இடுகைகள்

உணவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திராகாந்தி சொன்னவை....

படம்
 இந்திராகாந்தி சொன்னவை.... 1.சுதந்திரமடைந்த நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது நாட்டின் ஒற்றுமை, பன்மைத் தன்மையிலான மதம், இனக்குழு, மொழி ஆகியவற்றோடு ஜனநாயகம் அப்போதுதான் பிறந்து அதன் வேரும் வளர்ந்து வந்தது. 2.இந்தியா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் அளித்து வந்துள்ளது. 3.மக்கள் மீது வரம்பற்ற நம்பிக்கை கொண்டுள்ள பாரம்பரியத்தை மகாத்மா காந்தி மற்றும் என்னுடைய தந்தை அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வழியில், இந்திய மக்கள் எனக்கு வலிமை, நம்பிக்கையைத் தருகிறார்கள்.  4.நம் முன் உள்ள சவால்களை நேரடியாக எதிர்கொள்வோம். நாம் செய்த தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சிக்கல்களைத் தீர்ப்போம். 5.வேளாண்மை துறையில் அதிக உற்பத்தி மட்டுமே நமது நாட்டின் உணவு பிரச்னையைத் தீர்க்க முடியும்.  6. கண்டுபிடிப்பு, மேம்பாடு, சூழலுக்கு பொருத்தம், பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே நமது நாட்டின் வளர்ச்சி அமையும். 7.அடிப்படை தொ...

நோக்கத்திற்கும் செயலுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது - இந்திராகாந்தி உரை

படம்
முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர், நாடு சுதந்திரம் பெற்ற நாளில் ஆயிரக்கணக்கானோர் சுதந்திரநாள் வாக்குறுதியை ஆன்ம பூர்வமாக கூறினர். அந்த வரலாற்று நிகழ்வின்போது பல்லாயிரம் பேர்களில் ஒன்றாக என்னுடைய குரலும் ஒலித்தது. 1947ஆம் ஆண்டு, எடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது. ஜனநாயகம், மதச்சார்பற்ற புதிய வளர்ச்சி பெறும் சக்தி உருவானதை உலகம் அறிந்துகொண்டது. சுதந்திரமடைந்த நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது நாட்டின் ஒற்றுமை, பன்மைத் தன்மையிலான மதம், இனக்குழு, மொழி ஆகியவற்றோடு ஜனநாயகம் அப்போதுதான் பிறந்து அதன் வேரும் வளர்ந்து வந்தது. பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டு, நாட்டு மக்களின் எதிர்காலத்தை பாதுகாத்து முதலடியை எடுத்து வைத்தோம். இந்தியா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் அளித்து வந்துள்ளது. அமைதியோடு பல்வேறு நாடுகளுக்கு இடையில் நட்புணர்வை பிரசாரம் செய்து ஒத்திசைவை உருவாக்கும் விதமாக இந்தியா செயல்பட்டு வந்துள்ளது. திரு. லால்...

தி மெக்டொனால்டைசேஷன் ஆப் சொசைட்டி - இன் டு தி டிஜிட்டல் ஏஜ் = உலக கலாசாரத்தையே மாற்றிப்போட்ட ஒற்றைக்கடை!

 The McDonaldization of society -  into the digital age --  George Ritze தி மெக்டொனால்டைசேஷன் ஆப் சொசைட்டி - இன் டு தி டிஜிட்டல் ஏஜ் ஜார்ஜ் ரிட்ஸ்சர் சேஜ் ப.368 மெக்டொனால்ட் என்பது அமெரிக்காவிலுள்ள துரித உணவகம். இந்த கடை முதன்முதலாக பிரான்சைஸ் என்ற வணிக உத்தியை வெற்றிகரமாக பயன்படுத்தி வணிக வெற்றியைப் பெற்றது. இன்று அமெரிக்காவின் முக்கியமான அடையாளம் மெக்டொனால்ட் உணவகம். இதை தொடங்கியவர்களை விட வாங்கி விரிவுபடுத்தியவரே உலகளவில் புகழ்பெற்றார். அதற்கு அவர் மேற்கொண்ட பல்வேறு நவீன முறைகளே காரணம்.  இந்த நூல் மெக்டொனால்ட் கடை எப்படி உணவு வணிகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்று கூறவில்லை. மெக்டொனால்ட் என்ற ஒற்றைக் கடை அமெரிக்க சமூகத்தில் உறவில், உணவில், தொழிலில், கல்வியில், தனிப்பட்ட பொருளாதாரம் என பல்வேறு வகையில் ஏற்படுத்திய பாதிப்பு, செல்வாக்கு பற்றி நூலாசிரியர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள ஜார்ஜின் நூல், அவர் எடுத்துக்கொண்ட ஆய்வு மையப்பொருள் காரணமாக முக்கியத்துவம் பெறுகிறார்.   மெக்டொனால்ட் உணவுகளை ஒருவர் உட்கார்ந்த...

