இடுகைகள்

திருமணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதிக்கவாதியாக ஒருவரை மாற்றும் பயிற்சி

படம்
ஆதிக்கவாதியாக ஒருவரை பயிற்சி மூலம் மாற்ற முடியுமா? இதற்கான பதில் சற்று குழப்பமானது. அவர் தனக்குள் ஏன், எதற்கு, எப்படி, அவசியமா என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும். தான் கொண்டுள்ள உறவில் சலிப்பு ஏற்பட்டு தனது பாத்திரத்தை மாற்றிக்கொள்கிறார் என்றால் ஆதிக்க/அடிமை உறவு கெட்டுபோய்விட்டது என்பதற்கான அறிகுறி என புரிந்துகொள்ளலாம். இயற்கையாக ஒருவர் ஆதிக்கவாதி குணம் கொண்டவராக இல்லை. ஆனால் பயிற்சி மூலம் மாற்றமுடியுமா என்றால் முடியும். கதையில் ஒரு நடிகர் நன்றாக நடிக்கிறாரா என்று பார்த்து அதற்கேற்ப படத்தின் முடிவை இயக்குநர் கௌதம் எழுதுகிறாரே, அதுதான் இங்கு கான்செப்ட். ஒருவர் எந்தளவு ஆதிக்கவாதி பாத்திரமாக தன்னை மாற்றிக்கொள்ளமுனைகிறார் என்பதே இதில் முக்கியம். அதைப் பொறுத்து பயிற்சியாளர் பயிற்சிகளை அமைப்பார். பயிற்சி கொடுப்பவருக்குமே இது கடினமான பயணம்தான். ஒருவர் தன்னை சிறந்த வாகன ஓட்டுநர் என்று சொல்லிக்கொள்ளலாம். பிரச்னையில்லை. ஆனால் தனக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்கு சொல்லிக் கொடுப்பது கடினம். அப்படி கற்பிப்பது அனைவருக்கும் கைவராது. ஏன் ஆதிக்கவாதியாக மாற நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கிடைத்த தவற

இரக்கமில்லாத ரவுடியோடு தொழிலதிபர் மகன் ஆடும் போங்காட்டம்!

படம்
            ஆட்டாடிஸ்தா நிதின் , காஜல் அகர்வால் தொழிலதிபரின் மகனான நிதின் , தனது அப்பா பெயரை சொல்லாமல் அவர் பாட்டிற்கு கல்லூரிக்கு செல்வது , நண்பர்களோடு சுற்றுவது , வம்பு வழக்குகளை இழுத்து வருவது என குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் கட்டுப்படாமல் வாழ்கிறார் . சுருக்கமாக அவரது குடும்பத்தில் அவர் படிக்காதவன் . பிறர் படித்தவர்கள் . இந்த நிலையில் நிதின் , ரவுடிகளை அடித்து உதைக்கும்போது , அந்த இடத்தில் காஜலின் தோழிக்கு பிறந்தநாள் பார்ட்டி நடைபெறுகிறது . அந்த விழாவே சண்டையால் களேபரமாகி சங்கடமாகிறது . இதைப்பற்றி காஜல் காவல்துறையில் புகார் செய்கிறார் . அங்குதான் நிதின் மிகப்பெரிய பணக்காரர் வீட்டு பிள்ளை என தெரிய வருகிறது . இன்ஸ்பெக்டர் அவரை விட்டுவிடுகிறார் . ஆனால் நிதின் காஜலை விடுவதாக இல்லை . அவரை பின்தொடர்ந்து செல்கிறார் . நிதினின் அப்பா நாக பாபு , மனிதர்களின் வாழ்வை கெடுக்காத தொழில் செய்ய நினைப்பவர் . இவரின் தொழில் போட்டியாளர் ரகுவரன் . அவருக்கு நாக பாபுவை எப்படியேனும் தோற்கடித்தால் போதும் என்ற வெறி . இப்படி போட்டி போட்டதில் இருவரின் நிறுவனங்களும் கீழேத

வில்லியிடம் இருந்து காதலியை மீட்கும் நாயகனின் போராட்டம்!

