இடுகைகள்

புஷ்பா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒடிஷா இளைஞர்களை முன்னுக்கு கொண்டு வந்த மனிதர்! - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  சுப்ரதோ பக்சி - கோ கிஸ் தி வேர்ல்ட் நூல் 16.1.2022   அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தத்திற்கு, வணக்கம். நலமாக உள்ளீர்களா? வீட்டில் உள்ளோரின் நலனைக் கேட்டதாக சொல்லுங்கள். இம்முறை வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் முறை அமலாகி இருக்கிறது. எனவே, அனைத்து நாட்களும் ஆபீஸ் செல்வதில் விருப்பம் இல்லை. சில நாட்களில் வேலையை முடித்துவிட்டு உடனே எங்காவது பயணம் செய்வது என நினைத்துள்ளேன். பார்ப்போம். ‘தெருக்களே பள்ளிக்கூடம் என்ற மொழிபெயர்ப்பு நூலை ஆலிவர் அண்ணாவிடம் இரவல் வாங்கி வந்தேன். அதையும் இனி வாசிக்க வேண்டும். பஸ்சில் திருவண்ணாமலையிலிருந்து சென்னை வரும்போதே, அந்நூலில் 44 பக்கங்களைப் படித்துவிட்டேன். இந்த நூலின் தொடக்க தமிழ்மொழிபெயர்ப்பை நான்தான் செய்தேன். அந்த நூல் இலவச நூலாக ஃப்ரீதமிழ் இபுக்ஸில் உள்ளது. நூலின் மொழிபெயர்ப்புத் தரம் சரியானபடி கைகூடி வரவில்லை. புஷ்பா – தெலுங்குப்படம் பார்த்தேன். கொண்டாட்டமாக உள்ளது. தெலுங்கிலேயே பார்த்தேன். நன்றாக எடுத்திருக்கிறார்கள். வட இந்தியாவில் படத்திற்கு நல்ல வருமானம் உள்ளது. தென்னிந்தியாவில் இப்போது ஓடிடியில் கூட வந்துவிட்டது. ஒடிஷாவில் பணியாற

நெருப்பு பொறி பறக்கும் செஞ்சந்தனக்கட்டை கடத்தல் மோதல்! - புஷ்பா - தி ரைஸ் - தெலுங்கு

படம்
  புஷ்பா  சுகுமார் தெலுங்கு ஆந்திரத்தின் காட்டுப்பகுதியில் உள்ள செஞ்சந்தனக்கட்டைகளை கடத்தும் குழுவில் இணையும் புஷ்பராஜ் எப்படி அந்த வியாபாரத்திற்கே தலைவனாகிறான் என்பதே கதை.  படத்தின் இயக்குநர் சுகுமார் தனது பேட்டியில் தெளிவாக சொல்லிவிட்டார். இது பான் இந்தியா படம் கிடையாது. முழுக்க தெலுங்கு படமாகத்தான் எடுத்திருக்கிறேன் என்று. எனவே உலக சினிமா அளவுக்கு குறியீடுகளை ஆராயும் அவசியம் ஏதுமில்லை. ஜாலியாக கொண்டாட்டமாக பார்க்க வேண்டிய படம் இது.  புஷ்பராஜ் தொடக்கத்தில் இருந்தே அப்பாவின் பெயர் தெரியாமல் ஏராளமான அவமானங்களை சந்தித்து வளர்கிறான். அவனைக் கோபப்படுத்த எரிச்சல் படுத்த அவன் அப்பாவின் பெயரைக் கேட்பது ஒன்று போதும். அதாவது இன்டி பேரு.... முல்லெட்டி வெங்கட்ரமணா என்பதை அவன் எங்கும் சொல்லமுடியாதபடி சட்டரீதியான அவனது அண்ணன்கள் தடுக்க, அவனுக்குள் இழந்த அத்தனையும் வட்டியோடு பெறும் ஆசை, வெறி பிறக்கிறது. அப்புறம் என்ன அத்தனை சம்பவங்களும் வேட்டைதான்.  அல்லு அர்ஜூன் தான் படத்தினை முழுக்க தோளில் தாங்குகிறார். இடது தோளை உயர்த்தியபடி படம் முழுக்க மனதில் திட்டங்களோடு அனைத்தையும் செய்கிறார். படத்தில் தனக்க