நான்கு இட்லி ஒரு உளுந்துவடை - பேக்கேஜ் உணவுக்கடைகளின் வணிக உத்திகள்

 நான்கு இட்லி ஒரு உளுந்துவடை திருவண்ணாமலை செல்வது என்பது அங்கு குடிகொண்டுள்ள தெய்வத்தை பார்க்க அல்ல. அப்படி நிறையப் பேர் நினைப்பார்கள். அந்த தெய்வத்தை வழிபடும் அளவுக்கு உடலில் தெம்பு இல்லை. எனவே, அந்தப்பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. பதிலாக மதுரை காரியாப்பட்டியிலிருந்து புலம் பெயர்ந்து திருவண்ணாமலையில் வாழும் நண்பரை பார்க்க சென்றேன். பெரிதாக ஒன்றும் இருக்காது. அவருடன் பேசுவது, நான்கைந்து கடைகளில் இட்லி, புரோட்டா தின்பது, சில நூல்களை வாசிப்பது அவ்வளவுதான் திருவண்ணாமலைக்கான பயணம் என்பது. பெரிய வேறுபாடு ஏதும் இருக்காது.  சிலசமயங்களில் ஆன்மிக நண்பர், வெளிநாட்டு பக்தர்களுக்கு புகைப்படம், வீடியோ எடுத்து தருவது என ஒப்புக்கொண்டு வேலை செய்வதுண்டு. அப்போது தன்னைப் பார்க்க வரும் என்னைப்போல ஆசாமிகளை தனது உதவியாளர் ஆக்கிக்கொண்டுவிடுவார். அப்புறம் என்ன ஏற முடியாத மலைகளில் பேண்டும் சட்டையுமாக தொங்கிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். இப்படி ஒருமுறை கந்தாஸ்ரமம் செல்ல முயன்றபோது நேரிட்ட இடர்ப்பாடு சொல்ல முடியாத கஷ்டத்தை உடலுக்கும் மனதுக்கும் கொடுத்தது.  முஸ்லீம்கள் தாங்கள் வாழும் நாடு எதுவாக இருந...

பத்திரிகையாளர் த சக்திவேல் - மன அழுத்தம் குறைத்த மனிதர்

 பத்திரிகையாளர் த சக்திவேல் - மன அழுத்தம் குறைத்த மனிதர் சக்திவேல் அவர்களை நான் அடிமாட்டு சம்பளம் வாங்கிக்கொண்டு நாளிதழ் குழுமத்தில் பணியாற்றும்போது சந்தித்தேன். பொதுவாகவே அந்த நிறுவனத்தில் கலாசாரம் என்னவெனில், வெளி ஊடகம் என்றால் வரவேற்பு, விருந்து சாப்பாடு என மரியாதை அமோகமாக இருக்கும். புதிதாக வருபவர்கள் என்றால் ச்சீ, தூ போ அங்கே உட்கார் என்பார்கள். இப்படியான கலாசாரத்திற்கு அங்கு வேலை செய்தவர்களும் முக்கிய காரணம். பலரும் நிறுவன அடிமைகள். அதாவது நாளிதழ் குழுமம் ஆதரித்த கட்சிக்கு விசுவாசமாக இருந்து பயனை அனுபவிக்க துடித்த கூட்டம். பக்க வடிவமைப்பாளர்கள் பலரும் கல்வி அறிவற்றவர்கள். தேநீர், காபி கொடுக்கும் பணியாளர்களாக இருந்து வடிவமைப்பாளர்களாக மாறியவர்கள். தொழில் இப்படி மேம்பட்டாலும் அவர்களின் குணம் என்பது தெருவோரத்தில் நின்று சண்டைபோடும் ஆட்களைப் போலத்தான் இருக்கும். படித்தவர்கள், நாகரிகமானவர்கள் என யாரை அடையாளம் கண்டாலும் தாழ்வுணர்ச்சியில் வெந்துபோவார்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மரியாதைக் குறைவாக பேசுவார்கள்.  அவதூறு, வதந்தி பரப்புவார்கள். முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள்...