படம்
  சகியா தெலுங்கு தருண், நவ்ஹீத் சைருஷி   கிராமத்தில் உள்ள சக்திவாய்ந்த பெண்மணியின் மகளை கூட்டி வர ஸ்விட்சர்லாந்து செல்லும் நாயகன், காதலில் விழுகிறார். பெண்மணி கூறியபடி அவரது மகளை கூட்டி வந்தபிறகுதான் தெரிகிறது. அந்தபெண்மணி, அவரது அம்மா கிடையாது. எதிரி குடும்பத்து பெண். பழிவாங்குதலுக்காக அவரை ஏமாற்றி தனது மகளென கூறி வரவைத்திருக்கிறார் என்று. இப்போது நாயகன் எப்படி அவரிடமிருந்து அந்த அப்பாவி பெண்ணை மீட்டு திருமணம் செய்கிறார் என்பதே கதை. படத்தில் ஒரே ஒரு உருப்படியான விஷயம் ஆங்கில நடிகையான நவ்ஹீத் சைருஷிதான். அவரை படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள். மற்றபடி படத்தில் பாத்திரமாக சந்தனா என்று வருகிறார். அதில் பெரிய மாற்றமோ, ஆச்சரியமோ இல்லை. லூசுப்பெண் போல காட்டுகிறார்கள். துயரம். அதிலும் அவர் ஒரே மாதிரியான உடையில் படத்தில் பெரும்பாலான நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறார். எதற்கு என அவருக்கும் தெரிவதில்லை. நமக்கும் தெரியவில்லை. ஹரி பாத்திரத்தில் தருண் நடித்திருக்கிறார். முதல் காட்சியில் தனது அண்ணன் பற்றி மாற்றிப் பேசி அவர் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள உதவுகிறார். ஆனால் அதற்குப் ப

ஒரு குழந்தையை வளர்க்கும் மூன்று திருமணமாகாத இளைஞர்கள்!

படம்
    த்ரீ டாட்ஸ் ஜே டிராமா ராக்குட்டன் விக்கி   ஜப்பான் டிராமா. மூன்று திருமணமாகாத இளைஞர்கள். இருவர் கார்ப்பரேட் அலுவலகம் செல்லும் ஆட்கள். இதில்,   ஒருவர் மட்டும் எந்த சேமிப்பும் இல்லாமல் பெரிய கனவு இல்லாமல் வாழும் ஆள். அவர்தான் டக்குன். தொடருக்கு அவர்தான் நாயகன். எந்த நேர்த்தியும் ஆபீசுக்கு லேட்டாக போவது, மேனேஜரிடம் திட்டு வாங்குவது, குட்டைப்பாவாடை அணிந்த பெண்களின் கால்களுக்கு கீழ் ஃபைலை தவறவிட்டு தேடுவது என அனைத்து தில்லாலங்கடி வேலைகளையும் செய்கிறார். இவரைப் போலவே ஆபீஸ் போகும் இன்னொருவருக்கு கல்யாணம் கூட நிச்சயமாகிவிடுகிறது. அடுத்து, உடைகளை தைத்து விற்கும் ஃபேஷன் டிசைனர் ஒருவர். இவர் பிறர் வணக்கம் சொன்னால் கூட பதிலுக்கு சொல்லாமல் அமைதியாக செல்லக்கூடியவர். இந்த நேரத்தில் அவர்கள் தங்கியுள்ள அறையில் ஒரு இளம்பெண் நுழைந்து குழந்தை ஒன்றை வைத்துவிட்டு சென்றுவிடுகிறாள். அதில் இந்த குழந்தை உன்னுடைய குழந்தை என்று எழுதியிருக்கிற ஒரே ஒரு துண்டுச்சீட்டு. மூவருக்கும் எக்ஸ் காதலிகள் உண்டு. யார் கர்ப்பமாக இருந்தார் என யாருக்கும் திட்டமாக தெரியவில்லை. இந்த லட்சணத்தில் யாருடைய குழந்தை என்

உண்மையான காதலை தவறான மனிதர்களிடம் தேடும் இருவரின் கதை!

