி கொடுத்தால், முந்தைய பதவியை விட கூடுதலாக உழைக்கவேண்டும் என்றுதானே கொடுக்கிறார்கள். அந்த வேலையை செய்யாமல் அவர் உறங்கிவிட்டால் என்னாவது? ஒருவருக்கொருவர் லட்சியங்களில் உதவிக்கொள்வது நண்பர்களுக்கு சாத்தியம். அதேசமயம், அவர்களில் ஒருவருக்கு மட்டும் வெற்றி கிடைக்கிறது. இன்னொருவருக்கு கெடுவாய்ப்புகளே அதிகம் என்றாலும் அந்த உறவு அதிக நாட்களுக்கு தாக்குப்பிடிக்காது. இருவர் வாழும் உறவில் ஒருவருக்கு மட்டுமே பயன் விளைகிறது என்றால் இன்னொருவர் மனதிற்குள்ளாக வருத்தமுறுவார். இங்கு யாரும் மகான் அல்லது துறவி கிடையாது அல்லவா? அகமணமுறையை எடுத்துக்கொள்வோம். சாதியைக் காப்பாற்றுவதுதான் அதன் ஆழத்தில் உள்ள நோக்கம். மேல்சாதி இந்துகள் தங்கள் அந்தஸ்து, பணம், அசையும் சொத்து, அசையா சொத்து என பலதையும் பார்த்துத்தான் மணம் செய்கிறார்கள். இதெல்லாம் இல்லாமல் வரதட்சணைப் பணம் வேறு இருக்கிறது. இதையெல்லாம் வைத்துத்தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். அவ்வளவு பணத்தை ...

உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள்

படம்
  உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள் ஆண் பெண் என இருவரும் திருமணம் செய்வது குடும்பம் என்ற அதிகாரப்பூர்வ அமைப்பிற்குள் வருவதற்கு உதவி புரிகிறது. அதேசமயம், காதலித்து பழகி பிறகு திருமணம் செய்வது இன்று முக்கியத்துவம் பெறுகிறது. டேட்டிங் என்பது மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பலரும் அதை நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாக செயல்படுத்த முயல்கிறார்கள். நேரடியான சந்திப்பு என்பது காதலில் நுழைபவர்களுக்கான வாசல். அதற்கு முன்னதாக டின்டர், பம்பிள் என ஆப்கள் மூலம் பேசி அறிமுகமாகி பிறகு டேட் செய்து காதலித்து மணந்தவர்களே புதிய தலைமுறையினர்.  இணையத்தின் வசதியால் சிலர் தங்களது ஆளுமையை, முழுமையான குண இயல்பை மறைத்துக்கொள்ள முடியலாம். ஆனால், நேரடியான சந்திப்பில் அது சாத்தியமில்லை. டேட் செய்வது திருமண வாழ்க்கைக்கான ஒரு பயிற்சி என்றே வைத்துக்கொள்ளலாம்.  எப்படி டேட் செய்வது, அதற்கென ஏதாவது வயது தகுதி உண்டா என்று எல்லாம் கேள்வி வருகிறது.  இன்று கணவரை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்களும் கூட டேட் செய்கிறார்கள். டேட் செய்வது பற்றி இது சரி இத...

காதல் என்பது கலையா?