சீனாவின் பன்மைத்தன்மை கொண்ட உணவு கலாசாரத்தை சுவாரசியமாக விளக்கும் நூல்!

படம்
  A History of Food Culture in China By Rongguang Zhao Translated by Gangliu Wang and Aimee Yiran Wang 2015 இந்த நூல், சீனாவில் உள்ள உணவு வகைகள், அதன் தெற்கு, வடக்கு கலாசார வேறுபாடுகள், தின்பண்டங்கள், அறுசுவை பதார்த்தங்கள், மதுபான வகைகள், வெளிநாட்டு உணவு வகைகள், கலாசாரம் ஏற்படுத்திய தாக்கம், பல்வேறு நாடுகளுக்கு மன்னர் அனுப்பி வைத்து பிரதிநிதிகள் சேகரித்து வந்த அறிவியல், சமையல் தொடர்பான அறிவு என ஏராளமான விஷயங்களைப் பற்றி விளக்குகிறது.  நூலில் பல்வேறு உணவு பதார்த்தங்களுக்கான பெயர்களை சீன மொழியில் வாசிக்க முடிவது மகிழ்ச்சி. ஒரு தின்பண்டத்தை குறிப்பிட்ட திருவிழாவுக்கென தயாரிக்கிறார்கள். அதன் பின்னாலுள்ள கதை. அதில் மையமாக உள்ளது ஆணா, பெண்ணா என ஏராளமான விஷயங்களை நூலாசிரியர் விளக்கி கூறுகிறார். அவற்றை வாசிக்கும்போதே ஆச்சரியமாகிறது. உண்மையில் சீனாவில் உணவு கலாசாரம் ஒற்றைத்தன்மையானது அல்ல. பன்மைத்தன்மை கொண்டது. அந்த கலாசாரம், மேற்கத்திய உணவு, மதுபானங்களைக் கூட உள்ளே ஏற்றுக்கொண்டு வளர்ந்து வருகிறது. நூலின் இறுதிப்பகுதியில் பிரெஞ்சு நாட்டினர் ஆண்ட பகுதிகளில் இருந்த உணவுப்பழக்கவழக்கம், மத...

பேரிடர் காலத்தில் உயிர்பிழைக்க தங்குமிடத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்!- ஆலோசனைகள்

படம்
  இயற்கை பேரிடர்களால் அல்லது இனவெறி, நிறவெறி, மதவாதிகள் செய்யும் கொடூர தாக்குதலால் சொத்துக்கள் அழிந்துவிட்டதா? வீடு புல்டோசரால் இடித்து தள்ளப்பட்டுவிட்டதா, சிறுபான்மையினர் என்பதால் காவல்துறை அடித்து துன்புறுத்துகிறதா, தேசதுரோக வழக்கு போடப்படுகிறதா இவை அனைத்துமே பேரிடர்கள்தான். அரசு உருவாக்குகிற பேரிடர்கள். இயற்கை பேரிடர்களை விட அரசு உருவாக்கும் பேரிடர்களை சமாளிப்பது கடினம். ஆபத்து வரும் நேரத்தில் முன்னே உதவி பெற்றவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள். எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்காது. சுற்றியுள்ளவர்களும் சால்ஜாப்பு சொல்வார்கள். இப்படியான நிலையும் பேரிடர்தான். இந்த சூழ்நிலையில் நீங்களும் உங்கள் குடும்பமும் தெருவில் நிற்காதபடி செல்ல பாதுகாப்பான்ன இடம் அவசியம். அதை குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அறிந்திருக்காமல் இருந்தால் நன்று. அனைத்து நாடுகளிலும் அவசர கால எச்சரிக்கை முறைகள் உண்டு. மூடநம்பிக்கை கொண்ட மாட்டை வழிபடும் இந்தியா போன்ற மதவாத நாட்டை விட்டுவிடுவோம். எப்போதும் போல அமெரிக்காவை கையில் எடுத்துக்கொள்வோம். அங்கு அவசரநிலையை நூறு நிமிடங்களில் அறிந்து மக்களுக்கு அதிபர் அறிவித்துவிட முடிய...

