இடுகைகள்

உணவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடல் எடையைக் குறைப்பது எப்படி?

படம்
  உடல் எடையைக் குறைப்பது எப்படி? பா ராகவனே இளைப்பது சுலபம் என நூல் எழுதியிருக்கிறார். அவரே பன்னீர், வெண்ணெய் என்று சாப்பிட்டு குனுக்கெனதான் இருக்கிறார். அவர் எழுதிய நூலைப் படிப்பவர்கள் மட்டுமே உடனே இளைத்து விடுவார்களா? முடியும். அதற்கு முக்கியக் காரணம், உணவுமுறை. ஒருவர் சாப்பிடும் உணவின் அளவு. அதைக் கட்டுப்பாட்டில் வைத்தாலே உடற்பயிற்சியைத் தொடங்கும் முன்னரே உடலில் மாற்றம் தெரியும். அதற்குப் பிறகு உடற்பயிற்சி பழக்கமானால் மெல்ல உடல்எடை சீராக குறையத் தொடங்கும்.  ஹோமியோபதியில் கூட உடல் எடையைக் குறைக்கலாம் என மருந்துகளை விற்கிறார்கள். ஆனால் அதற்கு ஒருவர் கொடுக்கவேண்டிய விலை என்னவென்று யாருக்கும் தெரியாது. எனவே, மாத்திரை, டானிக்குகள், பெல்ட் என பேசும் விஷயங்களை சரியான ஆலோசனைகளோடு அணுகுவது நல்லது.  ஃபிட்னெஸ் பேண்டுகள், வாட்சுகள், ஆப்கள் நிறைய உள்ளன. இவற்றை வாங்கிக்கொண்டு சரியான உடற்பயிற்சிமுறை, அதற்கேற்ப உணவுமுறையை திட்டமிட்டால் நிச்சயமாக எடை குறைய வாய்ப்புள்ளது. கலோரி குறைய, ஊளைச்சதை அழிய, கொழுப்பு கரைய என நிறைய பயிற்சிகள் உள்ளன. இவற்றை ரெசிஸ்டன்ஸ், ஸ்ட்ரென்தனிங், கார்டியோ என பல்வேறு பெயர்கள

தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பாச உணர்வு பற்றிய ஆராய்ச்சி

படம்
  harry harlow ஒரு தாயுக்கும் குழந்தைக்கும் இடையிலுள்ள பாசத்திற்கு அடிப்படைக் காரணம் என்ன? குழந்தை பிறந்தவுடன் அதற்கென உணவு தேவைகள் உள்ளன. அதை அம்மா அருகிலிருந்து தீர்க்கிறார்கள். இப்படித்தான் பாசம் என்ற உணர்வு உருவாகிறது. இதை ஒட்டுதல் என்று கூறலாம். இதை பல உளவியல் ஆய்வாளர்கள் கூறினார்கள். ஆனால் ஹாரி இதை வேறுபடுத்தி பார்த்தார். அதாவது, அவர் செய்த சோதனையில் தாய் குழந்தைக்கு உணவே தரவில்லை என்றாலும் கூட பாசம், ஒட்டுதல் உருவாகிறது என நிரூபித்தார்.  இந்த ஆய்வில் அவர் மக்காவ் இன குரங்கை பயன்படுத்தினார். ஒரு கூண்டில் இருந்த குரங்கிற்கு உணவுதேவைகள் எளிதாக கிடைக்கும்படி செய்தார். இன்னொரு கூண்டில் இருந்த குரங்கிற்கு தாய் குரங்கு உணவு ஊட்டவில்லை. அது துணியிலான குரங்கு பொம்மை. அதை குட்டி மக்காவ் குரங்கு, தாய் என நினைத்துக்கொண்டது. உணவு தரவில்லை என்றாலும் குட்டி குரங்கிற்கு ஆபத்து ஏற்படும்போது, துணியில் செய்த பொம்மையை அணைத்துக்கொண்டது. இந்த வகையில் அதற்கு துணிக்குரங்கு தாய் போல மாறியது.  ஹாரி செய்த ஆய்வில் தாய், குழந்தைக்கு இடையிலான உறவு என்பது உணவு தேவைகள் மட்டும் சார்ந்தது அல்ல என்பது நிரூபணமானது

தோல்வி அடைந்தாலும் வெற்றியை பெற சிம்பன்சிகள் செய்த முயற்சி!