 காதல் என்பது கலையா? காதல் என்பது கலையா, அல்லது வெறும் மகிழ்ச்சிகரமான உணர்வா? கலை என்றால் அதைக் கற்க அறிவு, முயற்சி, செயல்பாடு என பலவும் தேவை. மகிழ்ச்சிகரமான உணர்வு என்றால், அப்படியான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிற அனுபவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.  காதலை, நாம் விரும்பவில்லை என்று கூறமுடியாது. காதல் திரைப்படங்கள், காதலை மையப்படுத்திய தொடர்கள் இன்றுமே பல கோடி மக்களால் பார்க்கப்படுகிறது. காதலை நாம் பார்க்கும் கோணம் மாறிவிட்டிருக்கிறது. திரைப்படமோ, தொடரோ அதில் காட்சிகள் சுவாரசியமான வகையில் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியல்லாதபோது மக்கள் என்ன செய்வார்கள்? ஆங்கிலப்பட இயக்குநர் குவான்டின் டரன்டினோ, எடுக்கும் திரைப்படங்களைப் போன்றவற்றின் மலினமான நகல்களைப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். இன்றும் பேருந்துகளில் காதல் பாடல்கள், மஜாவுக்கு அழைக்கும் பாடல்கள் என பலவும் மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. இசை பேரரசரின் காப்புரிமை பிரச்னை இருந்தாலும் மனதிற்குள்ளேயே அதை பாடிக்கொண்டு தனது சோகத்தை மறந்து காதல் உணர்வில் திளைக்கும் மக்களைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆனாலும் கூட இப்படி ...

கவர்ச்சியும் ஈர்ப்பும் கொண்ட பெண் இணையை எப்படி விவரிப்பது?

 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஆண், பெண் இருவருக்குமான காதல், பெற்றோர் பிள்ளைகள் மேல் கொண்டுள்ள பாசம் என இரண்டும் வேறுபட்டதா? பெற்றோர், பிள்ளைகள் மீது கொண்டுள்ள பாசம் என்பது ஆண், பெண் இருவருக்கும் உள்ள காதலை விட முந்தையது. மனிதர்களை விட விலங்குகள், தங்கள் குட்டிகளை வளர்ப்பதில் அதிக தீவிரம் கொண்டவை. அதில் இடையூறை விரும்புவதில்லை. ஏற்பதில்லை. அந்தவகையில், இரு பாலினத்தவரின் காதலை, பெற்றோராக பிள்ளை மீது காட்டும் பாச உறவோடு ஒப்புமைபடுத்த முடியாது. இரண்டுமே செயல்பாடு, அணுகுமுறை இரண்டிலுமே வேறுபட்டது.  ஆண், பெண் என இருபாலினத்தவருக்கான காதல் பரிணாம வளர்ச்சிக்கு உதவுகிறதா? காதலிப்பவர்கள் , அந்த காதலை உறவைக் காத்துக்கொள்ள முயல்வார்கள். பிள்ளைகள் பிறப்பது, அவர்களை வளர்ப்பது, அன்பை வெளிக்காட்டுவது ஆகியவை நடைபெறுகிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு பெற்றோரின் அன்பு, பாதுகாப்பு, பொருளாதார பலம் ஆகியவை கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்ளலாம். தாய், தந்தையினரின் அன்பு, நேசம் பிள்ளைகளுக்கு மனரீதியாகவும் மாற்றத்தை உருவாக்குகிறது.  காதலில் வீழ்வது என்பது ...

தம்பதிகள் ஒரேமாதிரியான ஆர்வங்களை கொண்டிருந்தால் நல்லதா?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி திருமணத்தைப் பற்றி பேசவேண்டியது அவசியமா? காதல் என்ற உறவு, திருமணம் என்ற இடத்தை எட்டும்போது சட்டப்பூர்வமாகிறது. நிலைத்து நிற்கும் உறவு என்பதை திருமணமே சாத்தியப்படுத்துகிறது என பலரும் கருதுகிறார்கள். அமெரிக்காவில் 2007ஆம் ஆண்டு எடுத்த ஆய்வுப்படி, 57 சதவீதம் பேர் பதினைந்து வயது தாண்டியவுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று கூறியது. 44 சதவீதம் பேர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் தெரிய வந்தது. ஒற்றைப் பெற்றோர் எண்ணிக்கை கூடிவருகிறது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள், திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழும் லிவ் இன் உறவுகள், வீட்டில் ஒற்றை மனிதராக தனியாக வாழ்வது என எடுத்துக்காட்டுகள் உலகெங்கும் உள்ளன. இவைதான் திருமணத்திற்கு தடையா? ஆண், பெண் என இருபாலினத்தவரும் ஒன்றாக வாழ திருமணம் மட்டும்தான் ஒரே வாய்ப்பாக உள்ளதா என்று கேட்டால் இல்லை. திருமணம் செய்துகொள்பவர்கள் இன்றுமே அதிகமாக உள்ளனர். அதற்கு கிராமம், நகரம் ஆகியவற்றில் நிலவி வரும் சமூக அழுத்தம் காரணமாக இருக்கலாம்.  திருமணம் தரும் பயன்கள் என்னென்ன? திருமண...