கலவரம் போர் என இரண்டிலும் தப்பி பிழைப்பது எப்படி?

படம்
எப்போதுமே ஆபத்து நேரும் என விழிப்புணர்வோடு இருங்கள் என ஹூவாய் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிறுவனர் ரென் கூறியுள்ளார். அப்படியான விழிப்புணர்வு சாதி, மதத்தால் உடைந்து நொறுக்கிப்போயுள்ள பெயரளவு ஜனநாயகம் கொண்ட இந்தியாவுக்கும் பொருந்தும். இங்கு எப்போது எந்த மேல்சாதிக்காரன், பழங்குடிகளை, தாழ்த்தப்பட்டவர்களை, தலித்துகளை தீ வைத்து எரிப்பான், அந்த இன பெண்களை வல்லுறவு செய்து கொன்று மரத்தில் தூக்கிக்கட்டுவான் என்று தெரியாது. பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்குவது இந்திய காவல்துறையின் தனிச்சிறப்பு. இப்படியான பண்பட்ட தேசத்தில் நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே உங்களைக் காத்துக்கொள்ள முடியும். கூடவே சொத்துகள், குடும்பம் ஆகியவையும் அழியாமல் காக்கலாம். வாட்ஸ்அப் வழியாக மதவாத அரசு சுயமாகவே தனித்தனி குழுக்களை வைத்து போலிச்செய்திகளை பரப்பி வருகிறது. எனவே, இதைக்குறித்து அறிந்து கொண்டு கலவரத்தில் சிக்காமல், வீடு, தொழிற்சாலை, கடை எரிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இந்தியாவில் இயற்கை பேரிடர்களை, மதவாதிகள் உருவாக்கும் பேரிடர்களே அதிகம். எனவே, விழிப்போடு மீதமுள்ள நேர்மையான ஊடகங...

பேரிடர் காலத்தை எதிர்கொள்ள எப்படி தயாராவது? பொருட்கள், ஆலோசனைகள்

படம்
  பிழைத்திருப்போம் பேரிடர் காலங்களில் உயிர் தப்பிப் பிழைப்பது எப்படி? வடக்கு நாட்டில் தென்னாட்டில் உள்ளவர்கள் பற்றி தெரியாது. தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. அதனால் யாருக்கென்ன நஷ்டம்? என வாழ்கிறார்கள். தென்னாட்டினர். வடநாட்டினர் பற்றி தெரிந்ததால் அவர்களின் மோசடிகளை அறிந்து பத்திரமாக வாழ்கிறார்கள். ஆக, தகவல்களை முடிந்தளவு சேகரித்து வைத்துக்கொள்வது நன்மைதான். அது வளர்ச்சிக்கு உதவும், குறிப்பாக ஆபத்துக்காலங்களில் தட்பவெப்பநிலை தகவல், வானிலை தகவல், ஏன் கல்லூரிகள் நடத்தும் சமுதாய வானொலி கூட பயன் தரும்தான். சில நாடுகளில் வானிலைக்கென தனி வானொலி அலைவரிசையே இயங்குகிறது. அந்தளவு இந்தியா வளரவில்லை என்பதால், உள்ளூர் அளவில் சமூக வலைதளத்தில் பகிரும் தகவல்களை பார்த்து எச்சரிக்கையாக இருக்கலாம். பேரிடர், மதக்கலவரம், மதவாதிகள் ஏற்படுத்தும் வன்முறை, கொள்ளை ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவும் தகவல்கள் உதவும். உலகத்தைப் பற்றி அறிவது சிறப்பு. அப்படி இல்லையென்றால் உங்கள் ஏரியா பற்றியேனும் அறிவது நல்லது. அப்போதுதான் திடீரென லாக்டௌன் என்று அரச தகராறு செய்தால் முன்னமே பாதிப்பிலிருந்து நம்மையும் குடும்பத்தினர...