படம்
  ஃபர்பெக்ட் கிரைம் - ஜே டிராமா பர்ஃபெக்ட் கிரைம் ஜே டிராமா ராக்குட்டன் விக்கி ஏடிபி என்ற கட்டிட உள் அலங்கார நிறுவனம் ஜப்பானில் இயங்கி வருகிறது. இதில் வேலை செய்யும் டைரக்டர் தகாகுமா சானுக்கு, பிளானிங் பிரிவில் உள்ள மசிமா கவோரி என்ற இளம்பெண்ணோடு முறை தவறிய உறவு இருக்கிறது. அடிக்கடி உடலுறவு கொள்கிறார்கள். அவர்கள் அலுவலகத்திலும் இந்த செக்ஸ் உறவை சிலர் அறிந்திருக்கிறார்கள். டைரக்டருக்கு மணமாகியிருக்கிறது. அவரது மனைவி அவரை காதலிக்கிறார் . ஆனாலும் அவரது கணவர் மசிமாவின் இளமையான உடலுக்கு அடிமையாகி செக்ஸ் இன்பம் அனுபவித்து வருகிறார். மசிமாவுக்கு இந்த உறவு வெளியே தெரிந்தால் தனக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என நினைக்கிறாள்.   ஆனால் அதில் இருந்து அவளால் உண்மையாகவே வெளியே வர முடியவில்லை. அப்போது அமெரிக்க தலைமை அலுவலகத்தில் இருந்து சினோமோ சான் என்ற வடிவமைப்பாளர் வருகிறார். அவர், மசிமாவின் தகாத உறவை அறிந்து அதை துண்டித்துக் கொள்ள அறிவுறுத்துகிறார். அந்த உறவை துண்டித்துக்கொண்டு சினோமோவுடன் அவள் காதல் கொள்கிறாள். இந்த உறவு நிலைத்ததா, உண்மையான காதலாக மாறியதா என்பதே இறுதிப்பகுதி.   தொடரின் இயக்கு

கான்ட்ராக்ட் கல்யாணத்தால் களேபரமாகும் வினோத தம்பதியினரின் வாழ்க்கை!

படம்
  பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் - கே டிராமா பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் கே டிராமா   -16 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   எல்லாவற்றையும் பொருளியலாக, பணமாக, பரிவரத்தனையாக மாற்றும் ஒருவருக்கும், கல்யாணம் செய்யவேண்டுமென்றால் காதல் வேண்டும் என அடம்பிடிக்கும் பெண்ணுக்கும் நடக்கும் கான்ட்ராக்ட் கல்யாணத்தின் களேபர விளைவுகள்தான் கதை. இந்த கே டிராமா, பிற தொடர்களைப் போல காதலை மட்டும் உயர்வாக பேசவில்லை. காதல் அதைச்சார்ந்த இருவரின் பிரச்னைகள், காதலை சமூகம் எப்படி பார்க்கிறது, பெற்றோர் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள், காதல் இருவருக்கும் போதுமானது. ஆனால், திருமணம் என்பது எப்படிப்பட்ட பொறுப்புகளைக் கொண்டது என தொடர் நெடுக விவாதிக்கிறார்கள்.   இந்த கே டிராமா இயக்குநர், இறுதிப்பகுதியை மனப்பூர்வமாக எடுக்கவில்லை. அதைத்தவிர மற்ற எபிசோடுகள் பதினைந்தையும் நன்றாக எடுத்திருக்கிறார். டேட்டிங் ஆப் நிறுவனத்தில் திட்டத் தலைவராக உள்ள நாம் சே கி, டிவி தொடர்களுக்கு எழுத்தாளராக முயலும் ஜி ஹோ , தனி நிறுவனத்தைத் தொடங்கி நடத்த நினைக்கும் சூ ஜி, திருமணம் செய்து குழந்தை பெற்றாலே சாதனை என நினைக்கும் உண