திருமணத்தில் பாலுறவு அதிக முக்கியத்துவம் கொண்டதா?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி திருமணத்தில் பாலுறவு அதிக முக்கியத்துவம் கொண்டதா? பெரும்பாலான திருமணங்களில் பாலுறவுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. திருமணம் செய்வதே வம்ச விருத்திக்குத்தானே? திருப்திகரமான பாலுறவு தம்பதிகளுக்கு நெருக்கமான உறவை ஏற்படுத்துகிறது. ஆண், பெண் என இருவரும் உடல், சிந்தனை அளவில் வேறுபட்டவர்கள். பாலுறவில் ஏற்படும் திருப்தி, குறைகளை களைய உதவுகிறது. அனைத்து தம்பதிகளும் பாலுறவுக்கு முக்கியத்துவம் தருகிறார்களா என்றால் கிடையாது. வயது முதிர்ச்சி அடையும்போது, ஒருவரின் பாலுறவு ஆர்வம், வேகம், திறன் குறையும். பாலுறவு நல்ல முறையில் அமைந்தால் திருமண தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஒத்திசைந்து போக வாய்ப்புண்டு. சுகர் டாடிக்கள் காசு கொடுத்து கல்லூரி பெண்களை தடவி மகிழ்வது கூட பாலுறவின் இன்பத்தை கொஞ்சமேனும் தொட்டுப் பார்க்கலாமே என்றுதான்.  திருமண உறவில் பாலின பாத்திரங்கள் எப்படி செயல்படுகின்றன? ஆண் மேலாதிக்க சமுதாயத்தில், ஆண்தான் குடும்பத்தலைவர். பெண், அவனுக்கு உதவி செய்யும் துணைப்பாத்திரம்தான். தமிழ் திரைப்படங்களில் வரும் கலையரசன், வாகை சந்திரசேகர் போல குடும்பத்திற்காக ...

விவாகரத்திற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி குடும்பம் என்றால் என்ன? பிறப்பு, தத்து எடுப்பது, திருமணம் ஆகிய உறவுகள் காரணமாக நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து வரும் நபர்கள், அவர்களி்ன் உறவை குடும்பம் என்று அழைக்கலாம். சட்ட அங்கீகாரம் இல்லாமலும் மனிதர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களையும் குடும்பம் எனலாம். மாற்றுப்பாலினத்தவர்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.  அமெரிக்காவில் குடும்ப அமைப்பு எப்படி மாறிவருகிறது? இப்போதும் திருமணம் செய்துகொண்டு வாழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒற்றைப் பெற்றோர் அதிகரித்து வருகிறார்கள். இன்னொருபுறம், திருமணம் செய்யாமலேயே வாழ்பவர்களும் இருக்கிறார்கள். தனிமனித சுதந்திரத்தை அதிகம் எதிர்பார்க்கும் சமூகம், அமெரிக்காவுடையது. எனவே, இங்கு திருமணம் செய்வதும், அதேபோல இணக்கம் இல்லாதபோது விவாகரத்து பெறுவதும் இயல்பானது. கிழக்கு நாடுகளில் நிலைமை வேறுபட்டுள்ளது.  குடும்ப அமைப்பு குழந்தைகளை எப்படி பாதிக்கிறது? ஒற்றைப் பெற்றோர் வளர்க்கும் குழந்தைகள், பொதுவாக இருவர் வளர்க்கும் பிள்ளைகளை விட அதிகமாக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார். வறுமை, குறைந்த கல்வி, எளிதா...