டைம் - செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் - இஸ்மானே எலோஃபி, பேராசிரியர் ரிச்சர்ட் தாம்சன்

படம்
    டைம் - செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் இஸ்மானே எலோஃபி உலகமெங்கும் மக்கள் உணவு தட்டுப்பாட்டால் தடுமாறி வரும்போது, சிஜிஐஏஆர் அமைப்பின் வழியாக உழைத்து புதிய வழிகளை தேடியவர் இஸ்மானே. வறுமையைக் குறைக்க, உணவுப் பாதுகாப்பை அதிகரிக்க, ஊட்டச்சத்துக்களை கூட்ட முயன்றார். இவரின் வழிகாட்டுதலில் அந்த அமைப்பு மூலம் வளமிழந்த மண்ணை மீட்பது, ஆரோக்கியமான முறையில் பயிர்களை வளர்ப்பது ஆகிய பணிகள் சிறப்பு அடைந்தன. இஸ்மானே, முன்னர் ஐ.நாவின் உணவு பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றியவர் என்பதால், அவருக்கு புதிய பணிவாய்ப்பில் இருந்த சவால்கள் தெரியும், எனவே, அவற்றைத் தீர்க்கும் பல்வேறு சிந்தனைகளைக் கொண்டிருந்தார். உலகம் முழுக்க உணவு விநியோகம் என்பது நம்பகத்தன்மையோடும், இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கத்திலும் அமைந்துள்ளது.  இதன் விளைவாக, எதிர்காலத்தில் எந்த குழந்தையும் பட்டினியோடு இருக்காது எனும் நம்பிக்கை உருவாகிறது. -பில்கேட்ஸ் ismahne elouafi ----------------------------------------------- richard thompson ரிச்சர்ட் தாம்சன் கடல் உயிரியலாளரான ரிச்சர்ட், 1993ஆம் ஆண்டு கடல் அலைகளில் சிறிய பிளாஸ்டிக்...

மதவாத சமூகம் புறக்கணித்த தலித்துகளின் சமையலறை!

படம்
 தலித் கிச்சன்ஸ் ஆப் மராத்வடா சாகு படோல் ஆங்கிலம் ஹார்பர் கோலின்ஸ் இந்த நூலில், எழுத்தாளர் சாகு படோல் மும்பையில் உள்ள தலித் மக்களின் வாழ்க்கை, சாதிமுறை, கொண்டாடும் பண்டிகைகள், நம்பிக்கை, உணவுமுறை, அதை செய்வது எப்படி என ஏராளமான தகவல்களைக் கொண்டு விளக்கியுள்ளார். பெரும்பாலும் அசைவ உணவுகள்தான். சைவ உணவு செய்முறைகளும் இறுதியில் உள்ளன. அதை தவிர்த்துவிடுவோம். அசைவ உணவுகளை எப்படி சமைக்கிறார்கள் என்பதே நம்மை பெரிதும் ஆச்சரியப்படுத்துகிறது. அசைவ உணவு செய்முறைகளில் பலவும் மிகச்சில பொருட்களை வைத்தே செய்கிறார்கள். நிறைய அசைவ பொருட்களை சமைக்க நீர் கூட பயன்படுத்தப்படுவதில்லை. சட்டியில் கறியை போட்டு அதை சூட்டில் வறுப்பதே பெரும்பாலான உணவு செய்முறையாக உள்ளது. விலங்கின் ரத்தத்தை ஊற்றி அதை வேக வைக்கும் முறை தொடங்கி, தலித்துகளின் உணவுமுறை பற்றிய வியப்பு தொடங்குகிறது. மும்பையில் உள்ள சாதிமுறை, சாதி மேலாதிக்கம், தெய்வ வழிபாடு பற்றியும் விரிவாக கூறியுள்ளார். அவர்களின் வழிபாட்டில் தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் தெய்வ கதைகளும் உள்ளன. சாதிமுறையில் தலித்துகளுக்கும் நிறைய பிரிவினைகள் உள்ளன. நூலில், மக...

காளான் வழியாக கல்லீரலை பாதிக்கும் நச்சு!