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்,ஜெர்மனியைச் சேர்ந்த உளவியலாளர்கள் பழைய உளவியல் கோட்பாடுகள் பற்றி சந்தேகத்தை எழுப்பினார்கள். இவர்கள் புனித தன்மை கொண்ட அறிவியல் முறையிலான நிரூபணம் செய்யப்பட்ட சோதனை முறைகளை மட்டுமே நம்பினார். இதை கெஸ்சால்ட் என்று அழைத்தனர். இந்த முறையை வோல்ஃப்கேங் கோஹ்லர், மேக்ஸ் வெர்தீமர், கர்ட் காஃப்கா ஆகியோர் உருவாக்கி செயல்படுத்தினர். இதற்கும் கெஸ்சால்ட் தெரபிக்கும் குழப்பிக்கொள்ள வேண்டாம். இதை கெஸ்சால்ட் சைக்காலஜி என்று குறிப்பிட்டனர். இதில் பார்வைக்கோணம், கற்றல், அறிவாற்றல் ஆகிய அம்சங்கள் முக்கியமானவையாக கருதப்பட்டன.  உளவியலில் குண இயல்புகள் பற்றிய பிரிவை மிகவும் எளிமையானதாக இயற்கையின் கோணத்தில் மாறும் இயல்புடையதாக கருதுகின்றனர் என கோஹ்லர் கருத்து கொண்டிருந்தார். இவர், ஆந்த்ரோபாய்ட் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான பிறகு, தான் நம்பிய கொள்கைகளை அங்கு சிம்பன்சிகளை வைத்துசோதித்தார். சிம்பன்சிகளை கூண்டில் அடைத்து அதன் முன்னர் உணவை வைத்து அதை அடையும் வழிகளை சிக்கலாக்கிவிட்டார். முதலில் உணவை எளிதாக பெற முடியாமல் சிம்பன்சிகள் திணறின என்பது உண்மைதான். ஆனால் பிறகு நிலைமையை

கேனில் அடைக்கப்பட்ட உணவு கெட்டதா? - உண்மையா - உடான்ஸா

படம்
  உண்மையா, உடான்ஸா? கேனில் அடைக்கப்பட்ட உணவுகளை விட அவ்வப்போது சந்தையில் விற்கப்படும் காய்கறிகளை வாங்கி சாப்பிடுவதே சிறப்பு.  உண்மை அதெல்லாம் காசு கொட்டிக்கிடப்பவர்களுக்கு சரி. சாதாரண ஏழை மக்களுக்கு சரிபடாது. கேனில் உள்ள பழங்கள், காய்கறிகளை குறைந்த விலைக்கு சூப்பர் மார்க்கெட்டில் வாங்கலாம். சந்தையில் விற்கும் பழங்கள், காய்கறிகளின் விலை மாறிக்கொண்டே இருக்கும். அதை அந்தந்த நேரத்தில் வாங்குவது அனைவருக்கும் முடியாது. சத்துகள் விஷயத்தில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. புதிதாக பறித்து விற்கப்படும் காய்கறி, பழங்களைப் போவே கேனில் அடைக்கப்பட்ட பழங்களும் இருக்கும். சத்துகள் பெரிதாக இழக்கப்படாது. அதில் பதப்படுத்துவதற்காக சேர்க்கப்படு்ம் சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சோதித்துக்கொண்டு சாப்பிட்டால் நல்லது.  கொழுப்பு என்றாலே கெட்டதுதான். உண்மை 1940ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கொழுப்பு அதிகமான உணவுகளை எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு ஆபத்து. கொழுப்பு குறைவான உணவுமுறை இதய நோய்களை குறைக்கும் என ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டனர். 1980ஆம் ஆண்டு கொழுப்பு குறைவான உணவுமுறை மக்கள் அனைவருக்குமே நல்லது. இதயநோய், உடல் பரு

