இடுகைகள்

அழுகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கையைக் காப்பாற்றும் பழக்க வழக்கங்கள்! - உடல், மனதின் இயல்பான பழக்கங்கள்

படம்
              ஆபத்து கால நடவடிக்கைகள் ! உடலைப் பொறுத்தவரை ஆயுளுக்கும் நமக்கு பாதுகாவலராகவே செயல்படுகிறது . மிகவும் இக்கட்டான நேரம் என்றால் உடல் தானியங்கியாக தன்னைப் பாதுகாத்துக்கொள்வதில் இறங்கிவிடும் . இதனை ஒருவர் தவிர்க்கவே முடியாது . நீரில் இறங்கினால் , நீச்சலடிப்பது , நெருப்பைப் பார்த்தால் அது ஏற்படுத்தும் விளைவுகளை அறிந்து எச்சரிக்கையாவது , நாய் துரத்தினால் இயல்பாகவே ஓடத் தயாராவது என சில விஷயங்களைக் குறிப்பிடலாம் . நவீன நகர வாழ்க்கையில் இந்த செயல்பாடுகள் ஒருவரின் சிந்தனை வாழ்க்கை முறையைப் பொறுத்து மாற்றங்களை காண்கிறது . அடிப்படையில் தன்னைக் காத்துக்கொள்வதுதான் இதில் முக்கியமானது . அப்படி சில அம்சங்களை கீழே காண்போ்ம் தாக்குதல் அல்லது தப்பித்தல் ஆபத்து என்று வரும்போது ஒன்று அதனை எதிர்ப்பது அல்லது அங்கிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டு ஓடுவது என இரண்டில் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க முடியும் . அதுதான் விலங்காக இருந்து நாம் பெற்ற அடிப்படை இயல்பு . இன்று இதே அம்சம் வெவ்வேறு வகையில் வெளிப்படுகிறது . உயிருக்கு ஆபத்தான நிலையில் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது . உடல்

விமானத்தில் செல்லும்போது அழுகை வருவது ஏன்? பதில் சொல்லுங்க ப்ரோ? - வின்சென்ட் காபோ

படம்
    pixabay       பதில் சொல்லுங்க ப்ரோ ? வின்சென்ட் காபோ காய்ச்சலில் இருக்கும்போது சாப்பிடாமல் இருப்பதும் , சளிப்பிடித்திருக்கும்போது சாப்பிடுவதும் சரியா ? சளி பிடித்திருக்கும்போது சாப்பிடுவது பொதுவானதுதான் . நோய்த்தொற்றை எதிர்கொள்ள உடலில் பலம் தேவை . எனவே நோயுற்றிருக்கும்போது ஏதாவது உணவை சாப்பிடுவது அவசியம் . உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கும்போது , சூப் தயாரித்து குடிப்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் . 2002 இல் செய்த ஆராய்ச்சிப்படி ஆராய்சியாளர்கள் சளிப்பிடித்திருக்கும்போது உணவை முறையாக எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது என்று கூறினர் . இதில் கலந்துகொண்டவர்கள் குறைவானர்கள்தான் . மேலும் பசித்தால் சாப்பிடாமல் கட்டாயப்படுத்தி சாப்பிடுவது சரியானதல்ல . கிரேக்கத்தில் காய்ச்சல் அடிக்கும்போது எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடப்பது புழக்கத்தில் இருந்து வந்த து . இது காய்ச்சலை குணப்படுத்தும் என்று கூறமுடியாது . உணவு எடுத்துக்கொள்வதை விட முழுமையாக ஒய்வெடுப்பது முக்கியமானது . விமானத்தில் படங்களை பார்க்கும்போது கண்ணீர் வருவது ஏன் ? தனி

குழந்தை அழும்போது கண்ணீர் வருவதில்லையே ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி குழந்தை பிறந்தவுடனே அழுகிறது. ஆனால் கண்களிலிருந்து கண்ணீர் வருவதில்லையே ஏன்? குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை அழுகை மூலமாக அறியலாம். தாயின் கருப்பையில் உள்ள குழந்தை மெல்ல வெளிவந்தவுடன் வெளியிலுள்ள காற்றை சுவாசிக்கத் தொடங்கும்போது, அது முன்னிருந்த பாதுகாப்பில் குறைபாட்டை உணர்கிறது. உடனே அழுகிறது. ஆனால் அதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அழும்போது சத்தம்தான் பெருமளவில் ஊரையே உலுக்கும்படி வரும். ஆனால் ஒரு சொட்டு கண்ணீர் கூட வராது. காரணம், கண்ணீர் சுரப்பி அப்போது உருவாகி முதிர்ச்சி அடைந்திருக்காது என்பதே. மேலும் குழந்தையின் உடலில் வியர்வைச்சுரப்புக்கு காரணமான எக்கிரைன், அபோகிரைன் ஆகிய சுரப்பிகளும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது. எனவே சில வாரங்களுக்கு குழந்தைக்கு வியர்வை சுரக்காது. அதேசமயம் குழந்தைக்கு பாலூட்டும்போது, அவர்களின் உடலில் வியர்வை உருவாகும். இதன் அளவு நினைத்து பார்க்க முடியாத அளவு அதிகமாக இருக்கும். பலரும் பீதியாவார்கள். அது இயல்பானதுதான். தாயின் உடலிலிருந்து உடற்சூடு குழந்தைக்கு மாற்றப்படுகிறது என்கிறார் கலிஃபோர்னியா ப

விமானத்தில் குழந்தைகள் அழுவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி குழந்தைகள் விமானப்பயணத்தில் அழுவது ஏன்? சாதாரண குழந்தைகள் முதல் ஆட்டிசக் குழந்தைகள் வரை பஸ், விமானம் என வாகனம் எதுவானாலும் செல்லும்போது மெல்லத் தொடங்கி பயணிகளை உசுப்பி எழவைக்கும் அளவு அழுவார்கள். ஏன்? காரணம் விமானத்தில் சாதாரணமாக அனுபவிக்கும் அழுத்தம் நம்மாலே பொறுத்துக்கொள்ள முடியாது. குழந்தைகள் எப்படி தாங்கும். விமானம் உயரத்தில் பறக்கும்போது, காது அடைக்கும். அந்த அழுத்தம் குழந்தைகளுக்கு தனியாக இருப்பது போலத் தோன்றும். இதனால்தான் அழுகை எல்லை மீறுகிறது. அறிவியல்ரீதியான காரணம், குழந்தைகளின் காதில் உள்ள அமைப்புதான். அஸ்டாசியன் குழாய் எனும் அமைப்பு நம் காதில் உள்ள நடுவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு முழு வளர்ச்சி அடைந்தது அல்ல. வயது வந்தோருக்கும் குழந்தைகளுக்கும் இது வேறுபட்ட வளர்ச்சியில் உள்ளது என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த  சைமன் பேயர். பொதுவாக நாம் பயணிப்பதை மூளை உணர்வது நம் காதில் செல்லும் காற்று மூலமாகத்தான். விமானம் ஏறி இறங்கி 9,100 மீட்டர் உயரத்தில் பறக்கிறது. இது பொதுவான உயரம். இதில் வயதுவந்தோர் காற்றழுத்த த்திற்கு ஏற்றவாறு தம்மை