தனது அம்மாவை அடித்தவர்களை பழிவாங்கும் எவர்க்கும் கீழ்ப்படியாத குணம் கொண்ட நாயகனின் போராட்டம்!

படம்
 தி வேஸ்ட்ரல் டர்ன்டு டு லெஜண்ட் மினி டிராமா டிராமா ரஷ் யூட்யூப் ராணுவ தளபதி குடும்பம். தளபதி இறந்துவிடுகிறார். அவருக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே. அவன் அரசு வேலைக்கு கூட முயலாமல் தத்தாரியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். ரே டுன் என்ற அவனது உடலில் வேறொருவரின் ஆன்மா உள்ளே புகுகிறது. அவனது குடும்பத்தில் அம்மா மருத்துவர். அவரது வருமானத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகனுக்கு அம்மா, அவர்கள் வளர்ப்பு பிள்ளையாக வளரும் பெண் சூ என்ற பெண் பிள்ளை இருக்கிறாள். நாயகன் ரேவுக்கு சூ தங்கை போல.  ரே டுன்னின் குடும்பம் நொடித்துப்போனதால் அவனோடு நகரத்தின் அட்மிரல் வார்ட் செய்துகொண்ட திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொள்கிறார். அதற்கு அவர் ஒரு நாடகம் ஆடுகிறார். அதாவது, நாயகன் ரே வாழும் வீட்டை வார்ட் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவன் வாங்கிக்கொண்டதாக, அவர்களை காலி செய்யுமாறு மிரட்டுகிறான். அப்போது வார்ட் காப்பாற்றுவது போல வந்து வீட்டைக் காப்பாற்றிக் கொடுத்துவிட்டேன். கல்யாண ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்கிறார். அதை ரே ஏற்றுக்கொள்வதில்லை.  வீட்டை காலி செய்ய வந்தவன், நாயகன் மீது பெண்ணை மானபங்கம் செய்வ...

இறந்துபோனவராக கருதப்பட்ட ராணுவ வீரர் திரும்ப கிராமத்திற்கு வருகிறார்!

படம்
  மெயின் ஹூம் மூசா மலையாளம் சுரேஷ்கோபி கேரள கிராமம். அந்த கிராமத்தில் மூசா என்ற ராணுவ வீரர் பிரபலம். கார்கில் போரில் பலியானதால், அவருக்கு சிலை வைத்து கல்லறையைக் கூட ஊரின் மத்தியில் வைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் இறந்துபோனதாக கருதப்படும் மூசா பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருகிறார். அங்குள்ள அவரின் நண்பர்கள், உறவு, குடும்பம் எல்லாம் என்னாகிறது என்பதே கதை. ஒரு ராணுவ வீரன், அவனுடைய குடும்பம், அவனை மறந்துவிட்டது. அவனை பயன்படுத்தி உள்ளூரில் வாக்குகளைப் பெறுகிறார்கள். அவனது மனைவி, மூசாவின் தம்பியை மணந்துகொள்கிறாள். மூசா ராணுவத்தில் வேலை செய்து செத்து்ப்போனதால் ஓய்வூதியம் கிடைக்கிறது. அதை முழுக்க அனுபவிக்கிறார்கள். ஆனால், மூசா உயிரோடு திரும்ப வரும்போது, அவனைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் அனைவருமே அவன் செத்துப்போயிருந்தால் நல்லது என நினைக்கிறார்கள். ஒரே ஒரு விதிவிலக்கு. அவன் பால்ய நண்பன் மட்டுமே. அவன் சாராயக்கடை ஒன்றை நடத்துகிறான். மூசாவை தனது வீட்டில் தங்க வைத்து பார்த்துக்கொள்கிறான். மூசா இறந்துவிட்டதாக அனைவரும் நம்புகிறார்கள். அவன், ராணுவ அலுவலகத்திற்கு சென்று தனக்கு நேர்ந்...