ஜென்ம எதிரிகளாக உள்ள விலங்குகள் காட்டும் பாசநேசத்திற்கான காரணம்- சீன உளவியல் ஆய்வாளர் குவோ

படம்
  அடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த தத்துவவாதி எட்வர்ட் கட்த்ரை என்பவரைப் பற்றி பார்ப்போம். இவர், உளவியல் பற்றி ஆய்வுகளைச் செய்தார். இவான் பாவ்லோவின் கிளாசிக்கல் கண்டிஷனிங் என்ற கோட்பாட்டை அடிப்படையாக எடுத்துக்கொண்டார். நாய்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மணியை ஒலிக்கவிட்டு உணவு வழங்கினால், மணி ஒலிக்கும்போது வாயில் எச்சில் சுரக்கத் தொடங்கிவிடும். இதுதான் ஆய்வின் முக்கியமான முடிவு. மனம் எப்படி பழக்கத்திற்கு அடிமையாகிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.  நாய்க்கு குறிப்பிட்ட செயலை செய்தால் உணவு கிடைக்கும் என்பதை தெரிய வைத்தால் பின்னாளில் என்ன செய்தால் உணவு கிடைக்கும் என்பதை அறிந்துகொள்கிறது என எட்வின் கூறினார். அதாவது ஒரே செயலை திரும்ப திரும்ப செய்வதால் அதன் குணநலன் உருவாவதில்லை. உணவுக்காக செய்யும் செயல்பாடுகள் மெல்ல உருவாகி மேம்பாடு அடைந்து குண இயல்புகளாக மாற்றம் அடைகிறது. இதற்காக ஒரே சோதனையை விலங்குகளிடம் மீள மீள செய்யவேண்டியதில்லை என்று உறுதியாக கருதினார்.  அடுத்து செய்திகளில் பார்த்த விஷயத்தைப் பார்ப்போம். உலகில் எப்போதும் பொருந்திப்போகாத விலங்குகள் உண்டு. பூனை, எலி, பூனை, நாய் ஆகியவை எப்போதும

கற்ற அறிவை நினைவில் வைத்து செயல்படும் விலங்குகள்! - எட்வர்ட் டோல்மனின் ஆய்வு

படம்
  அமெரிக்காவில் புகழ்பெற்ற உளவியலாளர் என எட்வர்ட் டோல்மனை உறுதியாக சொல்லலாம். இவர் முன்னர் நாம் பார்த்த உளவியல் ஆய்வாளர்களான தோர்ன்டைக், வாட்சன் ஆகியோரை விட வேறுபட்ட அறிவியல் அணுகுமுறையைக் கொண்டிருந்தார். இவர் குணநலன் சார்ந்த உளவியலை அறிவியல் அணுகுமுறை சார்ந்துதான் அணுகினார். கோணம், அறிவாற்றல், ஊக்கம் ஆகியவற்றை முக்கிய அம்சங்களாக எடுத்துக்கொண்டார். ஜெர்மனியில் கெசால்ட் உளவியல் முறையை கற்று பல்வேறு விஷயங்களை அறிந்துகொண்டார். இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து பர்பஸிவ் பிஹேவியரிசம் என்ற கோட்பாடை உருவாக்கினார். இதை தற்போது காக்னிட்டிவ் பிஹேவியரிசம் என அழைக்கின்றனர்.  டோல்மன், குறிப்பிட்ட நிபந்தனைகளை முன்வைத்து விலங்குகளின் மீது செய்யும் சோதனைகளை நம்பவில்லை. ''விலங்குகளுக்கு உணவை பரிசாக கொடுக்காமல் ஒரு வேலையை செய்ய வைத்தாலும் அவற்றால் குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்'' என்று கூறினார். இப்படி கற்ற அறிவை சேர்த்து வைத்து விலங்குகள் பின்னாளில் பயன்படுத்துகின்றன என்றார். எலிகளுக்கு சில புதிர்களை விடுவித்தால் உடனே உணவும், மற்றொரு குழு எலிகளுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு உண

இங்கிலாந்தில் உருவாகும் வறுமை நிலை!