நான் யார் என்ற கேள்வியை எழுப்புவதுதான் கலை! - ஸ்டீபன் ஸ்பீல்பர்க்

படம்
  ஸ்டீபன் ஸ்பீல்பர்க், திரைப்பட இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் திரைப்பட இயக்குநர். ஸ்டீபனுக்கு எழுபத்தாறு வயதாகிறது. ஜாஸ்   பாகங்ள், சேவிங் பிரைவேட் ரியான், மைனாரிட்டி ரிப்போர்ட், ஈ.டி எக்ஸ்ட்ரா டெரஸ்டெரியல், ஷிண்ட்லர் லிஸ்ட் ஆகிய திரைப்படங்களை உருவாக்கியவர். இவர் உருவாக்கிய தயாரித்த படங்களின் வணிக லாபம் 38.7 பில்லியன் டாலர்கள்.   சினிமாவின் சக்தியை எப்போது உணர்ந்தீர்கள்? இளமையிலேயே சினிமாவின் சக்தியை உணர்ந்தேன். திரைப்படங்களை பார்ப்பதன் வழியாக என்னுடைய பெற்றோருடனான உறவும் கூட மாறியது. குறிப்பாக என்னுடைய அம்மாவினுடைய உறவு. அவர், அப்பாவைக் கடந்து இன்னொருவரை காதலிப்பதை அறிந்தபிறகு, அவரை நான் என்னுடைய அம்மாவாக கருதவில்லை. ஒரு மனிதராக அவரை அனைத்து பலவீனங்களும் கொண்டவராக என்னை நானே பார்ப்பது போல பார்த்தேன். பத்தாண்டுகளுக்கு   எனது அம்மாவை,   அவராகவே கருதிப் பார்த்தேன். அப்படிப் பார்த்தது குடும்பத்தில் வேறு எவரையும் விட அவரை நெருக்கமானவராக உணரச் செய்தது. உங்கள் குடும்ப வாழ்க்கை பற்றிய சுயசரிதை படங்களை எடுக்க நினைத்துள்ளீர்களா? எனது அம்மா, எப்போது திரைப்படங்களில் நமது கதையைச் சொல

ஒரே மாதிரியாக கட்டுரை எழுதுவதே போர் அடிக்கும் வேலை!

படம்
  நரசிங்கபுரம் 5/2/2023 அன்பு அன்பரசு சாருக்கு, வணக்கம். புத்தகம் படிப்பதால் நலமாக இருப்பீர்கள் என்றுணர்கிறேன். காலம் கடந்துகொண்டிருக்கிறது. சில கடமைகளை காலாகாலத்திற்குள் முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக உணர்கிறேன். ஒன்று அரசு வேலை, மற்றொன்று திருமணம். தற்போது இருக்கும் வேலையில் சிக்கலும் இல்லை. வளர்ச்சியும் இல்லை என்று உணர்கிறேன். எத்தனை நாட்களுக்கு கணக்கு கட்டுரைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருக்க முடியும்?   பல வேலைகளைச் செய்வது திடமாக உள்ளது. சென்ற வாரம் பத்திரிகையில்   கணபதி சாருக்கு கணக்கு டவுட் வந்தது. தீர்வு சொன்னதும் வியப்படைந்தார். அன்றிலிருந்து ‘’வேறெதாச்சும் வேலைக்கு போயா, இங்கே வளர்ச்சி இருக்காதுன்னு’’ பேசிக்கிட்டே இருக்காரு. எப்போதும்! அவர்தான் அண்ணனையும் திட்டி விரட்டியிருப்பார் என்றுணர்ந்தேன். வேலைக்கு இதுபோல் என்றால் திருமணம் மற்றொரு கதை. வீட்டில் எனக்கு திருமணம் செய்ய கங்கணம் கட்டியிருக்கிறார்கள். அதிகம் பேசுகிறேனாம். பேச்சில் தத்துவங்களை அடுக்கி பேசுகிறேனாம். குடும்ப பொருளாதாரச் சிக்கலில் திருமணம் செய்ய, தற்போது விருப்பம் இல்லை எனக்கு… செ