படம்
    அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி உணவு நச்சில் பாக்டீரியாவின் பங்குண்டா? ஏன் இல்லாமல்... குளோஸ்டிரிடியம் பாட்டுலினம் என்ற பாக்டீரியா உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஒரு கிராம் நச்சு மூலம் பதினான்கு மில்லியன் வயது வந்தோரை கொல்ல முடியும். நீரை நூற்று இருபது டிகிரி செல்சியசில் கொதிக்க வைத்தால் மட்டுமே பாக்டீரியாவை அழிக்க முடியும். உடல் செயலிழப்பு, வாந்தி பிறகு இறப்பு வந்து சேரும். எனவே கேன் உணவுகளை கவனமாக பார்த்து மேற்கு நாடுகளின் தர கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டதா என பாருங்கள். உருளைக்கிழங்கை தாக்கும் முக்கியமான கிருமி எது? பைடோதோரா இன்ஃபெஸ்டான்ஸ்  என்ற கிருமி, உருளைக்கிழங்கை தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. ஐரிஸ் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு இடம்பெற, இக்கிருமி முக்கிய காரணம். 1845-49 ஆகிய காலகட்டத்தில் மட்டும் கிருமி ஏற்படுத்திய பஞ்சத்தால் நான்கு லட்சம் மக்கள் பட்டினியால் இறந்துபோனார்கள். ஏராளமானோர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டனர். பூஞ்சைகளை விளக்கமாக வரைந்த குழந்தை நூல் எழுத்தாளர் யார்? பீட்ரிக்ஸ் பாட்டர், பூஞ்சைகளைப் பற்ற...

வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு!

படம்
    வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு! மதவாத நாடான இந்தியாவில் எப்போது  வேண்டுமானாலும் கலவரங்கள், கும்பல் வல்லுறவு, இந்து குண்டர்கள் கொள்ளை என எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இதுபோல பருவ காலங்களில் நடைபெறும் இயற்கை பேரிடர்களும் அதிகரித்து வருகிறது. அப்படியான சூழலில் ஒருவர் தன்னை எப்படி காத்துக்கொள்வது என்று பார்ப்போம். உணவு, மருத்துவ சிகிச்சைக்கான பொருட்கள், போகும் இடம், வழிப்பாதை ஆகிய மூன்று விஷயங்கள் முக்கியம். கோவிட் வந்தபிறகு நிறையப்பேர் தனியாக இஎம்ஐ கட்டியேனும் வண்டி வாங்கிவிட்டார்கள். நமது மக்கள், நாம் செத்தாலும் கூடவே நான்கு பேரை இழுத்துச்செல்லவேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டவர்கள். தும்மும்போதும் இருமும்போதும் கூட கைக்குட்டை பயன்படுத்த மறுப்பவர்கள். எனவே, உயிர்பிழைக்கவேண்டிய நேரத்தில் நீங்கள் பிறரது வாகனங்களை எதிர்பார்க்க கூடாது. எந்தளவு வேகமாக செல்கிறீர்களோ, அந்தளவு நல்லது. தாமதம் செய்தால், சாலையில் கூட்டம் சேர்ந்துவிடும். அப்போது நீங்கள் என்ன முயன்றாலும் வேகமாக செல்லமுடியாது. அவரவருக்கு அவரவர் உயிர், சொந்தம், பிள்ளை குட்டி கருப்பட்டிதானே ஐயா... வயதானவர்கள், குழந்தைகள் ...

வன்முறைதான் எங்கள் மொழி!