படம்
 பெருகும் வறுமை, பட்டினியால் வாடும் குழந்தைகள்! இந்த நிலை மூன்றாம் உலக நாடுகளில் சகஜம்தான். இந்தியா போன்ற நாடுகளில் கண்ணை மூடிக்கொண்டு சேரிப்பகுதிகளை, சாக்கடைகளை, மனிதர்கள் மலத்தை பசியில் அள்ளி தின்பதை பார்க்காமல் கடப்பவர்கள் அதிகம். ஆனால் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளை காலனியாக்கிய ஒரு நாட்டில் பட்டினி, பசி தொடர்ச்சியாக உருவாகி வளர்கிறது என்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுதான் சமீபத்திய அதிர்ச்சி.  வீட்டை விட்டு வெளியே செல்லும்போது நடைபாதையில் உட்கார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மசூதியில், குருத்துவாராவில் இலவச உணவுக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வங்கிக்கான நன்கொடை, வறுமையில் இருப்பவர்களுக்கான உதவி தரவேண்டி பதாகைகள் நிறைய காணப்படுகின்றன. இதெல்லாம் இங்கிலாந்தில் நடந்து வரும் நிலை. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் உணவு, உடை, வீடு ஆகியவற்றோடு குளிருக்கு சமாளிக்க ஹீட்டர் வசதியும் தேவை. இல்லையெனில் உறைந்து இறந்துவிடுவார்கள். ஏஐ காலத்தில் வேலையிழப்பு நேர்ந்துவருகிறது. பிள்ளைகளுக்கு கொடுக்கவே உணவ

அமெரிக்காவில் வறுமையில் வாடும் குழந்தைகள்!

படம்
  அமெரிக்காவில் வறுமை விளிம்பில் தள்ளப்படும் சிறுவர்கள்! அமெரிக்காவில் வறுமை நிலையில் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது. இதை அமெரிக்க அரசின் மக்கள்தொகை அமைப்பு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு, 5.2 சதவீதமாக இருந்த வறுமை நிலையிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது 12.4 சதவீத்த்திற்கும் அதிகமாக உள்ளது. அமெரிக்க அரசும் கையைக் கட்டிக்கொண்டு சும்மாயிருக்கவில்லை. குழந்தை வரி கடன் திட்டம் என்பதை அமல்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்கள் தொழில் செய்து வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குழந்தைக்கு 3,600 டாலர்கள் வரியைக் கடனாக கொடுக்கிறார்கள். இத்தொகையை அரசு வரி வருவாயில் இருந்து விட்டுக்கொடுக்கிறது. இதன்மூலம் அரசுக்கு வருமானம் குறைந்தாலும் கூட குழந்தைகள் ஏழ்மை நிலையில் இருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்போதைக்கு இந்த திட்டம் மூலம எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை . ஆனால் எதிர்காலத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறது. தனிப்பட்ட மனிதர்களின் தோல்வி என்று இல்லாமல் அரசின் கொள்கை ரீதியான முடிவுகளே

செஃபின் உதவியாளர் உடலில் புகுந்து தான் இறந்துபோன காரணத்தை தேடும் இளம்பெண் ஆவி!

படம்
  ஓ மை கோஸ்டெஸ் கே டிராமா ராக்குட்டன் விக்கி   சன் என்ற ஹோட்டலில் நா போங் சன் என்ற இளம்பெண் கிச்சன் அசிஸ்ட்டெண்டாக வேலை செய்கிறாள். அவள் அந்த வேலைக்கு வர காரணமே செஃப் காங் வூ சன்தான் அவரை அவள் தனது குருவாக காதலனாக பார்க்கிறாள். ஹோட்டலில் வேலை என்றால் பாத்திரங்களை கழுவி வைப்பதுதான். அவள் வேலையில் தூங்கி வழிகிறாள். அதற்கு காரணம், அவளால் பேய்களை பார்க்க முடியும் என்பதுதான். தற்கொலையால் இறந்த பேய் ஒன்று ஷின் சூன் ஆ, நா போங் சன்னின் உடலுக்குள் புகுகிறது. தனது இறந்த காலத்தை தனக்கு என்ன நடந்தது என்பதை அறிய முயல்கிறது. இதனால் நா போங்கின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை தொடர் விவரிக்கிறது. இந்த கொரிய தொடர், சற்று ஜாலியாக பார்க்க வேண்டியது என்பதால் பதற்றம் கொள்ளவேண்டாம். சமையல் சார்ந்த சாகச தொடர்.   செஃப் காங் வூ சன், அவனது தங்கை இயுன் ஜீ ஆகிய இருவருமே பிறரால் கேலி கிண்டல செய்யப்பட்டு உருவானவர்கள்தான். அதிலும் காங் , சிறுவயதில் இருந்தே தனியாக இருந்து வளர்ந்தவன். அவனது அம்மா வேலைக்கு சென்று வந்தவள் என்பதால், அவளது கையில் சாப்பாடு கூட சாப்பிட்டதில்லை. எனவே, ரெடிமேட் நூடு