வாசிப்பது மனநிறைவைத் தருகிறது - காந்திராமன் கடிதங்கள்

படம்
  ஊக்கம் மின்னல் 23/10/2022 அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, இந்த இங்க் பென்னில் எழுத. புத்தக வாசிப்பு உங்களை நலமாக வாழ வைக்கும் என நம்புகிறேன். ஆத்ம தூய்மைக்காக நீங்கள் எழுதும் புத்தகங்களுக்கு எனது வாழ்த்துகள். முந்தைய நாள், சிவராமன் சாரிடம் பேசியதாக உங்களிடம் சொன்னேன். உங்களையும், அவரையும் தவிர என்னை யாரும் அதிகம் ஊக்கப்படுத்தியதில்லை. நான் மாணவர் இதழில் இத்தனை நாட்கள் வேலை செய்ய நீங்கள் இருவருமே காரணமாக இருப்பீர்கள் என உணர்கிறேன். அன்று பேசும்போது, சிவராமன் சார் தனது அனுபவக் கதைகளை சொன்னார். ‘’கல்லூரியில் யாரும் சரியாக இல்லை. ஹெச்ஓடி அதிகம் வேலை வாங்குகிறார். படிக்க நேரம் போதவில்லை. பிள்ளைகள் வளர்ந்திருந்தால் முன்னமே வேலையை விட்டிருப்பேன்’’ என புலம்பினார். இருப்பினும், உருப்படியாக செய்யும் ஒரே வேலை மாணவர் இதழில் கட்டுரை எழுதுவதுதான் என்றார். பிஹெச்டி பற்றி நான் கேட்டேன். ஹெச்ஓடி சரியில்லை. நானே உனக்கு சொல்லுறேன். வெயிட் பண்ணு என்றார். சரிங்க சார் என்றேன். வீட்டில் எனக்கு திருமணம் செய்ய நினைக்கிறார்கள். சென்னையில் இருந்து பணிபுரிந்துகொள்ளவே இந்த ப

லவ் அலாரத்தை ஆன் செய்து லவ் மேப்பை அப்டேட் செய்யலாம் - நீங்க ரெடியா?

படம்
  தம்பதிகளுக்கு இடையே மௌனமான பிரிவு உருவாகிறதா? – தீர்வு என்ன? காதலிக்கும்போது ஒருவரைப் பற்றிய பிடித்தது, பிடிக்காதது, என தெரிந்துகொள்பவர்கள் மணமானபிறகு பல்வேறு விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து காதலை பின்தள்ளிவிடுகிறார்கள். இதற்கு, பெற்றோரைக் கவனிப்பது, குழந்தைகளை வளர்ப்பது என ஏராளமான காரணங்களைக் கூறுகிறார்கள். உண்மையில், கணவன், மனைவி என இருவரும் சற்று முயற்சி எடுத்தால் அவர்களின் மனதிலுள்ள லவ் அலாரத்தை ஒலிக்க வைக்க முடியும். இதற்கு இருவரும் ஒரே சமயத்தில் தங்களை சற்றே மாற்றிக்கொண்டு முன்னே அடியெடுத்து வைக்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம்…. காதலர்களாக இருந்து கணவன் மனைவியாக மாறியவர்கள் கூட காதல் என்பதை முழுக்க ஒழித்துவிட்டு ஏதோ பிள்ளைகளுக்காக ஒரே வீட்டில் ஒரே படுக்கை அறையில் வாழ்வதாக சூழல் மாறிவருகிறது. இதற்கு பரபரப்பான வாழ்க்கை முறை காரணம் என்று மட்டும் காரணம் சொல்லி தப்பிவிட முடியாது. இந்த பரபரப்பிலும் அவரவருக்கு பிடித்த விஷயங்களை விடாமல் செய்துகொண்டுதானே இருக்கிறோம். பிறகு, காதலில் மட்டும் ஏன் பஞ்சம், பற்றாக்குறை ஏற்படுகிறது? மணமாகி தேனிலவு காலம் முடிந்தபிறகு கணவன், மனைவி இருவரும்