இடுகைகள்

ஸ்வச் பாரத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்வச் பாரத் என்பது மாயக்கனவு! - பெசவாடா வில்சன்

படம்
பெசவாடா வில்சன் ஸ்வச் பாரத் கூட கழிவறைகளை கட்டுவதாகவே இருக்கிறது. ஆனால் அதனை இன்றுவரை சுத்தம் செய்பவர்களைப் பற்றி ஏதும் பேசுவதில்லையே? சாதியும் சுத்தமும் இந்தியாவில் பின்னிப்பிணைந்துள்ளது. எனவேதான் கழிவறைகளை கட்டுபவர்கள், அதனை சுத்தம் செய்பவர்களை பற்றி மறந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி பேசக்கூட அவர்கள் தயாராக இல்லை. அரசு இதனைக் கவனத்தில் கொள்வது தலித்துகளின் மரணங்களைக் குறைக்கும். அரசு, மனிதக்கழிவு அள்ளுபவர்கள் என்று 54,130 பேர்களை அடையாளம் கண்டிருக்கிறதே? அரசு கூறும் கணக்கு உலர் கழிவறைகளைச் சுத்தம் செய்பவர்களை மட்டுமே. பாதாளச்சாக்கடை மற்றும் கழிவுநீர் டேங்குகளில் இறங்கி சுத்தப்படுத்துபவர்களை அரசு இன்றுவரையும் கண்டுகொள்வதில்லை. உச்சநீதிமன்றம் கூறும் கருத்துகளை அரசு பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. வெறும் கருத்தாக சொல்வதை விட்டு குறிப்பிட்ட காலக்கெடு விதித்தால் நன்றாக இருக்கும். சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் உயிர்களும் பலியாகாமல் இருக்கும். உண்மையில் எங்களுக்குத் தேவை நீதிமன்றங்களின் அனுதாபம் அல்ல. உறுதியான உயிர்களின் பலிகளைத் தடுக்கும் நடவடிக்கை மட்