ஞாபகசக்தியை மேம்படுத்திக்கொள்ள உதவும் வழிகள் சில!

படம்
    மனித கால்குலேட்டர்களுக்கு இன்று பெரிய மரியாதை கிடைக்கப்போவதில்லை. அந்தளவுக்கு சூப்பர் கணினிகள் வளர்ந்துவிட்டன. கூகுளின் தேடலுக்கு பார்ட் எனும் செயற்கை நுண்ணறிவு உதவுகிற காலம் இது. இந்த காலத்திலும் சில விஷயங்களை மூளையில் நினைவு வைத்துக்கொண்டு தேவையானபோது கூறுகிற மனிதர்கள் ஆச்சரியம் தருவதோடு சற்று பொறாமையையும் ஏற்படுத்துகிறார்கள். உணவகங்களில் மெனு கார்டை நாம் பார்த்துக்கொண்டிருக்க சிறப்பு உணவுகளை கூறிவிட்டு, அதன் தயாரிப்பு முறைகளை படபடவென ஒப்பிப்பவர்களை பார்த்தால், உணவை விட அவர் எப்படி இத்தனை விஷயங்களை நினைவில் கொள்கிறார் என்று தோன்றும். ஏனெனில் பலருக்கும் நேற்று காலையில் என்ன சாப்பிட்டோம் என்பதே அண்டன் பிரகாஷ் கட்டுரையை புரிந்துகொள்வது போல கடினமாக, மீள நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது. தேவையானபோது குறிப்பிட்ட விஷயங்களை நினைவில் இருந்து மீள எடுத்து பேசி கைதட்டல் வாங்குவது என்பது பெரிய சாமர்த்தியம். சற்று பொறாமை இருந்தாலும் கைதட்டிவிடுவதுதான் பெரிய மனுஷன் செய்யும் வேலை. மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் பகுதிதான் நினைவுகளை உருவாக்குகிறது. அதுமட்டும்தானா என்றால் அமிக்டால என்ற

வேலையின்மையால் சேவைப் பணியாற்றும் இளைஞர்களை அடிமையாக நடத்தும் சேவை நிறுவனங்கள்!

படம்
  இன்றைய காலம் சூப்பர் ஆப்களின் காலம். தினசரி தேவைகள் அனைத்தையும் ஆப் மூலம் ஆர்டர் செய்து பெறலாம். தேவை கையில் காசு மட்டும்தான். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சிறு, குறு நகரத்தில் இருந்தும் பொருட்களை ஆர்டர்   செய்து பெற முடியும். இணையமும் வளர்ந்திருக்கிறது. சரக்கு போக்குவரத்தும் அந்தளவு வேகமாகியிருக்கிறது.   இந்தியாவின் சில்லறை வர்த்தம் 900 பில்லியன் டாலர்கள் எனில் அதில் இ மார்க்கெட்டின் பங்கு தற்போதைக்கு 6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 200 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஏதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இப்போதைக்கு இது குறைவுதான் என்றாலும் 2027ஆம் ஆண்டு 500 மில்லியன் மக்கள்   இ மார்க்கெட்டிற்கு நகர்ந்து சந்தை பங்களிப்பை 170 பில்லியனாக அதிகரிப்பார்கள் என வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். இ மார்க்கெட் இப்படி பெரிதாவது பெரு நிறுவனங்களை அதில் நுழைய வைக்கும். இதனால் சேவை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கருத்துகள் வெளியாகின்றன. ஏற்கெனவே ரிலையன்ஸ், டாடா ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்கிவிட்டன. இதன்விளைவாக பொருட்களின் விலை கட்டுப்பாடு என்பது பெருநிறுவனங்களில் கைக்கு

மக்கள்தொகை பெருகிய உலக நாடுகளின் நகரங்கள்!