காதலை, அன்பை சுரண்டலுக்கு பயன்படுத்தும் பெண்களை கொள்ளையடிக்கும் புத்திசாலி!

படம்
  புத்திவந்தா கன்னடப்படம் உபேந்திரா, சலோனி, பூஜாகாந்தி, லஷ்மி இயக்குநர் ராம்நாத் இசை விஜய் ஆன்டணி தமிழில் வந்த நான் அவன் இல்லை என்ற ஜீவன் நடித்த படத்தை கன்னடத்தில் உப்பி நடித்திருக்கிறார். ஐந்து பெண்களை ஏமாற்றி நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடிப்பதோடு, கல்யாணம் செய்து வைத்தால் காமத்தையும் அனுபவித்து எஸ்கேப் ஆகி, பிடிபட்டபிறகு நீதிமன்ற கூண்டில் கூட நான் அவன் அல்லா என்று சொல்லி வாதிடுவதே கதை. படத்தின் கிளைமேக்சை மாற்றியிருக்கிறார்கள். அதுவும் நன்றாகவே இருக்கிறது. இறுதியாக நீதிபதியின் மகளான பூஜாகாந்தி, நாயகனை துணை சேர்கிறார். அது கொஞ்சம் காமிக்கலாக இருக்கிறது. கல்யாண மன்னன், கல்யாண ராணி என பூந்தி பத்திரிகையில் விளக்கமாக எழுதுவார்களே அதுவே. பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம். கல்யாண மன்னன் எப்படி ஏமாற்றுகிறான் என்பதை விரிவாக காட்டுகிறார்கள். விஜய் ஆன்டணி பின்னணி இசையில் சோபிக்கவில்லை. ஆனால், தமிழ் பாடல்களை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள். பாடல்களை கன்னடத்தில் எழுதிவிட்டார்கள் என்பதால் ரசிப்பதில் பிரச்னை இல்லை. வெளிப்பகட்டுக்கு மயங்கி பேராசைப்படும் பெண்கள். அவர்களை பஞ்சாமிர்தம் என்ற உபேந்திர...

இளைஞன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு திருமணம் செய்ய பெண் தேடினால்....

படம்
      மேரேஜ் வைப்ஸ் சபரீஷ், மகிமா director - harish வைரலி தமிழ் யூட்யூப் சேனல் ஒரு மணி நேரத்தில் பார்த்துவிடக்கூடிய சிறிய வெப் படம். முதல் காட்சியில் சபரி, தன்னுடைய நிறுவனத்தின் உரிமையாளரிடம் வேலையை விட்டு நின்றுகொள்வதாக கடிதம் கொடுக்கிறான். அந்த நேரத்தில் அவனுக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் அம்மா மட்டும்தான் இருக்கிறார். அவருக்கு மகன் மீது பிரியம். சபரிக்கு பள்ளி, கல்லூரி, அலுவலகம் என சக்கரம் போல சுற்றும் கடிகார வாழ்க்கை போரடிக்கிறது. எனவே, அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறான். பெண் பார்க்கும் சடங்கு எல்லா இடத்திலும் ஒன்றுபோல்தான். பையனது வேலை, சம்பளம், சொத்து என அனைத்தையும் கேட்கிறார்கள். இதில் சபரிக்கு வேலை இல்லை என்றதும் பெண் பார்க்கும் தரகர்கள் அனைவரும் போனை உடனே துண்டிக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு பெண் மட்டுமே அவனை சந்திக்க வருகிறாள். அவள்தான் மகிமா. உண்மையில் அவள் ஏன் சபரியை சந்திக்க விரும்பினாள் என்பதுதான் இறுதிக்காட்சி. தமடா மீடியாவின் யூட்யூப் சேனல்களில் ஒன்றுதான் வைரலி தமிழ். நடித்துள்ள நடிகர்கள் சபரி, மகிமா என இருவருமே சிறப்பாக நடித்த...