படம்
  வன்முறை ஒரு தொடர்சங்கிலியைப் போல சமூகத்தை இணைத்துள்ளது. வன்முறைக்கு ஆதாரமே, அரசுதான். சட்டப்பூர்வமாக வன்முறையை அனைவரும் ஏற்கும்படியாக மாற்றுகிறது. அமைதியாக போராடுபவர்களின் மீது துப்பாக்கியால் சுடுவது, லத்தியால் அடித்து துன்புறுத்துவது என அரசு இயங்குகிறது. மக்கள் அதிகாரம் என்பது பலாத்காரம், வலுக்கட்டாயம் இல்லாத அரசில்லாத சமூகம். அங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். மக்கள் சுதந்திரமாக, விடுதலையாக இருக்கலாம். ஒருநாள் நீங்கள் காலையில் எழும்போது உங்கள் நாட்டில் அரசு அமைப்பு இல்லையென்று தெரிகிறது. உடனே என்ன தோன்றும்? அதுநாள் வரை கொல்லலாம் என்று நினைத்த சித்தப்பா மகனை உடனே கொன்று போடலாம் என்றா? இல்லை அது மனச்சிதைவுக்கு உள்ளானவர்களின் செய்கை. இயல்பான மனிதர்கள் அப்படி இயங்க மாட்டார்கள். அரசு இல்லையென்றால், நிறைய கொள்ளை, கொலை நடக்குமோ என்று கூறுவார்கள். கொள்ளை, கொலை செய்பவர்கள் பெரும்பாலும் மனச்சிதைவுக்கு உட்பட்டவர்கள். அதைச் செய்யும்போது ஒருவகை மகிழ்ச்சியை உணர்கிறார்கள். எனவே, அத்தகைய செயல்களை செய்கிறார்கள். அரசு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் கொலை, கொள்ளை என்பது நடந்துகொண்...

விரைவில்... பேய்ப்பாலை மின்னூல் வெளியீடு

படம்
 

பாயும் பொருளாதாரம் - பொருளாதாரத்தை அறிந்தால், பொருளாதார வல்லுநர்கள் நம்மை ஏமாற்றுவதைத் தடுக்கலாம்!

படம்
              பாயும் பொருளாதாரம் பொருளாதாரம் இந்தியாவில் ரூபாய் மதிப்பு தடுமாறிக்கொண்டிருக்கிறது. வேலையிழப்பு பரவலாகி வருகிறது. விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் உண்ணாவிரதம் கூட இருக்கிறார்கள். எதேச்சதிகார ஆட்சியில் அகிம்சை எப்படி எடுபடும் என்று தெரியவில்லை. சுயதொழில் செய்பவர்கள் நிலைமை எப்படியோ, ஆனால், மாதச்சம்பளக்காரர்களிடம் பறிக்கும் வரிக்கொள்கை புதிதாக அமலாகிவிட்டது. மாணவர்கள் பயன்படுத்தும் பள்ளி நோட்டு புத்தகங்களுக்கு சேவை வரி பதினெட்டு சதவீதம் என்றால், பணக்காரர்களுக்கு அத்தியாவசியமான வைரத்திற்கு ஐந்து சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவ்வளவு வரி தீவிரவாதம் அதிகரித்தாலும் கல்வி, மருத்துவம், தங்குமிடம், உணவு என பலவற்றுக்கும் அரசு எந்த பொறுப்பும் ஏற்காது. இதையெல்லாம் தனியார் நிறுவனங்களிடம் தள்ளிவிட்டுவிடுகிறார்கள். பொருளாதாரம் பற்றி அறிந்துகொண்டால் அதைப்பற்றிய விழிப்புணர்வைப் பெற்று நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும். அதைப்பற்றிய அறிமுகத் தொடர் இது. பொருளாதாரம் என்றால் வங்கிகள், பங்குச்சந்தை, அப்புறம் வினோதமான வரைபடங்கள் என ட...

வணிக சந்திப்பிற்கு உணவகங்களை தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன?

படம்
        இன்று வணிக ரீதியாக கூட்டாளிகளை, ஒப்பந்தக்காரர்களை விடுதியில் சந்திப்பது இயல்பாகிவிட்டது. சிலர் எழுத்தாளர்களுக்கென தனி கபே நடத்துகிறார்கள். காபி கடைகளில் இணைய வசதியைக்கூட வழங்குகிறார்கள். வெளிநாடுகளில் நேர்காணல்களை நடத்துகிறார்கள். இப்படியான சூழ்நிலையில் ஓரிடத்தில் முக்கியமான நபரை சந்திக்கச் செல்கிறீர்கள். அப்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும். ஹோட்டல்களில் முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது. உரிமையாக குறிப்பிட்ட மேசையைக் கேட்கலாம். அங்கே உட்கார்ந்து பேசிவிட்டு சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுத்துவிட்டு வரலாம். பதிவு  செய்யவில்லை என்றால் சந்திப்பை உகந்ததாக அமைய வாய்ப்பு குறைவு. ஹோட்டல்கள், உணவு, பணியாளர்களது நடத்தை பற்றிய மதிப்பீடுகளை இணையத்தில் பார்த்துவிட்டு வரலாம். சமீபத்திய விமர்சனங்களைக் கவனியுங்கள். ஓராண்டுக்கு முந்தையது வேண்டாம். குறைகள், புகார்களுக்கு எப்படி பதில் அளித்துள்ளார்கள் என பாருங்கள். நிறைய புகழ்பெற்ற உணவகங்கள் என பீற்றிக்கொள்பவர்கள் கூட குறைகளை, புகார்களை வாடிக்கையாளர் முன்வைத்தால் மௌனமாக அதை கடந்துசெல்வதை இணையத்தில் கமெண்டுகளைப் ப...