படம்
    அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்கள் டோக்கியோ ஜப்பான் 37.34 மில்லியன் நாட்டின் முக்கியமான பொருளாதார அரசியல் தலைநகரம். பிறப்பு சதவீதம் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மக்கள்தொகை பெருக்கம் என்ற அந்தஸ்தை 2030இல் இழக்க வாய்ப்புள்ளது. டெல்லி இந்தியா 31.18 மில்லியன் முகலாயர்களின் கட்டுமானங்களைக் கொண்ட பழைய நகரம்.   பெயர்களை மாற்றி வைத்தாலும் வரலாற்றை அழிக்க முடியாது அல்லவா?   தொன்மைக் காலத்தில் இருந்தே அரசின் அதிகாரத் தலைநகரம். ஷாங்காய் சீனா 27.80 மில்லியன் சீனாவின் வணிகம் சம்பந்தமான அனைத்து விஷயங்களும் இந்த நகரில்தான் நடைபெறுகின்றன. விண் முட்டும் கட்டிடங்கள், பல்கலைக்கழகங்கள் என கட்டுமானங்களுக்கு, வணிகத்திற்கு பெயர் பெற்ற நகரம். சாவோ பாலோ பிரேசில் 22.24 மில்லியன் புனிதர் பாலின் பெயர் வைக்கப்பட்ட நகரம். இங்கு 111 இனக்குழுக்கள் வசிக்கின்றனர். மெக்சிகோ சிட்டி மெக்சிகோ 21.92 மில்லியன் சியரா மாட்ரே மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள நகரம்.   கடலுக்கு மேலே 2,240 மீட்டர் உயரத்தில் உள்ளது.   டாக்கா வங்கதேசம் 21.74 மில்லியன் கங்கை ஆற்றுப்பகுதியில் அமைந்த

தெரிஞ்சுக்கோ - கரடிகள்

படம்
  தெரிஞ்சுக்கோ – பழுப்பு நிற கரடிகள்   கரடிகள் தனிமையாக வாழ்பவை. மரம் ஏறும் திறன் பெற்றவை. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா தவிர பிற பகுதிகளில் கரடிகளைப் பார்க்கலாம். கரடிகளில் 8 இனங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில் வாழ்ந்த கரடி இனம் ஒன்பதாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கரடி இனம் அழிந்து போனது. துருவக்கரடிகள் வேட்டையாடுவதில் வெற்றிபெறும் சதவீதம் இரண்டு சதவீதத்திற்கும் குறைவு. தென் அமெரிக்காவில் வாழும் ஸ்பெக்டேக்ல்டு பியர் எனும் கரடி இனம், பழம், தாவரங்களை மட்டுமே சாப்பிட்டு வாழ்கிறது. இதன் உணவில் 5 சதவீதம் மட்டுமே இறைச்சி உண்டு. ஜெயண்ட் பாண்டா, தனது உடல் எடையில் 38 சதவீத அளவுக்கு மூங்கில்களை உண்கிறது. இப்படி சாப்பிடுவதை ஒரு நாளில் 10-16 மணிநேரம் செய்கிறது. உலகில் தற்போது 26 ஆயிரம் துருவக்கரடிகள்தான் உயிரோடு உள்ளன. ஸ்லாத் கரடி இனம், இந்தியா, இலங்கையில் வாழ்கிறது. இந்த கரடி இனம், தனது குட்டிகளை ஒன்பது மாதம் வரையில் தனது முதுகில் சுமந்து பராமரிக்கிறது. சன் பியர் எனும் கரடி இனம், 25 செ.மீ நீள நாக்கைக் கொண்டது. எதற்கு இந்தளவு நீளமான நாக்கு? தேன்கூட்டிலிருந்து தேனை