சமையலால் காதலில் ஒன்று கூடும் பால்ய கால நண்பர்கள்!

படம்
    ஃபார்ம் டு போர்க் டு லவ் ஆங்கிலம் யூட்யூப் ஆக்சன் காட்சிகள் இல்லாமல் உரையாடல்களை, முரண்களை மட்டும் கொண்ட ஆங்கில திரைப்படங்களை அமெரிக்காவில் தயாரித்து வருகிறார்கள். இவற்றில் சில படங்கள், இலவசமாக இணையத்தில் பார்க்க கிடைக்கிறது. அப்படி கிடைத்த படத்தில் ஒன்றுதான் இது. அலைஸ் மையர்ஸ், கிறிஸ்டியன் என இருவரும் சமையல் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். கிறிஸ்டியனின் சொந்த வாழ்க்கையில் பெரும் இழப்பை அவர் சந்திக்க, அலைஸை காதலித்தபோதும் ஏதும் சொல்லாமல் பிரிக்கிறார். அலைஸ் படித்து முடித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு மேற்பார்வையாளராக உள்ள சமையல்காரருடன் காதல் உருவாகிறது. சூப்புகளை தயாரித்து தரும் வேலையை செய்து வருகிறார். அப்படியான சூழலில் அவருக்கு உணவுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவராக இருக்க வெளிநாட்டில் இருந்து அழைப்பு வருகிறது. பிலிப்ஸ் குழுமம் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. அலைஸ் அங்கு செல்கிறாள். மிகப்பெரிய ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்குதான் பள்ளிகால தோழன், முன்னாள் காதலனான கிறிஸ்டியனை மீண்டும் சந்திக்கிறார். கிறிஸ்டியன் சமை...

ஓநாய்களை பிடிப்பதே இப்போதைக்கு தாக்குதலை தடுக்கும் ஒரே வழி!

படம்
      உத்தரப்பிரதேசத்தில் மக்களை ஓநாய்கள் தாக்கியுள்ளதன் காரணம் என்ன? ஓநாய்கள், குழந்தைகள், சிறுவர்களைத் தாக்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஓநாய்களை அரசு நிர்வாகம் வேட்டையாடினால்,ஓநாய்கள் முற்றாக அழிந்துபோகும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே அங்கு ஓநாய்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. வாழிடம் அழிவது, உணவு தட்டுப்பாடு, இயற்கையாக கிடைக்கும் இரைகள் அழிவது, குட்டிகளுக்கு உணவிட முடியாத சிக்கல் ஆகியவை காரணமாக ஓநாய்கள் மாற்று வழிகளைத் தேடி மனிதர்களைத் தாக்குகின்றன. புல்வெளியில் தங்களை மறைத்துக்கொண்டு சரியான வாய்ப்பு தேடி காத்திருக்கும் ஓநாய்கள், வீடுகளில் உள்ள குழந்தைகளை வேட்டையாடியுள்ளன. குழந்தைகள் விலங்குகளை குறைந்தளவிலேயே எதிர்த்து போராட முடியும் என்பதை ஓநாய்கள் சாதகமாக்கிக் கொண்டுள்ளன. ஓநாய்கள் குறைந்துவரும் சூழலில் ஓநாய் - நாய் இணைந்த கலப்பினம் உருவாவது ஆரோக்கியமானதல்ல. இது மனித இனத்திற்கு எதிர்காலத்தில் அபாயத்தையே தரும். உபியில் இதுபற்றிய ஆராய்ச்சி நடைபெறுவது அவசியம். ஓநாய்களின் வாழ்விடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பது பிரச்னையாக மாறியுள்...